About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/05/21

.

மு. க
மூக்கால் அழுகிறார்.
தவறே செய்யாத தன மகள் ஜெயிலுக்கு போவது கண்டு துடிக்கிறார்.
சற்று பின்னோக்கி பாரும்.
பல வருடங்களுக்கு முன் ஜெயலலிதா என்ற பெண்ணை அரெஸ்ட் செய்து ஜெயிலுக்கு அனுப்பினீர்களே ??
அது சரியா???
அது சரிதான்.....ஏனென்றால் அவருக்காக கண்ணீர் விட அவரது தந்தை இல்லையே .
அப்போதும் அந்த 'பெண்மணி' தன பூஜைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி, அதன்படியே பூஜை முடித்து விட்டு, அமைதியாக வந்து வண்டியில் ஏறினார்களே !
ஆனால், நீங்கள் ஒரு ஆண் மகனாக இருந்து ''ஐயோ , ஐயோ ' 'என்று கதறிக் கொண்டு வண்டியில் ஏற மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தீர்களே !நடு ரோடில் அமர்ந்து ஊரை கூட்டிநீர்களே !
இந்த '' '' அருமை மகள் '' '' பிறந்த போது அது தன குழந்தையே இல்லை என்று கோர்ட் வரை சென்றவர்தானே நீங்கள் !
இந்த தமிழ் நாட்டில், எத்தனை பெண்கள் எத்தனை காரணங்களுக்காக எப்படியெல்லாம் அழுதிருப்பார்கள்? எப்படியெல்லாம் துடித்திருப்பார்கள்? அதை பற்றியும், அதற்கான காரணங்களையும் பற்றி நிறைய எழுதலாம். ஆனால், உங்கள் மனக் சாட்சியே அதைப் பற்றியெல்லாம் சொல்லும்.
என்ன சொல்வது ? உங்களைப் பற்றி?
கார்த்திக் +அம்மா

2011/05/17

Rajini & Smoking

karthik's dearest Rajini,
A REQUEST TO RAJINI,
my karthik loved you soooooo much. A die hard fan of you,was he.
This may be the most delicate time to request you like this.
But '' '' THIS '' '' is the time ,to request you like this.
Whether it's true or not , [i am not sure ] . But from what i read from news and from media, i come to know that you had been smoking..... 40 ...... cigars a day [highly unimaginable, to be true ] and drink .....10......pegs a day.
And that's the reason for your AILMENT. Your lungs and kidney are affected. As lakhs of youth worship YOU as a GODMAN and regard your words as Bible, it's high time you give them an advice not to drink and SMOKE.
AT THE LEAST 90 % of youngsters will become teetotalers.
RAJINI PLEASE, PLEASE DO IT.
YOUR fan KARTHIK + amma
அன்புள்ள முதல்வருக்கு,
நீங்கள் முதல்வரானதும் தங்களுக்கு நான் எழுதும் முதல் மடல் இது.
இது கண்டு தங்களுக்கு கோபம் வரலாம். அல்லது உண்மை நிலை உணர்ந்து தக்க நடவடிக்கையும் எடுக்கலாம். எப்படியாயினும்,
'' இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார்
இன்றியும் தானே கெடும் ''
தங்களைக் சுற்றியுள்ளோர் தங்கள் துதி பாடுவதே தலையாய கடமையாக கொண்டுள்ளனர். அதனால், நான் இதை எழுதுகிறேன்.
நேற்று நீங்கள் பதவி ஏற்கும் வைபவத்திற்கு, கவர்னர் வர சில நிமிடங்கள் தாமதமானதற்கு தாங்கள் எவ்வளவு தவித்துப் போனீர்கள்? காரணம் ட்ராபிக் ஜாம். காரணம் யார்?
ஆக, உங்களுக்கு இந்த ட்ராபிக் ஜாமினால் எவ்வளவு டென்சன் ஆனது? சாதாரண மக்களாகிய நாங்கள் உங்களால், ஏற்பட்ட ட்ராபிக் ஜாமினால், எவ்வளவு கஷ்டப் பட்டிருப்போம் என்பதை சிந்தித்து பாருங்கள். எத்தனை பேர் ரயிலை தவற விட்டிருப்பார்? எத்தனை பேர், தங்கள் நேர்முக தேர்வை தவற விட்டிருப்பார்? தாங்க முடியாத நோய் கஷ்டத்துடன், சாலையில் தவித்திருப்பார்?
நீங்கள் முதல்வர் என்பதால், உடனடியாக, ஐ.ஜி யை மாற்றம் செய்து விட்டீர்கள்? நாங்கள் என்ன செய்ய முடியும்?
தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மையே என்று சொல்லியுள்ளீர்கள். மக்கள் ஒருவிதமான மனக் கிலேசத்துடன்தான் உள்ளார்கள்.
சுப்பிரமணிய சுவாமி வேறு, எல்லா முடிவு எடுப்பதும் சசிகலாதான் என்று சொல்கிறார் . உங்கள் திறமை, அறிவின் மீது யாருக்கும் துளியளவும் சந்தேகமில்லை .தாங்களாகவே செயல்பட்டால், எங்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். செய்வீர்களா?
நிறைய ,நிறைய எதிர்பார்ப்புகளுடன்,

தமிழக மக்கள் ,
கார்த்திக் +அம்மா

2011/05/01

சிரிக்க -சிந்திக்க:
தேர்தல் அறிக்கையில் கர்ப்பிணிப் பெண்களின் பேறு கால விடுப்பு நான்கு மாதம், அல்ல அல்ல, ஐந்து மாதம் என்று பிரமாதப் படுத்தினார்கள்.
ஒன்றை மறந்தார்கள்.
எந்த பெண்ணுக்கும் நாற்பது வயதிற்கு முன்னால் அரசு வேலை கிடைப்பதில்லை. அப்புறம் எதற்கு பேறு கால விடுப்பு?

வடிவேல்--வேட்பாளர்
நான் டி.வி யில் பார்த்தேன். ஏதோ ஒரு இடத்தில் வடிவேல் பேசுகிறார். மைக்கை வேட்பாளர் கையில் கொடுத்து பிடிக்க சொல்கிறார். மிகுந்த தர்ம சங்கடத்துடன் அந்த வேட்பாளர் மைக்கை கையில் பிடித்துக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து அவருடைய [ வேட்பாளருடைய ] உதவியாளர் மைக்கை வாங்கிக் கொள்கிறார். இதை கவனித்த வடிவேல், மீண்டும் அந்த மைக்கை வாங்கி மீண்டும் வேட்பாளர் கையில் கொடுக்கிறார். வேட்பாளரும் மைக்குடன் நிற்கிறார்.
விஜயக்காந்த் வேட்பாளரை அடித்ததற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
அரசியல கரை கண்ட முதல்வர் தன்னை நம்பாமல், தன சேனையை நம்பாமல், தன பணபலத்தை நம்பாமல் வடிவேலுவை நம்பியதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஆச்சரியம்:
சட்டசபைக்கு வருவதற்கு உடல்நிலை சரியில்லை என்று '' ''மெடிக்கல் சர்டிபிகேட்'' '' கொடுத்த ஜெயலலிதா, பிரச்சாரத்திற்கு மட்டும் மூச்சு விடாமல் தமிழ்நாடு முழுக்க சுற்றியது எப்படி? அப்போது மட்டும் உடல் சீராகிவிட்டதா?
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
ஆனால், போதும்.
கார்த்திக் +அம்மா

வரப் போகும் முதல்வரே

அடுத்து வரப் போகும் முதல்வர் யாராயினும் என் வேண்டுகோள் :

அது ஜெ என்றால்,
அம்மா ,தாயே, நினைத்தால் தமிழ்நாடு, ரெஸ்ட் எடுக்க கொடநாடு என்ற போக்கை முதலில் மாற்றுங்கள்.
இங்கு வெய்யிலில் வேகும் மக்கள் நிலை என்ன ? நீங்கள் வறுமை என்ன தெரியாமல் வாழ்ந்திருக்கலாம். அதற்காக, ரேஷனில் கொடுத்த மசாலா சாமானில் ஐம்பது கிராம் மிளகு, ஐம்பது கிராம் சீரகம் ஒரு நாள் ரசத்திற்கு போதுமா என்று கேட்டவர் நீங்கள்!!!!!ஒரு குடும்பத்திற்கே ஒரு மாதத்திற்கே அவ்வளவு கூட வாங்க முடியாத ஏழை மக்களின் வாழ்வின் அவலம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இனியாவது, ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி வந்து , கொடநாட்டின் ஏரியும், ஆங்கில நாவல்களும், சசிகலாவும் மட்டுமல்லாமல், [ அவை மட்டுமே உலகம் என்று இல்லாமல் ] உங்களுக்கு ஓட்டு போடும் மக்களின் உண்மை நிலையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்ய முயற்ச்சியுங்கள் .
அது தி.மு.க என்றால்,:
அவர்கள் கொள்ளை அடித்திருந்தாலும், மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. இலவசம் கேவலம் என்றாலும், அது நிறைய பேருக்கு வேண்டிய விஷயமாக இருந்தது.
இரண்டாவதாக, அரசு அலுவலர்கள்: இவர்கள் முதல்வரை லேசாக மிரட்டினால் போதும் ,கேட்டது கிடைக்கும் என்ற அளவில் சுகப்பட்டார்கள். முன்பெல்லாம் ஒரு டி .ஏ அரியர்ஸ் கிடைக்கவே ஒரு கெஞ்சலோ கெஞ்சல் வேண்டும். ஆனால் கலைஞர் மத்திய அரசு அறிவிப்பு வெளியான நான்கே நாட்களில் இங்கும் தந்து விடுவார்.
ஆனால்,

நடந்த பெரிய தவறு, பெரிய்ய்ய தவறு :

அத்தனை கவுன்சிலர்களும், அத்தனை பஞ்சாயத்து
பிரசிடெண்டுகளும் போட்ட ஆட்டம் அளவிட முடியாதது. மக்களை அவர்கள் படுத்திய பாடு !!! எந்த நிலம் வாங்க, விற்க .....அவர்கள் வைத்துதான் சட்டம். அவர்கள்தான் வாங்க வேண்டும், அவர்கள் மூலமாகத்தான் விற்க வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டு கொடுத்தது போக மீதிதான் நமக்கு.
அதே போல் அரசு அலுவர்கள். ஒரு அரசியல்வாதி சொல்லியது போல், அனைவருமே தங்களை முதல்வர் என்றே நினைத்துக் கொண்டு செயல்பட்டதுதான் .....
ஸ்டாலின் அண்ணாவிற்கு வருவோம் :
உண்மைய்லேயே இவரது செயல்பாடுகள் மிகவும் பாராட்டப் பட வேண்டியவை. இன்று கன்னியாகுமரி என்றால் நாளை ஒகேனக்கல்லில் கூட்டு குடிநீர் திட்டம், அடுத்த நாள் சென்னையில் மேம்பாலப் பணிகள் என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்றார் ..இவரது அலுவகத்தில் ஒரு கோப்பு கூட நிலுவையில் இருக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயம். மாநகராட்சி பள்ளிகள் பன்றிகளின் கூடாரம் போல் இருந்த நிலை மாறி இன்று ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்ந்துள்ளது இவரது முயற்சியால்தான்.
ஆனால்,
ஆனால்,
தந்தைக்கடங்கிய பிள்ளையாக அவருடைய பல தவறுகளுக்கு துணை போவது,என்றெல்லாம் இல்லாமல்,
அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் . உங்களுக்கு நாற்பது தொழிற்சாலைகள் உள்ளன என்றெல்லாம் கேள்விப் படுகிறோம். அரசியல் நடத்த இது தேவைதான் என்பது வேறு விஷயம். ஆனால், இது தாண்டி, உங்களால் மிகக் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும். செய்வீர்களா?
கார்த்திக்+அம்மா