About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/10/31

மகாவீர் +கறிக்கடை
மகாவீர் பிறந்த நாள் என்பதால் இறைச்சி கடைகள் இருக்க கூடாது என்ற உத்தரவு பல அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.
தீபாவளிக்கு அடுத்த நாள்.
ஞாயிற்றுகிழமை (sunday )
எல்லோருக்கும் பிரியாணி ஆசை .
நியாயம்தானே.
ஜைனர்கள் தங்கள் பூஜையை செய்யட்டும்.
அவர்கள் கோழி சாப்பிட வேண்டாம்.
ஆனால் எல்லோரையும் சாப்பிடக் கூடாது  சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஜைனர்கள் இப்படி ஒரு வேண்டுகோள் கொடுத்ததாக செய்தி இல்லை.அவர்கள் இப்படி ஒரு பிரச்சினையையும் கிளப்பவும் இல்லை.
அப்படியென்றால்
இது யாருடைய உத்தரவு?
தனி மனித சுதந்திரம் இல்லையா?
எனக்கு பிடித்ததை நான் சாப்பிடுவேன்.
(நான் ஒரு காலத்தில் தீவிர கோழி பிரியாணி பிரியை.)
ஆனால் கார்த்தியின் மறைவிற்கு பிறகு அனைத்து சுவைகளையும் நிறுத்தி விட்டேன்.
இது என் முடிவு.
இது என் சுதந்திரம்.
நானாக சாப்பிடாமல் இருப்பது வேறு.
ஒருவர் என்னை கட்டாய படுத்துவது வேறு.
இந்த தவறுகள் இன்றோடு போகட்டும்.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/10/21

பயமாய் இருக்கிறது
என்ன நடக்கிறது நாட்டில்????????????
ஒரு பக்கம் டெபிட் கார்ட் குளறுபடி.
ஒரு பக்கம் முதல்வர் உடல்நிலை
பெட்ரோல் விலை
காவிரி பிரசினை
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்றால்
தமிழ்  மக்களுக்கு எல்லா பக்கமும் இடி
++++ அடி .
.....................     .................
இந்த முறை பெங்களூருக்கு சென்ற போது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன்.
மனிதர் பொங்கி விட்டார்.
வட நாட்டினர்   வந்து வேலை பார்த்து சம்பாதித்து விட்டு ஊருக்கு போய்விடுகிறார்களாம்.
தமிழர்கள்தான் கன்னடிகர்களின் முன்னேற்றத்தை  குறைத்து நாமே முன்னேறுகிறோமாம்.
ஓரளவு உண்மை என்றே தோன்றியது.
வேலைக்கு சென்ற இரு வருடங்களில் நம் இளைஞர்கள் வீடு வாங்கி விடுகிறார்கள்.( (கார்த்தி வேலைக்கு சேர்ந்து மூன்றே  மாதங்களில் வீடு வாங்கினான்.) )
பதவி உயர்வு  பெற்று விடுகிறார்கள்.
பொறாமை வரத்தானே செய்யும்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/10/07

நெஞ்சு பொறுக்குதில்லையே :
ஒட்டு போட்டவர்களுக்கு 100 %உரிமை இருக்கிறது.தன தலைவிக்கு என்ன நேர்ந்தது என்று தமிழக மக்கள் அனைவரும் கவலையுடன் உள்ளனர்.
இது தனி மனித பிரச்சினை அல்ல.
ஒரு மாநில பிரசினை.
அது எப்படி அவர் ஒரே ஒருவருக்கு சொந்தம் என்று ஆக முடியும்?
வேறு யாருக்கும் உரிமை இல்லையா?
வேறு யாருக்கும் தைரியம் இல்லையா?
அவர் நலம் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுதல்.
முதல்வரை முதல்வருக்காக மட்டுமே வழிபடும் பக்தர்கள் பல கோடி.
அண்ணன் எப்ப சாவான்
திண்ணை எப்ப காலியாகும்
என்பது பொய்.
திண்ணை வேண்டும்.என்று ஏங்குபவர்கள் கூட அவர் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பர்.
அவர் மீது பல குறைகள் சொன்னாலும் அடிமனதில் அவர் மீது ஒரு மதிப்பு, ஒரு அன்பு இருக்கிறது.
அந்த இரும்பு பெண்மணி நலம் பெற வேண்டும்.
ஆனால் அவர் உடல்நிலை பற்றி தெரிய வேண்டும்,