About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/10/25

இது செய்தி.
// //  இந்த நிலையில் தற்போது அந்தக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, கலா, நீலா, மாயா என்று முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இதையடுத்து அம்மா பெயர் வைத்த சிங்கக் குட்டிகள் என்று பலரும் அந்த சிங்கக் குட்டிகளை ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்துச் செல்கின்றனரா//  //..ஹ ஹ ,
கலா [கலா கார்த்திக் ]என்றாலே சிங்கம்தானே.
வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் பிறந்த சிங்கக் குட்டிகள் மூன்றிற்கு முதல்வர் வைத்த பெயர்.
கார்த்தி எப்போதும் சொல்வான்.  ''நான் சேலத்து சிங்கம் ''.என்று.
முதல்வருக்கு நன்றி.
கார்த்திக் அம்மா


சின்மயி பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.சத்தியம் தொலைக் காட்சியில் மனுஷ்யபுத்திரன்  பேசுகிறார்.
HATS off மனுஷ்யபுத்திரன்.
அவர் கேட்கிறார்.சின்மயி நேரடியாக I .G யை பார்த்து புகார் கொடுக்கிறார். மற்றவர்கள் அப்படி செய்ய  முடியுமா ? என்று ....எனக்கும் இது போல் ஆபாச s .m .s ,தொலைபேசி தொல்லைகள் வந்தன. போலீசில் புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.எனக்குதான் அரைமணி நேர உபதேசம் .
அதே போல் என் கைப்பை [purse ]திருடப்பட்டது. police station சென்றேன்.புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.
சாதாரண  police station லியே இப்படி என்னை நடத்தினார்கள் என்றால், I .G ..ha ,ha நினைத்துப் பார்க்க கூட முடியாது.
ஜாதி, செல்வாக்கு என்று நான் சொல்ல வரவில்லை.ஏனென்றால்  ''பயம்தான்.''
கார்த்திக் அம்மா 

2012/10/18

T.V Bits
தருமி ஐய்யா சொன்னாரே  என்று சரவணன்  மீனாட்சி ஒரு 10 நிமிடம் பார்த்தேன். என்னப்பா ,அந்த பெண் கணவனை அத்தனை 'டா ' போடுவதும் சரவணன் 100  '' டி '' போடுவதும், அவன் தன அப்பாவை அது இது,யோவ் என்று சொல்வதும்,
தாங்கவில்லை.
*ஆச்சி  சாம்பார் பொடி :
எங்கிருந்து பிடித்தார்கள் சிநேகாவிற்கு  மகளாக வரும் அந்த குட்டிப் பெண்ணை? ஜோர். அப்படியே  சினேகா ஜாடை. தன்  தந்தை வந்தவுடன்  அம்மாவின் சாம்பார் மணத்தை   பற்றி அவர் கேட்பார் என ஆசையோடு ஓடி வருவதும் ,அவர் அதைப் பற்றி கேட்காமல் போனவுடன், முகத்தில் தெரியும் அந்த ஏமாற்றம் ...இயல்பாக உள்ளது. ஏதோ  ஒரு குழந்தை ஏதோ  ஒரு சினிமாவில் நடித்ததைப் பற்றி மூச்சு  விடாமல் பாராட்டியவர்கள் ,இந்த பெண்ணையும் சிறிது பாராட்டலாமே.
*சொல்வதெல்லாம் உண்மை:
        இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்கள் 90% கள்ள உறவு.திருமணத்திற்கு முன்பே உறவு என  ...இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த சில இளைஞர்கள் ''திருமணம் செய்யவே  பயமாயிருக்கிறது '' என்றனர்.நேற்று நிகழ்ச்சியில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பெண் 7 மாதம் வரை தான் கருவுர்ரிருப்பதே தனக்கு தெரியவில்லை என்று சாதித்தார் .அந்த பெண்ணிற்கு ஆதரவாக எத்தனை பேர்.
இப்படியே போனால், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கட்டாயம்  என்று  ஆகி விடும் போல இருக்கிறது.Something  undigestable
* பழைய பாடல்கள் நிகழ்ச்சியில் K .R விஜயா பாடும் 'அத்தை மடி மெத்தையடி '' பாட்டும்,
கண்ணன் வருவான் பாட்டும் பார்த்த போது 1981+1982ல் ல் இருந்த என்னை நானே பார்த்துக் கொண்ட மாதிரி இருந்தது.அந்த hairstyle ,மாட்டல் ,பூ ,அதே design  புடவை என [ நானும் அப்படி ஒல்லியாக இருந்தேன் ],கார்த்தியை எடுத்துக் கொண்டு இப்படித்தான் ஆடல் ,பாடல் என்று சிறகடித்துப் பறந்தேன்.
அதே போல் ஜெமினி +விஜயா குழந்தையை குளிக்க வைக்கும் காட்சியும்.அப்போது நானும் என் கணவரும் கார்த்தியும் என பெரயவர்கள் உடன் இல்லாத தனிக்குடித்தனம்.நான் கார்த்தியை மடியில் வைத்துக் கொள்ள அவன் தந்தை தண்ணீர்  ஊற்ற என அவனை குளிக்க வைப்பதே ஒரு பெரிய இன்பமான வைபவம்.

















அந்த பாடல்கள் எனக்கு குளுக்கோஸ் .
கார்த்திக்+அம்மா 

2012/10/14

தி English  and த  English
நான்  டீச்சர் ஆக இருந்தபோதே  இந்த discussion  வந்தது. ஏன்  The  U .S .A  and why  not the India .
Here  we  to consider  some grammatical  rules . the word THE is  pronounced  both  as  thi and as  tha .When the word that follows the article 'the ' starts with a,e,i,o,u sounds [take note , its the sound and not the letters ] then the should be pronounced as''  thi  ' 'and if it is followed by other words it should be pronounced as'' tha ''.
*The second rule is :if the thing referred to is 'unique ' ..only one ..then the article 'the ' is added before the word even if the word starts with other than a,e,i,o,u sounds. For example,  'the sun '  the moon''...
     I and my students  would get into an inter action and I would vehemently, passionately  and PATRIOTICALLY say that it should be THE India ,  because it is unique,special to us and the greatest.
Suddenly one student came with the question ''why do they advertise as 'The Chennai  Silks ?'',
   My reply was that ''they might (the chennai silks ) owners , knowingly or unknowingly might have tried to assure the customers that their shop is unique.
    Anyhow ,in the film English, Vinglish actor SriDevi asks why not the [tha ]India.As for as knowledge goes it should be 'thi ' India.
*If at all any student by mistake had written india [in small letters , lower case ] instead of capital 'I' i would give him a 0/100.And that student would realize his mistake.

*a,b,c....z  are letters of the alphabet  and it should not be said as 'alphabets' all the 26 letters constitute English alphabet.
only if the letters of different languages are referred to then we can say alphebets.
Grammar என்பது மிகவும்  இனிமையான பாடம். நடத்த  நடத்த நிறைய  விஷயங்கள்  சொல்லிக் கொண்டே போகலாம். எனக்கு மனப்பாடம் செய்வதே  பிடிக்காத  விஷயம். வருட முடிவில் என் மாணவர்களும்  என் வழிக்கு வந்து விடுவார்கள்.
இன்னும் பல அனுபவங்கள் அடுத்த பதிவில்.for  eg  debate
இதுவே  மாற்றான் பட அளவிற்கு நீளமாக இருக்கிறது ,தாங்கவில்லை ,போதும் ,bore  என்கிறிர்களா ,
விடுவதாயில்லை   நான்
அன்புடன்,
கார்த்திக்+அம்மா 

2012/10/09

ahaaaa,
I am BELOW  POVERTY  LINE
so long i have been thinking that i belonged to the so called upper middle class.Switch on the T.V  all channels talk about so many having accumulated not 10  or 20 crores  but simply just 1000 or 10000 or 32000 crores.Be it Emu or redsoil or online or lottery and the list is endless.Somehow many persons have money more than 100 crores.
I feel ashamed to have been thinking that I am rich .Now i realize  compared to these people i am below, below , below poverty line.
மக்களே ,என் இனிய தமிழ் மக்களே
என் சோகக் கதையை கேளுங்களேன் .
இது நாள் வரை  நான் ஏதோ ஒரு குட்டி [ குட்டியூண்டு ]செல்வந்திரி என்று நினைத்திருந்தேன்.இந்த உயர் மத்திய வர்க்கம் என்று நினைத்திருந்தேன்.ஆனால், இப்போது வரும் செய்திகளை பார்க்கும் போது ,ஒரு பக்கம் ஈமு ,ஒரு பக்கம் செம்மண், ஒரு பக்கம் தங்க நகை திட்டம்,  [அடேயப்பா , எத்தனை ரூம் போட்டு யோசிப்பார்கள் ? ஆனாலும் சும்மா  சொல்லக் கூடாது , அறிவுப்பா அறிவு , அறிவோ  அறிவு,] எத்தனை வகையான திட்டங்கள், எவ்வளவு பணக்காரர்கள்? அதுவும் ஒரு கோடியா அல்லது 2 கோடியா ?மினிமம் 100, 32000,160000 கோடி.
எனக்கு அழுகை அழுகையாக வருகிறது.இவர்களை பார்க்கும் போது நான் வறுமைக் கோட்டிற்கு கிழே தான் இருக்கிறேன்.
வாழ்க பணக்கார தமிழ்நாடு
கார்த்திக்+அம்மா 

2012/10/02

நீங்களும்  வெல்லலாம்  நிகழ்ச்சியில்  சூர்யா சொன்னார் : எனக்கு  பிடித்த பாரதியார்  பாட்டு :
தேடி  சோறு  நிதந் தின்று .....
.....    ......   ....
சொல்லடி  சிவசக்தி 
       இது கார்த்திக்கிற்கு  மிகவும் பிடிக்கும்.அவனுடைய  கேபினின் மேசையில் இந்த பாட்டு ஓட்டப்  பட்டிருக்கும் This was in the year 2002.Karthik used to have Bharathiyar's book with him.
Its  GREAT  IRONY that as in the poem HE NEVER GREW OLD.

What to say? Look at his table.He is HE .