About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/09/19

தற்போது ஜெயா தொலைக்காட்சியில்  விஸ்வநாதன் +ராமமூர்த்திக்கு   நடத்திய  பாராட்டு விழாவை பார்த்தேன்.
என்னை கவர்ந்த விஷயங்கள் :
*பெண்கள்  அனைவரும் படு பாங்காய் புடவை அணிந்து பாந்தமாய் ,பவ்யமாய்  இருந்தது. இங்கு வந்த சிலர் மற்ற அரங்குகளில் கொடுமையான உடை அணிந்து படு கவர்ச்சியாய் வந்துள்ளனர்.
முதல்வர்  இந்த உடை விஷயத்தில் கவனம் செலுத்துவதாக  அறிந்து அதற்காக அவரை பாராட்ட வேண்டியது அவசியம்.
*யாரும் தவறாகவோ ,அலட்டலாகவோ, இல்லாமல் ,தன ஆசிரியையின் முன்பு பயபக்தியுடன் இருக்கும் மாணவர்கள் போல் இருந்தது போல் தோன்றியது.
*நிறைய பழைய நடிகர்கள் ,நடிகைகள் மனம் நெகிழ்ந்ததை பார்க்க முடிந்தது.பரபரப்பான  அரங்கம் அதிரும் கைதட்டல்கள் இல்லை.மற்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யாரோ கைதட்டிக் கொண்டே இருப்பார்கள்.விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.ஊய்  என்ற சத்தம் காதை கொல்லும் .
ஆனால் அது எதுவும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி .After so long a time a program , a  decent program without dirty dances and irritating comedy ,made  me  write this post even as the program  continues and  has  not ended .
முதல்வருக்கு ice , காக்கா என்று யாரும் கூவ வேண்டாம்.மனதிற்கு சரியென்று தோன்றியது. எழுதினேன்.
கார்த்திக்+அம்மா 

//  //  குற்றச்சாட்டுகள் குறித்து புதிய துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சையிடம் கேட்டபோது, ""என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். துணைவேந்தர் பதவிக்கு போட்டியிட்டு கிடைக்காதவர்கள் கிளப்பி விடும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு கவலை இல்லை. என் மீது தவறு இருந்தால், வேளாண் பல்கலையில் 35 ஆண்டுகளாக பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது எப்படி, அதிகாரிகளையும் நீதித்துறையையும் மீறி உயர் பதவிகளை பிடிக்க முடியுமா, அரசுகள் மாறினாலும் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு, நான் ஒன்றும் எம்.எல்.ஏ.,வோ அரசியல்வாதியோ இல்லை. சாதாரண ஏழை கிறிஸ்தவ ஆசிரியர். நான் குற்றமற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன். உண்மைக்காக பாடுபடுவேன். அனைவரையும் கல்விச் சென்றடைய செய்வதே இனி என் முக்கிய நோக்கமாக இருக்கும்,'' என்றார்.//  // //
இது ஒரு துணைவேந்தர் சொல்வது.
ஒரு ஆசிரியராக இருப்பவரே மதத்தை பற்றி பேச கூடாது.மாணவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள்  வரும்.  அப்படியிருக்க பல  ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் உள்ள பதவியில் அமரும் இவர்  தன மதத்தை நிலை நாட்டுவது  எந்த வகையில் நியாயம்?
இவர் ஜெயிலில் இருந்துள்ளார் ,பணம் கையாடல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிற்கு இவர் சொல்லும் பதில் இது.
ஏற்கனவே ஒரு திரைப் படம் நேற்று அண்ணா சாலையில் ஏற்படுத்திய களேபரம் போதாதா ?
மதம் ஒரு அபின், சாராயம், விஸ்கி என எல்லாம் கலந்த எல்லை கடந்த போதை தரும் ஒரு கொடிய விஷம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே இவரை இந்த பதவியில் இருந்து விலக்கலாம் .
.....       .......        ......
இந்த T .V channels பிள்ளையாரை ஒரு வழிப் படுத்திவிட்டன. Too much of anything is  good for nothing .மிகைப் படுத்தல் ,ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசினாலும் அதன் ஈர்ப்பு குறைந்து விடும்.T .V channels எந்த காரணம் கிடைக்கும் ,program போடலாம் என்று அதிக ஊட்ட சத்து கொடுத்தால் அதிக ஆபத்துதான்.
கார்த்திக்+அம்மா  

2012/09/15

FDI in RETAIL
Central Govt has given the freedom to States to decide as to their wish.If Tamil nadu  wishes it can permit FDI .Once it decides not to allow , well and good, you need not have.
T.N  C.M has announced that she is against it.
Well , the matter is over.
But all the T.V channels are enjoying the chance to have programs on it.
அப்பப்பா , பேசுபவர்கள் எதற்காக இப்படி கத்துகிறார்கள்?
தமிழிசை  கத்தும் சத்தம் காதை  கிழிக்கிறது.
அவருடன் பேசும்  அமெரிக்கை  நாராயணன் எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார்.
சொல்லும் விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்வதே சரியான முறை.
அடுத்தது,
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது  குறுக்கிட்டு பேசுவது....அவர் பேசி முடிக்கட்டுமே.அவருடைய கருத்து என்ன அன்று தெரிந்து கொண்டு , அந்த கருத்துகளுக்கு பதில் சொல்லுங்களேன்.
எவர் ஒருவர் தன மீதும் ,தன கருத்துகளின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ , அவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள் .
நானும் ஒரு  மேடைப் பேச்சாளிதான் .நானும் பல பட்டி மன்றங்களில் பேசியுள்ளேன்.need  it be said that i would always be the winner .
ஒரு பட்டி மன்றத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கிய பிறகும் ஒரு பேச்சாளர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசரம். கார்த்தி , செந்தில் தனியாக இருப்பார்கள். அவர்களுக்கு உணவு தயாரித்து தர வேண்டும் என்ற என் அவசரம் எனக்கு.
மேடைப் பேச்சும் , அந்த நடுவரின் தீர்ப்பும் என்ன supreme  court  judgement ஆ ?
ஏன் மக்கள் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவார்களோ?
         சரி, இந்த FDI  விஷயத்திற்கு வருவோம்.
நான் வேளச்சேரியில்  இருக்கிறேன்.மாலை ஒரு 5 மணிக்கு விஜயநகர் சிக்னலில் வந்து பாருங்கள்.ஒரு 15 சிறு வியாபாரிகள் சாலையின் ஓரத்தில் 10 ரூபாய் ஒரு கவர் என அனைத்து காய்களும், கீரைகளும் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அருகிலேயே, ஊட்டி ,பொன்கவிதா ,Daily fresh  என ,+Reliance ,Cee Dee Yes என்ற கடைகளும் இருக்கின்றன.
ஆனாலும், இந்த சிறு, (மிக சிறு ) கடைகளிலும் வியாபாரம் நன்றாகத்தான் நடக்கிறது .
Customers are not fools .அவர்களுக்கு தரமான பொருட்கள், சரியான விலையில் விற்கும் கடைகள்தான் தேவை.
எனவே  ஆயிரம் Wall Mart வரட்டுமே.நம்மூர் அண்ணாச்சிகளும் அதே தரத்தில் , அதே விலையில் கொடுக்கட்டுமே.நாங்கள் உங்கள் கடையை விட்டு வேறு கடைக்கு ஏன் போகிறோம்?
அடுத்த விஷயம்,
நான் அனுபவித்த விஷயம்,
the treatment  that one gets at these shops .ஏதாவது கேளுங்கள், காது  கேட்காத  போல இருப்பார்கள்.
அதுவே பெரிய  mart களில் , madam  என்ற மரியாதை இருக்கும்.
ஆக, இந்த FDI வரமா, சாபமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
பார்ப்போம்.
கார்த்திக்+அம்மா 

2012/09/06


அம்மாவிற்கு அஞ்சலி


















Today is September 5 th..Teacher's day.
My mom was a very good teacher and Head Mistress of a Govt.high school.She joined duty  at the age of 17 and worked till 59. just can't guess. 42 years of service.
A very dynamic lady. Multi talented, versatile, boldest,and a dedicated and devoted teacher.
And there's no other testimony that she was the best of the best teachers , that she died on September 5 th last year.
இந்த கவிதை (??) எப்போதோ எழுதியது.இப்போது எதேச்சையாக கண்ணில் பட்டது.என் தாய்க்கு இது எவ்வளவு பொருத்தம்  என்று அதிசயமாக இருந்தது.

கதிரோனுக்கு காட்சியே விரிவுரை 
பூவிற்கு மணமே  முகவுரை 
வெண்ணிலவிற்கு குளிர்மையே  அணிவுரை 
          ஆயின் 
எம் ஆசிரியைக்கு  இவையனைத்தும்  எவ்வுரை ?
உரைப்பதற்கு  இதுவென்று கட்டியிட்டால் 
எல்லையுண்டாயின்  உண்டு ஓர் உரை.
எல்லையில்லார்க்கு  ஏது  அணிந்துரை ?
.... ...   .....    .....
காண முயலெய்திய  அம்பினின் 
யானை பிழைத்த வேலினிது  
என்பர்.. அது போல் ,
தோல்வியை முன்னெதிர்  கொண்டு
வெற்றியிலா  முயற்சிக்கு 
யான் இயற்ற விரும்பினேன் 
(அதாவது  அந்த நல்ல  ஆசிரியை  பாராட்டி கவிதை எழுதுவது என்பது அவ்வளவு கஷ்டமான  விஷயம் )
எளிமைக்கோர்  எடுத்துக் காட்டாம் 
களிப்புக்கோர் கண்ணாடியாம் 
தவறு ,தவறு 
எளிமைஎன்றேனே  அது தவறு 
நகையால்  நகைச்சுவை  எனும் நகையால் 
போர்த்திய நகைப் பெட்டகம் 
அப்படியாயின் எளிமை  ஏது ?
வலிமையே முழுமையாய் 
வாழ்ந்தே வென்றாய் 
அம்மா உனக்கு என் அன்பு வணக்கங்கள்