About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/01/30

கம்பருக்கும் அரசனுக்கும் கருத்து வேறுபாடு வந்த போது  கவிச்சக்கரவர்த்தி சொன்னார்
'' மன்னவனும் நீயோ
வளநாடும் நின்னதோ
குரங்கேற்காத கொம்பும் உண்டோ ''
 ....  .... ...
எனக்கும் என் தலைமை ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தால் நான் இதை சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பேன்.
திறமைக்கு எங்கும் மதிப்பு உண்டு.எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் .
சோதனைகள் வரும்.
எனக்கும் சோதனைகள் வந்தன .போராட்டம்.போராட்டம்.
நான் சொல்வேன்,'
'' சத்தியம் என்ற தீயில் என்னை நானே எரித்துக் கொண்டு அதையும் நெஞ்சில் ரத்தக் கண்ணீருடன், முகத்தில் சிரிப்புடன் ஏற்றுக் கொல்லும்  பிறவி நான் ''
எனக்கே அந்த தைரியம் இருந்தால் ....
என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்த C .M  ஐ உருவாக்குகிறார்கள் .இதைத்தான் ''குரங்கு பிடிக்க போய்  பிள்ளையார் பிடித்த கதையோ?

பழமொழி மாற்றி (பிள்ளையார் பிடிக்க குரங்கான கதி ) உளறி விட்டேன் என்று நினைக்கிறீர்களா , இல்லை  வேண்டுமென்றேதான் மாற்றி சொன்னேன்.
கமலஹாசன் விஷயம்தான்.
எனக்கே மனது விரக்தியாகும் நேரத்தில் இப்படிப்பட்ட எண்ணமே வரும்.அதற்காக ஓட  முடியுமா?இருந்து போராடத்தான் வேண்டும்.நானே அதை செய்யும்போது, கமல் இப்படி பேசுவது சரியா ? போராடுங்கள்.
கார்த்திக்+அம்மா 

2013/01/29

'' '' ''The ROYAL RETREAT '' '' ''
டி .வி யில் ஒரு program தவறாமல் 25 வருடங்களாக பார்க்கிறேன் என்றால் அது நம் முப்படை அணிவகுப்புதான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ,எப்பொழுதும் பிரமிப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்.
நிறைய பேர் 26 அன்று பார்ப்பார்கள்.
ஆனால் இன்று நம் முப்படைகள்'' ''  '' போர் பாசறை திரும்பும் நாள்.'' '' ''இந்த பதிவு எழதும் இந்த நேரம் பொதிகையில் அந்த நிகழ்ச்சிதான் போய்க் கொண்டிருக்கிறது.இப்படி ஒரு மாபெரும் விஷயம் நடப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.
இதுவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அற்புதமான ,அழகான ,நம்மையறியாமலே பெருமிதப் பட வைக்கும் ஒரு நிகழ்ச்சி.யு ட்யுப்பிலாவது பாருங்கள்.
கார்த்திக்+அம்மா 

2013/01/26

 karthik at his dearest Anna University 
.பதிவு எழுதி வெகு நாளாயிற்று.
எதைப் பற்றி எழுதுவது?
நாட்டில் ஏதாவது நல்லது நடந்தால்தானே?
கற்பழிப்பு
ஊழல்
கொலை
 கொள்ளை
இதை எல்லாவற்றையும் விட
ஆர்ப்பாட்டம் ,ஆர்ப்பாட்டம்
சாலை மறியல்
யார் வேண்டுமானாலும்  எதற்கு வேண்டுமானாலும் கொடி  தூக்கலாம்  .
கல்லெடுத்து அடிக்கலாம்.பேருந்து கண்ணாடியை உடைக்கலாம்.அதையும் மீறி பேருந்தை எரிக்க கூட எரிக்கலாம்.
இதை விட அற்புதமான விஷயம் ,எதைப் பற்றி எழுதினால் என்ன விதமான விளைவுகள்  என்ற பயமே ஏற்பட்டு விட்டது.
அதனால் கார்த்தியை பற்றி எழுதினால் ''ஒரே சோக கீதம் ''என்ற comment .ஆனால் நான் கார்த்தி எழுதிய இந்த விஜயநகர் blog ஐ தொடர்வதற்கு காரணமே கார்த்தியை பற்றி எழுத வேண்டுமென்பதுதான்.
அதனால் கார்த்தியை பற்றி .
2000 ம் ஆண்டு, Jan 26 .கார்த்தி  bangalore  லிருந்து சென்னை வீட்டிற்கு வந்தான்.அம்மாவை பார்த்து 100 முத்தம் வாங்கிக் கொண்டால் போதும் அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் வரும்.விடிகாலை வந்தவுடன் தூங்க ஆரம்பித்தான்.நான் கோலம் போட  ஆரம்பித்தேன். எப்போதும் ஜன 26+ஆக் 15 இந்தியா கோலம் போட்டு கலர் கொடுப்பேன்.என் flat security நேபாளி வந்து ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு ''இது எங்கள் நாடு '' என்று நேபாளத்தை தொட்டு பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்.இந்தியாவும்,மூவர்ண கொடியும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.
climax இதுதான்.திறந்திருந்த கதவு காற்றில் அடித்து கொண்ட வேகத்தில் சாத்திக் கொண்டது.இந்த automatic கதவுகளை கண்டுபிடித்த மகான் யாரோ ?கதவுக்கு வெளியில் நான்.mobile இல்லை.சாவி இல்லை.
கார்த்தி லேசில் தூங்க மாட்டான். ஆனால் தூங்க ஆரம்பித்தால் சாதாரணத்தில் எழுப்ப முடியாது ஒரு 1/2 மணி நேரமாக கதவை உடைக்காத குறையாக தட்டியாயிற்று.கார்த்தி அசைந்தால்தானே.
அம்மாவிடம் வந்தாகிவிட்டது என்ற திருப்தியில் ,பெங்களூரில் நான் இல்லாமல் தூங்காத தூக்கத்தையெல்லாம் சனி,ஞாயிறு  2 நாட்களில் தூங்கி முடிப்பான்.
அப்படி கதவை தட்டி தட்டி கத்தி எல்லாம் போராடிக் கொண்டிருந்த போதுதான் வெளியில் சென்றிருந்த செந்தில் வந்து மொட்டை மாடிக்கு சென்று ஒரு கம்பியால் படுக்கையறை ஜன்னலை தட்டி ஒரு வழியாக கார்த்தியை எழுப்பி அவன் கதவை திறந்து,ஒரே ஓட்டமாக பள்ளிக்கு சென்று கொடியேற்றி ,நிம்மதி பெருமூச்சு விட்டு .....
interesting episodes
karthik +amma 

2013/01/08

Vinothini and Acid
இந்த அழகான பெண் மீது ஆஸிட்  வீசிய அந்த கொடூரனை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஆனால்,
நான் சிறுமியாக  இருந்த போது   [ எத்தனை வயது  என்பதெல்லாம் நினைவில்லை. ] 1965   யாக இருக்கலாம் .என் ஊர் ஒரு சிறு கிராமம்.அங்கு ஒரு ஆசிரியர  ,அவருடைய மகள் படித்து நல்ல வேலையில் இருந்திருக்கிறார்.
அவரை இப்படித்தான் ஒரு வெறியன் காதலிக்க  சொல்லி வம்பிழுத்து அந்த மறுக்க ,அந்த பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டான்.
இப்போது போல் அப்போது மீடியா கிடையாது.மருத்துவம் கிடையாது.மனித உரிமை சங்கங்கள் கிடையாது.
அந்த பெண் ஒரு தனி அறையில் முடங்கிப் போனார்.
எல்லோரும் இதைப் பற்றி கிசுகிசுப்பாக பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் நான் அந்த வீட்டிற்கு சென்றேன் .தற்செயலாக அந்த அறைக்கு சென்று விட்டேன். அப்பப்பா,
அந்த முகம் ....
இன்றும் என் நினைவின் ஆழத்தில் அப்படியே இருக்கிறது.
இன்று நேற்றல்ல 
கிராமத்தில் அல்ல ,நகரத்தில் அல்ல 
எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் பெண்ணுக்கு கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
1962 அல்லது 1965 எந்த ஆண்டோ எப்படியாக இருந்தாலும் குறைந்தது ஒரு 50 வருடங்களுக்கு முன்பே இது போன்ற கொடுமைகள் நடந்துள்ளது.
இதெற்கெல்லாம் என்ன தீர்வு என்பதை பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
கார்த்திக் +அம்மா