About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2022/10/26

Advertisements

 விளம்பரங்கள்:

எனக்கு மிக மிக பிடித்த விளம்பரங்கள் :

BRU :and GOOD NIGHT :

இரண்டுமே குழந்தையை மைய படுத்திய விளம்பரம்.

BRU 

'' தூங்கறான் ''

இது ஒரு அற்புதமான விஷயம்.நிறைய பேர் வீட்டில் நடக்கும் விஷயம்.குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் எந்த சத்தமோ , செயலோ இருக்க கூடாது என்பதில் கவனம் அதிகம். 

அதுவும் அந்த காலத்தில் ஹாலில்தான் குழந்தையின் தூளி இருக்கும்.எல்லோரும் அந்த தூளியை ஆட்டி விட்டு செல்வர்.குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வர்.

இந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி இருவரின் அக்கறை 'wonderful '.

செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருந்தது.அவர்களின் உடை, பேசசு எல்லாமே 'decent '.

அடுத்தது இன்னும் அருமை.

GOODNIGHT கொசு விரட்டி.

அந்த சின்ன மகாராணியை கன்னத்தில் கிள்ள வேண்டும் போல் துடிப்பு.

இந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி உடை ,செயல் அனைத்தும் அவ்வளவு நேர்த்தி.

ஒரு நைட்டியோ ,ஷார்ட்ஸ் அப்படி இல்லாமல் பார்க்கவே நிறைவாக இருந்தது.

அடுத்து,Hamam சோப்பு .ஒரு பொருள் கொண்டு வருவார் டெலிவரி நபர்.அந்த சிறுமி அவருக்கும் சோப் கொடுக்கும்.கோவிட் காலத்தில் வந்த விளம்பரம்.அந்த மனிதாபிமானம் அந்த பெண் ,அம்மா எல்லோரும் சிறப்பு.

இந்த விளம்பர டைரக்ட்டர்களுக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கு பிடிக்கவே பிடிக்காத விளம்பரங்கள்.இந்த உள்ளாடை விளம்பரங்கள்.

காலங் காலையில்பக்தி பாடல் பாடும் போது ஆரம்பித்து இரவிற்குள் அனைத்து சேனல்களிலும் சேர்த்து ஒரு 100 முறையாவது ஒளி பரப்பாகிறது.

எத்தனை ஆண்கள் அவஸ்தை படுகிறார்கள்.

குடும்பமாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

அனைவருக்கும் தர்ம சங்கடம் .இப்படியான விளம்பரம் அவசியமா???????????

இதற்கெல்லாம் சென்சார் கிடையாதா?????????

எல்லா சேனல்களுக்கும்  வேண்டுகோள்.

உணர்சசிகளை தூண்டுவது போன்ற இந்த மாதிரி விளம்பரங்களை நிறுத்துங்கள்.


 


2022/10/14

love.love.murder

 காதலும் கொலையும்.

இன்று படபடக்கும் செய்தி.போலீஸ்குடியிருப்பில் 20 வயது பெண்ணும் 23 வயது பையனும் காதலித்துள்ளனர்.

''காதலித்தால் விட்டு தொலையுங்களேன் பெற்றோர்களே''...

( எனக்கு காதல் சுத்தமாக பிடிக்காது. 6 வருட கல்லூரி படிப்பில் காதல் என்ற வார்த்தை வரவே இல்லை.இத்தனைக்கும் என் அண்ணா படித்த மெடிக்கல் கல்லூரியில் அண்ணாவின் நண்பர்கள் பலருக்கு என்னை பிடிக்கும்.மனதுக்குள் காதல் தோன்றி இருக்கலாம்.ஆனால் ''மம்முட்டி sister '' என்ற ஒரே வார்த்தையில் பண்பாடு மேலோங்கியது.).

இப்போது என்னவோ 2 வயது, 3 வயது எல்லாம் காதல்தான்.

ஒரு சினிமாவில் பிறந்த கைக்குழந்தைகள் இரண்டு கையை பிடித்து கொள்கிறதாம்.அப்போதே காதல் வந்து விட்டதாம்.

இந்த கொடுமையை எல்லாம் பார்க்கும் இந்த கால பைத்தியங்கள் காதலிக்கா விட்டால் நாடு கடத்தி விடுவார்கள் என்ற ரேஞ்சுக்கு காதலிப்பதை மட்டுமே செய்கிறார்கள்.

அதிலும் பெண்கள்??????????

சொல்லவே வேண்டாம்.

தங்கள் வசதிக்கு ஒரு அடிமை கிடைத்தான் என்ற கணக்கில் எவனையாவது time pass காதல் செய்வது. பெற்றோரும் கண்டு கொள்ளாமல் விடுவது.

ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கல்யாணம் செய்வது என்ற முடிவு எடுக்கிறார்கள்.

காதலனுக்கு கோபமும் வெறியும் தலைக்கு ஏறுகிறது .

கொலை, தற்கொலை என கதை முடிகிறது.

நேற்று அந்த காதலன் அந்த பெண்ணை ரயிலின் முன் தள்ளி விட்டான்.பெண் காலி.

பெண்ணின் அப்பா மாரடைப்பில் காலி. பெண்ணின் அம்மா கேன்சர் நோயாளி.

அந்த குடும்பம் அவுட்.

பையனின் குடும்பம் கோர்ட் ,கேஸ் என்று நொடிந்து போய் விடும்.

எங்க இருந்து இவர்களுக்கு காதல் வருகிறது?????

மேற்கொண்டு ஏதாவது படிக்கலாம்.ஒரு newspaper படிக்கலாம்.

போட்டி தேர்வு எழுதலாம்.

எந்த குறிக்கோளும் இல்லை.

அப்பா அம்மா எதுவும் சொல்ல கூடாது.

கலிகாலம்.

2022/10/07

 சைவமா.வைணவமா.இந்துவா.இப்போது ஏன்  இந்த பிரச்சினை????.ராஜ சோழன் என்றால் அல்லது 'ஜ' சொல்லக் கூடாது.ரா ச ' என்று தான் சொல்ல வேண்டும் என்ற சண்டை எதற்கு இப்போது.இன்றைய பிரச்சினைகள் 1000 இருக்கிறது.என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.

'சுந்தர சோழன் அரண்மனையின் குந்தவை தேவி'என்று தான் என்னை சொல்வார்கள். என் தாத்தா 'நாம் சோழ வம்சம்'என்று சொல்லி சொல்லியே என்னை வளர்த்தார்.துர்கைக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது குருக்கள்சொன்னார்' அம்மா நீ  போன பிறவியில் ஒரு அரசியாக இருந்திருக்க வேண்டும்.ஏனென்றால் துர்கைக்கு கோவில் கட்ட ஒரு அரசியால்தான் முடியும்.போன பிறவியில் விடுபட்டதை இப்போது செய்கிறாய்'என்றார்.

இருக்கட்டும்.

நான் சோழ குலத்தில் பிறந்து பல்லவ குலத்தில் வாழ்க்கை பட்டவலாக இருக்கட்டும்.அந்த பழம் பெருமை இன்றைய என் வாழ்விற்கு எந்த வகையில் உதவுகிறது.இன்று நான் 'கலா கார்த்திக்' அவ்வளவுதான்.

நாளை என்ன நடக்கும்.எந்த pandamic  வரும்.எந்த சுனாமி வரும்.சைனா எப்படி தாக்கி எப்படி அழிக்கும்be it India or Bharath .இருக்குமா.உலக வரைபடத்தில் கானாமலே போய் விடுமா?

எதுவும் தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கையில் இந்த சண்டைகள்  அவசியமா.

துர்க்கைக்கு 

2022/10/04

pooja

 ஆயுத பூஜையும் ,சரஸ்வதி பூஜையும்.

முதலில் இந்த பண்டிகை எதற்கு?அந்த காலத்தில் ஓலை சுவடிகள்.

ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும்.

கரையான் அரிக்கலாம் .ஈரம் பட்டு கெட்டு  போகலாம்.அதனால் அவற்றை சரி செய்து ,புதுப்பித்து பயன்படுத்தினர்.

இதை அப்படியே சொன்னால் 'வந்துட்டான் அறிவாளி' என்று கடந்து போய்விடுவார்.

அதையே ஒரு தெய்வம், அதற்கு செய்ய வேண்டிய பூஜை என்று சொன்னால் பயந்து சரியாக செய்வர் .(பயம்தான்.பக்தி எங்கே என்று தேட வேண்டும் ).

அதனால் சரஸ்வதி பூஜை.

அப்படியானால் ஆயுத பூஜை?????

அக்கால அரசர்கள் போருக்கு சென்று வந்த பின் படைக்கலங்கள் (கத்தி,ஈட்டி,வாள் ,கேடயம் )போன்ற கருவிகளை சரி செய்ய என்று ஒரு வாரம் ஒதுக்கி அவற்றை சரி செய்து அதற்கு ஒரு பூஜை என்று வைத்தனர்..எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் சரஸ்வதி பூஜை அஷ்டமியிலும் ,ஆயுத பூஜை நவமியிலும் வரும்.சுவடிகள் குறைவு என்பதால் 8 நாட்களில் வேலை முடிந்து விடும்.ஆயுதங்கள் அதிகம் என்பதால் 9 நாட்கள்.10ம் நாளாகிய தசமியில் நிறைவு பூஜை.

ஆனால் இப்போது இரண்டு பூஜையும் ஒரே நாளில்.

கேட்டால் அதற்கு ஒரு புது கதை சொல்கிறார்கள்.ஒரு அரக்கனுடன் காளி தேவி 9  .நாட்கள் போர் செய்து 10ம் நாள் வெற்றி விழா கொண்டாடுகிறாள் .தேவி மஹாத்மியம் என்ற புத்தகம் இந்த போரை பற்றியது.தயவு செய்து யாரும் படித்து விடாதீர்கள்.ஒரே 'A 'தான்.அதுவும் அல்லாமல் ஒரு அரக்கனை கொல்ல ஒரு சாமிக்கு 10 நாட்கள் எதற்கு????????????

கதை....கதை.

 I BEG THE SO CALLED 'சமய பிரச்சாரகர்கள் 'TO STOP TELLING SUCH UTTER NONSENSE STORIES '

போதும்.மக்களின் அறியாமையில் குளிர் காய்ந்தது.இப்போது எந்த கருவியையும் ..அது பைக்கோ , காரோ ..மிக்சியோ என எதுவாக இருந்தாலும் உடனடியாக சரி செய்ய முடியும்.SERVICE CENTERS இருக்கின்றன.

அப்படி இருக்கும்போது இந்த பூஜைகள் ஒரு சம்பிரதாயமாக ..சடங்காகவே செய்ய   படுகிறது.

நான் எப்போதும் சொல்வேன்.

'' '' I AM ''SCIENTIFICALLY RELIGIOUS ''..

எந்த ஒரு பண்டிகையும் மூட நம்பிக்கையில் உருவாக்க படவில்லை.WHATS THE SCIENCE BEHIND IT என்பதை இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள் 

2022/10/02

SNAKE in AC

 A C யில் பாம்பு இருந்தது என்று செய்திகளில் வந்தது.எப்படி வரும்?

வர முடியும் என்று கேள்வி இருந்து கொண்டே இருந்தது.

Finally I guessed the answer .

I may be right or wrong.

one day i saw a bird building a nest in the outer unit of the AC.

It was a very good place.the gap between the wall and the ac unit was comfortable enough .It safeguarded the birds from sunlight,rain and wind.

OK.Let them build.But the problem started when the birds brought tiny insects to the nest to feed the chicks.All type of insects(and that might have included a snake puppy.And it could have escaped into the unit and stayed safe there).

ஆம். அப்படியாகத்தானே இந்த பாம்பு குட்டி உள்ளே போயிருக்க வேண்டும் .அங்கேயே வளர்ந்திருக்க வேண்டும்.

so my suggestion is that, remove any nest not bothering about being a sin or curse .

ஆம் .உடனடியாக கூட்டை எடுத்து விடுங்கள் .பாவம் ,சாபம் என்றெல்லாம் இல்லை.அப்படி பார்த்தால் அந்த பறவைகள் அந்த பூசசிகளை கொல்வதும் பாவம்தானே .