About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/10/18

T.V Bits
தருமி ஐய்யா சொன்னாரே  என்று சரவணன்  மீனாட்சி ஒரு 10 நிமிடம் பார்த்தேன். என்னப்பா ,அந்த பெண் கணவனை அத்தனை 'டா ' போடுவதும் சரவணன் 100  '' டி '' போடுவதும், அவன் தன அப்பாவை அது இது,யோவ் என்று சொல்வதும்,
தாங்கவில்லை.
*ஆச்சி  சாம்பார் பொடி :
எங்கிருந்து பிடித்தார்கள் சிநேகாவிற்கு  மகளாக வரும் அந்த குட்டிப் பெண்ணை? ஜோர். அப்படியே  சினேகா ஜாடை. தன்  தந்தை வந்தவுடன்  அம்மாவின் சாம்பார் மணத்தை   பற்றி அவர் கேட்பார் என ஆசையோடு ஓடி வருவதும் ,அவர் அதைப் பற்றி கேட்காமல் போனவுடன், முகத்தில் தெரியும் அந்த ஏமாற்றம் ...இயல்பாக உள்ளது. ஏதோ  ஒரு குழந்தை ஏதோ  ஒரு சினிமாவில் நடித்ததைப் பற்றி மூச்சு  விடாமல் பாராட்டியவர்கள் ,இந்த பெண்ணையும் சிறிது பாராட்டலாமே.
*சொல்வதெல்லாம் உண்மை:
        இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்கள் 90% கள்ள உறவு.திருமணத்திற்கு முன்பே உறவு என  ...இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த சில இளைஞர்கள் ''திருமணம் செய்யவே  பயமாயிருக்கிறது '' என்றனர்.நேற்று நிகழ்ச்சியில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பெண் 7 மாதம் வரை தான் கருவுர்ரிருப்பதே தனக்கு தெரியவில்லை என்று சாதித்தார் .அந்த பெண்ணிற்கு ஆதரவாக எத்தனை பேர்.
இப்படியே போனால், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கட்டாயம்  என்று  ஆகி விடும் போல இருக்கிறது.Something  undigestable
* பழைய பாடல்கள் நிகழ்ச்சியில் K .R விஜயா பாடும் 'அத்தை மடி மெத்தையடி '' பாட்டும்,
கண்ணன் வருவான் பாட்டும் பார்த்த போது 1981+1982ல் ல் இருந்த என்னை நானே பார்த்துக் கொண்ட மாதிரி இருந்தது.அந்த hairstyle ,மாட்டல் ,பூ ,அதே design  புடவை என [ நானும் அப்படி ஒல்லியாக இருந்தேன் ],கார்த்தியை எடுத்துக் கொண்டு இப்படித்தான் ஆடல் ,பாடல் என்று சிறகடித்துப் பறந்தேன்.
அதே போல் ஜெமினி +விஜயா குழந்தையை குளிக்க வைக்கும் காட்சியும்.அப்போது நானும் என் கணவரும் கார்த்தியும் என பெரயவர்கள் உடன் இல்லாத தனிக்குடித்தனம்.நான் கார்த்தியை மடியில் வைத்துக் கொள்ள அவன் தந்தை தண்ணீர்  ஊற்ற என அவனை குளிக்க வைப்பதே ஒரு பெரிய இன்பமான வைபவம்.

















அந்த பாடல்கள் எனக்கு குளுக்கோஸ் .
கார்த்திக்+அம்மா 

3 comments:

Jeevan said...

That's sweet on the old songs and you :)

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் பகிர்வு மூலம் தான் இதெல்லாம் தெரியும்...

மின் வெட்டு அதிகம்...

நன்றி...

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

now only I see the songs.I have not seen the songs before.In fact I have been to theaters very rarely.Now seeing these songs take me back to the happiest days,happiest days,.
karthik amma