About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/03/23

2005 வரை கார்த்தியின்  posts .அதன் பின் நான் [கார்த்திக் அம்மா தொடர்கிறேன்.]இது ஒரு மீள் பதிவே
A travelogue in pics.[this is posted by KARTHIK ]கார்த்திக்கின் 2005 u.S பயணம்

6/17
.
Coffee with Boeing! Cafe by the airside at London Heathrow

6/18

Outside Indianapolis Speedway


Formation lap


Narain Karthikeyan


Fox reports on US GP debacle

6/25

San Antonio Sea World

6/26

SCSE2002 Texans Get-together. Herbert Jose (he is now Hose ;), Arun aka Koopi, Sibi and the honorary Texan


Jet Skiing in Lake Travis, Austin

7/2

With Vijay aka <%youknowwhat%> at College Station, TX in front of his department.


Live music at the live music capital of the world(read US). 6th Street, Austin

7/4

Independence Day, downtown Austin

7/6

Tubing in Lake Georgetown

7/8

Stranded in Cincinnati airport after the flight missed me. Was one of the only 4 people in the whole airport that night. Ironically, I was watching 'The Terminal' on my GMini.

7/9

Perumal, me and Vasanth @ Peru's apartment in Jersey City. The view out of his window in Manhattan.


Ellis Island Museum. Remember the place Will Smith takes Eva Mendes to, in Hitch?


Been There Seen That


BTST


BTST


Scene at a NewYork Times Square Subway Station


Caricature of a caricature. Times Square

7/10

At Sai's house in Washington DC.


Hope diamond at Smithsonian Museum of Natural History. This was supposedly stolen from the idol of Sita from some temple in India and hence carries a curse!


National Archives. Remember the place Nicholas Cage steals the US Constitution in National Treasure?


Nilaava thottathu yaaru? Intha Karthikeyan thaan! Piece of rock from the moon


No. This was not part of my trip. But this ruined my planned trip to London. I even got the British visa the day before the blasts. But my mom denied me visa to go to London. :( (That makes me a victim of a terrorist attack, doesn't it?)

2019/03/22

என் பதிவுகள் :hacking

கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து கொண்டு கார்த்தியின் பிளாக்கை தொடர்கிறேன்.
ஆனால் இன்று side bar ல் பார்த்தால் கார்த்திக் in U .S ல்என்று வருகிறது. இந்த  பதிவு கார்த்திக்கால் 2005ல் எழுதப் பட்டது.
நான் இந்த பதிவை மீள் பதவி செய்ய ஒரு 3 மாதங்களிற்கு முன் முயற்சித்த போது என்னவோ தவறாகி போட்டோக்கள் ஒளிந்து கொண்டன.
அதனால் அந்த பதிவை draft ல் வைத்து விட்டேன் .publish கொடுக்கவில்லை.
ஆனால் இப்போது பிளாக்கில் அந்த பதிவு வருகிறது.
கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.
என்னுடன் விளையாடுவது யார்?
தயவு செய்து இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இது போல் ஏற்கனவே நடந்துள்ளது.
மனது வருத்தப் பட்டது.
இப்போது மறுபடியும் தொடரும் போது
மனம் மிக மிக வருத்தப் படுகிறது

இந்த போட்டோக்களை மறுபடியும் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா

வாசுகி (மலையாள படம் )

எப்போதாவது அரிதிலும் அரிதாக டி .வி யில் சினிமா பார்ப்பதுண்டு.அப்படி இன்று பார்த்த படம் வாசுகி.
நயன்+மம்மூட்டி .என்ன ஒரு அற்புதமான படம்.
பொள்ளாச்சி விவகாரம்தான்.
ஒரு 50 பெண்கள் அரைகுறை ஆடையுடன் குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடவில்லை.
ஹீரோ பஞ்ச் டயலாக் பேசவில்லை.
ஒரு கையால் 40 வில்லன்களை தூக்கி வீசவில்லை.
லண்டன்,அமெரிக்கா என்று வெளிநாடுகளில் எடுக்கவில்லை.
ஒரு அபார்ட்மெண்ட் .ஒரு குடும்பம்.
மனைவி மொட்டை மாடியில் கற்பழிக்கப் படுகிறாள்.
அந்த 3 பேரை பழி வாங்கும் கதை.
நான் செய்யாத தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
தவறு செய்தவர்கள் ஜாலியாக இருக்கும் போது நான் கஷ்டப் படமாட்டேன்.என்று முடிவு செய்யும் மனைவி அந்த 3 பேரை ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் உதவியுடன் கொலை (அவர்களாகவே சாகிறார்கள்).
இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் பெண் அதிகாரி போல் பேசி தன் மனைவியின் திட்டங்களை (கணவர்தான் திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்.)நிறைவேற்ற உதவி செய்கிறார்.இது அந்த மனைவிக்கு தெரிவதில்லை.
என்ன ஒரு பெருந்தன்மையான கணவர்.
கோப  பட்டு,உணர்ச்சி வசப்பட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல்,மனைவியை துரத்தாமல் ,டைவர்ஸ் என்றெல்லாம் போகாமல்,குடித்து விட்டு ஒரு சோ சோ க  பாட்டு பாடாமல் ,கண கச்சிதமாக காரியம் செய்கிறார்.
மிகவும் பிடித்தது.
இறுதியில் மனைவியுடன் இல்லற வாழ்க்கையையும் தொடர்கிறார்.
ஒரே ஒரு 1% நெருடல்.
மனைவி கணவனிடம் மறைப்பது.
இந்த பொள்ளாச்சி விவகாரம் பாருங்கள்.
கலைஞர் டி வி யில் பார்த்தேன்.நல்ல சமயத்தில் நல்ல படம்.

2019/03/15

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
காலன்   (எமன் ) வர முடியாது என்பது இதன் பொருள்.சத்தியவான் உயிரை பறிக்க வந்த எமனிடம் சாவித்திரி பேசிப் பேசியே அவனிடம் வரம் பெற்றுகணவனை காப்பாற்றுகிறாள் என்பது கதை.
 எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
ஒரு கற்புக்கரசி கண்களுக்கு மட்டும் எமன்   தெரிவார் என்றும் அவருடன் பேச முடியும் என்பதாக நம்ப வைக்கப் படுகிறது.என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்கணவனை இழந்துள்ளனர்?அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
உண்மையாக இந்த பங்குனி மாத பிறப்பிற்கும் இந்த விரதத்திற்கும் என்ன உண்மை அறிவியல் காரணம் (அப்படி ஏதாவது இருந்தால் ) சொல்லுங்கள்.கணவன் இல்லாவிட்டால் நீ அவ்வளவுதான்.என்பது போன்ற எண்ணங்களை பெண்கள் மனதில் உருவேற்றி அடிமைப் படுத்திய கொடுமையை களைய வேண்டிய பெண்ணியம்தான் தேவை.பெண்ணால் தனியாக சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்..
காலன் அடையா நோன்பு என்பதுதான் திரிந்து காரடையான் நோன்பாக ஆகி விட்டது.
நாமும் பொருள் புரியாமலே பல பண்டிகைகளை கொண்டாடுகிறோம்.
 கார்த்திக் அம்மா
இந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அவசர பட்டு பெண்கள் மாட்டிக் கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்  என்றுதான் முந்தைய .  பதிவில் சொல்லியிருந்தேன்.
வேகநரி 
i never advocated '' ''' பெண்ணடிமைத்தனம்'' ''.நானும் கணவனை  இழந்த பின் வாழ்க்கையில் சாதித்தவள்தான். எத்தனையோ போராட்டங்களை கடந்து வெற்றி   பெற்றவள். 
கார்த்தியின் இழப்புதான் என் ஒரே தோல்வி.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  
 

2019/03/12

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சொல்லும் செய்தி :
ஒரு வீட்டிற்கு சென்று இருந்த போது நடந்த விஷயம்.
அந்த வீட்டின் கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்கள்.நல்ல வேலையில் இருந்தவர்கள்.
அவர்களுக்கு 3 வயது ஆண் மகன் .நான் உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு எதிரில் நின்ற அந்த சிறுவன் தன பிறப்புறுப்பை தொட்டு தொட்டு பெருமையுடன் காட்டுகிறான்.அதை நான் பிரமாதமான விஷயமாக பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம்.
அவன் அம்மா முகத்தை பார்த்தேன்.
அவரும் அப்படி ஒரு பூரிப்புடனும் பெருமையுடனும் என்னை பார்த்தார்.
அப்படி என்றால் 3 வயது சிறுவனுக்கு தான் ஒரு ஆண் ,தன உறுப்பு அவ்வளவு பெரிய விஷயம் என்ற அளவில் அந்த மெத்த படித்த பெற்றோர்களே அவன் மனதில் பதிய வைக்கிறார்கள் என்றால்
இந்த கொடுமையை என்ன சொல்வது?
அதனால் பணம்,பதவி படைத்த ஆண்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மிருகங்கள் செய்த கொடுமை சமுதாயம் கொடுத்த தைரியம்.
ஒரு ஆண் பெண்ணை போக பொருளாக ,அனுபவிக்க படைக்கப் பட்ட ஒரு சாதனமாக பார்க்க பழக்கப் படுத்தப் படுகிறான்.
எனக்கு தெரிந்த ஒரு தாய் பற்றி சொல்கிறேன்.
அந்த தாயின் மருமகள் பிள்ளை பேறுக்கு தன் தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறாள்.
அந்த தாய் சொல்கிறாள்.''இவள் பிள்ளை பெற்று திரும்பி வர 6 மாதம் ஆகும்.அது வரை என் மகன் சும்மா இருப்பானா? அவனுக்கு இடைப்பட்ட காலத்திற்கு இன்னொரு பெண் வேண்டும் ''
இப்படி ஆண்மகன் என்பவன் காம களியாட்டத்தில் மூழ்க வேண்டும் என்று வளர்க்கப் படுகிறான்.
இந்த எண்ணம் மாறவே மாறாது.
பெண்ணியவாதிகள் சண்டைக்கு வர வேண்டாம்.நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை ,பெண்ணும் ஆணும் சமம் என்ற வாதமெல்லாம் அந்த பெண்ணின் கதறலில் காற்றில் பறக்கிறது.
ஏன் ,வாங்கடா ,எத்தனை பேர் வேண்டுமானாலும் வாங்க என்று அந்த பெண் சொல்லியிருக்கலாமே.
ஆண் போல அந்த நிகழ்வை ''அனுபவித்திருக்கலாமே.''.
ஆண் கை  வீசி நடக்கிறான் .பெண் கர்ப்பம் அடைகிறாள்.
கர்ப்பமே இல்லாவிட்டாலும் உதிர போக்கு, PCOD என மென்மேலும் பிரச்சினைகள் தொடர்கின்றன.
அதனால் பெண்களே ,சற்று எச்சரிக்கையாய் இருங்கள்.
அந்த காலத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப படவில்லை.அவர்களின் மெண்மையான மனசு,அதனினும் மென்மையான உடல் இவற்றை கருத்தில் கொண்டே அவர்களை போற்றி வளர்த்தனர்.அவர்கள் சுயம்வரம் என்ற சுதந்திரம் பெற்றிருந்தனர்.யாருக்கு தோன்றியதோ.பெண்ணுரிமை என்ற வார்த்தையில் பெண்களுக்கு கொடுமைகள்தான் அதிகமாகிவிட்டது.
கார்த்திக் அம்மா

2019/03/06

பாக்கு

ஒரு கடைக்கு 2 சிறுமிகள் வந்தனர்.4 அ 5 வயது இருக்கும்.2 அடி  உயரம் கூட இல்லை.ஒரு சிறுமி பூமர் கேட்டு வாங்கிக் கொண்டாள் .அடுத்த சிறுமி என்ன கேட்டிருப்பாள் ???????
can u guess ???????????
பாக்கு ...என்றாள்
நான் இதை கவனித்து விட்டதாலோ என்னவோ
கடை பெண்மணி
'' ''அதெல்லாம் கேட்க கூடாது '' ''  என்கிறார்.
கடையில் இல்லை என்று சொல்லவில்லை.
விஷயம் புரிந்து கொண்ட (ஹா ஹா ,இந்த மரமண்டைக்கு அதிசயமாக எப்போதாவது இப்படி புரிந்து விடும். )
அந்த குட்டிப் பெண்ணை கண்டபடி கத்தி விட்டேன்.
அது என்ன பயந்ததா ?
ஒரு முறைப்பு  , அப்படியே எரித்து விடுவது போல் என்னை பார்த்தது.
இதற்கு மேல் அடி  கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற பயத்தில் நகர்ந்து விட்டேன்.