About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/07/31

அன்பு ஜீவனுக்கு இன்று பிறந்த நாள். வலைப் பதிவில் அறிமுகமாகி இன்று உயிர் நண்பர்,உயர்ந்த அன்பர் என்று நட்பும் உறவும் வலுப் பெற்றுள்ளது.அவரின் வலை http ://jeevans blogspot .com .
நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
அன்புடனும் நெஞ்சம் நிறைய வாழ்த்துகளுடனும்
கார்த்திக்+செந்தில்+அன்பு அம்மா

2014/07/28

ஆடி மாதம் :
ஆடி மாதம் சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கும் மாதம்.
மழை பெய்து புதுப் புனல் (நீர் ) வரும் மாதம்.
உழவர்கள், விவசாயிகள் நாற்று நடும்  மாதம்.
மழை மாதம் என்பதாலும், விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம் என்பதாலும்தான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப் பட்டன.அந்த காலத்தில் அரிசி முதல் அனைத்து பொருட்களும் உரலில் குத்தி ,வீட்டிலேயே தயாரிக்க வேண்டும். குறைந்தது 15 நாட்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும். வேறு ஊர்களில் இருந்து வர வேண்டியவர்கள் மழையில் நடந்து அல்லது மாட்டு வண்டியில்தான் வர வேண்டும். இத்தனை சிரமங்களால்தான் இந்த மாதத்தில் திருமணம் வேண்டாம் என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள்.
புது தண்ணீர் நோய்கள் கொண்டு வரும் என்பதால், வேப்பிலை மற்றும் மஞ்சள் தண்ணீர் (சிறந்த நோய் தடுக்கும் ஆற்றல் உள்ளவை ) ஊற்றுதல் என்ற பழக்கத்தையும் கொண்டு வந்தனர்.
இது  அறிவியல் என்று சொன்னால் மக்கள் பின்பற்ற மாட்டார்கள். அதனால் மாரி அம்மன் என்ற தெய்வத்தை உருவாக்கினார்கள்.
நான் சிறு வயதாக இருக்கும்போது வயலில் வேலை செய்பவர்களுக்கு ஒரு  பிளாஸ்டிக் பக்கெட் நிறைய சாதம், ஒரு தூக்கு நிறைய சாம்பார் என வீட்டிலிருந்து கொண்டு சென்று வேலை செய்யும் அனைவருக்கும் உணவளிப்போம்.சற்று படித்த குடும்பம் என்பதால் அரிசி சாதம்....
மற்ற வயல்களில் வேலை செய்வோருக்கு ராகி களி ( அதை கரைத்தால் கூழ்  ) தான் தருவர். வேலை செய்வோர் வீட்டில் சமைக்க நேரம் + வசதி இல்லாததால் இந்த உணவை மகிழ்ச்சியுடன் உண்ணுவர்.
அந்த வழக்கம்தான் கூழ் ஊற்றும் சடங்காக மாறி விட்டது.எல்லாம் ஆடம்பரமான, அர்த்தத்தை புரிந்து கொள்ளாத சம்பிரதாயமாக மாறி விட்டது. இந்த மாரியம்மன், காளியம்மன் எல்லாம் lower gods என்று மேல்குடி ஒதுக்கி வைத்ததும் ஒரு காரணம்.
*******
நேற்று விஜய் டி .வி யில் சினிமா விருது நிகழ்ச்சியில் SRK யின் பேச்சு சிறப்பாக இருந்தது.அவருடைய ஆங்கிலம் மிக சரியாக இருக்கும்.நானும் ஒரு ஆங்கில ஆசிரியைதான்.நான் எந்த தவறுகளை எல்லாம் செய்ய கூடாது என்று என் மாணவர்களிடம் சொல்வேனோ அந்த தவறுகள் இல்லாமல் பேசுவார்.சாதரணமாக senior most  என்றுதான் நிறைய பேர் சொல்வர்.ஆனால்  most senior என்பதுதான் சரி.
அதே போல் postponed  என்பதற்கு advanced என்பதுதான் சரியான எதிர்பதம் . நிறைய பேர் preponed  என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.
எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில ஆசிரியை எப்போதும் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத onomatopoeic +high  sounding வார்த்தைகளை பயன்படுத்துவார்.பார்ப்பவர்கள் என்ன ஒரு அருமையான ஆங்கிலம் என்று பாராட்டுவர். எனக்குதான் தெரியும்.எத்தனை தப்பான ஆங்கிலம் என்று.நான் ஒன்றும் பெரிய அப்பா டக்கர் இல்லை. ஆனால் எனக்கே எல்லாம் தெரியும் என்று வேஷம் போட  மாட்டேன்.போகட்டும் என் கார்த்திக் மகனின் ஆங்கிலம் அவ்வளவு அருமையாக இருக்கும்.அவன் பேசும்போது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
எல்லாம் போய்விட்டது.வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது.
கார்த்திக் அம்மா

2014/07/18

மஹாபாரதம் : Tit Bits :
பாஞ்சாலி :
ஐவருக்கும் பெண்டாட்டியாம்  அழியாத பத்தினியாம்: விளக்கம் :
பாஞ்சாலிஒரு சாதாரணப் பெண் அல்லல்.தெய்வப் பிறவி அல்லது அசாதாரணப் பெண்.
எனவே அவள் ஒரு மானுடனுடன் (மனிதனுடன்) உடலுறவு கொள்வதற்கு அப்பாற்பட்டவள்.
எனவே ஐவரை மணந்தாலும் ,  யாருடனும் உடலுறவு  கொள்ளாததாலும் யாருக்கும் மனதாலும்  களங்கப் படாததாலும் அவள் அழியாத ....( '' ''.கன்னித் தன்மை .'' '' )....அழியாத பத்தினியாம்.
 இதுதான் உண்மை.
அதனால்தான் பாஞ்சாலி, என்கிற திரௌபதிக்கு நிறைய இடங்களில் கோவில் உண்டு. திருவிழா உண்டு.
துரியோதனன் :
எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் துரியோதணனை ஏன் கெட்டவனாக சித்தரிக்கிறார்கள் என்பதுதான்.
திருதராஷ்டிரன் குருடன் என்பதால் அவர் அரசராக செயல்பட வேண்டாம்.சரி. ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் துரியோதனன்  தகுதியுடையவன்தானே.முறைப் படி அவன்தானே அரசனாக வேண்டும்.
இந்த உரிமையை அவன் கேட்டதில் என்ன தவறு?
தர்மர் சொர்கத்திற்கு சென்ற போது   தனக்கு முன்  துரியோதனன்அங்கு இருப்பதை கண்டு வியந்து போகிறான் என்கிறது காவியம்.
சரிதானே.Poetic Justice ..
கார்த்திக்  அம்மா 

2014/07/17

புன்னகை அரசன்:
நடிகர் பிரபு அவர்களின் சிரிப்பு சிறப்பாக இருக்கிறது.அவருக்கு ஏன் புன்னகை அரசர் என்று பட்டம் கொடுக்கவில்லை?
தனது தந்தையை விடவும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
************
ஐயோ ஐயோ ஏதோ
நானும் சினிமா பத்தி ஏதாவது பதிவு போடலாம், போட்டு ஜனநாயக  நீரோடையில் இணையலாம் என்று பார்த்தால்,
இப்படி கூட்டமாக ஒன்று சேர்ந்து அடிக்க வருவீர்களா ?
escape .
கார்த்திக் அம்மா

2014/07/14

Super Star யார்?
எனக்கு சினிமா அறிவு மிகவும் குறைவு.2008 வரை நான் பார்த்த சினிமாக்கள் ஒரு 50 இருக்கலாம். நம்ப மாட்டீர்கள்.ஆனால் உண்மை அதுதான்.நேரம் இருந்ததில்லை.ஆர்வமும் இருந்ததில்லை. பெரிய குடும்பத்தில் நிறைய பொறுப்புகளுடன் இருந்ததால் சினிமா இரண்டாம் பட்சமாகியது.
நிறைய படிப்பேன்.எல்லா எழுத்தாளர்களையும் படிப்பேன்.
இப்போது இந்த கதை எதற்கு?
ரஜினி என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் பிடிக்கும்.
இப்போது அவர் படங்களை பார்க்கும் போது கார்த்தியின் தேர்வு சரி என்று உறுதியாகிறது.( கார்த்திக்கிற்கு பிடிக்கும் என்றால் ..எனக்கு..? அவரின் சிகரெட் ,குடி பழக்கம் அவர் மேல் எனக்கு ஒரு சிறு கசப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் அல்லாமல் இன்னும் சில காரணங்கள்  சொல்லலாம்.  ஆனால் வேண்டாம்.)
இப்போது பிரச்சினை என்னவென்றால் சில நடிகர்கள் தாங்கள்தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்வதுதான்.
ஒருவர் ஒரு வாரப் பத்திரிகையை குத்தகை எடுக்கிறார்.
இன்னொருவர் செய்ததுதான் amazing .ஒரு ஆங்கில தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இரு முறை ஒளிபரப்பி கொடுமை படுத்தியதுதான்
இவ்வளவு வெறியா?
இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா?
மக்கள் சொல்ல வேண்டும்.
நமக்கு நாமே பட்டம் சூட்டிக் கொள்ளக் கூடாது.
 சினிமா உலகில் போட்டி நல்லதுதான்.அது நடிப்பில் மட்டுமே இருக்கட்டும்.

2014/07/13

என்ன ஆயிற்று சென்னைக்கு? ஒரே சோகமயம்.
ஒரு வாரம் மவுலிவாக்கம்.
இந்த வாரம் S B I கட்டிடம்.
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த கட்டிடம்.
முறையான பராமரிப்பு வேண்டும்.இது என் வேலையல்ல, இது என் பொறுப்பு அல்ல என்று எல்லோரும் தட்டிக் கழிப்பது மிகவும் தவறு.
சுயநலமும் பணத்தாசையும் மனிதர்களை ஆட்டி வைக்கிறது. வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கையாகிறது.ஆடம்பரத்தின் மேல் வெறி அதிகமாகிறது.
அன்பு , பாசம் அர்த்தமற்ற சொற்களாகின்றன . லட்சம் ,இழப்பீடு என்ற வார்த்தைகளில் உயிர்கள், உறவுகள் மறக்கப்படுகின்றன. யாவும் அரசியலாக்கப் படுகிறது.
நீ 5 லட்சம் தருகிறாயா,  நான் 7 லட்சம் தருகிறேன் பார் .
இதுதான் கலிகாலமா?
கார்த்திக் அம்மா