About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/07/31

காஃபி டே சித்தார்த்

அதிர்ச்சி அல்ல .எரிச்சல்தான் வருகிறது .எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் .எப்படிப் பட்ட சாதனை.
ஒரு நஷ்டம் ,ஒரு தோல்வி ,ஒரு கஷ்டம் வருமே.அப்படி இல்லாத வாழ்க்கை யாருக்கோதான் அமையும்.
வாழ்வில் வரும் கஷ்டங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால் நானெல்லாம் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் .
கடனுக்காக
நோய்க்காக
கணவரின் மறைவிற்காக
இதற்கெல்லாம் சிகரம் வைத்த என் உயிர் மகன் கார்த்தியின் இழப்பிற்காக
......இன்னும் எத்தனை சோதனைகள்.
வேதனைகள்.
சித்தார்த்
இன்று தைரிய மகள் முத்துலட்சுமி தினம் .ஒரு தேவ தாசி குலத்தில் பிறந்து ,
நோயில் வாடி
தாயை இழந்து
படிப்பில் தடங்கல்
சக மாணவர்களின் எதிர்ப்பு
இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் முதல் மருத்துவர் ஆகி ,
சட்டசபையில் 'நீ உன் குலத் தொழில் செய் 'என்ற மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்து
இன்று அடையாறு ஆல  மரம் போல் நிற்கும் கேன்சர் மருத்துவ மனையை நிறுவி .......
என்ன சித்தார்த்
இவ்வளவுதானா ??
கார்த்திக்
காஃபி டே கடைக்கு அடிமை.
ஒரு நாளுக்கு ஒரு டேஸ்ட் .ஒரு நாள் cool coffee .
ஒரு நாள் 4 அடுக்கு காஃபி .
ஒரு நாள் ராகி காஃபி .
நான் கார்த்தியை கிண்டல் செய்வேன் .
''இந்த ராகி மாவு நம் வீட்டிலேயே இருக்கிறது .நானே செய்து தருவேனே .இதற்கு எதற்கு 300 ரூபாய் ?''
அப்படி ஒரு 100 விதமான காஃபி தந்து சாதனை செய்த சித்தார்த்
இவ்வளவுதானா ?
பரிதாபம் வரவில்லை.
ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விட்ட சித்தார்த்
RIP .

2019/07/22

ஏமாற்றம்

ஏமாற்றம் .ஏமாற்றம் .
சந்திராயன் விண்ணில் பாயும் காட்சியை என் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும்.
ஆனால்
மேகங்கள்.
HIGHLY HIGHLY  DISAPPOINTED .
ஆனாலும் டி .வி யில் பார்த்து மனதை தேற்றிக் கொண்டேன் .
KUDOS .என் பெரு மதிப்பிற்குரிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கார்த்திக் அம்மா

2019/07/20

கிராம புற மாணவர்கள்

நீட்டும் மாணவர்களும் :
சத்தியமாக இது என் சுய புராணம் அல்ல ,நான் செய்ததை சொல்கிறேன்.சில பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வாக இருக்கலாம் என்பதால்.
சூர்யா பேசியது கொண்டாடப் படுகிறது.அது அவர் கருத்து.அது பற்றியல்ல என் பதிவு.
நான் கிராமத்தில் படித்தவள்.கிராமத்தில் வேலை செய்தவள்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
என் மாணவர்கள் ஏழை மாணவர்கள்.(ஆனால் திறமையில் ,அறிவில் குறைந்தவர்கள் அல்ல)
தினமும் 8 கி.மீ நடந்து வந்து படித்தவர்கள்.
சில மாணவர்கள் காலையில் சந்தன மர  வீரப்பனுக்கு மலையில் சாப்பாடு கொடுத்து விட்டு ஓடி வருவார்கள் .
''ஏன் லேட்டாக வருகிறாய் ? ''
என்று கேட்டால் இந்த காரணத்தை சொல்வார்கள்.
ஒரு நாள் கத்தி விட்டேன்.
'' வீரப்பனிடம் சொல்லுங்கள்.டீச்சர் திட்டுகிறார்.படிப்புதான் முக்கியம் என்று சொல்லி அடிக்கிறார் '' ''
இப்படி எல்லாம் டிராமா போட்டு அந்த மாணவர்களை படிக்க வைத்தேன்.
''மாணவிகள் ''
மாணவிகள் நிலை இன்னும் மோசம்.கிராமத்தில் நிறைய தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
விறகு பொருக்கி வர வேண்டும்.
சாப்பாடு கூட சரியாக இருக்காது.
நான் பார்த்தேன்.வீட்டிற்கு அனுப்பினால்தானே வேலை செய்ய வேண்டும்.
பள்ளி நேரம் முடிந்தவுடன் 5 மணி வரை சிறப்பு வகுப்பு எடுத்தேன்.
அத்தனை மாணவிகளையும் பள்ளி மைதானத்தில் உட்கார வைத்து படிக்க வைத்தேன்.
சனிக் கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை பள்ளியில் கோச்சிங் .அதன் பிறகு என் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவேன்.
மாலை 5 மணி வரை வகுப்பு.
எத்தனை மாணவிகள் பயன் அடைந்தனர்.இதற்கெல்லாம் காசு கிடையாது.
full free .பல சமயம் என் வீட்டில் உணவும் உண்டு.
WHY WHY ???????சுய புராணமா ??????அல்ல
இதுதான் தீர்வு.
இதுதான் தீர்வு .
இதுதான் தீர்வு.
படிக்க வையுங்கள்.
படிக்க வையுங்கள்.
படிக்க வையுங்கள்.
......
பணம் கொடுக்கிறேன்.
புத்தகம் கொடுக்கிறேன்.
பேனா , பென்சில் கொடுக்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.
அவர்களுக்கு கோச்சிங் வேண்டும்.
எத்தனை I .T மக்கள் பின் தங்கிய பள்ளிகளுக்கு சென்று வகுப்பு எடுக்கிறார்கள் தெரியுமா?
அவர்கள் செய்வதுதான் உண்மையான சேவை.
SOLUTION :
அரசு கொடுக்கும் free coaching வருடம் முழுவதும் தரப் பட வேண்டும்.
கல்வி அமைச்சர் பல நல்ல விஷயங்களை செய்கிறார்.அவருக்கு பாராட்டுக்கள்.
எங்களை போன்றோரின் சேவையையும் பயன் படுத்தி கொள்ளலாம்.
படிக்க வையுங்கள்.
பிறரை குறை சொல்வது வேண்டாம்.நீட் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்.
எங்களால் சாதிக்க முடியும் என்ற மாணவர்களுக்கு நிறைய பயிற்சி கொடுப்போம்.நாம் வல்லவர்கள் என்பதை நிரூபிப்போம் .
கார்த்திக் அம்மா