About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/11/28

பிலிப் ஹியூக்ஸ்:
மனம் கனத்து போகிறது.அவரும் கார்த்தியாகவே தெரிகிறார்.
 கார்த்தியின் விபத்தின் போது helmet அணியவில்லையா என்ற கேள்வியே பெரிதாக இருந்தது.
அணியவில்லைஎன்றாலும் தப்பு. அணிந்தாலும் தப்பு.
இவர்  (  பிலிப் ஹியூக்ஸ்  ) ஹெல்மெட் அணிந்துதான் ஆடினார். ஆனால் அது பழசு.என்கின்றனர்.
அதே ஹெல்மெட்டை போட்டுதானே 4 வருடங்கள் விளையாடி இருக்கிறார்.
எல்லாம் விதி.
போகும் நேரம் வந்தால் , போவதற்கு ஒரு காரணம். அவ்வளவுதான்.
அந்த தாயின் கண்ணீர்???????????????
நிற்காத கண்ணீர்.
குறையாத துக்கம்.
அவன் நினைவுகளே வாழ்க்கை என்றாகி விடும். நான் வாழும் வாழ்க்கை போல்.

2014/11/22

என் வீட்டிற்கு ஒருவர் வந்தார்.
வீட்டில் valuables எதுவும் இருக்க வேண்டாமே என்றார்.
If I am of any value ,I am the valuable in the house என்றேன் .அவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
இப்படி சிலேடை பேசி பேசித்தான் சீரழிந்து விட்டேனோ என்னவோ..
in 90s when I was a teacher , as punishment I made some students stand  out of the class .My CEO came and asked "  " why are they standing out ? " ".I said " "because they are outstanding " ".திகைத்து போனார்.இந்த வசனம் பின்னாளில் ஒரு சினிமாவில் வந்து விட்டது ..
அது போல்தான் கார்த்தி, செந்தில் இருவரும்( ஒரு 6,7 வயது இருக்கும்.)  கொண்டிருந்தனர். கார்த்தி செந்திலை  பார்த்து சொன்னான். "You  are goodly bad "
the instant reply from Senthil was " " you are rightly wrong ".இதை கேட்டு கொண்டிருந்த நான் ஆச்சரியப் பட்டு போனேன். சரி,சரி, அம்மாவின் வாய் மகன்களுக்கு வருவது சரிதானே.
****** *****
ஒரு கவிஞர் ஒரு பாட்டெழுதி விட்டால் போதும்.ஒரு 4 சேனலில் அந்த 5 year project பற்றி ஒரு மணி நேர விளக்கம் கொடுக்கிறார்.
இவரைப் போல் எத்தனை பேர் பாட்டு எழுதுகிறார்கள்.அவர்கள் எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக் கொள்கிறார்களா ?சரி,தனக்கு தானே பாராட்டு விழா எடுத்துக் கொள்ளும் குடும்பம் அல்லவா?
பதிவர்கள் எத்தனை பேர் அற்புதமான கவிதைகள் எழுதுகின்றனர்.உண்மையிலேயே அற்புதமான கவிதைகள்.
****     ******
யாரோ எதோ ஒரு ஜாதியின் இலவரசராம் .Prince of வ.......ர .....அப்பா .....,தந்தை குலம் சொல்கிறதாக செய்தி படித்தேன். எப்போதப்பா அந்த ஜாதி அவருக்கு பதவி கிரீடம் சூட்டியது?அந்த ஜாதிக்கு அப்பாவும் மகனும் என்ன செய்தார்கள் என்று ஒரு பட்டியல் வெளிட்டால் நன்றாக இருக்கும்.
**      ****
மீனவர் விடுதலை ஒரு நாடகம் என்ற கூக்குரல் எழுகிறதே.உண்மை என்ன?

2014/11/17

முத்த புரட்சி :
எது கலாசாரம் என்று கேட்கிறார்கள்?
கலாசாரம் என்பது மிக மிக முக்கியமாக ஆரோக்கியம் சம்பந்தப் பட்ட விஷயம்.
ஒருவர் 100 பேருடன் முத்தம்  தரும்போது எத்தனை பேருடைய எச்சில் கலப்படம் ஆகிறது.எத்தனை நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது..
ஏன்  ஒரு மருத்துவர் குழந்தைகளுக்கு எல்லோரும்  முத்தம் தரக் கூடாது என்று சொல்கிறார்கள்?
அது என்ன கலாச்சார சீர்கேடு?
ஆரோக்கியமா  அல்லது எதேச்சாதிகாரமா?
ஒரு நோய்வாய்ப் பட்டவரை எல்லோரும் வந்து பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, அந்த மருத்துவர்கள் முட்டாள்களா ,திமிர் பிடித்தவர்களா,பழமைவாதிகளா , என்ன என்று சொல்லுங்கள்.
ஒரு கணவன் மனைவி உறவிற்கே எத்தனை விதிகள் உள்ளன தெரியுமா?
எதையும் பழமை, கட்டுப்பாடு,மூடத்தனம் என்று இது எங்கள் சுதந்திரம் என்று நேரம் காலம் பார்க்காமல் எல்லாம் செய்ததின் விளைவுதான் இன்று இத்தனை நோய்கள்.
பாதி பேர் வெளியில் சொல்லாமல் எத்தனை நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்  என்பது தெரியுமா?
எதை எடு, எங்கள் சுதந்திரம், எங்கள் உரிமை என்று கத்துவதே 
வேலை.
போதாதற்கு மீடியா
அவர்களுக்கு ஏற்ப ஒரு 4 பேர்.
ஏதோ அவர்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுவதும் சகிக்கவில்லை.
,போதும் . நிறுத்துங்கள்.
 முன்னோர் காட்டிய வழியில் வாழ்க்கையை நடத்துங்கள்.

2014/11/16

தமிழ்நாட்டில் கொலை கொலை அதிகமாகிவிட்டது என்பதற்கான முக்கிய காரணம்
1.காதல் .
முக்கியமாக பெண்கள் படிக்கும் வரை தன தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய இளிச்சவாயன் ஒருவனை காதலிப்பது போல் நடிப்பது. படித்து முடித்து, வேலைக்கு சேர்ந்து விட்டால் அவர்களின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டு பழைய காதலனை கைகழுவி விடுவதுதான் நடக்கிறது.
eg :
மாணவி தேஜாஸ்ரீ கொலை வழக்கில் 2 கொலையாளிகள் சிக்கியது எப்படி?


மாணவி தேஜாஸ்ரீ கொலை வழக்கில் 2 கொலையாளிகள் சிக்கியது எப்படி? என போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

’’கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் யுவஆதித்தனும், இளம்பெண் ஹரிணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது பெற்றோருக்கு முதலில் தெரியாது. பின்னர் தெரிந்து விட்டது. ஹரிணியின் குடும்பம் ஏழை குடும்பம். ஆனால் யுவஆதித்தன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஹரிணி என்ன கேட்டாலும் யுவஆதித்தன் வாங்கி கொடுத்து வந்துள்ளார். துணிமணி என எது கேட்டாலும் உடனே அவர் வாங்கி கொடுத்து வந்துள்ளார். சில மாதத்திற்கு முன்பு ஹரிணிக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளது.

இதை அறிந்த யுவஆதித்தன் வருத்தப்பட்டார். தனது காதலி சென்னைக்கு சென்று விட்டால் பார்க்க முடியாது, பேச முடியாது என வருத்தப்பட்டார். இதனால் ஹரிணியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தீபாவளி அன்று சென்னை சென்ற யுவஆதித்தன், காதலி ஹரிணியை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. மறுநாள் ஹரிணியின் நிறுவனத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஹரிணி தன்னை பார்க்க வரவேண்டாம் என கூறி அவரை கண்டித்து உள்ளார்.

இருப்பினும் யுவஆதித்தன் அன்று முழுவதும் ஹரிணி நிறுவனத்தில் அவருக்காக காத்து இருந்தார். இதை அறிந்த ஹரிணி காவலாளியை அழைத்து யுவஆதித்தனை விரட்டி விட கூறினார். காவலாளியும் விரட்டி விட்டுள்ளார். இதனால் யுவஆதித்தன் கோபம் அடைந்தார். தன்னை விரட்டி விட்ட காதலியையும், காதலியுடன் சேரவிடாமல் தடுத்த அவரது பெற்றோரையும் கொல்ல சதிதிட்டம் போட்டுள்ளார்.

இதற்கு கடந்த ஒருமாதமாக காத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிணியின் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினரை கொல்ல முடிவு செய்து நண்பருடன் வந்துள்ளார். ஆனால் வீட்டில் தேஜாஸ்ரீ மட்டும் இருந்துள்ளார். இதனால் இவரை மட்டும் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த கொலை வழக்கு செல்போன் மூலம் துப்பு துலங்கி உள்ளது. கொலை செய்ய புறப்பட்ட யுவஆதித்தன் அன்று மாலை சேலம் புறப்பட்டு வந்துள்ளார். தன்னை செல்போன் மூலம் போலீசார் பிடித்து விட்டால் என்ன செய்வது என கருதி அன்று மாலை 3மணியளவில் செல்போனை அணைத்து வைத்து விட்டார். கொலை நடந்து முடிந்து தப்பி சென்ற பின்னர் இரவு 9மணியளவில் செல்போனை ஆன் செய்துள்ளார். இந்த கொலைக்கு உதவிய அவரது நண்பர் சசிக்குமார் மாலை 6மணி அளவில் சேலம் வந்து இருப்பதும் செல்போனில் பதிந்து உள்ளது. இதை வைத்து இருவரையும் கண்காணித்த போலீசார் பின்னர் கைது செய்து விட்டனர். முதலில் மறுத்த இருவரும் பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹரிணி கிடைக்காத ஏக்கத்தில் யுவஆதித்தன் கொலை வெறியுடன் சுற்றி திரிந்துள்ளார். மாணவி கொலை நடந்த அன்று வீட்டில் தேஜாஸ்ரீயை தவிர வேறு யாரும் இல்லை. இருந்து இருந்தால் அனைவரையும் கொல்ல இருந்தேன் என யுவஆதித்தன் வாக்குமூலத்தில் கூறி உள்ளான் //
...........
பெண்களே திருந்துங்கள்.

2014/11/14

இன்று பிறந்த நாள் :
இன்று என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு பிறந்த நாள்.
எனக்கும் இன்றே பிறந்த நாள்.
ஆம்.
இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்.
நான்:14.11.1958.
கார்த்தி:14.11.1981.அவன் பிறந்த அன்று என்ன சந்தோசம். என் தாய் வீட்டின் 3வது தலைமுறையின் முதல் மகன். 4 சகோதரர்களுடன் பிறந்த செல்லப் பெண் நான் என்பதால் கார்த்தி பிறந்த  போது ஒரே ஆர்பாட்டம்தான்.
ஆனால் இன்று??????????????

என்னை விட்டு பிரிந்து என்னை ஊமையாக்கி, சிலையாக்கியவனை,

நான்  அவனை சிலையாக்கி அவனுடைய  வீட்டில் நடு  நாயகமாக நிற்க வைத்து அழகு பார்க்கிறேன்.
மனதிற்கு சிறு ஆறுதல்.
அவன் பிறந்ததை நினைத்து சந்தோஷப் படுவதா, பிரிந்து விட்டானே என்று வருத்தப் படுவதா?
கார்த்திக் அம்மா