About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/01/26

திண்டுக்கல் தனபாலன்

நன்றி.நன்றி.
என்னருமை இளையவர் திண்டுக்கல் தனபாலன்.
இஸ்ரோ வீடியோ எடுக்கும் போது அதை போஸ்ட்டில் போடும் எண்ணம் இல்லை .ஆனால் அதை பார்த்த போது திடீரென அந்த எண்ணம் வந்தது.
வலையில் ஏதோ எழுத தெரியுமே அன்றி,மிக அதிக நுட்பங்கள் தெரியாது.
உதவிக்கு என்றவுடன் நினைவிற்கு வந்தவர் இந்த ''வலையுலக சித்தர் ''தான்.அவருக்கு போன் செய்தேன்.
என்ன அவசர வேலையில் இருந்தாரோ?
அவ்வளவு பொறுமையாக அன்பாக சொல்லிக் கொடுத்தார்.
எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.வாழ்க அந்த நல்லவர்.
..... ......
இன்று டெல்லியில் குடியரசு விழாவில் நம் தமிழ் நாடு ஊர்தி வந்தது.விவசாயிகள் கோவணத்துடன் ஏர் ஓட்டுவது போல் வந்தனர்.யார் இப்போது கோவணம் கட்டுகின்றனர்???? யார் ஏர் ஓட்டுகின்றனர்?
எல்லோரும் ட்ரேக்டர் தான் பயன்படுத்துகின்றனர்.
யாருக்கு வந்தது இந்த concept ?
கேவலம்.
.... .....
இஸ்ரோவிற்கு கண்டனம்:
11.40 க்கு விண்ணில் ஏவப்படும் என்று சொல்லி விட்டு 11.37 க்கே ஆரம்பித்து விட்டனர்.இன்னும் ஒரு 2 நிமிடம் லேட்டாக மொட்டை மாடிக்கு சென்று இருந்தால் ..அவ்வளவுதான்.

2019/01/25

wonderful.

wonderful

பார்த்தேன்..பார்த்தேன்

அற்புதம்.
அபாரம்.
Fabulous
இன்னும் என்ன என்னவோ சொல்லலாம்.
இஸ்ரோ வாழ்க அங்கு பணி புரியும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ஒரு நொடி பயந்து விட்டோம்.கண்ணில் இருந்து மறைந்த உடன் failure ஆகி விட்டதோ என்ற வருத்தத்தில் உறைந்து விட்டோம்.
வெற்றி என்றவுடன் நிம்மதி ஆயிற்று.
கார்த்திக் அம்மா

2019/01/23

ஓய்வூதியம்

சிரிக்கிறதா அழுகிறதா
தெரியல.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஓய்வூதியம் கேட்கிறார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் கன்றாவியாக இருக்கிறது.
''58 வயதுக்கு அப்புறம் எங்கள் சாப்பாட்டிற்கு என்ன வழி ?நாங்கள் எப்படி பிழைப்பது ?
என்று ஒரு பெண் ஒரு டி .வி நேரலை நிகழ்ச்சியில் கேட்கிறார்.
ஒரே ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள் .
8 கோடி மக்கள் உள்ள தமிழ் நாட்டில் 10 லட்சம் பேர் மட்டும்தான் அரசு பணியாளர்கள்.
இவர்கள் மற்ற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரை பார்த்ததே இல்லையா ?
ஒரு ஸ்விக்கி நபர் எத்தனை தூரம் ஒரு நாளுக்கு பைக்கில் பறக்கிறார்.
கம்ப்யுட்டர் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கூட வேலை செய்கிறார்கள்.
இவர்களில்  யாருக்கு ஓய்வூதியம் இருக்கிறது?
இவர்களுக்கு 58 வருடம் என்ற பணி பாதுகாப்பு கூட கிடையாது.
இதே ஊழியர்கள் வேலையில் சேரும் போது ஓய்வூதியம் இல்லை என்ற நிபந்தனையை ஒத்துக் கொண்டுதானே சேர்ந்தார்கள்.
கொஞ்சம் மனசாட்சியுடன் ஒரே ஒரு நிமிடம் நீங்கள் செய்யும் வேலையின் அளவையும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரின் வேலை அளவையும் கம்பேர் செய்து பாருங்கள்.
ஊதிய உயர்வை தவிர உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் திட்டங்களை என்றாவது கேட்டு இருக்கிறீர்களா .
அப்படியே தப்பி தவறி அரசு ஏதாவது செமினார் நடத்தினால் அந்த வகுப்புகளில் சின்சியராக கலந்து கொண்டு ஏதாவது கற்றுக் கொள்கிறீர்களா ?
எப்போது பார்த்தாலும்
சம்பளம் போதவில்லை.
சம்பளம் போதவில்லை.
இதே பாட்டு.
ஒரே ஒரு நாள் CBSE வகுப்பிற்கு சென்று பாடம் நடத்தும் சவாலை ஏற்கிறீர்களா ?
வெறுப்புடன்

பஜ்ஜி +சொஜ்ஜி

கார்த்தி,செந்திலுக்கு ஒரு 8,10 வயது இருக்கும்.ஒரு நாள் நான் அவர்களிடம் ''நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணக் கூடாது.நான் பெண் பார்க்கப் போய் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடனும் ''என்றேன்.
அதற்கு அந்த செல்லங்கள் தந்த பதில்:
'' ;; அம்மா பஜ்ஜி சொஜ்ஜி கடையில் வாங்கி கொடுத்து விடுகிறோம் .நாங்கள் லவ் பண்றோம்மா please  please ''
நாங்கள் மூவர் கூட்டணி.
என் கணவருக்கு இந்த வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் அலர்ஜி .கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
என்னதான் IISC பெங்களூரில் படித்திருந்தாலும் பக்கா கிராமத்தான்.
அவரும் எங்களை கண்டு  கொள்ள மாட்டார்.
நாங்களும் எங்கள் ராஜ்ஜியத்தில்.
அது சரி ...
அது என்ன பஜ்ஜி+சொஜ்ஜி
பஜ்ஜி தெரியும்.
சொஜ்ஜி ???????
அது சூஜி ..ஹிந்தியில்
தமிழில் ரவை
கேசரி.
உடனடியாக செய்யக் கூடிய இனிப்பு என்பதால் கேசரி செய்தார்களோ என்னவோ.
சுஜி என்பதே சொஜ்ஜி என்று மாறியது.
அதே போல் ஒரு நாள் கார்த்தி செந்திலிடம் சொன்னான் :
''you are goodly bad ''
செந்திலின்உடனடி பதில் 
'' ''you are rightly wrong ''
இப்படி 
pun and fun ஆக சென்று கொண்டிருந்த வாழ்க்கை தலை கீழாக மாறி நான் ஊமையாக உலவும் கொடுமை.

2019/01/22

அந்த பொம்பிள

அந்த பொம்பிள :
அட கொடுமையே%%%%%%%%%%%
ஒருவர் தொலை காட்சியில் பேசுகிறார்.
இந்த போராட்ட குழுவிடம் பேச ஒரு பெண் அதிகாரியை (அதிகாரிகளில் பெண் என்ன ஆண்  என்ன ) நியமித்துள்ளது அரசு.
சில மாதங்களுக்கு பின் அந்த ''பெண் அதிகாரி '' என்ன காரணத்திற்காகவோ அவர் விடுவிக்கப் பட்டுள்ளார்.
அதை பற்றி டி .வி யில் பேசுபவர் சொல்கிறார்.
'' '' ''அந்த பொம்பிள ஓடி போயிடுச்சி '' 
அதே கதைதான் மறைந்த முதல்வர் ஜெ விற்கும்.
அவரும் அந்த பொம்பிளை ஆகினார். 
கொடுமை. 

2019/01/12

நால்வர்

Four Dogs lol  lolling :
அத்தனை சேனல்களும் ஒரு மணி நேர நிகழ்ச்சி விவாத மேடை நடத்துகின்றன. அதில் ஒருவராவது மற்றவரை பேச விடாமல் நாய் கத்து பேய் கத்து கத்துகிறார்.
இப்போது சன் டி .வி 12ம் தேதி 8 மணி நிகழ்ச்சி பார்த்து கொண்டிருக்கிறேன்.அதில் ஒருவர் மற்ற எவரையும் பேசவே விடவில்லை.
என் கேள்வி :
ஏன் சம்பந்தப் பட்டவரின் மைக்கை off செய்ய முடியாதா?
அந்த நெறியாளர் எவ்வளவோ பொறுமையாக சொல்கிறார்.
ஆனால் அந்த நபர் கேட்கவேயில்லை.
அவரின் மைக்கை நிறுத்த டெக்னிகள் முறை எதுவும் இல்லையா?

2019/01/10

1000 ரூபாய்

1000 ரூபாய் :
தேவையா ????????
எங்கள் குடியிருப்பில் அனைவரும் மிகவும் பணக்காரர்கள்.
யாருக்கும் 100000 கம்மி வருமானம் இல்லை. DOMESTIC HELP (வீட்டு வேலை செய்யும் பெண்மணி )போய் வரிசையில் நின்று 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்....
என்ன செய்தார்கள்?????????
ஆஹா ..இலவசமாக வந்துதானே.
அன்று இரவே பிட்ஸா வாங்கி சாப்பிட்டு 1000 ரூபாயை செலவு செய்து விட்டனர்.
அவர்களின் இரவு  உணவின் விலை 1000/.
தேவையா???????????
சரி .
ஏழை (அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.)1000 ரூபாய் the so called ''சுடி '' வாங்குவார்கள்..
மதுவுக்கு அடிமை போல் இலவசத்திற்கு அடிமையாக்கி அவர்களை போதை யிலேயே வைத்திருக்கும் கொடுமையை என்ன சொல்வது????

2019/01/08

10% இட ஒதுக்கீடு

10%   இட ஒதுக்கீடு
பிராமணர்கள் ,பட்டியல் இன  மக்கள் இருவரையும் ஒரே தட்டில்தான் வைத்திருந்தேன்.
சக மக்கள் ....என்ற தட்டில்.
ஆனால்
போன மாதம் என் வீட்டிற்கு ஒரு பிராமண பெண்மணி வந்திருந்தார்.
பேச்சின் நடுவே அவர் சொன்னார்  பாருங்கள் ஒரு விஷயம்.என் பக்கம் கையை நீட்டி :'' நாங்கள் 100 மார்க் ...நீங்கள் 20 மார்க் '' ''
அதாவது நான் ( அதாவது பிராமணர் அல்லாத நான் முட்டாள்.எனக்கு இட ஒதுக்கீடு  இருந்ததால்தான் படிப்பு,வேலை எல்லாம் )என்கிறாரே பார்க்கலாம்.
எப்படி இவர்களுக்கு இப்படி ஒரு superiority complex ??????????
நான் மட்டும் அல்ல .என்னுடன் படித்த பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்றே முன்னேறினர்.
இப்போது cut off மதிப்பெண்கள் பாருங்கள்.
FC 99% என்றால்
MBC 97%
SC 95 % என்ற அளவில் தான் இருக்கிறது.
என்னவோ ''அவர்கள் ''அனைவரும் 100% வாங்கி இடம் கிடைக்காதது போலவும்,SC மாணவர்கள் 20% மதிப்பெண் மட்டுமே வாங்கி கல்லூரியில் இடம் பெற்றார்கள் என்பது போலவும் காலம் காலமாக கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்து கேட்டால் நாங்கள் வசதி இல்லாதவர்கள் .வேலை பார்த்துக் கொண்டே கஷ்டப் பட்டு படிக்கிறோம்.
என் வீட்டிற்கு பேப்பர் போடும் பையன் +2 படிக்கிறான்.தேர்வு அன்றும் பேப்பர் போட்டு விட்டு ஓடிப் போய் தேர்வு எழுதுகிறான்.
நான் வேலை பார்த்த போது கல்வி கட்டணம் கட்டாத மாணவர்களை நெருக்கினால்  அடுத்த நாள் வர மாட்டான். எங்கே அவன் என்று சக மாணவர்களை கேட்டால் டைடல் பார்க்கிற்கு கண்ணாடி துடைக்க,அல்லது பெயிண்ட் அடிக்க போயிருக்கிறான் என்று பதில் வரும்.
எதற்காக
தேர்வு கட்டணம் கட்ட.....
என் மாணவன் ஒருவன் (எனக்கு வேலை கிடைத்து விட்டது '')என்றான்.அட உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்தார்கள் என்று கலாய் த்தேன்.
அங்கு வந்தவர்களிலேயே நாங்கள்தான் நன்கு பதில் சொன்னோம்.அடுத்து அவன் சொன்னதை சொன்னால் தற்பெருமை பேசுவதே என் பழக்கம் என்று கமெண்ட் வரும் என்பதால் அதை விட்டு விடுவோம்.
ஆனால் ஜாதி மதம் மீறி மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள் என்பதே உண்மை.
எங்களுக்கு மட்டும்தான் அறிவு என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.