About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2022/10/07

 சைவமா.வைணவமா.இந்துவா.இப்போது ஏன்  இந்த பிரச்சினை????.ராஜ சோழன் என்றால் அல்லது 'ஜ' சொல்லக் கூடாது.ரா ச ' என்று தான் சொல்ல வேண்டும் என்ற சண்டை எதற்கு இப்போது.இன்றைய பிரச்சினைகள் 1000 இருக்கிறது.என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.

'சுந்தர சோழன் அரண்மனையின் குந்தவை தேவி'என்று தான் என்னை சொல்வார்கள். என் தாத்தா 'நாம் சோழ வம்சம்'என்று சொல்லி சொல்லியே என்னை வளர்த்தார்.துர்கைக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது குருக்கள்சொன்னார்' அம்மா நீ  போன பிறவியில் ஒரு அரசியாக இருந்திருக்க வேண்டும்.ஏனென்றால் துர்கைக்கு கோவில் கட்ட ஒரு அரசியால்தான் முடியும்.போன பிறவியில் விடுபட்டதை இப்போது செய்கிறாய்'என்றார்.

இருக்கட்டும்.

நான் சோழ குலத்தில் பிறந்து பல்லவ குலத்தில் வாழ்க்கை பட்டவலாக இருக்கட்டும்.அந்த பழம் பெருமை இன்றைய என் வாழ்விற்கு எந்த வகையில் உதவுகிறது.இன்று நான் 'கலா கார்த்திக்' அவ்வளவுதான்.

நாளை என்ன நடக்கும்.எந்த pandamic  வரும்.எந்த சுனாமி வரும்.சைனா எப்படி தாக்கி எப்படி அழிக்கும்be it India or Bharath .இருக்குமா.உலக வரைபடத்தில் கானாமலே போய் விடுமா?

எதுவும் தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கையில் இந்த சண்டைகள்  அவசியமா.

துர்க்கைக்கு 

No comments: