About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/08/15

NEET

 நீட்டினால்தான் தற்கொலைகளா ??????????

நாங்கள் படித்த காலத்தில் மொத்தம் 875 m .b .b .s  ஸீட்டுகள்தான்.என்னையும் டாக்டர்தான் என்ற எண்ணத்தில் ஊற  வைத்து வளர்த்தார்கள்.

அப்போது எண்ட்ரன்ஸ் தேர்வு இல்லை.

என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்ற என் நண்பி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தால்.பணமும் கட்சியும் விளையாடியது.

அப்போது நீட் தேர்வு இருந்திருந்தால் நான் இன்று டாக்டராகத்தான் இருந்திருப்பேன்.

கார்த்திக்கிற்கு அண்ணா பல்கலை கிண்டியில் ஸீட் கிடைத்தற்கு எண்ட்ரன்ஸ்தான் காரணம்.

+2 மதிப்பெண் மட்டும் வைத்து ஸீட் தருவதில் ஒருபெரிய அபாயம் உண்டு.பல ஆசிரியர்களின் கோர முகம்.

பிராக்டிகல் மதிப்பெண் குறைப்பது.

ஒரு 4 மதிப்பெண் குறைத்தால் போதும். மாணவனின் கட் ஆப் படுபயங்கரமாக குறைந்து விடும்.

இன்றும் பொறியியல் கல்லூரிகளில் இது நடக்கிறது.

கிராமத்து மாணவர்கள் என்ற அலம்பல் ...கிராமத்து மாணவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் படிப்பதாக ஒரு கூவல்.

நிலத்தை விற்றாவது '' ''பெரிய பள்ளிகளில்'' ''தான் படிக்க வைக்கிறார்கள் கிராமத்தினர்.

அடுத்த கேள்வி.?

அப்படி உலக மகா பேர் பெற்ற  பள்ளிகளில் படிக்கும் எத்தனை பேர் I .A .S ,,I .P .S ஆகி விட்டார்கள்? 

சரி.இதை எல்லாம் படிக்காதவர்கள் வாழ்வில் வெற்றி பெறவே இல்லையா?

டாக்டர்,கலெக்டர் ஆனால்தான் அறிவாளியா?

8ம் க்ளாஸ் படித்தவர்கள் எத்தனையோ பேர் எத்தனை சாதனை புரிந்திருக்கிறார்கள் தெரியுமா?

மாநில முதல் மதிப்பெண் பெற்ற எத்தனையோ பேர் சாதாரண வேலையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வில் வெற்றி பெற எத்தனையோ துறைகள் இருக்கின்றன.

இந்த மருத்துவ மாயையில் இருந்து விடுபடுங்கள்.

தற்கொலையை தவிருங்கள்.

பெற்றோர்களே பிள்ளைகளை வாழ விடுங்கள்

2023/08/12

JAATHI ....CASTE and Students

 ஜா''தீ ''

நாங்குநேரி என்ற ஊரில் பள்ளி மாணவர்கள் தங்களுடன் படித்த மாணவனை வெட்டிய நிகழ்ச்சி அதிர்சசி அளிக்கிறது என்று எல்லோரும் புலம்புகின்றனர்.

எனக்கு இதில் அதிர்ச்சி இல்லை.

சினிமா படங்களில் ''ஜாதி''.கட்சி எல்லாம் ஜாதியின் அடிப்படையில்தான்.ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி.

ஜாதி தலைவர்கள் தன் இன  மாணவர்களுக்கு ஒரு ''நீட்'' பயிற்சி தருகிறார்களா?

ஒரு ஐ.ஏ .எஸ் பயிற்சி கொடுக்கிறார்களா?ஒரு மீட்டிங் போட்டு குடி பழக்கத்தை நிறுத்த சொல்கிறார்களா?

எதுவும் இல்லை.

ஒரு போராட்டத்திற்கு பஸ்களை நொறுக்க,ரயில்களை கவிழ்க்க ,சாலை மறியல் செய்ய மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சினிமா ...

அதற்கடுத்து இந்த சினிமாக்கள். 1820ல் நம் ஜாதியை இப்படி கொடுமை படுத்தினர் என்று எப்போதோ நடந்த செத்துப் போன விஷயங்களை மைய படுத்தி படம் எடுத்து இப்போது இல்லாத நெருப்பை பற்ற வைக்கிறார்கள்.

சமீபத்தில் வந்த பரபரப்பாக பேசப் பட்ட படம் வேறு விதமான காட்டு தீயை பற்ற வைத்தது.' நாங்கள் ஆண்ட ஜாதி'' என்று மற்ற எல்லா ஜாதிகளும் கொண்டாட ஆரம்பித்தன.

அதன் விளைவுதான் இந்த வெட்டு குத்து.

கடசிகளும் டைரக்டர்களும் தங்கள் சுயநலத்திற்கு,தங்கள் சுய நலத்திற்காக செயல்படுத்துவதற்கு நிறுத்துங்கள்.

இளைஞர்களை நல்வழிப் படுத்துங்கள்.

அவர்களை படிக்க வையுங்கள்.

அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.

சில தொழிற்சாலைகளை உருவாக்கி கொடுங்கள்.வாழ விடுங்கள்.