About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/12/25

இப்போது சன்  டி .வி யில் பாட்ஷா  படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கார்த்தி ஒரு ரஜினி ரசிகன்.
நான் கார்த்தி ரசிகை.
இந்த படத்தில் ''  அழகு ,அழகு '' என்று ஒரு பாடல் வருமே. நமீதா  பார்க்கும் எல்லோரையும்  ரஜினியாக  நினைத்து  படும் பாடல்.
கார்த்தியிடம் நான் சொல்வேன்.
'' கார்த்தி நீ U .S போய்  விட்டால் நானும்  இப்படித்தான் பார்ப்பவர்களை எல்லாம் நீயாக நினைத்து  இப்படி செய்தாலும் செய்வேன்''...
என்று சொல்வேன்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்  ஒரு பார்வை பார்க்கும் என் செல்ல மகனை   ஆசையுடன் பார்ப்பேன்.
(கார்த்தி என்னை விட்டு அமெரிக்கா போய்  விடுவான் ,அவனை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம்  இருந்து கொண்டே இருந்தது.ஆனால்  இப்படி ஒரு கொடுமையான பிரிவை எதிர் பார்க்கவில்லை.)
விதி.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2013/12/20

கீழே தரப்பட்டுள்ள பதிவு கார்த்தி பணி புரிந்த DELL ல் பணி புரியும் ஒருவர் கார்த்தியைப் பற்றி எழுதியது.
***  ******* ****
கார்த்திக் என்னை விட ஒரு வருடம் சீனியர். வயதிலும் சரி; படிப்பிலும் சரி. படிப்பை பொறுத்த வரைக்கும் சீனியர் மட்டுமில்லை- படு கெட்டியும் கூட. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெருநிறுவனத்தில் வேலை வாங்கி பெங்களூர் வந்து இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன. யாருக்கு என்ன நடந்தால் என்ன? காலம் நிற்கவா போகிறது? காலம்தான் ஓடிவிட்டது ஆனால் கார்த்திக்கினால் காலத்தின் வேகத்தோடு ஓடி வர முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகவே நின்று கொண்டான்.
கார்த்திக்கின் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக- 
கார்த்திக்கை நான் பார்த்தது கூட இல்லை. அவனது அம்மாவிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் பெங்களூர் வருவார். நான்கைந்து நாட்களுக்கு விவேக் நகரில் இருக்கும் ‘ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’ல் தங்கிச் செல்வார். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்றால் கிராமம் இல்லை. அபார்ட்மெண்ட்தான். எப்பொழுதோ இந்த ஊரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக நிறைய அபார்ட்மெண்ட்களை கட்டியிருக்கிறார்கள். போட்டிகள் முடிந்தவுடன் மற்றவர்களுக்கு விற்றுவிட்டார்கள். மரங்களும்,நிறைந்த குளுமையுமாக அட்டகாசமான அபார்ட்மெண்ட் அது. அங்குதான் கார்த்திக் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறான். 
கார்த்திக் எங்கள் நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தான். அவன்  எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அதே சமயத்தில் சேர்ந்தவர்கள் இன்றைக்கு சீனியர் டெலிவரி மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். கார்த்திக்கைப் பற்றி அவ்வப்போது இவர்களிடம் பேசியிருக்கிறேன். ‘அவன் இங்கேயே இருந்திருந்தா இந்நேரம் டைரக்டர் ஆகியிருப்பான்’ என்பார்கள். அவ்வளவு திறமைசாலியாம். வேலையில் அடித்து நொறுக்கியிருக்கிறான். நிறையப் பேருக்கு ரோல் மாடலாகவும் இருந்திருக்கிறான். மீட்டிங்கில்‘கார்த்திக் மாதிரி இருங்கள்’ என்று மேனேஜர்கள் தயக்கமே இல்லாமல் சொல்வார்களாம்.
கார்த்திக்கின் அம்மா ‘நிசப்தம்’ வாசிப்பவர். ஒரு முறை விபத்தில் இறந்து போன மனிதரைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அந்தக் கட்டுரை ஏதோவிதத்தில் தன்னைச் சலனப்படுத்திவிட்டதாகவும் பெங்களூர் வரும் போது சந்திக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்ததால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஸ்போர்ட்ஸ் வில்லேஜூக்கு சென்றிருந்தேன். மழை தொடங்கியிருந்தது. அவர்களின் அபார்ட்மெண்ட்டைச் சுற்றிலும் மரங்கள் அதிகம் என்பதால் இருள் சற்று தடிமனாகவே கவ்வத் தொடங்கியிருந்தது.
வீட்டில் கார்த்திக்கின் அம்மா மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் இல்லை. கார்த்திக் அவரை விட்டுப் போய்த்தான் நான்கைந்து வருடங்கள் ஆயிற்றே. ‘இறந்துவிட்டான்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துவதேயில்லை. 
சொல்லவில்லை பாருங்கள்- கார்த்திக் விபத்தில் இறந்துவிட்டான். அவன் மிக வேகமாக வண்டி ஓட்டுவான் என்று அவர்களது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வேகம் என்றால் மின்னல் வேகம். அப்படியான ஒரு வேகத்தில்தான் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டுவிட்டான். தலைவிரி கோலமாக அவனைக் கிடத்தி வைத்திருந்த மணிப்பால் மருத்துவமனைக்கு ஓடியதாக அவனது அம்மா சொன்னார். ஆனால் பெரிய பலனில்லை. அவர் சென்ற போது அத்தனையும் முடிந்திருக்கிறது. தனது உயிரைக் கொடுத்து வளர்த்திருந்த மகன் இந்த புவியை விட்டு விலகியிருந்தான். 
மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். எல்லோருமே  அதனை எதிர்கொள்கிறோம். இருந்தாலும் பெரும்பாலான மரணங்களை பெரும்பாலானவர்கள் கடந்துவிடுகிறோம். ஆனால் கார்த்திக்கின் மரணத்தை அவனது அம்மாவால் கடக்கவே முடியவில்லை. பெருமலையாகவோ அல்லது பெருங்கடலாகவோ மாறி நின்றுவிட்டது. தலைவிரி கோலமாக தனது மகனின் மரணத்தை எப்படி எதிர்கொண்டாரோ அதே புள்ளியில் நின்றுவிட்டார். கிட்டத்தட்ட standstill.
அந்த வீடு கார்த்திக் இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. படுக்கை விரிப்புகள் கூட மாற்றப்படவில்லை. அவன் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேபிள், அவன் ஒட்டி வைத்திருந்த நிழற்படங்கள் என அத்தனையும் அப்படியே இருக்கின்றன. அவனது வாழ்வின் இறுதி நொடிகளைத் தனது சக்கரத்தில் சுமந்து சென்ற பைக்கை வீட்டின் வரவேற்பறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். 
கார்த்திக்கின் அம்மாவிடம் பேசுவதற்கு ஒரே விஷயம்தான் இருக்கிறது. ''''‘கார்த்திக்’' '''. அங்கிருந்த நாற்பது நிமிடங்களும் அவனது நிழற்படங்களைக் காட்டினார். அவனது நண்பர்களைப் பற்றி பேசினார்- அந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு இப்பொழுது மேனேஜர். இன்னொருவர் முன்னாள் மேனேஜர்,  கார்த்திக்குக்கு நிகழ்ந்த விபத்து பற்றி பேசினார், அவனது எழுத்து பற்றிச் சொன்னார், அவனது ஆர்வங்கள் குறித்து உற்சாகமடைந்தார். 
அவனது மின்னஞ்சல்களிலும், அவனது வலைப்பதிவிலும், அவனது டைரிகளிலும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிக் கொண்டிருக்கிறார். ‘தனக்கான செய்தி’ எதையாவது இந்த எழுத்துக்களில் விட்டுச் சென்றிருப்பான் என்று இன்னமும் துழாவிக் கொண்டிருக்கிறார். இனியும் அதையேதான் தொடர்வார். இதுதான் அவரது வாழ்க்கை. இதுதான் அவரது உலகம்.
தனது உலகத்தை ஒட்டுமொத்தமாகச்  சுருட்டி ஒற்றை பெயருக்குள் வைத்துக் கொண்டிருந்த அந்த அம்மையாரைப் பார்க்கும் போது எனது பெரும்பாலான வார்த்தைகள் வறண்டு போய்விட்டன. தனது வாழ்க்கையின் மிச்சக்காலம் முழுவதையும் இப்படியே கழிக்கப் போகிறேன் என்ற அவரது வைராக்கியம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தது. தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை. அதை அவர் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பயத்தில் அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டேன். அவரது கண்களை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன்.
பேச்சுவாக்கில் அவனது நினைவிலேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நாட்கள் மட்டும்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உருக்குலைந்து போயிருக்கிறார். அவர் காட்டிய பழைய நிழற்படங்களில் இருந்ததற்கும் தற்போதைய உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறார்.  ஐந்தாறு வருடங்களில் முடி மொத்தமாக நரைத்து கண்கள் குழிவிழுந்து, தோல் சுருங்கி தனது உருவத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லாமல் மாறிவிட்டார். ஒவ்வொரு மாதமும் டிபன் பாக்ஸில் தக்காளிச்சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் வந்துவிடுகிறார். தனது மகன் வாழ்ந்த வீட்டில், தனது மகனின் மூச்சுக் காற்று நிறைந்த இந்த இடத்தில் நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு திரும்பச் செல்கிறார். யாருமே இல்லாத வீட்டில் அவரும் கார்த்திக்கும் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவனது தலையை தனது மடி மீது வைத்து வருடுகிறார். அவனுக்கு ஊட்டி விடுகிறார். அவன் உற்சாகமாக வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கிறான். நான்கைந்து நாட்களில் அவர் திரும்பச் சென்றவுடன் அந்த வீட்டின் மீது பெரும் அமைதி கவிகிறது. அங்கு கார்த்திக் தனிமையில் தனது அம்மாவுக்காக காத்திருக்கக் கூடும். இந்த உலகம் புரிந்து கொள்ள முடியாத தனிமை அது.//
*************   **************
 இந்த  பதிவில் சில திருத்தங்கள்.
1.கார்த்தி இவரை விட வயதில் இளையவன் .
2. photos (நிழற்படங்கள் -கார்த்தியுடையது ) நான் ஒட்டியது. அறை  முழுவதும் கார்த்தியின் படங்களே.
3* .கார்த்தி அங்கு தனிமையில் இல்லை. நான் வரும் போது என்னுடனே அவனும் வருகிறான். பேருந்தில் என் மடியில் அமர்ந்து வருகிறான்.
4.கார்த்திக் உலகை விட்டு நீங்கி 8 வருடங்கள் ஆகின்றன.
5. கார்த்தியும் நானும்  சேர்ந்துதான் வீடு வாங்கினோம்.(பணத்தை பற்றி சொல்லவில்லை.அதை நான் என்றுமே ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. நானும் கார்த்தியும் அந்த அலுவலகம் சென்ற போது அங்கு இருந்தவர்கள் கார்த்தியிடம் என்ன காட்டி '' உன் அக்காவா ?''என்று கேட்டார்கள் )
6. கார்த்தி தன்னை விட வயதில்  பெரியவன் என்று சொல்லும் இவர் கார்த்தியை அவன் இவன் என்று சொல்லாமல் அவர் என்று சொல்லியிருக்கலாம்.
       ஆனாலும் என்னைப் பற்றியும் கார்த்தியை பற்றியும் பதிவிட்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் .நன்றி.

2013/12/10

Office Serial :
தற்செயலாக இந்த சீரியலை கடக்க நேர்ந்தது.அப்போது இந்த காட்சி வந்தது.நிறுத்தி பார்த்த போது இந்த வசனம் வந்தது:
'' '' ''என் பிறந்த நாள் office ல் ஒன்று .
உண்மையான பிறந்த நாள் ஒன்று.'' '' ''
6 மாதம் அதிகமாக கொடுத்து விட்டார்கள்.
.........   ............
இதே  இதேதான்  கார்த்திக் விஷயத்திலும் நடந்தது.
கார்த்திக்கின் உண்மையான பிறந்த நாள் 14.11.1981
சான்றிதழிலோ  16.06.என்று கொடுத்திருந்தோம்.அவன் வேலை செய்த DELL  ஆபீஸ் ல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வழக்கம் உண்டு.(இப்போது எப்படியோ தெரியாது.)
அந்த வழக்கப் படி 16.06 அன்று கார்த்திக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து என்று மைக்கில் சொல்லியிருக்கிறார்கள்..கார்த்திக் அதை புரிந்து கொள்ளவே இல்லை.அவன் மனதில்  14.11 மட்டுமே பதிந்திருந்ததால் அவன் சலனமே இல்லாமல் இருந்திருக்கிறான். அவன் நண்பன் '
' '''கார்த்தி உன்னைத்தான் சொல்கிறார்கள் ''
என்றதும்தான் சுதாரித்துக் கொண்டு மேடை ஏறியுள்ளான்.
...... .................
எப்படியாவது ஒரு 5 நிமிடம் கார்த்திக்கின்    நினைவுகளில் இருந்து வேறு  சிந்தனையில் இருந்தாலும் ,இப்படி ஏதோ ஒன்று அவனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
கார்த்தியின் நினைவையே  oxygen ஆக சுவாசிக்கும்,
கார்த்திக் அம்மா      

2013/12/07

:அழுகை

Miracle:
I think this piece had been written in 2006. Accidentally I came to see it when I was Searching for some other paper.
It goes like this.
......   .............   
One of Karthik's friends while trying to comfort me said :
''I read in a book that  '' you should not encourage any person to cry. It's very bad.Somehow see to it that they stop shedding tears''
After he left I might have written this.
*********
May be if its a drama ,an acting ,an attempt to make belief  ,if I cry to create a scene , to get sympathy ,the tears will stop.
If you don't cry with me
I will cry alone
Will my tears stop
If you don't cry with me?
Will my tears stop?
Will it?
Its spontaneous and who can arrest the bubbling stream of Coorg, the Thalai Kaveri?
Do I expect you to cry with me?
If you cry thats up to you.
If you don't cry that's also up to you.
That 's not going to make any difference in my grief.
If at all I recover that will be a miracle.
அந்த நண்பன் சொன்னான் .அவன் என்னுடன் சேர்ந்து அழ மாட்டானாம்.அது தவறு என்று படித்தானாம்.
என்னை வந்து பார்ப்பதையும் ,என் சோகத்தை பகிர்ந்து கொள்வதிலும் இருந்து விலக அவனுக்கு ஒரு காரணம் தேவைப் பட்டது.
விலகிக் கொள் .
அதற்கு எதற்கு ஒரு மொக்கை தத்துவம்?
என் துக்கம் எனக்கு.அது நீங்கினால் அதிசயம்.
எதுவும் நடக்கலாம்.
நாம் யார் எதையும் தீர்மானிப்பதற்கு?
என் அழுகை நாடகமா ?
போதும் என்றவுடன் நிற்பதற்கு? அடி வயிற்றிலிருந்து வெடித்து கிளம்புகிறது.
பார்ப்போம்.

2013/11/29

I STOP WHEN I STOP

 Karthik 's  scribblings :
கார்த்தியின் பழைய நோட்டுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.தன்னுடைய வாழ் நாள் குறைவு என்று தெரிந்ததாலோ என்னவோ ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் எந்த துறையையும் விட்டு வைக்காமல் முயற்சி செய்துள்ளான்.
அப்படி கண்ணில் பட்ட வரிகள்.:
NEON  BULB UNPLUGGED :

Remade  shall be the blade
that was  broken
And the crownless
Shall be the king
இவை சினிமா வசனங்கள் என எண்ணுகிறேன்.தெரியவில்லை .
ஆனால் அடுத்து வரும் வரிகள் அவனுடைய முயற்சி என்பது உறுதி.
...........   ................
2 busy 2 B SAD
2 + ve  2 B  doubted
2 optimistic  2 B fearful
2 determined 2 B defeated
...........  ...............
i don't want leisurely deadlines.
Work expands to fill available time.
I don't want impossible deadlines.
How can there be a limit to me.
Impossibility is a human concept.
I STOP WHEN I STOP 
இது கார்த்தி தன் மேனஜர் (அ )டீ.எல்  நச்சரிப்பு தாங்காமல் எழுதியது என நினைக்கிறேன்.
அவன் திடீர் விபத்தும் அவன் பிரிவும் என்னை செயல் இழக்க செய்திருந்த வேளையில் எவ்வளவு சென்சார் செய்ய வேண்டுமோ அவ்வளவு சென்சார் செய்த பிறகு எனக்கு கிடைத்த மிச்சம் .எத்தனையோ கேள்விகள் மனதிற்குள்.யாரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்று தெரியும்.மனம் ஊமையாக அழுகிறது.
கார்த்திக் அம்மா

2013/11/21

A T M
நானாக இருந்திருந்தால் '' ''அப்பா சாமி, இந்தா பணம். நகை ''என எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.பெங்களூர் பெண் இப்படியா செய்வார்? அவன் கத்தியை எடுத்த பின்னும் போராடுகிறார்.
மனிதர்கள் அரக்கர்களாக மாறிவிட்டனர்  என்பதை உணராதவரோ?
G A S :
சேலம் மாவட்டத்தில் எரிவாயு வெடித்து வீடே இடிந்து 6 பேர் பலி.
இதில் கொடுமை என்னவென்றால்  பக்கத்து வீட்டோரும் பலியானதுதான்.ஹெல்மெட் போட்டு போங்கள் என்ற அறிவுரை சரிதான்.பக்கத்து வீட்டு எரிவாயு உருளைக்கு எந்த ஹெல்மெட்?
ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும் . விதி வலியது. எந்த இடத்தில் எந்த ரூபத்தில் வந்து தாக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
ப.சிதம்பரம்:
இவர் ஏன் இப்படி பேசுகிறார்?சில நாட்களுக்கு முன்புதான் உயிரோடிருக்கும் முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களை ''இறந்து விட்டார். அமரர் '' என்றார்.
இப்போது நாட்டு பணம் அனைத்தையும்  I S R O வுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.
பாவம் அந்த விஞ்ஞானி . இன்னும் கொஞ்சம் அதிக நிதி தாருங்கள் என்றார்.இந்தியாவின் மொத்த பணத்தையும் கேட்கவில்லை.ஒரு லட்சம் கோடி வாராக் கடன் என்று பெரிய பண முதலைகளுக்கு தாரை வார்த்தது பற்றி வாய் திறக்கவில்லை.
அவரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.
.....    .....
இவருக்கு அண்ணன் நம் வருங்கால பிரதமர் கனவில் இருப்பவர்.காந்தியை ''மோகன்லால் '' ஆக்கி விட்டார்.
என்னவோ , நம் கதி அதோ கதிதான்.
கலாகார்த்திக்

2013/11/14

பிறந்த நாள்
14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா

2013/11/05

திக் திக் 44 நிமிடங்கள்...+ராதாகிருஷ்ணன்  FAN ஆனேன்
HAPPY HAPPY ..மங்கள்யான் வெற்றி
அப்பப்பா  44 நிமிடங்கள் வயிற்றுக்குள் 1000 பட்டாம் பூச்சிகள் பறந்தன. Live ஆக பார்க்க ஆசை ஆசையாக  இருந்தது. ஆனால் என்னைப் போல் வாழ்விழந்த  ஒரு வீணாப் போனவள்  பார்த்தால் எங்கே  mission  தோல்வியாகிவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஆர்வத்தை கட்டு படுத்த முடியாமல் பார்த்துக் கொண்டிருநதேன்.
என் பிரார்த்தனை வீணாகவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்  நன்றிகளும்.
அடுத்ததாக  நிச்சயமாக  நம் ராதாகிருஷ்ணனை  பற்றி  .நிறையவே சொல்ல வேண்டும். Dedication என்று இவரை உருவகப்படுத்தலாம்.
இதற்கு முன் ஒரு செயற்கைக்கோள்  தோல்வியாகி கீழே விழுந்த போது தன்னுடன் இருந்த அனைத்து ஆராய்ச்சியாளர்களையும்  அனுப்பி விட்டு அந்த தோல்வியை தன்னுடையதாக மட்டுமே ஏற்றுக்கொண்டு பேசி விட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறிய காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
இன்று பாருங்கள் :
 எல்லோரையும் அழைத்து பேச வைக்கிறார்.நிச்சயமான பெருந்தன்மை.
யக்ச்பால் என்றொரு வயதான  அறிவியலாளர் .1990 களில் இவர் தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு  பதில் தருவார்.பைத்தியமாக அலைவோம்.அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு.
அந்த மனிதரை இன்று பார்க்கிறேன். எதோ நெருங்கிய உறவினர் ஒருவரை பார்ப்பது போல் சந்தோஷமாக இருந்தது.
அமைச்சர்  நாராயணசாமி
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று நினைத்தால்  Dr ராதாகிருஷ்ணன்  '' .இவர் 2010 லிருந்து  மிக நெருக்கமாக உதவியாக இருந்தார்'' என்கிறார்.இந்த மனிதர் ஒரு வித்தியாசமானவர்தான்.இவரது மனைவி 2 சக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானார்  என்று செய்தி படித்த போது இவ்வளவு எளிமையான  ஒரு அமைச்சரான மனிதரா  என்று வியந்தேன்.இப்போது அந்த  .மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
.....     .......
மரண மொக்கை படங்களை  எடுத்து விட்டு இமாலய  சாதனை செய்தது போல் பேசும் நம் சினிமா பிரபலங்களை யும் இந்த விஞ்ஞானிகளையும் (scientists ) ஒப்பிட்டு வேதனைதான் அடைய வேண்டியுள்ளது.
சினிமா நடிகர்கள் 20 கோடி 30 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.
ஆனால் இவர்களுக்கோ  1 அ 2 லட்சம் சம்பளம் இருக்கலாம்.இவர்களுக்கு கட் அவுட் கிடையாது.பாலாபிஷேகம்  கிடையாது..ஆனால் இவர்கள் போல் நேரம் காலம் பார்க்காமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களால்தான் நம் இந்தியா  வெற்றி நடை போடுகிறது.
பி.கு.
எனக்கும் படிக்கும் காலத்தில் இப்படி சாதனை செய்ய வேண்டுமென்று வெறி இருந்தது.
விதி வேறு விதமாக சிரித்தது.
ISRO  தலைவர் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டார் .Religion starts when science fails
கார்த்திக் அம்மா

2013/11/02

மியாவ் என்றது    புலி    புர்ர் என்றது  பூனை ::

ஷாருக் கான் சொத்து 2500 கோடியாம் .
ஒரு  நிகழ்ச்சியில்  வந்து எனக்கு டான்ஸ்  தெரியாது. நீங்கள் ஆடினால் அதைப் பார்த்து நான் ஆடுவேன்  என்று என்ன நடிப்பு நடித்தார். இதை அகங்காரத்துடன்  அங்கீகரித்த   பூனை  என்னவோ தனக்கு மட்டுமே  டான்ஸ்  தெரியும் என்ற மிதப்பில் ஆடியது. 
அட
 தன்னை விட எல்லா விதத்திலும் சீனியர்  என்ற ஒரு மதிப்பு மரியாதை வேண்டாம்?
அந்த டான்ஸ் மேதையின் முகத்தில்  அப்படி ஒரு கர்வம் தெரிந்தது.
உங்களை விடவா நான் ? என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.
2500 கோடியில்  பாதி கூட இருக்காது இவருடைய சொத்து.அவரின் பிரபலத்தில்  பாதி கூட இருக்காது இந்த 'ப்ரோ ' வுக்கு.
பொதுவாகவே நம் தமிழ் சினிமா நடிகர்கள் தங்களை தெய்வப் பிறவிகளாக  .நினைத்து கொள்கிறார்கள்.
S R K  வந்தார். பேசினார். சென்றார். படம் வெளியிட்டு கோடிகளை அள்ளினார். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று உணராமல் முட்டாள் பட்டம் கட்டிக்  கொண்டது பூனை.
......       .......    .......
டெல்லி முதல்வரும்  வெங்காயமும்::
டெல்லி முதல்வர் ஒரு வாராமாக  சமையலில் வெங்காயம் சேர்த்து கொள்ளவில்லையாம்.
என்ன ஒரு நிர்வாகத் திறமை.
வெங்காய விலையை குறைக்க என்ன முயற்ச்சிகள் எடுக்கலாம் என்று முனையாமல் .....காமெடி .....
 

2013/10/30

விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?

பயங்கர பேருந்து விபத்து - 40 பேர் பரிதாபச் சாவு!40 பேர்.அதில் பாதிக்கும் மேல் வாலிப வயது. .
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
எத்தனை ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான  மனைவியை பார்க்கும் ஆவலுடன்,  அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக் கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும் நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன் .அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம் செய்தவர்களா? 40 தாய்களும்  பாவிகளா?சுற்றம்,  உறவு, என்று அத்தனை பேரும் சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும் ...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே  வெந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி  சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால்  போவது, யார் பின்னால் போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள் நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த  பெங்களூர்  பஸ் விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க முடியாது இந்த வேதனையை..

விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?

பயங்கர பேருந்து விபத்து - 40 பேர் பரிதாபச் சாவு!40 பேர்.அதில் பாதிக்கும் மேல் வாலிப வயது. .
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
எத்தனை ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான  மனைவியை பார்க்கும் ஆவலுடன்,  அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக் கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும் நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன் .அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம் செய்தவர்களா? 40 தாய்களும்  பாவிகளா?சுற்றம்,  உறவு, என்று அத்தனை பேரும் சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும் ...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே  வெந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி  சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால்  போவது, யார் பின்னால் போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள் நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த  பெங்களூர்  பஸ் விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க முடியாது இந்த வேதனையை..

2013/10/28

அமரர்   வாஜ்பாய்க்கு  ஆழ்ந்த .இரங்கல் :
கொடுமைடா  சாமி.ஒரு ex P .M உயிரோடு  இருக்கிறாரா இல்லையா என்று கூடவா தெரியாது?
மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் தன்னிலை மறந்து விட்டனரா?  File  காணோம் என்றால்  நான் என்ன watchman  வேலையா பார்க்க முடியும்  என்று கேட்கிறார் P .M .ஏன் காணாமல் போயிற்று யார் காரணம் என்று தெரிந்து அவர்களை dismiss செய்யலாமே.சிறையில் தள்ளலாமே. files கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கலாமே.
கேட்டால் சோனியாதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
வாஜ்பாய் அமரர் ஆனதற்கும் சோனியாதான் காரணமோ?
இவர் அடுத்த பட்ஜெட் போடப் போகிறார்.
இந்திய  மக்கள் எல்லாவற்றிற்கும் தயார்.
.....     ....   ....  .....
கதவை திறந்தால்  100 பேர் கம்பு ,கொம்புடன்  தயாராக இருக்க போகிறார்கள் (ஐயோ , ஐயோ  உன் பதிவை 1 அ 2 பேர் படித்தாலே அதிகம் .இப்படி  ஒரு build up தேவையா கலா கார்த்திக்?)
சரி,  சசரிரி .
வழக்கம் போல் 19 century படத்தை இப்போது பார்ப்பதுதானே என் வழக்கம்.அன்று
அவ்வை ஷண்முகி பார்த்தேன்.அந்த பெண் என்னமாய் நடித்திருக்கிறது.தெய்வ மகள் பெண்ணை பாராட்டியவர்கள் இந்த பெண்ணை பாராட்டினார்களா?
வசனம் அற்புதம்.மீனா அழகு. சாம்பார் சூப்பர். எல்லோருமே நிறைவாக செய்திருந்தனர்.குட்டி பெண் என் மனதை மிகவும் கவர்ந்தாள்.

2013/10/27

இஷ்டம் : திரை விமர்சனம் :
 எப்போது வந்த படமோ தெரியாது. இன்று Z டி .வி யில் ஒளிபரப்பானது.அகஸ்மாத்தாக  பார்க்க நேரிட்டது.
பொதுவாகவே I .T சம்பந்தப்பட்ட படம் என்றால் ஒரு ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.
ஏனென்றால் அவர்களில் 90 % பேர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
Office தொடரில் வருவது போல்தான்.நீ என்னை லவ் பண்ணுகிறாயா , நான் உன்னை லவ் செய்யட்டுமா என்ற கேள்வியிலேயே நாட்கள் ஓடும். சரி திருமணம்தான் செய்து கொள்ளலாமே  என்று முடிவு செய்கிறார்கள்.
இந்த படமும்  அதே போல்தான்.அவசர கல்யாணம். அவசர பிரிவு.
           எனக்கு மிகவும் பிடித்த வசனம் .பையனின் அம்மா  அந்த மாதர் சங்க தலைவியை காய்ச்சும் இடம்தான்.
பல பெண்கள் குடும்ப பந்தத்திலிருந்து வெளியேற காரணமே இவர்கள்தான். பெண்கள் அடிமை இல்லை. பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்த மாமேதைகள்  சொல்லும் அறிவுரையாலேயே  பல பெண்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.
ஆண்களில் ராமன்கள் உண்டு என்று படத்தை முடித்திருந்தார்.டைரகடர்.
 இந்த படம் ஓடியதா, வெற்றி படமா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.ஆனால் இது போல் படங்கள் இன்னும் வர வேண்டும். நிறைய மாயைகள் மறைய வேண்டும். படத்தின் டைரக்டருக்கும்  தயாரிப்பாளருக்கும் என் நன்றிகள்.
வெங்காய விலை ..மற்றவற்றின் விலை...வருமான உயர்வு 
எனக்கு வேதனைப்படுவதா , நகைப்பதா என்று தெரியவில்லை.
  எப்படி இப்படி ஒரு கூப்பாடு?
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகியுள்ளதா கவும்  மற்ற பொருள்கள் எல்லாம் 1 ரூபாய்க்கும் 2,3 ரூபாய்க்கும் கிடைப்பது போலவும் ....எந்த பொருளின் விலை கம்மியாக உள்ளது?
அரிசி,பருப்பு,எண்ணெய் ,பால் பொருட்கள் ,சோப்பு போன்ற பொருட்கள் விலை யும்தான் விண்ணை எட்டியுள்ளது.
ஒரு சோப்பு  50 ரூபாய்க்கு விற்றால் வாங்கும் மக்கள் ,10 நாட்களில் ''சிகப்பாகி விடுவீர்கள்''  என்ற கிரீம்களை  500 ரூ கொடுத்து வாங்கும் மக்கள் ,அந்த கடைகளில் போய் அவர்கள் சொல்லும் விலையில் ஒரு போலி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு பெருமையுடன் வரும் மக்கள்  அதைப் பற்றி ஏதாவது  குறை சொல்கிறார்களா ?
அட ,ஒரு துணிக்கடைக்கு  சென்றேன். ஏதாவது ஒரு நாள் ( வருடத்தில் ஒரு நாள் ,யாராவது  உறவினர்கள் வந்து அவர்களுக்காக  செல்ல வேண்டியிருக்கும் )
அப்படி சென்ற போது எனக்கு மயக்கம் வராத குறைதான்.ஒரு சாதாரண சுடிதார் கூட 2500 ரூ ,அதை விட சாதாரண புடவை 1500 -10000 வரை.
என்னுடன் வந்தவர்கள் உணவுக்கு தக்காளி,பால் செலவுக்கு அத்தனை கஞ்சத்தனம் செய்பவர்கள் , அந்த கடையில் ரூ 10000 த்திற்கு  துணி எடுத்தனர்.
   சரி.....இப்போது தீபாவளி  வருகிறது. பட்டாசு விலை 30%  அதிகமாகி உள்ளதாக செய்தி சொல்கிறது.
யாராவது 2000 ரூ விட கம்மியாக வாங்குகிறார்களா  என்று சொல்லுங்கள்?
அப்போது மட்டும் எந்த புலம்பலும் இல்லை. அது ஒரு பெருமை.!!!1
இதை விட முக்கியமான விஷயம் :எல்லோரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.எல்லோரின் வாங்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது
     வெங்காயமே இல்லாமல் சமைத்தாலும்  நன்றாக இருக்கும்.
விரத நாட்களில் உணவில் வெங்காயம்  சேர்க்க மாட்டார்கள்.அன்றுதான் உணவு இன்னும் அதிக சுவையுடன் இருப்பது போல் தோன்றும் .
சரி ,10 வெங்காயம் போடும் இடத்தில் 5 வெங்கயம் போட்டு  பயன்பாட்டை குறைத்து ,கம்மியாக வெங்காயம் வாங்குங்கள் .
வியாபாரிகள் எவ்வளவு நாள் பதுக்க முடியும்?
கண்டிப்பாக விலையை குறைத்துதானே விற்க வேண்டும்.
செயல் இழந்த மத்திய அரசு 
என்னதான் செய்கிறது அரசு? வியாபாரிகள் பதுக்குகிறார்கள் என்று சொல்லி விட்டால் சரியா? ஒரு ரெய்டு  போய் அதை வெளியே கொண்டு வர முடியாதா?ஏற்றுமதியை  நிறுத்த முடியாதா? காமெடி செய்கிறது மத்திய அரசு.

2013/10/18

கிராமத்து குர்பானி :
ஒட்டகங்களை  வெட்டக் கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார் என்ற செய்தி எனக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டது.
நாங்கள் ( நான்+என் சகோதரர்கள் ) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்.நான் P .S .G .என் அண்ணா கோவை அரசு மருத்துவ கல்லூரி.
கிராமத்தில் 'தவம்'  என்று கொண்டாடுவார்கள். பங்காளிகள் எனப்படும் அனைவரும் எங்கிருந்தாலும் வந்து குல தெய்வ வழிபாடு செய்வார்கள்.எனக்கு விவரம் தெரிந்து வந்த முதல் தவம்அது.
என் அண்ணா கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்.ஏதோ  பண்டிகை என்று நினைத்து தன நண்பர்களையும் அழைத்து வந்து விட்டார் வீட்டிற்கு.அடுத்த நாள் கிராமத்திற்கு சென்றோம்.என் பெரியப்பாதான் ஊர் தலைவர். சிற்றரசர் போல்.ஊருக்கு அவர்தான் ராஜா. ஊரே கையெடுத்து கும்பிடும்.  சினிமாவில் வருவது போல்தான்.
ஆனால் நான் ''பெரியப்பா' என்று அதட்டலாக( அப்படியே அழைத்து பழகிவிட்டது ) கூப்ப்பிட்டால் போதும். சிறியதாக ஒரு நடுக்கம் வந்து ''என்ன பொண்ணு'' என்பார்.
அவரை நன்றாக அலங்கரித்து,மாலை போட்டு ஒரு குதிரையில் ஏற்றி கோவிலுக்கு கூட்டி வந்தார்கள். எனக்கு அவரை பார்க்க (அழகாக இருந்தார்) வேடிக்கையாக இருந்தது.
ஆனால் உண்மையான வேடிக்கை அப்புறம்தான் ஆரம்பித்தது.எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்கள் வந்தார்களோ ?ஆளுக்கொரு ஆடு, கோழி .ஒருவர் வெட்டி வெட்டி என் பெரியப்பாவிடம் கொடுக்க, அவர் அந்த ஆட்டை வாயில் வைத்து அதன் ரத்தத்தை உறிஞ்சி துப்பினார்.அத்தனை மக்களும் அதை கையிலேந்தி (அதற்கு அவ்வளவு தள்ளு முள்ளு ,அடிதடி,) குடிக்க,.....
அதை குடித்தால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குமாம்.நோயுள்ளவர்களுக்கு நோய் பஞ்சாய் பறந்து விடுமாம்.ஊரே ரத்த மயமாக காட்சியளித்தது.ஒரூ  1000 ஆடு ,கோழிகள் இருக்கும்.
ஏற்கனவே பெரியப்பாவிற்கு கள்ளை ஊற்றி அரை மயக்கத்தில்தான் கொண்டுவந்தார்கள்.இல்லையென்றால் அந்த ரத்தத்தை குடிக்க முடியாதாம்.கள்  மயக்கம்+ரத்தமும் சேர்ந்து கொள்ள பெரியப்பா முழு மயக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்தார்.
.......   ..... பார்த்து கொண்டிருந்த நான்,+ என் அண்ணா,+ அவரது நண்பர்களும்தான்   மயக்க நிலை. .....விதிர் விதிர்த்து போய்  விட்டோம். ...சத்தியமாக இப்படி  ஒரு நிகழ்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
'' டேய் மம்முட்டி ( என் அண்ணாவை அப்படித்தான் அழைப்பார்கள்...நாங்கள் மம்மட்டியான் ஊர் என்பதால்.) டேய் மம்முட்டி, இன்னொரு முறை பண்டிகை, பொங்கல்  என்று ஊருக்கு கூப்பிட்டால் மவனே '' என்று தலை தெறிக்க பறந்தோடியவர்கள்தான் ......அப்புறம் என் திருமணத்திற்குதான்,(அதுவும் சேலத்தில் நடந்ததால்)வந்தார்கள். இன்று அவர்கள் பெரிய மருத்துவர்கள்.
......     .....   ......  
இப்போது நிகழ்காலத்திற்கு  வருவோம். ஒட்டகம் வெட்டக் கூடாது என்பவர்கள், இது போல் ஆடுகளையும் வெட்ட கூடாது என்று போராடலாமே . நகரில் உள்ள இறைச்சி கடைகளின் முன் போய்  தர்ணா செய்யலாமே.
அன்புடன்,
கலா கார்த்திக் (கார்த்திக் அம்மா )


2013/10/09

ராமேஸ்வரம் கோவிலில் பன்றி :

        பன்றி வந்தால் நல்லதுதானே
.விஷ்ணுவின் அவதாரம்தானே.
தங்கை ஆத்துக்காரரை பார்க்க மைத்துனன் வந்தால் வரவேற்க வேண்டியதுதானே.அவரே விஷ்ணு..அவரை சபையில் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்ய வேண்டியதுதானே சரி.
அதை விடுத்து கோவிலை சுத்தம் செய்தால் விஷ்ணு கோபித்து கொள்ள மாட்டாரா?
எந்த நேரம் பன்றி, எந்த நேரம் வராகம் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே.
நிறைய புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்து மகா மேதைகளே இதற்கும் ஒரு கதை சொல்லி எங்களை முட்டாளாக்குங்களேன்.

2013/10/07

பழி வாங்கிய மாணவன் :
நான் ஆசிரியையாக இருந்த காலம்.
மாணவர்களை திட்டுவதில் பல ரகம்.
தோலை உரித்து உப்புகண்டம் போட்டு விடுவேன்
2.கொடிக்கம்பத்தில் தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்
3.ஒரே அறையில் அத்தனை பல்லும் கொட்டி விடும்
இப்படி திட்டியதை மனதில் வைத்து கொண்டே இருந்திருக்கிறான் ஒரு மாணவன்.இதற்காகவே பல்மருத்துவமும் படித்திருக்கிறான்.(ர் ).
எனக்கு பல்வலி என்றேன் செந்திலிடம்.அவனும் என் மாணவன்தானே.இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று என் மாணவன் (செந்திலின் நண்பன் ) அழைத்து சென்றான்.
மாணவனுக்கு என்னை பார்த்ததும் பெரிய அதிர்ச்சி.கனகம்பீரமாக இருந்த நான் கடுங் கிழவியாக இருப்பேன் என்று எதிர்பார்க்காத அவன் திகைத்து ''என்ன Mm இப்படி ஆகி விட்டீர்கள்?''
சரி. விசாரிப்புகள் எல்லாம் முடிந்து treatment ஆரம்பம்.4 பல் எடுத்தாக வேண்டும் என்று சொல்லி 10 நிமிடத்தில் படக் படக் என்று 4 பல்லையும் பிடுங்கி விட்டார்.இப்படி பழி வாங்க வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தாரோ.
அவன் மனைவி, மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவரிடமும் என் English Mm என்று ஓடி ஓடி சென்று சொல்லி அவ்வளவு சந்தோஷப் பட்டதை பார்த்து நான் நெகிழ்ந்தே போய்  விட்டேன்.அவர் Dr .முரளிமணி .
வாசன் DENTAL  CARE .
மாணவர்களை 'மகன்களே ' என்றுதான் அழைப்பேன்.
கார்த்தி,செந்தில் இருவரையும் குட்டிஸ் என்று சொல்வது வழக்கம்.
அப்படி மகன்களே என்று உறவாடியதன் பலன் என் மகன் தன கடமையை செய்து விட்டான்.
வாழ்க. 

2013/09/28

 நல்ல தமிழ் இனி மெல்ல சாகும் என்றார் பாரதியார்.உண்மைதான்.
ஒரு தொலைகாட்சியில்  சமையல் நிகழ்ச்சியில்
''இஞ்சி  புளி  சாறு '' என்பதற்கு
இன் ஜி  புலி சாறு 
என்று போடுகிறார்கள்.
இதை என் வீட்டு தமிழ் அறிஞரிடம்  காட்டினேன்.அந்த மேதை  கேட்டார்.எந்த ''  லி '' போட வேண்டும் என்று.
என்ன சொல்வது.
கார்த்திக்+அம்மா

2013/09/27

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்களிக்கும் இயந்திரத்தில் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இனி நான் ஓட்டு  போடுவேனே

ஆஹா  நன்றி நன்றி
இனி நான் கண்டிப்பாக ஓட்டு போடுவேன்.இத்தனை நாட்களாக ஓட்டு  போடவில்லை(.அவ்வளவு youth )
எதற்காக ஓட்டு போட்டு ஒரு சாதாரண ஆளை 200 கோடிக்கு அதிபதியாக்க  வேண்டும்?ஒரு சாதாரண தி....டனை  அதிகாரத்துடன் திருட அனுமதிக்க நான் வோட்டு போடுவேன்?
இனி நான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  நிராகரிப்பேனே

.சந்தோஷமாக இருக்கிறது .

2013/09/21

Blind and Teacher job:
First I register my whole hearted sympathy to the visually challenged and its our social duty to help them.
But PLEASE at any cost do not give them the teacher job.
When I ( karthik amma ) was working as a teacher one blind man worked as a teacher. And what a hell of problems did we ( both students and teachers ) face.
He cannaot write on the board.
He cannot control the students.He used 4 students as monitors, who really did the spy job only and the class students had to obey those boys as otherwise they would get terrible beatings from the teacher.
and the high light is that he would force all the students to attend tuition.
அவர்களை நான் தவறாக சொல்லவில்லை இந்த ஆசிரியர் வேலை மட்டும் வேண்டாம்.
வேண்டவே  வேண்டாம்.
சாதாரணமாகவே  இந்த மாணவர்கள் பல தவறுகள் செய்வார்கள்.அப்படியிருக்க இந்த பார்வையில்லாதவர்கள்  எப்படி அவர்களை கண்காணிக்க முடியும்?
கரும்பலகையில்  எழுதி பாடம் நடத்தினாலே பாடம் சிறப்பாக இருக்கும்.
(கண்ணிருக்கும் எத்தனை பேர் எழுதி பாடம் நடத்துகிறார்கள்  என்று கேள்வி கேட்காதீர்கள் . சில கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும்  பதில் சொல்ல முடியாது ).
அரசு அவர்களுக்கு கண்டிப்பாக வேலை தரட்டும்.
ஆனால் ஆசிரியர் வேலை மட்டும் தரவே வேண்டாம்.
கார்த்திக் +அம்மா
 

2013/09/05

இன்று என் அம்மாவின் நினைவு நாள்.
அற்புதமான பெண்.
எனக்கு தெரிந்து அவர் போல் ராஜ வாழ்க்கை  வாழ்ந்தவர் யாரும் இருக்க முடியாது.அழகு, அறிவு, அந்தஸ்து ,செல்வம்  அனைத்தும் பெற்றவர்.
ஒரு சிறந்த தலைமை ஆசிரியராக செயலாற்றியவர்.
அவர் வாழ்க்கையின் சில துளிகள்.
77 வயது வரை வாழ்ந்தவர்.
எந்த வேலையையும்  சவாலாக செய்யக் கூடியவர்.
சிறந்த விளையாட்டு வீராங்கனை.
Best swimmer
poet
orator மேடையில் வெளுத்து வாங்குவார்.
இப்படி எல்லாமும் செய்தாலும் அவருக்கு ஆகவே ஆகாத ஒரு விஷயம் சமையல்.
அவர் சிறு வயதாக இருந்த போது  அவர் அம்மா சாம்பார் தாளிக்க சொல்லி விட்டு எங்கோ சென்றுள்ளார். என் அம்மா ஒரு உதவியாளர் (! ! ) உடன் சேர்ந்து தாளிக்கும் கரண்டியை ஒரு நீள குச்சியில் கட்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அது பொரிய ஆரம்பித்தவுடன் அப்படியே போட்டு விட்டு வெளியே ஓடி விட்டாராம்.
 .திருமணத்திற்கு பிறகும் அதே கதைதான்.
எனக்கு மொத்தம் 6 பாட்டிகள் .
இவர்தான் மெத்த படித்த மேதை. அந்த  .காலத்திலேயே அரசு வேலையில் இருந்தவர்.
அதனால் .செல்லமோ செல்லம்.அதனால் சமையல் வேலை அம்மாவிற்கு இல்லை.
ஒரு பொங்கல்  வந்து விடக்  கூடாது..அம்மா பொங்கல் செய்வதற்குள் ஒரு பிரளயமே நடக்கும்.
High light ஏ  இதுதான்.
எனக்கு பெண் பார்க்கும் படலம் .நானோ I .A .S  படிப்பேன் என்று ஒரு பிடிவாதம். அதனால் யாராவது பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் சண்டைதான்.அப்படித்தான் அன்று கார்த்தியின் அப்பா பெண் பார்க்க வந்தனர். அவர்கள்தான் ஒரு 2 அ  3 பேர் வரலாம் வந்தவர்கள் 8 பேர்.நான் சண்டை.அம்மாவிடம் பேசவில்லை.அப்பா கெஞ்சியதால்  ஒரு முறைப்புடன் வந்து ஒரு நிமிடம் நின்று விட்டு அறைக்குள் சென்று விட்டேன்.வந்தவர்களிடம் அம்மா சாப்பிட்டுவிட்டு போகலாமே என்றவுடன் அவர்களும் (என் மாமனார் )சரி என்று விட்டனர். அன்றைக்கு பார்த்து சமையல் பெண் வரவில்லை. நானோ முறுக்கிக் கொண்டு அறையில்.
ஒரு அரை மணி நேரம் கழித்து அம்மா மெதுவாக அறைக்கு வந்தார்.நான் ஒரு முறைப்பு.தயங்கி நின்றவர் மெதுவாக ''கண்ணம்மா '' என்றார். எப்போதும் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்.மறுபடியும் ஒரு முறைப்பு.
'' குக்கர் whistle வரவில்லை '' என்றார்.
பாவமாகி விட்டது.சமையல் அறைக்கு போய்  பார்த்தால், குக்க்கரில் தண்ணீரே ஊற்றவில்லை.அப்புறம் என்ன ? வழக்கம் போல் என் சமையல்தான்.
தன 77 வயது வாழ்க்கையில் ஒரு முழு சமையல் செய்யாமலே வாழ்ந்து காட்டி விட்டார்.
*****
நான் 1996 ல் M .B .A  பட்டம் IGNOU  பல்கலை.சென்னை I I டி  யில் பட்டமளிப்பு விழா.எங்கும் ஒரு கும்பலாக போவதே வழக்கம்.அதே போல் இதற்கும் எல்லோரும் கிளம்பியாகி விட்டது.ஆனால் 2 பேர் மட்டும்தான்  உள்ளே  செல்லலாம் என்று சொல்லி விட்டனர்.என் கணவரும் வர வேண்டும் .கார்த்திக்கிற்கும் ஆசை .ஆனால் அம்மா வந்தே ஆக வேண்டும் என்று ...எப்படியோ கெஞ்சி கூத்தாடி 3 பேருக்கு அனுமதி வாங்கி நான், என் கணவர் ,அம்மா 3 பேரும் உள்ளே போய்விட்டோம்.பட்டம் பெறப் போகிறவர்களின் பெயர்களை படித்தனர். என் பெயர் படித்தவுடன் என் அம்மாவும் எழுந்து நின்றார்.
என் கணவரோ '' படித்து பட்டம் பெற்றவள் அவள். நீங்கள் உட்காருங்கள்'' என்று கலாய்க்க 
இப்படி ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை கூட நழுவ விடாமல் வாழ்க்கையை சுகமாக சந்தோஷமாக  வாழ்ந்தவர்.
கார்த்தி முதல் பேரன். அவன் இழப்பு அவரின் வாழ்வில் பேரிடி. கடைசி நாட்களில் துக்கத்தில் மூழ்கி போனார்.
ஒரு சிறந்த ஆசிரியையாக  வாழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று.
....... ஆசிரியர் தினம்......
அம்மா உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.

2013/08/28

Today School Edu. Dep has announced that both 10 & 12 exams will be held at the same time.
And the practical exams will be held after the written exams are over.
    In 2006,  I was in the book review committee and then I SUGGESTED that the practical exams should be conducted after the written exams.
When I joined duty as a teacher we had enough time to revise.The third term will be for revision. Only in March revision exams will be held. So  for  2 months we will revise thoroughly
என் கருத்து சபை ஏறவில்லை என்று அப்போது என்னை கேலி கூட செய்தனர்.
ஆனால் இன்று எனக்கு ஒரு திருப்தி.

சொல்வதெல்லாம் உண்மை:
இது வரை ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு பெண் கூட ஒரு கணவனுடன்  (ஒரே ஒரு கணவனுடன் ) வாழ்ந்த மாதிரியே தெரியவில்லை. என்ன கலாச்சார சீரழிவு.பெண்கள் தெளிவாக பொய் பேசுகிறார்கள். வாழ்க பெண் சுதந்திரம்.

பாராளுமன்றம்:
  குற்றம்  செய்து இருந்தாலும்   even though you are a  criminal you  can continue  as ministers and M .P s .
இந்த விஷயத்திற்கு மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக ,அவையில் கூச்சல் குழப்ப ம்  செய்யாமல், அவையிலிருந்து  வெளி நடப்பு செய்யாமல் ,
அட , அட
இவ்வளவு ஒற்றுமையாக ஒரே நாளில் மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள் .   நாடே  அவர்களுக்கு மட்டும்தான்......அவர்களுக்காகத்தான் .
அவர்கள் சம்பள உயர்வு விஷயத்திலும் அப்படித்தான்.ஒரே நாளில் மசோதா நிறைவேறியது.
வாழ்க ஜனநாயகம்.
 

2013/08/25

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.

2013/08/20

மீள் பதிவு:
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.
******    *****88
.//  //இன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்றும் பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க .சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2013/08/10

மேட்டூர் அணை :
கர்நாடகா முதல்வர் சொல்லி விட்டார் .இந்த வருடம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தாகிவிட்டது .
டிசம்பரில் கொடுக்க வேண்டும்
நான் பிடித்த  முயலுக்கு 3 கால் என்பவர்களிடம் என்ன பேசுவது.
அவ்வப்போது மழை பெய்ய வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்ள வேண்டும்.
...............     ...............  ................
என் கணவர் மேட்டூர் அணையின் பொறுப்பு பொறியாளராக இருந்தார். அப்போதெல்லாம் அந்த அணைக்கு நாங்கள்தான் முழு பொறுப்பு ,அது எங்கள சொத்து என்பது போலெல்லாம் எனக்கு எண்ணம்.
அணைக்கு L T T E  மிரட்டல் இருந்தது.எனக்கு அழுகை.
.விரதம்.பூஜை என்று எத்தனை வழிபாடுகள்.
அது ஒரு காலம்.
.................. ............   .......
என் செல்ல கண்மணி கலாம் சொல்கிறார்.
''2017 க்கு பிறகு லஞ்சமில்லா  இந்தியாவை  உருவாக்கலாம்.''
அப்படியானால்  அதுவரை லஞ்சம்  இருக்கலாமா ?
ஏஞ்சாமி , நமக்கு தெரிந்த nano tech ,missile  பற்றியெல்லாம்  பேசலாமே.
ஏற்கனவே  கனவு காணுங்கள் ( have an ambition ) என்று சொல்ல போய்   ஆளாளுக்கு துவைத்து கிழித்து  காயப் போட்டார்கள்.
நல்ல வேளை .இதை யாரும் கவனிக்கவில்லை போலும்.
கவனிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் இப்போது  ஜனாதிபதி இல்லையே.
சினிமாவின் கஷ்ட காலம் :
என்ன ஆயிற்று ,சினிமா உலகிற்கு ?
4,5 முக்கிய உயிர்கள் திடீர் திடீரென மறைந்தன .
ஜேம்ஸ் வசந்தன் பிரச்சினை
சேரன் பிரச்சினை.
தலைவா பிரச்சினை.
இன்னும் இது போல் பல.
அதை விட கனகா பிரச்சினை.
ஏதாவது பரிகாரம்,வாஸ்து என்று முயற்சி செய்யலாமே.

2013/07/24

                       HAPPENISM HAPPENISM HAPPENISM
This is a new "ISM' founded by Kalavathy Karthikeyan.This is a new religion.It has no gods,no rituals,no poojas,no mantras,no bajans.This HAPPENISM believes not in karma,sin,janmas,previous births,rebirths,soul,anma,athma and salvation.
This religion firmly believes that any incident or action or event or motion occurs not due to any pre destined design or because an omnipotent sitting in some mountains [with a wife simply doting on him saying "YES LORD" to everything he says ..and with a lot of so called sages dressed funnily chanting some hymns in praise of him] directs each and every minute action of the whole earth, of the 1000s of billion people and decides their birth,course of life,time of marriage,time of death and the whole lot.Isn't it unimaginable and unbelievable for a man turned to become all powerful,all capable and to become the sole deciding authority?
And he needs no computers,no calculators,no statistics!And we believe that we act as is written on our forehead.How many lines are written on your forehead?Is it a micro chip,where a hell lot can be written?If so,this Funny god knows embedding and programming!
If this is a disclaimer,what does HAPPENISM CLAIMS? It says that any action,event,motion,incident or accident happens because it so happens.Let me explain.You are reading this now.Which god or destiny directed you to read this?Did your astrologer predict you that you will be reading this blog at this time?Go and ask him what you had been doing exactly at that time?Can any astrologer tell you that you were reading Vijayanagar blog at that point of time?No,..no one can..So HAPPENISM defines that it so happened that you are reading this blog now.
Shall i exemplify with a better a well known example?As many of you know I and Karthik have roamed over the roads of Bangalore in his favourite Fiero in mists,in rains,midnight,early morning,and i pinching him and playing with him while he was driving and he will drive at such high speed and "without a helmet".Why didn't any accident happen then?How many times would he have crossed the same u turn and was he not aware that he had to be cautious?His friends could site so many such rash driving days,but it so happened that he happened to apply a sudden brake.If it's your god and if there is a karma or the sins of the previous births is there no appeal?No redemption?No annihilation?Even in the man framed constitution there is a provision to go for appeal.Your gods do not give any such choice.Then how do you believe that he will save us?He cannot do anything against destiny eh?If so why should we beg him to save us?
SO let us believe in this HAPPENISM and strengthen ourselves to face the happenings.Instead of being a slave to someone who ditches and deserts at the deserved time[isn't something like the villain of the movies who ruthlessly kills his ardent follower].
So HAPPENISM says that you be your master and let things happen as they happen.
இது ஒரு மீள் பதிவு.அப்போதெல்லாம் தமிழில் எழத தெரியாது.
இது என் புதிய மதம்.
                             நிகழ்வியல்
ஆம்.என்னதான் ஜாதகம் , முயற்சி , தலைவிதி  என்று ஆயிரம் விஷயங்கள் சொன்னாலும் எது நடக்கிறதோ அதுதான் நடக்கிறது.
இதற்கு முன்ஜனமம், பாவம், புண்ணியம் ,என்ற கணக்கெல்லாம் இல்லை.
இது இப்போது நடக்கிறது.
உத்திரகாண்டில் ஏற்பட்ட மனித மாமரணங்கள், மஞ்சுளா விஜயகுமாரின் மரணம் ,2004 ன் சுனாமி ,இதற்கெல்லாம் எந்த காரணத்தை சொல்லலாம்.
அதனால் இது இன்று இப்படி நடக்கிறது.
அதை அப்படியே எற்றுக் கொள்வது ஒன்றுதான் மனிதனால் செய்ய முடியும்.
thats HAAPENISM
a NEW RELIGION
யாரையும் புண்படுத்தாத ,எந்த பகை உணர்வையும் உண்டாக்காகாத மதம். போன ஜன்மத்தில் என்ன பாவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டு குற்ற உணர்ச்சியில் கூனி குறுக போக செய்யாத ஒரு மதம்.
கார்த்திக் +அம்மா
அண்ணா பல்கலை  ராகிங் பற்றி சொல்லும்போது  எனக்கு இந்த நினைவு வருகிறது.
கார்த்தி கிண்டி அண்ணா பல்கலையில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் அருகில் வந்து இன்னொரு மாணவன் உட்கார்ந்து பயங்கர அதிகாரமாய்
'' உன்   பெயர் என்ன ,ஊர் என்ன ''என்ற range ல் கலாய்த்திருக்கிறான் .
ஒரு 5 நிமிடம் அவனை  பேச விட்டு ,பிறகு எழுந்து போகும்போது
'' ''நான் 3ம் வருட மாணவன் .comp.society secretary.
உன் senior ''
என்று கூலாக சொல்லிவிட்டு அந்த மாணவனின்  முகத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு வகுப்பிற்கு சென்றானாம்.
அதுவரை கார்த்தியை junior என்று நினைத்து ராகிங் செய்த அந்த மாணவனின் முக பாவனையை கற்பனை செய்த எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.
கார்த்தியின் sense of humour  தனி range தான்.
வாழ்க்கை நல்லாதானே  போய்க் கொண்டிருந்தது.
எங்கேயிருந்து வந்தது இந்த சுனாமியும் அது தந்த மீள முடியாத சோகமும்.
கார்த்தி+அம்மா

2013/07/17

Tit Bits
ஒவ்வொரு டி .வி யிலும் புது புது செய்தி வாசிப்பவர்கள் வருகிறார்கள் .வாழ்த்துவோம்.ஆனால் அவர்கள் உச்சரிப்பு தாங்க முடியவில்லை. 'ஒகே நக்கல் 'என்றது ஒரு பெண். என்னடா சொல்கிறது என்று ரூம் போட்டு யோசித்தால் அது 'ஒகேனக்கல்.
இன்னொரு பெண் மத்திய உணவு என்றது. அட மதிய உணவைத்தான்   அப்படி சொன்னது.
2.ரமணன்  இன்று மக்கள் டி .வி யில் சமையல் நிகழ்ச்சியில் வந்து வடை சுட்டார். மிகவும் எளிமையாகவும்  இனிமையாகவும் பேசினார்.அவர் மனைவி அவ்வளவு பாந்தமாக இருந்தார். ஒரு ஆதர்ஷ தம்பதியினர் என்று பார்ப்பதற்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
3.Z தமிழ் தொலைக்காட்சியில் ஒரு இளைஞன் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை (அந்த பெண்ணுக்கு பேரக் குழந்தை இருக்கிறது.) காதலிக்கிறேன் என்று எந்த ஒரு குற்ற உணர்வோ அவமான உணர்வோ இன்றி தான் எதையோ சாதித்து விட்ட பெருமையுடன் பேசினான். லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் உனக்கு வெட்கமாயில்லையா  என்று கேட்டார்.நான் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறேன்.
அதுதான் எல்லோரும்  காதல் எங்கள் பிறப்புரிமை என்று முழங்குகிறார்களே.ஆதலினால் காதல் செய்வீர்.
4.)  18 வயதிலிருந்து 16 ஆக குறைக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டது. அதனால் 16 வயதிலும் கற்பழிக்கலாம் .தண்டனை எதுவும் கிடையாது.ஏன்  ஆண்கள் எல்லோருமே கற்பழிக்கலாம் .யாருக்கும் தண்டனை எதுவும் கிடையாது என்று சொல்லி விட வேண்டியதுதானே.
5.இந்துலேகா  விளம்பரத்தில் ஒரு 6,7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தன்  நண்பனிடம் தன் காதலி நீண்ட முடி வேண்டும் என்று கேட்பதாக சொல்கிறான்.இதை மாற்றி L .K .G பையன்கள் பேசுவது போல் வைத்தால் இன்னும் பேஷாக இருக்குமே.
6. பிரியங்கா சோப்ரா பாடிய  பாடலை 2 மில்லியன் பேர் பார்த்தார்களாம்  .அந்த அம்மணியின் அங்கங்கள் அனைத்தும் தெரியும்படி உள்ள அந்த உடையில் வந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள். இந்த சினிமா காட்சிகலால்தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகிறது என்று நான் உறுதியாக சொல்வேன்.
7.இன்சூரன்ஸ் பணத்திற்காக கண்வனை கொன்ற மனைவி என்று செய்தி சொன்னார்கள் .
கள்ள காதலுக்காகவும் கொலை செய்கிறார்கள். மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.வாழ்க பெண் சுதந்திரம்.
8.இன்று ஆடி 1.எங்கள் சேலம்  மாவட்டத்தில் மிக விசேஷம் புது மாப்பிள்ளைக்கு கொண்டாட்டம்.பெண் வீட்டிற்கு அழைத்து கோழிக் குழம்பும் சீர் வரிசையும் என கொண்டாட்டம்தான் ... .சிறுவர்கள் தேங்காயில் அரிசி பருப்பு வெல்லம் நிரப்பி தீயில் சுட்டு உண்ணுவார்கள் .காலையில் அறுகம்புல்லை  தலை மீது வைத்து நீராடுவார்கள் .
9.பழைய நினைவுகளை அசை போட்டபடி நாட்களை ஒட்டிக்  கொண்டிருக்கிருக்கிறேன் .
வேதனையுடன்
கார்த்திக்+அம்மா

2013/07/16

 எங்கும் கார்த்திக் ,எதிலும் கார்த்திக்
நிறைய சினிமா ஹீரோக்கள் பெயர் கார்த்திக்,
ஆபீஸ் தொடர் நாயகன் பெயர் கார்த்திக்.
தந்தி டி ,வி anchor பெயர் கார்த்திக்
gas deliver செய்பவர்  பெயர் கார்த்திக்.
phone bill கட்டப் போனால் அங்கும் கார்த்திக்.
......
கார்த்தி கார்த்தி என்று மனம் கதறிக் கொண்டேயிருக்கிறது.

2013/07/05

I did not love...why?

  நான் காதலிக்கவில்லை :  காரணம் :
எந்த channel  திருப்பினாலும் திவ்யா  , இளவரசன்  காதல் பற்றிய விவாதம்தான்.என்னவோ பிறவி எடுத்ததே காதலிக்கத்தான் என்று 90 % தலைவர்கள் ,எழுத்தாளர்கள்  சிந்தனையாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ளும் பலரும் பேசுகின்றனர்.
இவர்கள் வீட்டில் நடந்தால் ஒத்துக் கொள்வார்களா?
எத்தனை பிரபலங்கள் தங்கள் வாரிசுகளின் காதலை எதிர்த்தார்கள் என்று நமக்கு தெரியும்.
.....    ......
நானும்   6  வருடம் கல்லூரியில் படித்தேன்.என்னோடு ஒரு 1000 மாணவிகள்  படித்தோம். 1 அல்லது 2 பேர்  காதலித்திருக்கலாம்.அதுவே    பெரிய விஷயம்.
..... எங்களுக்கும்  வாய்ப்புகள் இருந்தன .நாங்களும் காதலித்திருக்கலாம் .
ஆனால் அன்பு , பாசத்தை கொட்டி வளர்த்த பெற்றோரின் நினைவு ,அவர்களுக்கு நாங்கள் கொடுத்த  மரியாதை   எங்கள் யாருக்கும் காதல் என்ற எண்ணமே வரவில்லை.நமக்காக எத்தனை கஷ்டப் பட்டிருப்பார்கள்.நமக்கு ஒரு   சிறிய கஷ்டம் என்றாலும்  எவ்வளவு துடித்திருப்பார்கள் ?
அவர்கள் நமக்கு ஒரு துணை தேடும்போது  இந்த மணமகன்  நம் பெண்ணை நன்றாக காப்பாற்றுவானா  என்று பல வகையிலும்  ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்கள் .
என்னையும் என் பெற்றோர் கேட்பார். '' இந்த பையனை உனக்கு பிடித்திருக்கிறதா ? ''
நான் சொல்வேன் " நீங்கள் யாரைக் காட்டி இவனை திருமணம் செய்து கொள்  என்றால் செய்து கொள்வேன் ''
அப்படித்தான் நடந்தது.
திருமண வாழ்வில் எனக்கும் என் கணவருக்கும் ஏதாவது மனக் கஷ்டம் என்றால் கூட என் தாய் தந்தையிடம் சொல்ல மாட்டேன்.அவர்கள்  மனம் துடித்து போவர் .
இந்த காலத்தில் இந்த இளவரசன் 19 வயது.இந்த படிக்கும் வயதில் காதல், கல்யாணம் .படிக்கும் வயதில்  காதல் ஏன்  என்று யாரும் கேட்கவில்லை.பொன்.ராதாகிருஷ்ணன்  மட்டும்தான் சொன்னார். உடனே அதற்கு ஒருவர் பதில் சொல்கிறார் .''அவர் தன உயர் ஜாதி புத்தியை காட்டுகிறார்'' என்று.
ஜாதியை உள்ளே கொண்டு வந்தது கட்சிகள்.
அந்த பெண்ணின் தந்தை இறந்த போது ஏன் யாரும் ஆர்பாட்டம் செய்யவில்லை?
கட்சிகள் நடத்திய வன்முறைதான் அரங்கேறியது.அந்த தந்தைக்காக யாரும் அழவில்லை. ( இந்த டி .வி களைத்தான் சொல்கிறேன்.)இந்த டி .வி கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். ஒரு டி .வி சொல்கிறது ....''தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது"  ...என்னவோ உத்திரகாண்டில் தன உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றிய பிரவீனுக்கு இணையாக இவர்களை பேசுகிறார்கள் .அந்த பிரவின் பற்றி ஒரு இரங்கல் செய்தி கூட பல தொலைகாட்சிகள் செய்யவில்லை.
இவர்கள் ஊதி பெரிசாக்குகிறார்கள்.
பெற்றோர்களை நேசியுங்கள் .காதல் தேவையில்லை.கல்யாணத்திற்கு பிறகு கணவனை காதலியுங்கள்.அது அன்பு. அதுவே நிலைக்கும்.
(கார்த்தியின் கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று தெரியாததால் )
கார்த்தி+அம்மா ..அல்ல ..
கார்த்தி அம்மா (மட்டும்)

2013/06/28

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். 

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

ஒரு வலைதளத்தில் படித்தேன். 
HEART ATTACK வந்தால் செய்ய வேண்டிய முதல் செயல் என்று எழுதியிருந்தார்.
யாருக்காவது உதவியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளேன்.
மிக மிக முக்கியமான விஷயம்
 '' '' இருமுவது'' ''.....இருமுவது 
இது வரை கேள்விப் படாத விஷயம்.
இந்த பதிவினால் ஒரு உயிர் காப்பாற்றப் பட்டாலும் இந்த வெள்ளிக் கிழமை நான் கார்த்தியின் நினைவை புனிதப் படுத்தும் விஷயமாக நினைக்கிறேன்.(வெள்ளிக் கிழமைதான் கார்த்திக்கிற்கு விபத்து நடந்தது.)
கார்த்திக்+அம்மா 

2013/06/23

திருந்தவே மாட்டார்கள்:
உத்தரகாண்ட் மாநிலம் :
இப்படி ஒரு கொடுமை ,மக்களின் உயிர் போராட்டம்.அப்பப்பா ....டி .வி .யில் பார்க்க பார்க்க  மனம் பதைபதைத்து  போகிறது.
ஆனால் பல கேள்விகள்.
அங்கே போய்தான் சாமி கும்பிட வேண்டுமா ?
வீட்டிலிருந்து கும்பிட்டால் சாமி ( அப்படியென்று ஒன்று இருந்தால் ) வரம் கொடுக்காதா
தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத சாமி பக்தர்களை எப்படி காப்பாற்றும்?
பக்தர்கள் ..என்ன வகையான பக்தி ?...ஒரு உல்லாச பயணத்தை கடவுளின் பெயரால் அனுபவிக்கிறார்கள்.
அதுவும் ஒரு பிரபலம் இமயமலை செல்வதால் எல்லோரும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் .
அதே பிரபலம்தான்  திருவண்ணாமலை  கிரி வலத்திற்கும் காரணம்.
அதே போல்தான் பிரதோஷம் .ஒரு டி .வி தொடரில் கதாநாயகி பிரதோஷ விரதம் கடைபிடிப்பது போல் காட்டினார்கள் .அவ்வளவுதான்.இன்று பிரதோஷம் அன்று கோவில் தள்ளாடுகிறது.
அதற்கு மேல் டி .வி யில் வரும் ஜோதிடர்கள்.இந்த கோவிலுக்கு போனால் இந்தியாவின் அடுத்த பிரதமர் நீங்கள்தான்.
அடுத்த கோவிலுக்கு போனால்  நீங்கள்தான் அமெரிக்காவின் அடுத்த president என்ற ரேஞ்சுக்கு ஏத்தி விடுகிறார்கள்.
காசி கயா  போனால் முக்தி கிடைக்கும் என்றால்  அங்கு பிறந்தவர்கள் எல்லாம் முக்தி அடைய வேண்டும் (முக்தி  என்றால் என்ன ?  அதை அடைந்தவர்கள் யாராவது வந்து சொன்னார்களா ?)
மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னவை எல்லாம் வியாபாரமாக்கி விட்டார்கள்.
இதையெல்லாம் விட கொடுமை.
POLITICS :
அட ஒரு உயிரை காப்பாற்ற 10 பேர் போராடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கோவில் கட்ட உதவுகிறேன் என்று திருவாய் மலர்ந்திருக்கிறது ஒரு ****.....********** எத்தனை வார்த்தைகளினாலும் திட்டலாம் என்று ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.முதலில் உயிர்களை காப்பாற்றுங்கள்.அவர்கள் தமிழர்களா, குஜராத்திகளா ,கன்னடிகர்களா என்பதில்லை. அவர்கள் மனிதர்கள் .
காப்பாற்றியவர்கலுக்கு  உணவு, வீடு கொடுங்கள்.
அப்புறம் ,அவர்களுக்கு சம்பாதிக்க வேலை கொடுங்கள். அதற்கு ஒரு தொழிற்சாலை கட்டுங்கள்.இதெல்லாம் முடிந்த பிறகு கோவில் கட்டுவது பற்றி யோசியுங்கள்.
DONATION 
இது அடுத்த விஷயம்.இந்த மக்களை காப்பாற்ற போய் உயிரிழந்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவுவது மிக மிக முக்கிய விஷயம்..
அவர்களின் குடும்ப இருப்பிடம் அறிந்து அங்கு செல்ல யாராவது முன்வந்தால் அவர்களுடன் சென்று உதவ நானும் தயார்.
ஒரு அதிகாரி சொன்னார் .
'' பணம் நிறைய இருக்கிறது.ஆனால் பணம் இப்போது எதுவும் செய்ய முடியாது.''
எவ்வளவு உண்மையான  வார்த்தைகள்.
மனிதர்கள் உணர வேண்டிய விஷயம்.
நம் முப்படை வீரர்களுக்கு நன்றி சொல்லாமல் பதிவை முடித்தால் 100 கோடி பாவம் வந்து சேரும்.நன்றி.நன்றி.சகோதரர்களே.
கார்த்திக+ அம்மா 

2013/06/19

Today there was a news about +2 students not getting hall ticket for the arrears exam  and are not able to write their exam.
 எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி நினைவு வந்தது.
When I  was working in Metturdam ,இதே போல் ஒரு நிகழ்வு.
என் தலைமையாசிரியருக்கு என் மேல் ஒரு நெருடல் இருந்தது.என்னடா ,இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு திறமையாக இருக்கிறது இந்த பெண் .எந்த வேலை கொடுத்தாலும் perfect ஆக முடித்துவிடுகிறதே .யானை எப்போது சறுக்கும் என்று எதிர்பார்த்து ஏதோதோ முடிக்க முடியாத tasks ,(tough tasks ) கொடுப்பார்.ஆனால் எனக்கு சூது தெரியாது.எனக்கு பின்னால் திரை மறைவில் நடக்கும் சதிகள் பற்றி தெரியாது.தெரிந்து கொள்ளவும் விரும்பியிருக்க மாட்டேன்.சித்தம் போக்கு சிவன் போக்கு என்று நான் பாட்டிற்கு கொடுத்த வேலைகளை செய்வேன்.
இப்படியாகத்தானே
.... .....
ஒரு துணைத் தேர்விற்கு என்னை முதன்மை கண்காநிப்பாளாராக நியமித்தார்.வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த என் கையில் ஒரு file கொடுத்து ,'' நீங்கள் இந்த தேர்வை நடத்துங்கள் '' என்றார்.
எப்போதும் போல் நான் இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன்.அரங்கிற்கு வந்து பார்த்த போது 120 மாணவ மாணவிகள்  நின்று கொண்டிருந்தனர்.அவர்களுக்கு அறை எதுவும் ஒதுக்கப்படவில்லை.தேர்வு எண்களுக்குண்டான அறை ,bench desk ல் அவர்கள் தேர்வு எண்  எழுதப் பட்டிருக்க வேண்டும். இது எதுவுமே செய்யவில்லை என் தலைமை  ஆசிரியர்.
.....
இந்த மாணவர்களுக்கு hall ticket  வரவில்லை.இவ்வளவு குழப்பங்கள் இருந்ததால் most junior ஆன என்னிடம் இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்.பாதி மாணவிகள் அழுகையோ அழுகை..நீங்கள் தேர்வு எழுத முடியாது என்று அங்கு ஒருவர் அந்த மாணவ, மாணவிகளை மிரட்டிக் கொண்டிருந்தார்..நான் அவர்களை( 4 அறைகள் ) போய் உள்ளே எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காருங்கள்.ஒரு பேப்பரில் ''நான் இந்த தேர்வு எழுத வந்தேன்,hall ticket கிடைக்கவில்லை..இன்று எழுதும் தேர்விற்கு பிறகு அரசு எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுகிறோம்'' என்று எழுதிக் கொடுங்கள் ''என்று எழுதி வாங்கிக் கொண்டு கேள்வித் தாள்,விடைத்தாள் கொடுத்து,''தைரியமாக எழுதுங்கள் '' என்று தைரியமளித்து அவர்களும் உற்சாகமாகி தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
.....அப்போது Joint Director வந்தார்.என்னை பார்த்து குழம்பி ''நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் ?''என்றார்.
Sir ,I  am the chief ,for the arrears exam ''
அவர் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.இந்த பெண் (ஒரு மாணவி போல்தான் இருப்பேன்.அது பற்றி சுவையான நிகழ்ச்சி பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.).உள்ளே சென்றார்..தேர்வு சிறப்பாக குழப்பம் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது..ஏதோதோ குழப்பங்களை எதிர்பார்த்து வந்தவர் தேர்வு அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டிருந்ததை பார்த்து வாய் பேசாமல் சென்று விட்டார்.
நான் என்ன செய்தேன் என்பதே எனக்கு தெரியாது.இந்த hall ticket வராதது பற்றி யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.ஒரு வாய்ப்பு தவறினாலும் வாழ்க்கை பாதையே மாறிவிடக் கூடும்.அதனால் அவர்களை எழுத வைத்து விட்டேன்.என் தலைமை ஆசிரியர்தான் பாவம்.யானை எப்போதுடா சறுக்கும் ,பட்டாசு வெடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.என் மேல் department action வரும் .மாட்டினாயா மகளே என்று குதூகலித்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.
அடுத்த நாள் சக ஆசிரியைகள் பொறாமையுடன்  கிண்டல்.''இந்த குழந்தையை விட்டால் வேறு யாரும்  தேர்வு நடத்த மாட்டார்களா ?''
வெகு நாட்களுக்கு அப்புறம்தான் தலைமை ஆசிரியரின் சதி தெரிந்தது.பாஆ ஆ ஆ வம் .
பி.கு.
யானை சறுக்கவில்லை தூள் தூளாகி விட்டது.
...... ....
தான் இறந்தாலும் தன மகனை காப்பாற்ற போராடும் இந்த தந்தையின் முன் நான் மனம் வெதும்பி நிற்கிறேன்.
கார்த்திக் அம்மா 

2013/06/18

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
   ஒருவர் எழுதியிருந்தார் ..பிரகாஷ்ராஜ் ஏதோ கடமைக்கு செய்வது போல் இருக்கிறது.முகத்தை கடுமையாக வைத்து கொள்கிறார்....
......
நானே உலக அழகன் .எல்லோரும் ( கல்யாணமான 45 வயது ,16 வயது  என )வயது வித்தியாசமில்லாமல் ,கணவன் பார்த்துக் கொண்டிருக்கவே உன்னை ஒரு முறையாவது கட்டி பிடிக்க வேண்டும் என்று ஒரு பெண் உருக ,இப்படி கலாச்சாரம் கண்றாவியாக இருந்த நிகழ்ச்சிக்கு ,இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.அந்த hot seat ல் ஏறுவதற்கு உதவி செய்வது போல் நடிப்பு இல்லை இவரிடம்.
அமிதாப் எப்படி செய்தார்?
பி.ராஜ் சரியாகத்தான் செய்கிறார்.ஆரம்பத்தில் அவருடைய வில்லன் image அவருக்கு பின்னால் பெரிய மேகமாக பயமுறுத்தியது.அனால் இப்போது பழகி ஒரு நல்ல குடும்ப நண்பருடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு  ஏற்படுகிறது.

2013/06/17

காணாமல் போய்விட்ட English Teacher :
வீட்டை காலி செய்யும் போது வேண்டாம் என்று தூக்கி போடும் பொருட்களில் முதல் இடம் பிடிப்பது புத்தகங்கள்தான் .எங்கள் பக்கத்து வீட்டு அன்பர் வீடு மாற்றினார்.அப்போது பல books  என் flat watchman  கையில் இருந்தது.நான் ஒரு book  பைத்தியம் .நானும்  கார்த்தியும் எங்கு bookstall பார்த்தாலும் உள்ளே போய்விடுவோம்.
அதே போல் எங்காவது ஏதாவது சிறிய தாள் anything printed  பொறுக்குவதுதான் ( சரியான பொறுக்கி )என் வேலை.அப்படியிருக்க watchman கையில் பார்த்தால்  விடுவேனா? நின்று விட்டேன்.  '' ஏதாவது book இருக்கா ,நான் படிக்கிற மாதிரி ?'' என்று கேட்டேன் .
அவர் சொன்னார் ,'' அதெல்லாம் இங்க்ளிஷ்ல இருக்கு ,நீ படிக்க மாட்ட ''
The Great English Teacher கலாவதிதான் காணாமல் போய்விட்டாளே . 

2013/06/10

Tit  Bits :
சோம்பேறித் தனமா ,lack  of  interest எது என தெரியவில்லை ,பதிவு எழுத விஷயம் இல்லையா ,
எழுதும் விஷயங்கள் படிக்கப் படுகிறதா
எதையாவது எழுதப் போய்  யாராவது வழக்கு போட்டு விடுவார்களா
என்றெல்லாம் யோசனை.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் எதிலும் ஆர்வம் ,பிடிப்பு இல்லாத ஒரு மன நிலை.
  கார்த்தி கண்ணுக்குள் களி நடனம் ஆடிக் கொண்டேயிருக்கிறான்.வேதனை குறையவில்லை.வருத்தம் மறையவில்லை.
......     .......
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் வெளிநாட்டுச்சுற்றுப்பயணங்களுக்காக  ரூ.642 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது
 இவர் மேல் எனக்கிருந்த மதிப்பு போயே போய் விட்டது.The instance  of  his adamance of  not accepting to fire out  the tainted  ministers increased the bitterness .இந்த முறை சைனா சென்ற போதும் அவர் மனைவி கையசைத்த பிறகுதான் நகர்கிறார்.  ஒரு பேட்டியில்  என் மனைவிதான்  என்னுடைய பிரதான adviser , அவர் சொல்படிதான் நான்  நடக்கிறேன் என்கிறார்.
வெறுத்து விட்டது .
....  .......
BANKS :
இவர்கள் கதை அதை விட பெரியது.
லீனா+காதலன்  சொன்ன நபர்களுக்கு கோடி கோடியாய்  கொடுத்திருக்கிறார்கள். நானோ , நீங்களோ போய்  கேட்டு பாருங்கள்.100 முறை அலைய வைப்பார்கள். கொடுத்த அடுத்த நாளில் இருந்து எப்போது திருப்பி செலுத்துவீர்கள் என்று நச்சரிப்பார்கள்.Fine  போடுவார்கள்.
மல்லையாவிற்கு கொடுத்தீர்களே என்று ஒரு ஆங்கில தொலை காட்சியில்  கேட்டால் அது எங்கள் வங்கி சொத்து மதிப்பில் 1% என்கிறார். அதனால் வங்கிக்கு பெர்ய பாதிப்பில்லை என்கிறார்.
நம் F .D க்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரிக்கும் அதே வங்கி இந்த பெரிய corporate களிடம் மண்டியிடுகின்றன.
...... ......
பிரதான ,முக்கிய  முக்கிய பிரச்சினை  காய் கறி  (காய் சரி ...அது என்ன கறி ?Its curry ,தங்க்லீஷ் )
காய் விலை.  
காய் கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் போது பயமாய் இருக்கிறது.மக்கள் பையை வெறித்து வெறித்து பார்க்கிறார்கள். இப்போது நகையை திருடுவதை விட காய் பையை பறித்துக்கொண்டு  ஓடுவார்கள் என நினைக்கிறேன்.அப்படியே காய் பையை பத்திரமாக கொண்டு வந்து விட்டால் ,ஒரே உடம்பு வலி  '' ''திருஷ்டி '' ''
ஏன் என்றால் நான் சின்ன (சாம்பார் ) வெங்காயம் ஒரு கிலோ ,தக்காளி ஒரு கிலோ வாங்கி வந்தேன்.
ha ,only millionairess  can buy .
இதற்கு தீர்வு என்ன ?
நம் விவசாயிகளின் சோம்பேறித்தனம்தான். நானும் ஒரு விவசாயி. என் கிராமத்தில் நான் சொல்கிறேன்.''வருடம் முழுதும் விளையும் தக்காளி போன்ற செடிகளை நடலாம்   . புது techniques  பயன்படுத்தலாம் .Compound farming  செய்யலாம் '' 
எது சொன்னாலும் கேட்பதில்லை.ஒரு எள் ,ஒரு நெல் என்று பழைய நடைமுறை தான் . தண்ணீர் இல்லை என்று ஒரு ஒப்பாரி. இருக்கும் நீரில் செய்ய முடிந்தவற்றை செய்ய முயற்சி செய்வதில்லை.சுலபமாக  பணம் வர வேண்டும். 
இப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம் .அப்புறம் பக்கத்து நாடுகளில் இருந்து வாங்குவோம்.
தமிழ் நாடுதான் பணக்கார நாடாயிற்றே.
வாழ்க 

2013/06/01

1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)

2013/05/17

வலையுலகில்  '' பட்டாப்பட்டி '' என்ற வலைபதிவர் சென்ற வாரம் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வலை உலகில் பலருக்கு வருத்தத்தை அளித்தது. நான் அவரின் பதிவுகளை அதிகம் படிக்கவில்லை. ஏன்  என்று தெரியவில்லை.
அவரின் மறைவு பற்றிய பதிவில் ஒரு பதிவர் ஒரு  விஷயம் பற்றி மிகவும் வருந்தியிருந்தார்.
அங்கு வந்திருந்த ஒருவர், ''இதனால்தான்  யாரும் தண்ணி அடிக்க கூடாதென்று சொல்வது '' என்று மிக மிக பெரிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
பட்டா பட்டியின் நண்பர் சொல்கிறார்,
பட்டாப்பட்டி மது அருந்துபவரும் அல்ல, சிகரெட் கூட பிடிக்கமாட்டார்.அப்படியிருக்க இவர் அப்படி சொன்னது அங்கிருந்த அனைவரின் மனதையும் பாதித்தது.
.....      ....
ஒருவரின் இழப்பின் போது அடுத்தவர்கள் எல்லாம் பெர்ய உத்தமர்கள் ஆகி கொடுக்கும் அறிவுரையும் ,ஆலோசனையும் இருக்கிறதே.
அப்பப்பா ,
எதோ விதி ,
இழப்பு நேர்ந்து விடுகிறது.அதுதான் நேரம் .இவர்களுக்கெல்லாம்.
மொடாக் குடியர்கள் எல்லாம் 100 வயது வாழ்வதை பார்க்கிறோம்.
இந்த பட்டாப்பட்டி ஒரு கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது ,கீழே விழுந்த பொருளை எடுக்க குனிந்த போது  மாரடைப்பு ஏற்பட்டு அந்த நிமிடமே உயிர் பிரிந்திருக்கிறது.
இதை விதி என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.
.....  .....
கார்த்தியின் விபத்தின் போதும் இப்படித்தான் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.
ஹெல்மெட் போடவில்லையா '' என்ற கேள்வி.
வேகமாக போனான் '' என்ற குற்றசாட்டு.
மொபைல் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான் '' என்றார்கள்.
நீங்கள் என்ன பொறுப்பில்லாத அம்மா ,அவனை ஹெல்மெட் இல்லாமல் எப்படி அவனை அனுப்பினீர்கள் '' என்றார்கள்.
அவன் விபத்திற்கு முதல்  நாள் வரை ''  கார்த்தி  போல் உண்டா என்று அவனை வானளாவாக புகழ்ந்தவர்கள், ஒரு நிமிடத்தில் அவனை பற்றி குறை கூறியது அவன் இழப்பை விட பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
அன்பர்களே,
நீங்கள் ஆறுதலாக  இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்.
உங்களுக்கு கோடி நமஸ்காரம்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா 

2013/05/15

செய்தி 
பு துச்சேரி இளங்கோ நகரில் தற்போது குடியிருக்கும் மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமியின்  மனைவி கலைச்செல்வி (53).
 இவர், விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு, உறவினர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முருகா திரையரங்கு சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது, பின்னால் வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த கலைச்செல்விக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆட்டோ ஓட்டுநர் மதிவாணனை போலீஸார் கைது செய்தனர். 

 அட இப்படியும் இருக்கின்றனரா?
ஒரு கவுன்சிலர் மனைவி கூட 10(.அ )15 லட்ச ரூபாய் காரில் போகும்போது ,...ஒரு மத்திய அமைச்சரின் மனைவி ...இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தாரா?
இது  உண்மையிலேயே வியப்பான செய்திதான்.
அவர் நலம் பெற வேண்டுகிறேன்.
கலாகார்த்திக்
Jeevan's comment to the post.
 You know, NarayanaSamy’s own brother family is renting in my grandmother’s house in Thiruvanmyuir. My granny used to say that no one would believe if they say he is a own brother of central minister. They are very simple citizens of Pondicherry.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.திரு  நாராயணசாமி அமைச்சரை நிறைய பேர் கிண்டல் செய்து பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே என் மதிப்பில் பல மடங்கு உயர்ந்து விட்டார்.
கலாகார்த்திக்  

2013/05/08

Karnataka  assembly polls 2013
Congress has won a good victory. Poor Rahul, what a lot of ironical comments did he face. Good.Patience wins.
When I was a Govt school teacher , I used to have tough arguments with the matriculation school teachers. They will be very proud of getting good results.I would challenge ''give your students to us, and take our students ( a kind of bartering ) , and see the results. You can give 100% result with your students but I can make them get 1100/1200 .Try and prove that you can make all our students get a pass.
எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கீழ் ,கீழ் தட்டு மாணவர்கள். படிப்பறிவில்லாத பெற்றோர்கள். ''நாளைக்கு exam fee கட்டு என்று சொன்னால் அடுத்த நாள் அந்த மாணவன் பள்ளிக்கு வர மாட்டான்.Absent .எங்கே அவன் என்று கேட்டால்'' Tidal Park போயிருக்கிறான் மிஸ் .''
எதற்கு என்றால் அங்கு போய் window cleaning ,painting  போன்ற வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வந்து fees  கட்டுவான்.
Matriculation  மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களையும் எங்கள் மாணவர்களையும் compare செய்வது எவ்வளவு சரியில்லையோ
அவ்வளவு சரியில்லை  குஜராத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிடுவது.அந்த மாநில முதல்வரை வடகிழக்கு (மணிப்பூர் etc ) மாநிலங்களுக்கு அனுப்புங்கள். அங்கேயும் இதே வளர்ச்சியை அவர் காட்டினால் உண்மையிலேயே மிக சிறந்த முதல்வர், அடுத்து பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்லலாம்.
எதற்கு இத்தனை கதை என்ற யோசனையா?
பின்னே என்ன,
*** மஸ்தான் வந்து விட்டார் பிரசாரத்திற்கு,ஆஹா ,ஓஹோ என்றார்கள் .இரண்டாம் முறையும் வர வேண்டும் என்று கெஞ்சியதாகவும்  செய்திகள் வந்தன.
அவர் வேறு ராகுல் கைக்குழந்தை என்றெல்லாம் கேலி பேசினார்
    இப்போது என்ன நடந்தது?
இது பற்றி :

// //தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆளுகிற பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. நாளைய மத்திய அரசு எங்களது தான் என்று மார்தட்டிய பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மோடிமஸ்தான் வேலைகள் கர்நாடகத்தில் எடுபடவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையப் போவதற்கு கட்டியம் கூறுகிற வகையில் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் மீதும், பாரத பிரதமர் மீதும் சேற்றை அள்ளி வீசி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு இதுதான். கர்நாடக மாநிலத்தின் இந்த தீர்ப்பு 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு அளித்த தீர்ப்பாகவே கருதுகிறோம்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டு, நாடாளுமன்றத்தை முடக்குவதும், போராட்டங்களை நடத்துவதும், காங்கிரஸ் அரசைகாயப்படுத்துவதையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை பாரதிய ஜனதாகட்சியும், மற்ற கட்சிகளும் இனியாவது உணர வேண்டும். கர்நாடக காங்கிரஸ் வெற்றி என்பது தமிழகத்திலும் 'நம்மால் முடியும்" என்கிற நம்பிக்கை விதையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நண்பர்கள் மனதில் விதைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடின உழைப்பும், ஒற்றுமையும் இருந்தால் வெற்றிக் கனியை பறிக்கமுடியும் என்பதற்கு கர்நாடக தேர்தல் நமக்கு ஒரு சான்றாக இருக்கட்டும். இந்த வெற்றிக்குவித்திட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தவெற்றிக்கு மிகக் கடுமையாக உழைத்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.// //

பிஜேபி பாராளுமன்றத்தை முடக்குவதே வெற்றி என நினைத்து கொள்கிறது.ஒரு நாளும் பாராளுமன்றத்தை நடத்த விட போவதில்லை என சூளுரை வேறு.இதுதான் வெற்றியா ?மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இனியாவது திருந்துங்கள்.

...........110 விதி ..........என்ற வார்த்தை தலைக்குள்  நடனமாடிக் கொண்டேயிருக்கிறது .
.......
ராமதாசை பின்னின்று இயக்கி   இத்தனை பிரசினைகளுக்கும் காரணமான 'மனி 'தரை அகற்ற வேண்டும் என்று அந்த கட்சிக்குள் ஒரு கூட்டம் புலம்புவதாக கேள்வி.
.........
மழை இல்லை, தண்ணீர் இல்லை. என் தென்னை மரங்களெல்லாம் காய்கின்றன.எந்தெந்த  இழப்புகளுக்காக வருந்துவது?  வாழ்க்கையில் சோகங்கள் மட்டுமே என்றால், மனம்  வெதும்பி வாடிப் போகிறது 
அன்புடன்,
கார்த்திக்+அம்மா 
.


 

2013/05/06

சென்னை :
அட சென்னையே சென்னைதான்.
நங்கநல்லூர் =  நங்கை நல்லூர் 
தாடண்டர் நகர் = Toad Hunter  nagar
பல்லாவரம்  = பல்லவ புரம்
LIST பெரிதாக இருக்கிறது.இது சின்ன sample தான்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அவ்வப்போது பார்ப்பதுண்டு. இ ன்று 06/05 பார்க்க நேர்ந்தது. வழக்கமான கதைதான். ஒரு பெண் ''காதலித்தேன், உறவு கொண்டேன் , அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் ''என்கிறாள்
அவள் காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து விட்டது.இப்போது அவனை பழி வாங்குவேன்  என்று சவால் விடுகிறாள்.
HIGH LIGHT  இதுதான்.அந்த பெண்ணின் தாய் சொல்லியதுதான்.   '' ''என் பெண்ணை ஏமாற்றிய உன்னை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் '' '' என்று வீராவேசமாக பேசினார். எனக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது .அதிசயமாகவும் இருந்தது. தன பெண் தவறு செய்ததாகவே அந்த அம்மாவுக்கு தோன்றவேயில்லை. தன பெண் கல்யாணத்திற்கு முன்பே ஒருவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது, அதுவும் முஸ்லிம் +இந்து   இது எதுவுமே தெரியாத மாதிரி பேசியது அந்த அம்மா. தன் மகளை கல்யாணத்திற்கு முன்பே இப்படி செய்து விட்டாயே என்பது போன்ற உணர்வுகள் எதுவுமே இல்லாமல் ...மிகவும் விவரம்தான்.பையனின் தந்தை எதோ பேசி எதோ அழுதார். நடிப்பா   உண்மையா ?ஒன்றுமே புரியவில்லை.
கார்த்திக்+அம்மா 

2013/04/26

வெள்ளிக்கிழமையும்  26 ம் தேதியும் சேர்ந்த நாள். ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் என் மனதில் 1000 லிட்டர் பெட்ரோலை  ஊற்றியது போல்  இருக்கிறது. தீயின் தகிப்பு தாங்க முடியவில்லை.
என் நண்பர் ,50 வயது , பைக் ஊட்டி சென்றபோது சாலையில் oil கொட்டியிருந்திருந்திருக்கிறது .அதனுடன் தண்ணீர் சேர்ந்துள்ளது .அதனால் பைக் skid ஆகி அப்படியே விழுந்து விட்டேன் .சின்ன surgery  செய்ய வேண்டி வந்தது என்றார்.
கார்த்தியின் accident  பற்றியும் இப்படி ஒரு காரணம் சொன்னார்கள்.கார்த்திக் மட்டும் ஏன் நிமிடத்தில் உயிரை இழக்க வேண்டும்?
என்னை இப்படி எரியும் தணலில் வீச வேண்டும்?
விதியா?
சதியா?
கடவுளா?
என்றும், எந்த நிமிடமும் நிற்காத கண்ணீருடன்
கலாகார்த்திக் 

2013/04/22

//புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பை அல்டா மவுன்ட் ரோட்டில் உள்ள முகேஷ் அம்பானியின் நவீன அடுக்கு மாடி மாளிகைக்கு(அன்டிலியா) உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் முகேஷ் அம்பானிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு ஏஜன்சி, உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎப்) பட்டாலியனிலிருந்து 28 போலீசார் கொண்ட குழுவினர், முகேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர் மும்பை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு செல்லும் போது மத்திய ஆயதப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் முகேஷ் அம்பானி செல்லும் வாகனத்துக்கு முன்பு பைலட் வாகனமும், பின்னால் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்களின் வாகனமும் செல்லும். தொழிலதிபர் ஒருவருக்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை.//
இது இன்றைய செய்தி.
இவருக்கு இருக்கும் செல்வத்திற்கு இவர் தன் சொந்த செலவிலேயே பாதுகாப்பு செய்து கொள்ளலாம். இதில் நம் முதல்வரை பாராட்ட வேண்டும். அவரின் பூனை படை அவரின் சொந்த செலவிலேயே செய்து கொண்டார்.அம்பானிக்கு அரசு செய்யும் செலவிற்கு பதிலாக 4 borewell போட்டு கொடுத்தால் 40 விவசாயிகள் பயன் பெறுவர் .ஹும் . தனியே புலம்புதல் என்பது இதுதான்.

2013/04/17

அர்விந்த் சாமி -ஆச்சரிய சாமி :
நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி :
கமலஹாசன் பற்றி நிறைய தெரிந்திருந்தவர்களுக்கு அவரின் பதில்கள் பெரிய ஆச்சரியமல்ல.
ஆனால் அரவிந்த்சாமி இப்படி ஒரு ஆச்சரியமான ,அறிவார்ந்த நபராக இருப்பார் என்பது எதிர்பாராத ஒன்று.
Hats off .
A caution to the pro grammar :
For a question about  chess  4 options given and one is tortoise ,which should be pronounced as tartis (டார்டிஸ் ).ஆனால் டார்ட்டாய்ஸ் என்ற வார்த்தை இருந்தது.இன்னும் சற்று கவனம் கொள்ளலாமே.
 இந்த சஞ்சய் தத் ''நான் செய்தது தவறுதான்.நான் தண்டனையை அனுபவிக்கிறேன் '' என்று சொன்னவரை மக்கள் உசுப்பி விட்டு இன்று அவர் மேல் முறையீடு செய்து 4 வார கால அவகாசம் பெற்றிருக்கிறார்.கோர்ட் எல்லோருக்கும் இது போல் சலுகைகள் தருமா ?நாட்டில்  என்ன நடக்கிறது?

2013/03/31

இது கார்த்தி August  01/ 2004 ல்
வலைப் பூ ஆசிரியராக இருந்து எழுதியது.
அதை அப்படியே copy  செய்கிறேன்.
****    *****

விஜயநகரத்து இளவரசர் 'நியோ 'வருகிறார் பராக்!பராக்!!

இவ்வாரம் ஆசிரியராக வரவிருப்பவரை நான் சந்தித்தது 'பொன்னியின் செல்வன் ' யாகூ குழுமத்தில் வரலாற்றின் மீது ஆர்வமுள்ள அவர் கொஞ்சம் வித்தியாசமாக 'விஜயநகர் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.இருக்கிறார்.ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு (2003 ) முன்பே வலை பதிய ஆரம்பித்திருந்தாலும் , சமீபத்தில்தான் தூசி தட்டி எழுத ஆரம்பித்திருக்கிறார்....(இது கார்த்தியை பற்றி வலைப்பூ அளித்த அறிமுக உரை.)
***
இனி வருவது கார்த்தியின் அட்டகாசம் :
....'நான் நல்லவன்.வல்லவன்.நாலும்  தெரிஞ்சவன் .
ஏழைகளின் பாவங்களை தாங்கும் சுமைதாங்கி ', இப்படி எல்லாம் 
சொல்லணும்தான் ஆசை. ஆனா என்னை பத்தி தெரிஞ்சவங்க கொஞ்சம் பேர் இங்க இருக்காங்க.  அதனால வேற வழி  இல்லாம உண்மையை சொல்றேன்.என்னோட  philosophy ரொம்ப  சிம்பிள் .நாம  நம்மள  பாத்துப்போம் . ஒலகம்  அது தன்ன தானே பாத்துக்கும்.' --இதுதான்   நான்  ...
ஆயுத எழுத்து அர்ஜுனுக்கும்  எனக்கும் உள்ள வித்தியாசம் - அவனுக்கு girl friend  இருக்கு. எனக்கு இல்ல ( இது வரை ) அப்புறம், அவன் எ$$மெரிக்கா போவான்.  நான் பெங்களூர் வந்து குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் கொஞ்சம் வராற்று பைத்தியம்.ஸ்கூல்ல , காலேஜுல  கல்கி , சாண்டில்யன்  நாவல்கள்  எல்லாம் படிச்சதினால வந்தது.( நான் படிச்ச தமிழ் நாவல்கள் , வரலாற்று நாவல்கள்  மட்டும்தான்.)  இப்போதைய  பொழுது போக்கு , வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு போய் photo பிடிப்பது. (கல்லையும் மண்ணையும் போட்டோ எடுத்துகிட்டு திரியறான்னு  வீட்ல திட்றாங்க )
{இது நான் ,கார்த்திக் அம்மா ,அவனை செல்லமாக சொன்னது }
அப்போ அப்போ வரலாற்று புத்தகங்களை படிப்பேன். (நாவல்கள் இல்ல.History of Tanjore Nayaks , Vijayanagar Inscriptions மாதிரி.
இது இல்லாம மைக்கேல் கிரைட்டன் ,ப்ரெடரிக் பார்சித் நாவல்கள், ஷெர்லாக் ஹோம்ஸ் ,அயன் ரேண்டின் 'objectivism தத்துவம்  பிடிக்கும் .
Neo 
( இதுவும் வலைப்பூவின் வாசகம்.....இவருடைய புனைப் பெயரும் வித்தியாசமானதே! 'நியோ' - முதலாவது மேட்ரிக்ஸ் படத்தில் அசத்திய நாயகனுடைய பெயர் இவரும்  இங்கே  அசத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாரம் உங்களுடன் ' நியோ ' என்கிற கார்த்திகேயன் .

இது அடுத்த நாள் பதிவு.
வணக்கம் !வெல்கம்!வந்தனம்!ஸ்வாகதம் !லலிதா ஜுவல்லரி வழங்கும் ...'
சே ! முதல்ல இப்படி ஓவரா டி .வி  பாக்கறத நிறுத்தனும்.
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்.
நான் வலை பதிய ஆரம்பிச்சே கொஞ்ச நாள்தான் ஆகுது.அதுக்குள்ளே இப்படி ஒரு பொறுப்பான வேலை !சரி, வலைப்பூவிற்கு போறாத காலம்  நாம என்ன செய்ய முடியும்!
இந்த வாரம் என்கிட்டே இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? எனக்கே தெரியாது !
எதுவும் எதிர்பார்க்காதீங்க ! மனம்  போன போக்கில போகப் போறேன்..ஒரு  வெட்டிப் பையனோட மனம் எந்த போக்கில போகப் போகுதுன்னு பார்ப்போம்.
'நியோ ' கார்த்திகேயன் - பேரு நல்லா இருக்கு. ஒரு வகையில  பொருத்தமாகவும் இருக்கு. நியோ மாதிரியே 3,4 மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிட்டு  காலையில 11-12 மணிக்கு ஆபீஸ் வந்து மேனேஜர்  கிட்ட திட்டு வாங்கற சீன்ல மட்டும் 
நியோ 
posted by Editor at 02.28 PM 
******
Aug 02/2004

இனிய நண்பர்கள் தினம்! 

இன்னைக்கு எனக்கும்  எனக்கும் நடந்த ஒரு உரையாடல்.
நான்-1:இனிய நண்பர்கள் தினம்!
நான்-2:இன்னைக்கு  எண்டா இத சொல்ற?
நான்-1:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல?
நான்-2:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்லையே!
நான்-1:அதான் நானும் சொன்னேன்.!இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல .அதுக்காக நண்பர்கள மறந்து ட முடியுமா?
நான்-2:இப்ப முடிவா என்ன சொல்ல வர்ற ?
நான்-1:ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்.நேத்து இந்த மாதிரி 10,15 s .m .s ,ஈ -மெயில். கடுப்பாயிட்டேன்.அப்புறம் ஒரு நண்பன் பண்ணினான்.'happy friendship  day ' ன்னான் .'அப்படின்னா என்னடா?ன்னேன் 
''அதெல்லாம் தெரியாது.இன்னிக்கு friedship day .எல்லா friends ம்  வாழ்த்து சொல்லிக்கிறாங்க .நானும் சொன்னேன்.:''சரி ஒழிஞ்சு போ !''
****
அடுத்து என் தம்பி அம்மா கிட்ட பாக்கெட் மணி  கேட்டுட்டு  இருந்தான். ''எதுக்குடா? 
இன்னைக்கு பிரண்டஸ் டே ! அதுக்காக friends எல்லாம் கேக் வெட்ட போறம் '

ஏன்டா ,தினமும் அதே வெட்டிப் பசங்க கூட தான  சுத்தற.இன்னைக்கு மட்டும் ஸ்பெஷல் வந்தது.?
சே !ஐம்பது ரூபா குடுக்கறதுக்கு  இவ்வளவு லெக்சரா?'
**** ***
அதான் யோசிச்சிட்டு இருந்தேன் .இந்த நண்பர்கள் தினம்.காதலர் தினம்.அன்னையர் தினம். தந்தையர் தினம்.பெண்கள் தினம்.ஆண்கள் தினம். இதெல்லாம் ரொம்ப அவசியமா? குறிப்பா அன்னையர் தினம் ...தினமும் அம்மா கிட்ட சண்டை போட வேண்டியது.அன்னையர் தினத்தன்னிக்கு மட்டும்,''மம்மி வி ஆல் லவ் யூ 'ன்னு  கார்டு வாங்கி குடுத்துட்டா சரியா போச்சா ?'' தினமும் இருக்க வேண்டிய அன்பு வருஷத்துக்கு ஒரு நாள் மட்டும் வந்துட்டு மத்த நாள் எல்லாம் காணாம போறதுல அர்த்தம் இல்ல. பல பேர் வாழ்த்து சொல்லணும் சொல்றாங்க .
நான்-2: எல்லாரையும் அப்படி சொல்லிட முடியாதுடா.அதுவும் இல்லாம ,உன் கூட ஸ்கூல்ல ,காலேஜ்ல எல்லாம் படிச்சவங்கள எல்லாம் நீ தினமுமா ஞாபகம் வெச்சுகிட்டு இருக்க?அவங்கள வருஷத்துக்கு ஒரு தடவையாவது நினச்சு பாக்க இது ஒரு reminder ஆ இருக்கு இல்ல!
நான்-1:ஆ.ஸ்கூல் நண்பர்கள்,காலேஜ் நண்பர்கள் !"ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..!
நான்-2:டேய் ! கண்ட்ரோல் !! பேச்ச மாத்தாதே!
நான்-1:சரி.இந்த மாதிரி ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை ஞாபகத்துக்கு வர்றவங்க ஓ .கே ! மே  தினம், போங்கள் இதெல்லாம் ஓ .கே .மத்தபடி இந்த காதலர் தினம் அன்னையர் தினம் பெண்கள் தினம் எல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலை.அதுக்கு ஒரு கிரீட்டிங் கார்டு,கிப்டுன்னு   தேவை இல்லாத தண்டம்.அம்மா,அப்பா,நண்பர்கள், காதல் கிட்ட எல்லாம் அன்பை சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை.
நான்-2;உன்கிட்ட என்னால பேசி புரிய வைக்க முடியாது.நம்ம வலைப்பூ நண்பர்கள் கிட்டவே  நியாயம் கேட்போம்.
எங்களுக்கு [கார்த்தி+கார்த்தி] ஒரே குழப்பமா இருக்கு.நீங்க என்ன நினைக்கிறீங்க? இதெல்லாம் தேவையா? இல்ல வெட்டி வேலையா?
Posted by Editor 
August 03/2004
சிக்கன் சாலையை கடந்தது ஏன் ?-  4
இத்தனை நாள் இது எப்படி தோணாம போச்சுன்னு தெரியேலை. காலங் காலமா நாம நம்ம சினிமாவையும் நடிகர்களையும்தான் ஓட்டிட்டு இருப்போம் ? இந்த சிக்கன் சாலையை ஏன்ல  மட்டும் அவங்களை விட்டுவிட்டு யாரோ சாண்டில்யன், தினத்தந்தி ,ஹிந்துன்னு யார் யாரையோ ஓட்டிட்டு இருக்கோம்.சரி,,நம்ம பாரம்பரியத்தை காப்பாத்துவோம்!பழையன:1 2 3 
நாட்டாமை:
பஞ்சாயத்து சீன் 
நாட்டாமை சரத்குமார் தீவிரமாக  யோசித்துக் கொண்டிருக்கிறார்.
கிராமத்தான்:1 சரி,சரி, எல்லாம் இப்படியே பாத்துட்டே இருந்தா எப்படி .சட்டுபுட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. 
கிராமத்தான்-2:இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு.நம்ம சின்னப்பம்பட்டி சின்னாயியோட கோழி சாலையை கடக்கறப்போ , புளியம்பட்டி ஜமீன்தார் மகன் அத புடிச்சிட்டு போய் குழம்பு வச்சு சாப்புட்டுட்டார். அந்த பொண்ணு  இப்ப நியாயம் கேக்குது. என்ன புள்ள நான் சொல்றது சரிதான ?
பெண்:( கண்ணீரும் கம்பலையுமாய் ): உண்மைதானுங்கோ 
ஜமீந்தார் மகன்:என்னமோ ஒரு கோழி போனதுக்கு இப்படி புலம்பறியே!இந்த கோழிய விட்டா ஊர்ல வேற கோழியே இல்லையா?
( நாட்டாமை பொங்கி எழுகிறார்)
நாட்டாமை:என்றா பேசற?கோழின்னா அவ்வளவு இளக்காரமா போச்சா?உன்ன ஒன்னும் கோழிய சாப்பிட  வேணாம்னு சொல்லல. காசு குடுத்து வாங்கி சாபிடுன்னுதான்  சொல்றேன்.உன்ன ஒன்னும் சாலைய கடக்கிற கோழிய புடிக்க வேணாம்னு சூழல. எனக்கும் கொஞ்சம் மிச்சம் வெச்சுட்டு சாப்பிடுன்னுதான் சொல்றேன்..இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்பு ..(தீர்பு ...) (தீர்பு ...)

மணிரத்தினம் பாதாம்- மதவாதம்-தீவிரவாதம் பாதாம்:
(எல்லாம் low pitch ல )
ட்ராபிக் போலீஸ் :ஏன் ?
அரவிந்த் சாமி:கோழி...சாலை...கடக்கணும்...
ட்ராபிக் போலீஸ்: முடியாது 
அரவிந்த் சாமி:ஏன் ?
 ட்ராபிக் போலீஸ்:சிக்னல் .உனக்கு இதெல்லாம் புரியாது.
pitch கொஞ்சம் அதிகரிக்க 
 அரவிந்த் சாமி:ஏன் ?எதுக்காக இதெல்லாம் எப்ப நிறுத்துவீங்க.உங்க லஞ்ச வெறி எப்போ அடங்கும?இந்த சின்ன கோழிய பாருங்க.இதுக்கு என்ன தெரியும்?இது கைல லஞ்சத்த கொடுக்குறீங்களே.இது என்ன நியாயம்?
ட்ராபிக் போலீஸ்:மாத்திட்ட.ஒரு  ட்ராபிக் போலிஸ நல்ல போலீஸா  மாத்திட்ட. போ. கோழிய கூட்டிட்டு போ.
3:அலை பாயுதே:
கோழி :  கார்த்திக்  நீ நான் வெஜிடேரியனா ? கசாப்பு கடையில வேலை பாக்கிரவனா?ஏன்னா  கசாப்பு கடையில வேலை பாகிரவங்கதான் இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு கோழி பின்னால சுத்திட்டி இருப்பாங்க 
மாதவன்:கோழி, நீ சாலைய கடப்பன்னு நான் நினைக்கல.உன்ன சிக்கன் 65 பண்ணினா டேஸ்ட்டா இருக்கும்னு நான் நினைக்கல. ஆனால் இதெல்லாம் நடந்துமோன்னு  பயமா இருக்கு.
( தொடர்ந்தாலும் தொடரலாம் ..அழுகின தக்காளி எதுவும் வந்து விழாமல் இருந்தால்)
-நியோ 
இதன் தொடர்ச்சி நாளை. கார்த்திக் அம்மா