About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/11/25

seythi  செய்தி.
தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ், ஹைத்ராபாத் நகரில் பேகம்பேட் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். ரூபாய் 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை காலை சந்திரசேகரராவ் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். நக்சலைட்டுக்கள் அச்சுறுத்தல் இருப்பதால் குளியறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் குண்டு துளைக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி உள்ள இந்த வீட்டில் 250 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் அமர்ந்து கலந்துரையாட பிரம்மாண்ட அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. 
இதற்கு என்ன சொல்வது????????????

2016/11/23

எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்.
என் திருமணத்தின் போது  என் தந்தை எனக்கு நலங்கு இடுகிறார்.
ராஜாவான அவர் :
அவருடைய   கண்ணசைவில்   ஊரே அசைந்தது.செயல்பட்டது.
அப்படிப் பட்ட அவர் என் கண் பார்வைக்கு நான் நினைத்ததை செய்தார்.
என்  தாய்க்கும் , 4 சகோதரர்களுக்கும் நான்தான் உயிர் என்றாலும் 
ஊருக்கே நான் செல்ல இளவரசி என்றாலும்
அப்பா  ...அப்பாதான் .
கலாகார்த்திக் 
கார்த்திக் அம்மா

2016/11/17

இன்று மத்திய அரசு (இப்போது மட்டும் மத்திய அரசு ...மீதி நேரங்களில் பிரதமர்..) வெளியிட்டுள்ள அறிவிப்பு இது :
திருமண செலவிற்கு 2.5 லட்சம் வங்கிகளில் இருந்து எடுத்து கொள்ளலாம்.
.......1.முதலில் வங்கி கணக்கில் அவ்வளவு பணம் கொண்டு வர வேண்டும்.
2.அந்த பணம் எடுக்க ஆதாரம் சமர்ப்பிக்க்க வேண்டும்.
3.எல்லா கருப்பு பணமும் ஒழிந்து .....ஒளிந்து .....விட்டது.
சரி.சரி.சரி.
ஒரு மணப் பெண்ணின் புடவை மட்டும் 15 கோடி ரூபாய் என்று செய்தி படித்தேன்.
அந்த கல்யாண செலவு மட்டும் 650 கோடி என்றும் செய்திகள் சொல்கின்றன.நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.காட்சிகள் மயக்கத்தை வரவழைக்கின்றன.
4.கேள்வி .....இவர் எந்த வங்கி கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுத்து செலவு செய்தார்????????????????
வருமானம் கணக்கு காட்டப் பட்டதா?
வரி கட்டப் பட்டதா???????????????
சுரங்க தாதா  சிரிக்கிறார்.
முட்டாள்களா ..நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியாதா ?
என் மருமகன் யார் ?????????????
அவர்தான் எல்லா செலவும் செய்தார் என்று கதை சொல்ல மாட்டேனா ?
உங்கள் காதில் முழம் முழமா பூ சுற்ற எனக்கு தெரியாதா ?
எங்களை போன்ற முதலைகளை காப்பாற்றவே ஒருவர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
எங்களுக்கு என்ன கவலை??????
கார்த்திக் அம்மா
இது செய்தி :::::::::::::::::::
இந்த பட்டியலில் ரூ.1,201 கோடி கடன் பெற்றுள்ள விஜய் மல்லையா பெயர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக கேஎஸ் ஆயில் (ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (ரூ.526 கோடி), ஜிஇடி பவர் (ரூ.400 கோடி) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (ரூ.376 கோடிகளே) அடங்கும்.

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி வருகின்றனர். மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கிக் கணக்கில் இருந்தும் ஏ.டி.எம். மூலமாகவும் எடுப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில், கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘ஸ்டேட் வங்கி தனது வாராக் கடன் குறித்த தகவல்களை புத்தகப் பதிவில் செயல்படாத சொத்து என்ற பெயரில் என்று பட்டியலிட்டுள்ளது. அவற்றை தள்ளுபடி செய்வதாக குறிப்பிடவில்லை. மத்திய அரசு அந்த கடனை வசூலிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது." என்றார்.:::::::::::::::
அப்பாடா .தாங்க முடியல எத்தனை 
குழப்பங்கள்?????????????????
சாதாரண மக்கள் படும் பாடு ???????????????
கார்த்திக் அம்மா



2016/11/14

14.11.81
என் அன்பு மகன்
என் உயிர் மகன்
என் தங்க மகன்
கார்த்தியின் பிறந்த நாள்.
என்னுடைய பிறந்த நாளும்தான்.
ஆனால் சூரியன் அருகில் நட்சத்திரம் போல்
கார்த்தியின் பிறந்த நாளே முதன்மை.
என் பிறந்த நாள் ????????
அருவமாய் இருப்பினும்
(மறு  பிறவி எடுத்து )
உருவமாய் இருப்பினும்
தெய்வமாய் இருப்பினும்
அன்பு மகனே
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக் 

2016/11/10

செய்தி ?><:::::: p="">
திருமணமான 4 நாளில் கணவரைப் பிரிந்து காதலனை கைப்பிடித்த காதலி....
இது போல் 1000 பெண்கள்.
எனக்கு ஒன்று புரியவில்லை.
காதலிக்கும் தைரியம் இருக்கும் பெண்கள் 
அந்த காதலனையே மண  முடிக்க எந்த போராட்டத்தையும் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது.
அப்படி வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டால் 
காதலனை மறந்து 
கணவனுக்கு நல்ல மனைவியாக  இருக்க வேண்டும்.
இதில் பாவப்  பட்ட ஜென்மங்கள் இந்த திருட்டு பெண்களை கல்யாணம் செய்து கொள்ளும் அப்பாவிகள்தான்.
எனக்கு வேண்டப் பட்ட 3 வாலிபர்கள் இப்போது டைவர்ஸுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களே கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.
கோபத்துடன் 
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்

 

2016/11/09

என்ன ஒரு அற்புதமான நாள்.
அமெரிக்காவில் ஒரு திருப்பம்.
அதை விட ஒரு பெரிய்ய்ய அதிர்ச்சி திருப்பம்.
புது 500 ரூபாய் நோட்டு.
மக்கள் தடுமாறுகிறார்கள்.
நல்ல வேளை .
கார்த்தியின் பிறந்த நாள் 14 திங்கள் அன்று வருவதால் கொஞ்சம் பணம் atm  ல் எடுக்க நினைத்தேன்.
ஆனால் எடுக்கவில்லை.
வங்கிக்கு சென்று வரிசையில் நின்றிருக்க வேண்டுமே.
கார்த்திக்கிற்கு 35 வயது நிரம்பியிருக்கும்.
எனக்கும்தான் 14.11 தான் பிறந்த நாள்.
கார்த்தி பிறந்ததை நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடையும் மனது அழுது கொண்டே மகிழ்கிறது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்