About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/11/29

I STOP WHEN I STOP

 Karthik 's  scribblings :
கார்த்தியின் பழைய நோட்டுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.தன்னுடைய வாழ் நாள் குறைவு என்று தெரிந்ததாலோ என்னவோ ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் எந்த துறையையும் விட்டு வைக்காமல் முயற்சி செய்துள்ளான்.
அப்படி கண்ணில் பட்ட வரிகள்.:
NEON  BULB UNPLUGGED :

Remade  shall be the blade
that was  broken
And the crownless
Shall be the king
இவை சினிமா வசனங்கள் என எண்ணுகிறேன்.தெரியவில்லை .
ஆனால் அடுத்து வரும் வரிகள் அவனுடைய முயற்சி என்பது உறுதி.
...........   ................
2 busy 2 B SAD
2 + ve  2 B  doubted
2 optimistic  2 B fearful
2 determined 2 B defeated
...........  ...............
i don't want leisurely deadlines.
Work expands to fill available time.
I don't want impossible deadlines.
How can there be a limit to me.
Impossibility is a human concept.
I STOP WHEN I STOP 
இது கார்த்தி தன் மேனஜர் (அ )டீ.எல்  நச்சரிப்பு தாங்காமல் எழுதியது என நினைக்கிறேன்.
அவன் திடீர் விபத்தும் அவன் பிரிவும் என்னை செயல் இழக்க செய்திருந்த வேளையில் எவ்வளவு சென்சார் செய்ய வேண்டுமோ அவ்வளவு சென்சார் செய்த பிறகு எனக்கு கிடைத்த மிச்சம் .எத்தனையோ கேள்விகள் மனதிற்குள்.யாரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்று தெரியும்.மனம் ஊமையாக அழுகிறது.
கார்த்திக் அம்மா

2013/11/21

A T M
நானாக இருந்திருந்தால் '' ''அப்பா சாமி, இந்தா பணம். நகை ''என எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.பெங்களூர் பெண் இப்படியா செய்வார்? அவன் கத்தியை எடுத்த பின்னும் போராடுகிறார்.
மனிதர்கள் அரக்கர்களாக மாறிவிட்டனர்  என்பதை உணராதவரோ?
G A S :
சேலம் மாவட்டத்தில் எரிவாயு வெடித்து வீடே இடிந்து 6 பேர் பலி.
இதில் கொடுமை என்னவென்றால்  பக்கத்து வீட்டோரும் பலியானதுதான்.ஹெல்மெட் போட்டு போங்கள் என்ற அறிவுரை சரிதான்.பக்கத்து வீட்டு எரிவாயு உருளைக்கு எந்த ஹெல்மெட்?
ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும் . விதி வலியது. எந்த இடத்தில் எந்த ரூபத்தில் வந்து தாக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
ப.சிதம்பரம்:
இவர் ஏன் இப்படி பேசுகிறார்?சில நாட்களுக்கு முன்புதான் உயிரோடிருக்கும் முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களை ''இறந்து விட்டார். அமரர் '' என்றார்.
இப்போது நாட்டு பணம் அனைத்தையும்  I S R O வுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.
பாவம் அந்த விஞ்ஞானி . இன்னும் கொஞ்சம் அதிக நிதி தாருங்கள் என்றார்.இந்தியாவின் மொத்த பணத்தையும் கேட்கவில்லை.ஒரு லட்சம் கோடி வாராக் கடன் என்று பெரிய பண முதலைகளுக்கு தாரை வார்த்தது பற்றி வாய் திறக்கவில்லை.
அவரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.
.....    .....
இவருக்கு அண்ணன் நம் வருங்கால பிரதமர் கனவில் இருப்பவர்.காந்தியை ''மோகன்லால் '' ஆக்கி விட்டார்.
என்னவோ , நம் கதி அதோ கதிதான்.
கலாகார்த்திக்

2013/11/14

பிறந்த நாள்
14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா

2013/11/05

திக் திக் 44 நிமிடங்கள்...+ராதாகிருஷ்ணன்  FAN ஆனேன்
HAPPY HAPPY ..மங்கள்யான் வெற்றி
அப்பப்பா  44 நிமிடங்கள் வயிற்றுக்குள் 1000 பட்டாம் பூச்சிகள் பறந்தன. Live ஆக பார்க்க ஆசை ஆசையாக  இருந்தது. ஆனால் என்னைப் போல் வாழ்விழந்த  ஒரு வீணாப் போனவள்  பார்த்தால் எங்கே  mission  தோல்வியாகிவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஆர்வத்தை கட்டு படுத்த முடியாமல் பார்த்துக் கொண்டிருநதேன்.
என் பிரார்த்தனை வீணாகவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்  நன்றிகளும்.
அடுத்ததாக  நிச்சயமாக  நம் ராதாகிருஷ்ணனை  பற்றி  .நிறையவே சொல்ல வேண்டும். Dedication என்று இவரை உருவகப்படுத்தலாம்.
இதற்கு முன் ஒரு செயற்கைக்கோள்  தோல்வியாகி கீழே விழுந்த போது தன்னுடன் இருந்த அனைத்து ஆராய்ச்சியாளர்களையும்  அனுப்பி விட்டு அந்த தோல்வியை தன்னுடையதாக மட்டுமே ஏற்றுக்கொண்டு பேசி விட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறிய காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
இன்று பாருங்கள் :
 எல்லோரையும் அழைத்து பேச வைக்கிறார்.நிச்சயமான பெருந்தன்மை.
யக்ச்பால் என்றொரு வயதான  அறிவியலாளர் .1990 களில் இவர் தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு  பதில் தருவார்.பைத்தியமாக அலைவோம்.அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு.
அந்த மனிதரை இன்று பார்க்கிறேன். எதோ நெருங்கிய உறவினர் ஒருவரை பார்ப்பது போல் சந்தோஷமாக இருந்தது.
அமைச்சர்  நாராயணசாமி
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று நினைத்தால்  Dr ராதாகிருஷ்ணன்  '' .இவர் 2010 லிருந்து  மிக நெருக்கமாக உதவியாக இருந்தார்'' என்கிறார்.இந்த மனிதர் ஒரு வித்தியாசமானவர்தான்.இவரது மனைவி 2 சக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானார்  என்று செய்தி படித்த போது இவ்வளவு எளிமையான  ஒரு அமைச்சரான மனிதரா  என்று வியந்தேன்.இப்போது அந்த  .மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
.....     .......
மரண மொக்கை படங்களை  எடுத்து விட்டு இமாலய  சாதனை செய்தது போல் பேசும் நம் சினிமா பிரபலங்களை யும் இந்த விஞ்ஞானிகளையும் (scientists ) ஒப்பிட்டு வேதனைதான் அடைய வேண்டியுள்ளது.
சினிமா நடிகர்கள் 20 கோடி 30 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.
ஆனால் இவர்களுக்கோ  1 அ 2 லட்சம் சம்பளம் இருக்கலாம்.இவர்களுக்கு கட் அவுட் கிடையாது.பாலாபிஷேகம்  கிடையாது..ஆனால் இவர்கள் போல் நேரம் காலம் பார்க்காமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களால்தான் நம் இந்தியா  வெற்றி நடை போடுகிறது.
பி.கு.
எனக்கும் படிக்கும் காலத்தில் இப்படி சாதனை செய்ய வேண்டுமென்று வெறி இருந்தது.
விதி வேறு விதமாக சிரித்தது.
ISRO  தலைவர் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டார் .Religion starts when science fails
கார்த்திக் அம்மா

2013/11/02

மியாவ் என்றது    புலி    புர்ர் என்றது  பூனை ::

ஷாருக் கான் சொத்து 2500 கோடியாம் .
ஒரு  நிகழ்ச்சியில்  வந்து எனக்கு டான்ஸ்  தெரியாது. நீங்கள் ஆடினால் அதைப் பார்த்து நான் ஆடுவேன்  என்று என்ன நடிப்பு நடித்தார். இதை அகங்காரத்துடன்  அங்கீகரித்த   பூனை  என்னவோ தனக்கு மட்டுமே  டான்ஸ்  தெரியும் என்ற மிதப்பில் ஆடியது. 
அட
 தன்னை விட எல்லா விதத்திலும் சீனியர்  என்ற ஒரு மதிப்பு மரியாதை வேண்டாம்?
அந்த டான்ஸ் மேதையின் முகத்தில்  அப்படி ஒரு கர்வம் தெரிந்தது.
உங்களை விடவா நான் ? என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.
2500 கோடியில்  பாதி கூட இருக்காது இவருடைய சொத்து.அவரின் பிரபலத்தில்  பாதி கூட இருக்காது இந்த 'ப்ரோ ' வுக்கு.
பொதுவாகவே நம் தமிழ் சினிமா நடிகர்கள் தங்களை தெய்வப் பிறவிகளாக  .நினைத்து கொள்கிறார்கள்.
S R K  வந்தார். பேசினார். சென்றார். படம் வெளியிட்டு கோடிகளை அள்ளினார். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று உணராமல் முட்டாள் பட்டம் கட்டிக்  கொண்டது பூனை.
......       .......    .......
டெல்லி முதல்வரும்  வெங்காயமும்::
டெல்லி முதல்வர் ஒரு வாராமாக  சமையலில் வெங்காயம் சேர்த்து கொள்ளவில்லையாம்.
என்ன ஒரு நிர்வாகத் திறமை.
வெங்காய விலையை குறைக்க என்ன முயற்ச்சிகள் எடுக்கலாம் என்று முனையாமல் .....காமெடி .....