About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/01/12


கொலைவெறி பாடல் '3 ' பாடல் வெளியீட்டு விழா முன்னோட்டத்தில் இருவர் வேட்டி உடுத்தி பாடிக் கொண்டிருந்தனர். நான் குழம்பிப் போனேன். ஏனென்றால் இருவரும் ஒரே போல் தோற்றம் கொண்டிருந்தனர். வயது வித்தியாசம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நான் நினைத்துக் கொண்டேன்.இருவரும் தனுஷ்தான் . இது ஏதோ கேமரா ட்ரிக் என்று. அப்புறம் நிகழச்சியை பார்த்த போதுதான் தெரிந்தது. அது அனிருத் என்று.
அப்படியே , அப்படியே ...கார்த்திக் ... 16, 17 வயதில் கார்த்திக்கை பார்த்தது போல் இருக்கிறார். கார்த்தி நிறம் சற்று குறைவு. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் மனதில் ஏக்கம் உண்டாகி விட்டது. பேசுவது கூட கார்த்திக் போலவே இருந்தது.
அனிருத் உனக்கு என் வாழ்த்துக்கள்.
கார்த்திக்+அம்மா

2012/01/10

பெண் டாக்டர்கள் :
ஏதோ மருத்துவர்கள் எல்லாம் புனிதப் பிறவிகள் போல் அத்தனை போராட்டம் நடத்தினார்களே. அந்த பெண் மருத்துவர் ஒரு மயக்க மருந்து நிபுணர். அவருக்கு உரிய வேலையே அல்ல இது. அப்படியிருக்க ,அந்த தவறை பற்றி எதுவுமே பேசாமல் ,ஏதோ தாங்கள் அனைவரும் புனிதர் போல் காட்டிக் கொண்டு, எங்களாலும் போராட்டம் நடத்த முடியும், நாங்கள் போராட்டம் நடத்தினால் அவ்வளவுதான், மக்களே அழிந்து போய்விடுவீர்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இப்போது ஒரு 20 நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. என் தோழியின் மகள் கர்ப்பம் தரித்துள்ளார். மாத விலக்கு தள்ளிப் போய் 10 நாட்கள்தான் ஆகியிருந்தது.அவர்கள் [ தாயும் மகளும் ] ஒரு பெண் மருத்துவரிடம் செக்கப்பிர்காக சென்றனர். எல்லா டெஸ்ட்டும் எடுத்த பிறகு அந்த டாக்டா சொன்னது என்ன தெரியுமா :
குழந்தையின் இதயம் துடிக்கவேயில்லை. அதனால் இந்த கருவை கலைத்து விடலாம் '' '' //
அதிர்ச்சியடைந்த தாயும் மகளும் ஒரே அழுகை. நான் சொன்னேன் '' '' என் சிற்றறிவிற்கு தெரிந்த அளவில் குழந்தை உருவாக்கி ௨0 நாட்களில் இதயம் உருவாகியிருப்பதோ, அல்லது அது இயங்க ஆரம்பிப்பதோ இயலாத விஷயம். எதற்கும் நீங்கள் வேறு ஒரு டாக்டரை பாருங்கள் என்றேன் அது போலவே அவர்கள் வேறு டாக்டரை பார்த்து, இப்போது நலமாக இருக்கின்றனர்.
மருத்துவர்கள் பற்றி பேசும்போது , விஜயகாந்த் ஒரு படத்தில், இறந்து விட்ட ஒரு நபரை வைத்து டாக்டர்களைப் பற்றி பேசுவாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.
வாழ்க கலி காலம்.