About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/06/28

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். 

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

ஒரு வலைதளத்தில் படித்தேன். 
HEART ATTACK வந்தால் செய்ய வேண்டிய முதல் செயல் என்று எழுதியிருந்தார்.
யாருக்காவது உதவியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளேன்.
மிக மிக முக்கியமான விஷயம்
 '' '' இருமுவது'' ''.....இருமுவது 
இது வரை கேள்விப் படாத விஷயம்.
இந்த பதிவினால் ஒரு உயிர் காப்பாற்றப் பட்டாலும் இந்த வெள்ளிக் கிழமை நான் கார்த்தியின் நினைவை புனிதப் படுத்தும் விஷயமாக நினைக்கிறேன்.(வெள்ளிக் கிழமைதான் கார்த்திக்கிற்கு விபத்து நடந்தது.)
கார்த்திக்+அம்மா 

2013/06/23

திருந்தவே மாட்டார்கள்:
உத்தரகாண்ட் மாநிலம் :
இப்படி ஒரு கொடுமை ,மக்களின் உயிர் போராட்டம்.அப்பப்பா ....டி .வி .யில் பார்க்க பார்க்க  மனம் பதைபதைத்து  போகிறது.
ஆனால் பல கேள்விகள்.
அங்கே போய்தான் சாமி கும்பிட வேண்டுமா ?
வீட்டிலிருந்து கும்பிட்டால் சாமி ( அப்படியென்று ஒன்று இருந்தால் ) வரம் கொடுக்காதா
தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத சாமி பக்தர்களை எப்படி காப்பாற்றும்?
பக்தர்கள் ..என்ன வகையான பக்தி ?...ஒரு உல்லாச பயணத்தை கடவுளின் பெயரால் அனுபவிக்கிறார்கள்.
அதுவும் ஒரு பிரபலம் இமயமலை செல்வதால் எல்லோரும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் .
அதே பிரபலம்தான்  திருவண்ணாமலை  கிரி வலத்திற்கும் காரணம்.
அதே போல்தான் பிரதோஷம் .ஒரு டி .வி தொடரில் கதாநாயகி பிரதோஷ விரதம் கடைபிடிப்பது போல் காட்டினார்கள் .அவ்வளவுதான்.இன்று பிரதோஷம் அன்று கோவில் தள்ளாடுகிறது.
அதற்கு மேல் டி .வி யில் வரும் ஜோதிடர்கள்.இந்த கோவிலுக்கு போனால் இந்தியாவின் அடுத்த பிரதமர் நீங்கள்தான்.
அடுத்த கோவிலுக்கு போனால்  நீங்கள்தான் அமெரிக்காவின் அடுத்த president என்ற ரேஞ்சுக்கு ஏத்தி விடுகிறார்கள்.
காசி கயா  போனால் முக்தி கிடைக்கும் என்றால்  அங்கு பிறந்தவர்கள் எல்லாம் முக்தி அடைய வேண்டும் (முக்தி  என்றால் என்ன ?  அதை அடைந்தவர்கள் யாராவது வந்து சொன்னார்களா ?)
மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னவை எல்லாம் வியாபாரமாக்கி விட்டார்கள்.
இதையெல்லாம் விட கொடுமை.
POLITICS :
அட ஒரு உயிரை காப்பாற்ற 10 பேர் போராடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கோவில் கட்ட உதவுகிறேன் என்று திருவாய் மலர்ந்திருக்கிறது ஒரு ****.....********** எத்தனை வார்த்தைகளினாலும் திட்டலாம் என்று ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.முதலில் உயிர்களை காப்பாற்றுங்கள்.அவர்கள் தமிழர்களா, குஜராத்திகளா ,கன்னடிகர்களா என்பதில்லை. அவர்கள் மனிதர்கள் .
காப்பாற்றியவர்கலுக்கு  உணவு, வீடு கொடுங்கள்.
அப்புறம் ,அவர்களுக்கு சம்பாதிக்க வேலை கொடுங்கள். அதற்கு ஒரு தொழிற்சாலை கட்டுங்கள்.இதெல்லாம் முடிந்த பிறகு கோவில் கட்டுவது பற்றி யோசியுங்கள்.
DONATION 
இது அடுத்த விஷயம்.இந்த மக்களை காப்பாற்ற போய் உயிரிழந்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவுவது மிக மிக முக்கிய விஷயம்..
அவர்களின் குடும்ப இருப்பிடம் அறிந்து அங்கு செல்ல யாராவது முன்வந்தால் அவர்களுடன் சென்று உதவ நானும் தயார்.
ஒரு அதிகாரி சொன்னார் .
'' பணம் நிறைய இருக்கிறது.ஆனால் பணம் இப்போது எதுவும் செய்ய முடியாது.''
எவ்வளவு உண்மையான  வார்த்தைகள்.
மனிதர்கள் உணர வேண்டிய விஷயம்.
நம் முப்படை வீரர்களுக்கு நன்றி சொல்லாமல் பதிவை முடித்தால் 100 கோடி பாவம் வந்து சேரும்.நன்றி.நன்றி.சகோதரர்களே.
கார்த்திக+ அம்மா 

2013/06/19

Today there was a news about +2 students not getting hall ticket for the arrears exam  and are not able to write their exam.
 எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி நினைவு வந்தது.
When I  was working in Metturdam ,இதே போல் ஒரு நிகழ்வு.
என் தலைமையாசிரியருக்கு என் மேல் ஒரு நெருடல் இருந்தது.என்னடா ,இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு திறமையாக இருக்கிறது இந்த பெண் .எந்த வேலை கொடுத்தாலும் perfect ஆக முடித்துவிடுகிறதே .யானை எப்போது சறுக்கும் என்று எதிர்பார்த்து ஏதோதோ முடிக்க முடியாத tasks ,(tough tasks ) கொடுப்பார்.ஆனால் எனக்கு சூது தெரியாது.எனக்கு பின்னால் திரை மறைவில் நடக்கும் சதிகள் பற்றி தெரியாது.தெரிந்து கொள்ளவும் விரும்பியிருக்க மாட்டேன்.சித்தம் போக்கு சிவன் போக்கு என்று நான் பாட்டிற்கு கொடுத்த வேலைகளை செய்வேன்.
இப்படியாகத்தானே
.... .....
ஒரு துணைத் தேர்விற்கு என்னை முதன்மை கண்காநிப்பாளாராக நியமித்தார்.வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த என் கையில் ஒரு file கொடுத்து ,'' நீங்கள் இந்த தேர்வை நடத்துங்கள் '' என்றார்.
எப்போதும் போல் நான் இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன்.அரங்கிற்கு வந்து பார்த்த போது 120 மாணவ மாணவிகள்  நின்று கொண்டிருந்தனர்.அவர்களுக்கு அறை எதுவும் ஒதுக்கப்படவில்லை.தேர்வு எண்களுக்குண்டான அறை ,bench desk ல் அவர்கள் தேர்வு எண்  எழுதப் பட்டிருக்க வேண்டும். இது எதுவுமே செய்யவில்லை என் தலைமை  ஆசிரியர்.
.....
இந்த மாணவர்களுக்கு hall ticket  வரவில்லை.இவ்வளவு குழப்பங்கள் இருந்ததால் most junior ஆன என்னிடம் இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்.பாதி மாணவிகள் அழுகையோ அழுகை..நீங்கள் தேர்வு எழுத முடியாது என்று அங்கு ஒருவர் அந்த மாணவ, மாணவிகளை மிரட்டிக் கொண்டிருந்தார்..நான் அவர்களை( 4 அறைகள் ) போய் உள்ளே எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காருங்கள்.ஒரு பேப்பரில் ''நான் இந்த தேர்வு எழுத வந்தேன்,hall ticket கிடைக்கவில்லை..இன்று எழுதும் தேர்விற்கு பிறகு அரசு எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுகிறோம்'' என்று எழுதிக் கொடுங்கள் ''என்று எழுதி வாங்கிக் கொண்டு கேள்வித் தாள்,விடைத்தாள் கொடுத்து,''தைரியமாக எழுதுங்கள் '' என்று தைரியமளித்து அவர்களும் உற்சாகமாகி தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
.....அப்போது Joint Director வந்தார்.என்னை பார்த்து குழம்பி ''நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் ?''என்றார்.
Sir ,I  am the chief ,for the arrears exam ''
அவர் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.இந்த பெண் (ஒரு மாணவி போல்தான் இருப்பேன்.அது பற்றி சுவையான நிகழ்ச்சி பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.).உள்ளே சென்றார்..தேர்வு சிறப்பாக குழப்பம் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது..ஏதோதோ குழப்பங்களை எதிர்பார்த்து வந்தவர் தேர்வு அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டிருந்ததை பார்த்து வாய் பேசாமல் சென்று விட்டார்.
நான் என்ன செய்தேன் என்பதே எனக்கு தெரியாது.இந்த hall ticket வராதது பற்றி யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.ஒரு வாய்ப்பு தவறினாலும் வாழ்க்கை பாதையே மாறிவிடக் கூடும்.அதனால் அவர்களை எழுத வைத்து விட்டேன்.என் தலைமை ஆசிரியர்தான் பாவம்.யானை எப்போதுடா சறுக்கும் ,பட்டாசு வெடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.என் மேல் department action வரும் .மாட்டினாயா மகளே என்று குதூகலித்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.
அடுத்த நாள் சக ஆசிரியைகள் பொறாமையுடன்  கிண்டல்.''இந்த குழந்தையை விட்டால் வேறு யாரும்  தேர்வு நடத்த மாட்டார்களா ?''
வெகு நாட்களுக்கு அப்புறம்தான் தலைமை ஆசிரியரின் சதி தெரிந்தது.பாஆ ஆ ஆ வம் .
பி.கு.
யானை சறுக்கவில்லை தூள் தூளாகி விட்டது.
...... ....
தான் இறந்தாலும் தன மகனை காப்பாற்ற போராடும் இந்த தந்தையின் முன் நான் மனம் வெதும்பி நிற்கிறேன்.
கார்த்திக் அம்மா 

2013/06/18

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
   ஒருவர் எழுதியிருந்தார் ..பிரகாஷ்ராஜ் ஏதோ கடமைக்கு செய்வது போல் இருக்கிறது.முகத்தை கடுமையாக வைத்து கொள்கிறார்....
......
நானே உலக அழகன் .எல்லோரும் ( கல்யாணமான 45 வயது ,16 வயது  என )வயது வித்தியாசமில்லாமல் ,கணவன் பார்த்துக் கொண்டிருக்கவே உன்னை ஒரு முறையாவது கட்டி பிடிக்க வேண்டும் என்று ஒரு பெண் உருக ,இப்படி கலாச்சாரம் கண்றாவியாக இருந்த நிகழ்ச்சிக்கு ,இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.அந்த hot seat ல் ஏறுவதற்கு உதவி செய்வது போல் நடிப்பு இல்லை இவரிடம்.
அமிதாப் எப்படி செய்தார்?
பி.ராஜ் சரியாகத்தான் செய்கிறார்.ஆரம்பத்தில் அவருடைய வில்லன் image அவருக்கு பின்னால் பெரிய மேகமாக பயமுறுத்தியது.அனால் இப்போது பழகி ஒரு நல்ல குடும்ப நண்பருடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு  ஏற்படுகிறது.

2013/06/17

காணாமல் போய்விட்ட English Teacher :
வீட்டை காலி செய்யும் போது வேண்டாம் என்று தூக்கி போடும் பொருட்களில் முதல் இடம் பிடிப்பது புத்தகங்கள்தான் .எங்கள் பக்கத்து வீட்டு அன்பர் வீடு மாற்றினார்.அப்போது பல books  என் flat watchman  கையில் இருந்தது.நான் ஒரு book  பைத்தியம் .நானும்  கார்த்தியும் எங்கு bookstall பார்த்தாலும் உள்ளே போய்விடுவோம்.
அதே போல் எங்காவது ஏதாவது சிறிய தாள் anything printed  பொறுக்குவதுதான் ( சரியான பொறுக்கி )என் வேலை.அப்படியிருக்க watchman கையில் பார்த்தால்  விடுவேனா? நின்று விட்டேன்.  '' ஏதாவது book இருக்கா ,நான் படிக்கிற மாதிரி ?'' என்று கேட்டேன் .
அவர் சொன்னார் ,'' அதெல்லாம் இங்க்ளிஷ்ல இருக்கு ,நீ படிக்க மாட்ட ''
The Great English Teacher கலாவதிதான் காணாமல் போய்விட்டாளே . 

2013/06/10

Tit  Bits :
சோம்பேறித் தனமா ,lack  of  interest எது என தெரியவில்லை ,பதிவு எழுத விஷயம் இல்லையா ,
எழுதும் விஷயங்கள் படிக்கப் படுகிறதா
எதையாவது எழுதப் போய்  யாராவது வழக்கு போட்டு விடுவார்களா
என்றெல்லாம் யோசனை.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் எதிலும் ஆர்வம் ,பிடிப்பு இல்லாத ஒரு மன நிலை.
  கார்த்தி கண்ணுக்குள் களி நடனம் ஆடிக் கொண்டேயிருக்கிறான்.வேதனை குறையவில்லை.வருத்தம் மறையவில்லை.
......     .......
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் வெளிநாட்டுச்சுற்றுப்பயணங்களுக்காக  ரூ.642 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது
 இவர் மேல் எனக்கிருந்த மதிப்பு போயே போய் விட்டது.The instance  of  his adamance of  not accepting to fire out  the tainted  ministers increased the bitterness .இந்த முறை சைனா சென்ற போதும் அவர் மனைவி கையசைத்த பிறகுதான் நகர்கிறார்.  ஒரு பேட்டியில்  என் மனைவிதான்  என்னுடைய பிரதான adviser , அவர் சொல்படிதான் நான்  நடக்கிறேன் என்கிறார்.
வெறுத்து விட்டது .
....  .......
BANKS :
இவர்கள் கதை அதை விட பெரியது.
லீனா+காதலன்  சொன்ன நபர்களுக்கு கோடி கோடியாய்  கொடுத்திருக்கிறார்கள். நானோ , நீங்களோ போய்  கேட்டு பாருங்கள்.100 முறை அலைய வைப்பார்கள். கொடுத்த அடுத்த நாளில் இருந்து எப்போது திருப்பி செலுத்துவீர்கள் என்று நச்சரிப்பார்கள்.Fine  போடுவார்கள்.
மல்லையாவிற்கு கொடுத்தீர்களே என்று ஒரு ஆங்கில தொலை காட்சியில்  கேட்டால் அது எங்கள் வங்கி சொத்து மதிப்பில் 1% என்கிறார். அதனால் வங்கிக்கு பெர்ய பாதிப்பில்லை என்கிறார்.
நம் F .D க்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரிக்கும் அதே வங்கி இந்த பெரிய corporate களிடம் மண்டியிடுகின்றன.
...... ......
பிரதான ,முக்கிய  முக்கிய பிரச்சினை  காய் கறி  (காய் சரி ...அது என்ன கறி ?Its curry ,தங்க்லீஷ் )
காய் விலை.  
காய் கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் போது பயமாய் இருக்கிறது.மக்கள் பையை வெறித்து வெறித்து பார்க்கிறார்கள். இப்போது நகையை திருடுவதை விட காய் பையை பறித்துக்கொண்டு  ஓடுவார்கள் என நினைக்கிறேன்.அப்படியே காய் பையை பத்திரமாக கொண்டு வந்து விட்டால் ,ஒரே உடம்பு வலி  '' ''திருஷ்டி '' ''
ஏன் என்றால் நான் சின்ன (சாம்பார் ) வெங்காயம் ஒரு கிலோ ,தக்காளி ஒரு கிலோ வாங்கி வந்தேன்.
ha ,only millionairess  can buy .
இதற்கு தீர்வு என்ன ?
நம் விவசாயிகளின் சோம்பேறித்தனம்தான். நானும் ஒரு விவசாயி. என் கிராமத்தில் நான் சொல்கிறேன்.''வருடம் முழுதும் விளையும் தக்காளி போன்ற செடிகளை நடலாம்   . புது techniques  பயன்படுத்தலாம் .Compound farming  செய்யலாம் '' 
எது சொன்னாலும் கேட்பதில்லை.ஒரு எள் ,ஒரு நெல் என்று பழைய நடைமுறை தான் . தண்ணீர் இல்லை என்று ஒரு ஒப்பாரி. இருக்கும் நீரில் செய்ய முடிந்தவற்றை செய்ய முயற்சி செய்வதில்லை.சுலபமாக  பணம் வர வேண்டும். 
இப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம் .அப்புறம் பக்கத்து நாடுகளில் இருந்து வாங்குவோம்.
தமிழ் நாடுதான் பணக்கார நாடாயிற்றே.
வாழ்க 

2013/06/01

1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)