About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/06/26

மேட்டூர் அரசு மருத்துவமனை:
இங்கு நடந்த கண் அறுவை சிகிச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1990 களில் நான் அங்கு இருந்த போது மருத்துவமனை கண்காணிப்பு குழு ஒன்று  இருந்தது.M .L .A +சேர்மன் +உறுப்பினர்கள் சேர்ந்து ஆய்வு செய்வ ர்.அந்த ஊர் M .L .A +சேர்மன் என்ன நினைத்தனரோ.என்னை ஒரு கமிட்டி உறுப்பினராக நியமித்தனர்.35 வயதுதான் இருக்கும் எனக்கு.எல்லோருக்கும் ஆச்சரியம் .பொறாமை.அந்த வயதில் எனக்கு ஏகப் பட்ட பொறுப்புகள் கொடுக்கப் பட்டன.எதையும் சுறு சுறுப்புடனும் திறமையுடனும் (???????????) நேர்மையுடனும் செய்வதுடன் துணிச்சலும்  அதிகம் என்பதும் ஒரு காரணம் .யாருக்கும் பயப்படாமல் உண்மையை பட் பட்டென்று போட்டு உடைத்து விடும் குணம் எனக்கு.
என் நேர்மையும் ஒரு காரணம்.
பள்ளிக்கு அதிக உழைப்பை கொடுத்தவள்
எப்படியோ
அந்த கமிட்டி மருத்துவ மனை ஆய்விற்கு சென்றது.
நானும்தான்.
மருத்துவர்களை பல கேள்விகள்
நிர்வாகம் சரியாக நடக்கிறதா?
நோயாளிகளுக்கு கவனிப்பு சரியாக இருக்கிறதா?
சுத்தம் கவனிக்கப் படுகிறதா?
என்றெல்லாம் ஆய்வு செய்து குறை இருப்பின் களைய முயற்சி செய்தோம்.
NOW 2016:
இப்போது அப்படி ஒரு கமிட்டி இருக்கிறதா?இருந்தால் இப்படி தவறுகளை தவிர்த்திருக்கலாமே .
கார்த்திக் அம்மா

2016/06/25

நுங்கம்பாக்கம் கொலை :
பட்ட  பகலில் கொலை:
கூலிப் படை என்றெல்லாம் யாரும் கர்ஜிக்க வேண்டாம்.
கூலிப் படை கலாசாரத்தை யார் ஆரம்பித்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த சுவாதி பெண் காலை 6.30 க்கு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.கொலை 7.30 க்கு நடக்கிறது.அந்த பையன் வரும் வரை இந்த பெண் ஏன் அங்கே நிற்க வேண்டும்?
அவனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டும்?
லாஜிக் சரியில்லையே?
அந்த பையன் கொலை (அது அவளின் காதலன் என்றெல்லாம் உறுதி படவில்லை.ஒரு யூகத்திற்கு ...90%அதுதான் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது ) செய்ததை சரியென்று சொல்லவேயில்லை.
விஷயம் என்ன என்றால்
பொருந்தா காதல் 
கள்ளக்காதல் 
காதலன் மாற்றம் 
இவைதான் முக்கிய காரணங்கள்.
வக்கீல் ,4 பெண்கள், இப்படி பல கொலைகள் கள்ளக்காதல் விவகாரம் என உறுதி செய்யப் பட்டுள்ளன.
சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சசிகளை பாருங்கள்
பாதி கள்ள  காதல்
2 அல்லது 3 காதலன்கள்.
இந்த விஷயத்திலும்
//கொலையாளி இளம்பெண்ணுடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டார் .. கூலிபடை எனில் அவன் ஏன் வாக்கு வாதத்தில் ஈடு பட வேண்டும் ??ஒரு தலை காதலோ இல்லை இரண்டு தலை காதலோ.காதல்தான் பிரசினை.காதலன் பற்றி பேசாமல் கூலிப் படை பற்றி பேசுவது சரியல்ல //
முதல்வர் சட்ட சபையில் சொன்னார். பல கொலைகள் தனி மனித
பிரச்சி னையால் தான் நடக்கின்றன என்று.அதுதான் உண்மை.
சென்னையில் சட்ட ஒழுங்கு கெட்டு விடவில்லை.
பெண்கள்தான் மிக முக்கிய காரணம்.
ஓசூரில் பெண்தான் ஆட்களை ஏவி கொலை செய்கிறாள்.காரணம் கள்ள காதல்.
மீண்டும் சொல்கிறேன். இது சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல
தனி மனித வக்கிரம்.
எடுத்தையெல்லாம் அரசியலாக்காதீர்கள்.

2016/06/24

இன்று வெள்ளிக்கிழமை.
முகமதியர்களுக்கும் புனித நாள்.
கிறித்தவர்களுக்கு புனித வெள்ளி.
நானும் என் ஆருயிர் மகனை பறிகொடுத்த கிழமை.
11 வருடங்கள் கடந்த பின்பும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொடுமையான நாளாகவே வயிற்றை கலக்குகிறது.
.......    .......
ஆறடி  உயர மகனை
 அரைப் பிடி சாம்பலாக்கி
காவிரியில் கரைத்த
கண்ணீர் மகள் நான் .......................
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/06/23

வெங்காயம் ++பருப்பு
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெங்காய விலை அதிகமாக இருந்த போது டெல்லி முதல்வர் அம்மா சொன்னார்கள்:'' ''வெங்காயம் இல்லாமல் சாப்பாடு செய்யுங்கள்'' ?????
இப்போது பருப்பு விலை அதிகமாகும்போது ஒருவர் (அவர் மத்திய மந்திரியா ???????????) சொல்கிறார் ''சாம்பாரில்  நிறைய தண்ணீர்  சேர்த்துக் கொள்ளுங்கள் '''''''''''''
ஐயா உங்கள் வீட்டு சாம்பாரை சேம்பிளுக்கு அனுப்பினால் எவ்வளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் என்று நாங்களும் தெரிந்து கொள்வோம்.
அனுப்புகிறீர்களா ???????????????????

2016/06/22

இது செய்தி:
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2000 கோடியில் பிரத்யேக விமானம் வாங்க பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
...................நான் மக்களின் சேவகன். நம்புங்கள்.
 ......................நான் மக்களின் சேவகன். நம்புங்கள். 
நான் மக்களின் சேவகன். நம்புங்கள்.
 

2016/06/19

பாவியின் வயிற்றில் பிறந்ததால்
பாதியில் போனாயோ?
உத்தமியின் வயிற்றில் உதித்திருந்தால்
உண்டென்று வாழ்ந்திருப்பாயோ?
பாவியெனக்கு உன்னை சுமக்கும்
பாக்கியம் கிடைத்ததால்
என் பாவமெல்லாம் நீங்கியதோ?
என் பாவத்தை நீ சுமந்ததால்
பரிதவித்து பரமனடி சேர்ந்தாயோ?

2016/06/07

என்ன சொல்வேன்????????
எப்படி சொல்வேன்??
1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)
11 வருடங்கள் ஓடி விட்டன.
மகனின் ஏக்கம் அதிகம்தான் ஆகிறதே அன்றி குறையவில்லை.
இது என்றோ எழுதியது.இப்போது மறு பதிவேற்றம்.
கார்த்திக் அம்மா
கலாகாத்திக்