About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/11/14

Karthik's B'day--D'day--strange similarities

This is what happened exactly and it's neither an exaggeration or boasting of any type.
My birthday : 14.11.1958
marriage: 14.12.1980

karthik's birthday: 14.11.1981

As soon as i got married we [my hubby and i settled in TNEB quarters near Bhavani. ] my hubby was working as A.E .நான் கல்லூரி முடித்த உடன் திருமணம் . ஒன்றும் சரிவர புரியாத நிலை. தஸ் புஸ் என்று ஆங்கில இலக்கியம் M.A படித்துவிட்டு, டான்ஸ் , ட்ராமா, என்று காலேஜை கலக்கி விட்டு ,திடீரென சூழ்நிலை [ மாமனார், மாமியார் etc, etc ] என மாற சற்று தடுமாறிக் கொண்டிருந்த வேளை.
ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல், என் கணவர் ஒரு workaholic.புது மனைவி, தனிக் குடித்தனம் என்றவுடன், சினிமாவில் வருவது போல் ஆடல், பாடல் , etc எல்லாம் தெரியாது அவருக்கு.
சரி. பதிவின் விஷயத்திற்கு வருவோம்.
விடிந்தால் Nov.14 th. அன்று இரவு 12 மணிக்கு சுரீர் என வயிற்று வலி. [ தனிக் குடித்தனம்] flats exclusively built for EB staff in an isolated area 25 km away from nearest town and 75 km away from Salem.
அன்று என் பிறந்த நாள் என்பதால், 20 கி.மி.தூரத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு , சேலம் சென்று சினிமா பார்த்து விட்டு அங்கிருந்து என் அம்மா வீட்டிற்கு சென்று b'day celebration முடிப்பது என்று திட்டம். இதில் இன்னொரு மிகவும், மிகவும் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த ஊர் சுற்றல் எல்லாம் by bike. [ 350 cc bullet. ]
இப்படி கூட ஒரு அறிவில்லாத பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா? ஒரு நிறை மாத கர்ப்பிணி. பைக்கில் ஊர் சுற்ற திட்டம்.
மணி 12. இரவு. வயிற்றில் வலி ஆரம்பம். கணவரை எழுப்பி " என்னங்க " என்றேன். அரைத் தூக்கத்திலேயே 'happy birthday ' என்று சொல்லிவிட்டு தூகத்தை தொடர்ந்தார். ஒரு 5 நிமிடம் கழித்து மீண்டும் அவரை எழுப்பி ' என்னங்க " என்றேன். " என்ன " என கேட்டார். "எனக்கு வயிறு வலிக்குதுங்க " என்றேன்.
எழுந்து உட்கார்ந்தவர், " இப்போது என்ன செய்யலாம் ? " என்றார். [ மனைவிக்கு பிரசவ வலி. கூலாக கேள்வி. ] . " சரி. தூங்குங்கள்..சற்று நேரம் கழித்து பார்க்கலாம் " என்றேன். படுத்த மனிதர் அடுத்த வினாடி ஆழ்ந்த தூக்கம்.
மணி 1 a.m,,,2 a.m,,,,,,,3 a.m,,, நான் படுக்கை அறைகுள்ளேயே நடந்து கொண்டிருக்கிறேன். 4 மணிக்கு மேல் வலி அதிகரிக்க , மிக மிக புத்திச்சலித்தனமாக சுடுதண்ணீர் வைத்து குளித்து விட்டு, அவருக்கும் சுடுதண்ணீர் வைத்து எழுப்பினால், மனிதர் எழுந்து ஆசுவாசமாக குளித்தார்.
மணி 5a.m.... 5.30....5.45 ....அதற்கு மேல் முடியவில்லை. " ஏங்க , ஜீப் வர சொல்லுங்க " என்றேன். அது ப்ரொஜெக்ட் என்பதால், எல்லா A.E ஸுக்கும் ஒரு வண்டி [ஜீப் அல்லது வேன் ] கொடுத்திருப்பார்கள்.] [ 6 A.E s. in our flats there were 8 A.Es. so there would be 8 vechicles. *there's another episode about these jeeps which i will tell you later. ]
Phone செய்து ஜீப் ட்ரைவர் வந்து விட்டார். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பாட்டி தானும் துணக்கு வருகிறேன் என்று கூறியும் வேண்டாம் என மறுத்து விட்டு நானும் என் கணவரும் மட்டும் ஜீப்பில் 75 கி.மீ. [ சேலம் ] செல்கிறோம். போகும் வழியில்தான் அம்மா வீடு. போய் அம்மாவையும் அப்பா்வையும் கூட்டிக் கொண்டு செல்வதாக திட்டம். அம்மா வீட்டிற்கு அடுத்த வீடே ஒரு மருத்துவ தம்பதிகள். ஜீப்பில் இருந்து இறங்கி, நான் " நீங்கள் போய் அம்மாவை அழைத்து வாருங்கள் " என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவரிடம் செக்கப்பிற்கு ? சென்றால் , அவர்கள் திகைத்து, மலைத்து, அலறி, "கலா, உனக்கு சீரியஸ்னே புரியவில்லையா? உடனடியாக சேலம் போ " என்று [ 30 k.m from there } பதற "சரி " என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டிற்குள் நுழைந்தால்,,,,மாமியார் [ ஒரு ஸ்கூல் H.M ] தன் செல்ல மருமகனுக்கு காபி போட்டுக் கொண்டிருக்கிறார்.
நிலைமை புரிய , கை கால் உதறலெடுக்க என் அம்மா போட்டது போட்டபடி ,ஓடி வந்து ஜீப்பில் ஏற [ என் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார் .] ஜீப் ட்ரைவர் எமர்ஜென்சி விளக்கை போட்டுக் கொண்டு பறந்தார்.
மருத்துவ மனையை அடையும்பொழுது மணி 8.35. கார்த்தி பிறந்தது 8.45.மருத்துவ மனையே அலறிவிட்டது.
விஷயம் கேள்விப்பட்டு அலறிக் கொண்டு தந்தை ஓடிவர , எல்லாம் அவசர கதிதான்.
கார்த்தியின் பாதிப் பிறப்பு ரோட்டில்தான்.
NOW,
Aug.26. 2005. time 8.45. B'lore.
karthik and i have breakfast and karthik leaves home by 8.50,a.m the exact time ,,,i saw his face on 14.11 .1981.
travels by bike. accident at 9 a.m. taken in an auto. reaches hospital and ***********.
பாதி பிறப்பும் ரோட்டிலே. பாதி *றப்பும் ரோட்டிலே.
என்ன ஒரு வேதனையான ஒற்றுமை?
இன்று என் செல்ல மகன் பிறந்த நாள். ...... ........ஊமையாக நான்

2008/11/06

பூனூல்//பூ+நூல்//பூணூல்
இந்த சர்ச்சை தீரவே தீராது.இதன் பிண்ணனி என்ன? இதன் தாத்பரியம் என்ன ? என்பது புரியாமல் ஒரு தாழ்வு மனப்பாண்மையில் இந்த நூலை பார்த்து பயந்து நாம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
நான் ஒன்றும் மெத்தப் படித்தவளும் அல்ல . மேதாவியும் அல்ல. ஆனால் . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். [ அனைத்து வகையான விமரிசனங்களும வாக்கு வாதங்களும் வரவேற்கப் படுகின்றன ]
முன்னொரு காலத்தில், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளும் இல்லை. இப்போது இருப்பது போல் கல்வித் துறை, மருத்துவ துறை, மின்வாரியம் என்று அரசாங்க அங்கங்கள் இல்லை. அதனால், ஒரு தொழிலுக்கு ஒரு குடும்பம் என்று வகைப் படுத்த பட்டனர்.
இந்த நிலையில்தான் அவரவர்க்கு உரிய பொறுப்பை நினைவில் நிறுத்த ஒரு கருவியாகத்தான் இந்த பூணூலை நடைமுறைப் படுத்தினர்.
பிராமணர்களுக்கு 5 நூல்.
அவர்களுடைய கடமைகள் 1] தன் குடும்பத்தை காத்தல், மன்னருக்கு ஆலோசகர், படிப்பு சொல்லித் தரும் ஆசான் [மந்திரங்கள் ], கோவில் கைன்கரியம், என 5 கடமைகள். எனவே அவர்கள் 5 நூல் கொண்ட பூணூலை அணிவர்.
அடுத்து சத்திரியன்: 4 நூல்: கடமைகள் 4: தலையாய கடமை நாட்டை காப்பது. நாட்டில் எந்த ஒரு குடிமகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவனைக் காக்க தன் உயிரை தியாகம் செய்தாவது காப்பாற்றுதல் ,மற்றும் மேற் சொன்ன பிற கடமைகள்.
சத்திரிய பிரம்மசாரிக்கு மூன்று கடமைகள்.
அத்னால்தான், கந்த சஷ்டி கவசத்தில்,
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
என்று சொல்வது.
அடுத்த குலமாகிய வேளாண் பெருமக்கள். இவர்களுக்கு தாய் தந்தை குடும்பத்தை காத்தல் என்ற கடமையும், வேளாண்மை செய்து மற்ற குடிகளுக்கு உணவு தருவதும் ....ஆக அவர்கள் பூணூலில், இரண்டு நூல்கள்.
பெண்ணுக்கு மாங்கல்யமும் இதே கணக்குதான்.
ஆனால், காலப் போக்கில், பல பழக்கங்கள் மாறி விட்டன. என்னுடைய தாத்தா, பெரியப்பா இருவரும் இறுதி வரை பூணூல் அணிந்திருந்தனர். என் தந்தை மட்டும் தன் ஆங்கிலேய கல்லுரி கல்வியினால், பூனூல் அணிய வெட்கப் பட்டுக் கொண்டு கழ்ற்றி விட்டார். ஆனால், இன்னும் எங்கள் திருமண சடங்குகளில் ஒன்றாக வெள்ளி பூனூல் அணிவர். [ நான் ஜாதியை பற்றி சொல்ல விரும்பவில்லை. எனக்கும் கார்த்திகிற்கும் அது பிடிக்காத விஷயம் ]
ஆனால், காலம், பல விஷயங்களை மாற்றி விட்டது என் று கூறவருகிறேன்,.
இப்படி உண்மை ஒரு புறமிருக்க, பூணூல் ஒரு குலத்திற்கு சொந்தம் என்று அவ்ர்களும் '' ''பெருமையாக,, கர்வமாக '' '' நினைத்துக் கொள்ள , நாமும் அவர்களை பார்த்து ஒரு தாழ்வு மனப்பாண்மையில் மறுகுவதும்,,,
Gandhiji once said '' It's not that they feel superior, but that we feel inferior.''
என்ன ஒரு அருமையான பொன்மொழி.
அடுத்து திருநீறு:
இதுவும் நம் முன்னோர்களால் அறிவியல் பூர்வமாக ஒரு skin cream and powder என தோலை பாதுகாக்க பயன்படுத்தப் பட்டதே ஒழிய எந்த மத்மோ , கடவுளோ இதில் சம்பந்தப் படவேயில்லை.
காலம், + சில சுயநலவாதிகள செய்த தந்திரம் இது.
இன்றும் காயப் பட்ட இடத்தில் திருநீறை பூசி குணமாக்குதல வழக்கத்தில் உண்டு.
ஏற்கனவே குழம்பிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், இன்னும் புதுப்புது சர்ச்சைகளும் சண்டைகளும் வேண்டாமே என்பதற்கே இந்த பதிவு

அன்பிலும் அன்பான கார்த்தியுடன்+ கார்த்திக் அம்மா