About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/07/30

The British Raj

At school and anywhere else when I learnt history it's been repeatedly insisted and emphasized that the Britishers treated us very crudely and we were treated like animals.
My question is,
'now we are free..it's democracy..we have all rights...'
1]do not our police force kill 8 in Gujarat ?
2] are not the people lathi charged ?
3]how many times has teargas been used to disburse the crowd?
4]aren't the protesters denied permission to go on a procession ?
5]weren't the govt employees put in jail just for going on a strike ?
6]does not the govt warn with stringent action against its employees if they don't turn to work?
the questions will be endless.
NOW are we really free? are we living in a democratic nation? how is present India different from British Raj? so isn't it unfair to blame them for having ruled us like that?
with luv and luv only
karthikeyan

2007/07/28

எப்போதாவது கண்ணில் படும் சில பக்கங்கள். அப்படி கண்ணில் பட்டது ஞானியின் பக்கங்கள்.
அப்துல் 'கலா'ம் என்ற மாபெரும் மனிதரை பற்றிய அவருடைய விமரிசனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஒரு ஜனாதிபதியாக அவர் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம் மாணவ மாணவியரிடையே பேசியதுதான் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மற்ற ஜனாதிபதிகள் எல்லாம் என்ன செய்து விட்டனர்? இவர் என்ன செய்யவில்லை ? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியுமா ?
'கலா'முடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு நான் எந்த வகையிலும் தகுதியற்றவள் என்றாலும், அடிப்படையில் நானும் ஒரு ஆசிரியை என்பதால் கூறுகிறேன். எனக்கும் மாணவ சமுதாயத்துடன் உரையாடத்தான் பிடிக்கும். அதுவும் ,, படிப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் 'AIM HIGH' [இதைத்தான் கலாம் தமிழ் படுத்தப் போய் 'கனவு காணுங்கள் ' என்று சொல்லி , அதை நம் தமிழ் சினிமாவில்ரிந்து எல்லா இடத்திலும் அவலட்சணமாய் பயன் படுத்தியது கொடுமையிலும் கொடுமை ].. என்பது பற்றியும் மட்டும்தான் பேசத் தெரியும். நாம் கூறும் விஷயங்களை கண்களில் ஆர்வம் மின்னக் கேட்கும் அந்த இளம் தளிர்களுக்கு வகுப்பு எடுப்பதில் ஏற்படும் நிறைவே தனி..அப்படிப்பட்ட மாமேதையிடம், நீ ஒரு சரியான அரசியல்வாதியாக தகிடு தத்தமெல்லாம் செய்யவில்லை..உன் ஜனாதிபதி பதவியை உபயோகித்து நாடு நாடாக சுற்றவில்லை..பராளுமன்றத்தின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து உன் எதேச்சதிகாரத்தை காட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ..என்ற பொருள் படும் வகையில் எழுதியி்ருந்த அவரைப் பார்த்து வியந்து போனேன்.
ஆனந்த விகடனில் இரண்டு பக்கம் எழுதுவதாலேயே இவர் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும் என்பது விந்தை
கலாவதி கார்த்திக்கேயன்

2007/07/25

A Strange Teacher

today i happened to view the swearing in ceremony of Madam President [ the news reader in NDTV kept on telling ""female president "" !!!! ??? ].
my memories went back..you know my mom. she is a bit different from others in many ways..can even a say 'a loose', [ add some more adjectives of your taste ]..if not extra ordinary, she is not ordinary. coming to the matter, it 's 90's..my mom was working in school. on Feb 28 th..[ the budget presentation ] she would go and fight with the Head master to declare half a day holiday,,
to the school, so that all the students could go home and see TV. especially, the present P.M's budget presentation would be interesting with unexpected jokes and quotes from 'Thirukkural ".The poor Head master can not fight with this fighter cock, and he would be wondering what is so interesting in viewing the budget. The next day class will be a brain storming session.
Have you ever come across such a strange character?
with luv and luv only
k.karthikeyan

2007/07/24

padiththathil suttathu ... manathai suttathu ... sorry chandra, என்னோடு மிகவும் பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று அவனின் நினைவு நாள். இன்றைய பொழுதில் அதையே சொல்லிச் சொல்லியோ அல்லது எண்ணி எண்ணியோ கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் நிலை இல்லை. இருந்தாலும் இன்று கிடைத்து விட்ட ஒரு சிறிய தனிமைப் பொழுதில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.

அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லாமல் எங்கோ உறைந்து விட்ட சோகம் நிறைந்திருந்தது. சாவின் வலி ஒட்டியிருந்தது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும், விட்டுப் போகாமல் மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது. அதற்காக எனது எல்லா செயற்பாடுகளையும் விட்டு விட்டு இன்றைய பொழுதை நான் அழுத படியே கழிக்கவில்லை. எனது நித்திய வேலைகள் வழமை போலவே தொடர்கின்றன. காலம் சிலவற்றை ஆற்றித்தான் விடுகிறது. மரணித்த செய்தியை தாங்க முடியாது மனம் புரண்டு அழுத பொழுதுகள் மெதுமெதுவாக நகர்ந்து, பின்னர் வேகமாகவே ஏழு வருடங்களைத் தாண்டி விட்டன.

இன்று, இந்த உலகத்தின் எந்த அந்தந்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக, விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை ஒரு போதும் தூக்கி எறிந்து விட முடியாது. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்… என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஏழு வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன. இன்றும் அப்படித்தான் அவன் பற்றிய ஏதேதோ நினைவுகள் எனக்குள் விரிந்து, கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.

அன்று போல் இன்று நான் சோகத்தின் விளிம்பில் நின்று இதை எழுதவில்லையாயினும், இன்றைய இந்தக் கண்ணீர் கனமானது. ஒரு மரணத்தின் ஆற்றாமைப் பொழுதுகளை மறக்க முடியாது தவிப்பது.

இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்..?


அண்ணா..!
இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்
நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்
நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்
என் வாழ்க்கையாகி விட்டது.

எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.



உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ்.

இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.

கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.

.
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ...
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

! பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப..? see, it's the same..with every one she has very beautifully narrated her feelings and mine is the same.....karthik amma

ஆடி மாதமும் ஆடாத மாதமும்
இன்றைய தினமலர் நாளிதளில ஒரு செய்தி.:தண்ணீர் வந்தும் விவசாயிகளுக்கு பிரச்சினை..விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை..இன்றைய கால கட்டத்தில் எல்லோரும் புலம் பெயர்ந்து நகரத்திற்கு வந்து விட்டனர்..ஆனால், முன் காலத்தில் அவர்கள் கிராமங்களில்தான் இருந்தனர்.
விஷயத்திற்கு வருவோம்..இந்த ஆடி மாதம் காவேரி பெருக்கெடுத்து ஓடி வருவாள். இப்போதுதான் நிலம் உழுது விதை யிட்டு, நாற்று நட்டு என்று வேலை தீவிரமாக இருக்கும்.. மேலும் இப்போது உள்ளது போல் அப்போது மின் கருவிகளும் கிடையாது. அதனால், விவசாய வேலையாட்கள் , விவசாயிகள் நிலத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்
அதனால்தான், இந்த மாதத்தில் திருமணம் போன்ற விசேஷங்கள நடத்தப் படவில்லை. மற்றபடி இந்த மாதம் ஒரு கெட்ட மாதம் அல்ல.
இரண்டாவதாக, அம்மன் , கூழ் ஊற்றுதல் போன்றவையும் ஒரு காரணத்திற்காகத்தான். நிலங்களில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உழைக்க வேண்டும். சமையல் செய்யும் நேரம் அதிகம். அதனால், நில உரிமையாளரே வயலில் வேலை செய்யும் அனைவருக்கும் உணவிடுவது வழக்கம். அந்த காலத்தில் கூழ் அல்லது களி தான் முக்கிய உணவு.
இனாமாக கொடுப்பதை விட , தெய்வத்தின் பெயரில் கொடுத்தால் மனிதனுக்கும் மதிப்பு . கொடுக்கும் உணவிற்கும் மதிப்பு என்ற உளவியல் அடிப்படையிலேயே அம்மனுக்கு கூழ் என்ற பழக்கத்தை கொண்டு வந்தனர். இன்று எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டது .
எதற்கு எது காரணம் என்று விளக்க ஆளில்லாததால் மூட நம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன...தொடரும்

2007/07/22

No News is News
I am wondering what happened to the brothers [Safeel, and Kafeel ], the one in hospital, and the other in ??? [ where ]. ... why nobody talks about them? it seems only Australia is the most worried and the most active player..can anyone give me any news about the one in hospital?

2007/07/21

Tit -Bits
1] பீர் குடிக்கும் ஆடு: ஒரு ஆடு பீர் மட்டுமே குடிக்கிறது.போதை தெளிந்தவுடன் மீண்டும் மது கொடுக்கவில்லையென்றால் எல்லோரையும் முட்டி தள்ளுகிறது.
2] ஒரு சிறுவன் ஒரு நாளைக்கு 4 லிட்டர் பெட்ரோல் குடிக்கிறான்..அவனை பரிசோதித்த டாக்டர்கள் "இப்போதைக்கு அவன் உடம்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை " என்று கூறியுள்ளனர்
3 ] 20 வருடங்களாக பாலை மட்டுமே உணவாகக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார் ஒரு அதிசய மனிதர்.
4] முத்தாய்ப்பான செய்தி: வருங்கால முதல்வர் :" குடும்பமே இல்லாத ஜெயலலிதா எதற்கு சொத்து சேர்க்க வேண்டும்? "" அடியேனுக்கு ஒரு சந்தேகம்..குடும்பம்..குடும்பங்கள் , பிள்ளை, குட்டிகள் [!!! ] உள்ளவர்கள் மட்டும் சொத்து சேர்க்கலாமா? இதைப் பற்றி வருங்கால முத்ல்வருக்கு அடுத்த முதல்வரான ஆதித்யன் அவர்களின் மேலான கருத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
அன்பில் அன்பான
கார்த்திக்

2007/07/14

என் அன்பு செல்லமே கார்த்திக்,
"internet கற்றுக் கொள்ளுங்கள் " என்று நீ சொன்ன போதெல்லாம் செந்தில் படிப்பு disturb ஆகி விடும் என்று net connection கொடுக்க மறுத்து விட்டேன்..இன்று நான் mail அனுப்புவதும், blog ல் எழுதுவதும் நீ பார்த்தால் எவ்வளவு பெருமைப் படுவாய் என்று நினைக்கும் போது அழுகை பொங்கி வருகிறது.
ஒரே ஒரு நாள் நீ திரும்பி வா கார்த்திக்..ஒரே ஒரு நாள் ...ஆசை தீர உன்னுடன் பேச வேண்டும் கார்த்திக்....என் தங்கமே, வருவாயா? ...chat செய்யக் கூட தெரியும் எனக்கு...வா என் கண்மணி..ஒரு நாள் ..ஒரு நாள்.PLEASE,PLEASE.
உன் செல்ல அம்மா, உன் குட்டி அம்மா..[ வா, வா,என் மகனே வா ]