About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2022/10/04

pooja

 ஆயுத பூஜையும் ,சரஸ்வதி பூஜையும்.

முதலில் இந்த பண்டிகை எதற்கு?அந்த காலத்தில் ஓலை சுவடிகள்.

ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும்.

கரையான் அரிக்கலாம் .ஈரம் பட்டு கெட்டு  போகலாம்.அதனால் அவற்றை சரி செய்து ,புதுப்பித்து பயன்படுத்தினர்.

இதை அப்படியே சொன்னால் 'வந்துட்டான் அறிவாளி' என்று கடந்து போய்விடுவார்.

அதையே ஒரு தெய்வம், அதற்கு செய்ய வேண்டிய பூஜை என்று சொன்னால் பயந்து சரியாக செய்வர் .(பயம்தான்.பக்தி எங்கே என்று தேட வேண்டும் ).

அதனால் சரஸ்வதி பூஜை.

அப்படியானால் ஆயுத பூஜை?????

அக்கால அரசர்கள் போருக்கு சென்று வந்த பின் படைக்கலங்கள் (கத்தி,ஈட்டி,வாள் ,கேடயம் )போன்ற கருவிகளை சரி செய்ய என்று ஒரு வாரம் ஒதுக்கி அவற்றை சரி செய்து அதற்கு ஒரு பூஜை என்று வைத்தனர்..எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் சரஸ்வதி பூஜை அஷ்டமியிலும் ,ஆயுத பூஜை நவமியிலும் வரும்.சுவடிகள் குறைவு என்பதால் 8 நாட்களில் வேலை முடிந்து விடும்.ஆயுதங்கள் அதிகம் என்பதால் 9 நாட்கள்.10ம் நாளாகிய தசமியில் நிறைவு பூஜை.

ஆனால் இப்போது இரண்டு பூஜையும் ஒரே நாளில்.

கேட்டால் அதற்கு ஒரு புது கதை சொல்கிறார்கள்.ஒரு அரக்கனுடன் காளி தேவி 9  .நாட்கள் போர் செய்து 10ம் நாள் வெற்றி விழா கொண்டாடுகிறாள் .தேவி மஹாத்மியம் என்ற புத்தகம் இந்த போரை பற்றியது.தயவு செய்து யாரும் படித்து விடாதீர்கள்.ஒரே 'A 'தான்.அதுவும் அல்லாமல் ஒரு அரக்கனை கொல்ல ஒரு சாமிக்கு 10 நாட்கள் எதற்கு????????????

கதை....கதை.

 I BEG THE SO CALLED 'சமய பிரச்சாரகர்கள் 'TO STOP TELLING SUCH UTTER NONSENSE STORIES '

போதும்.மக்களின் அறியாமையில் குளிர் காய்ந்தது.இப்போது எந்த கருவியையும் ..அது பைக்கோ , காரோ ..மிக்சியோ என எதுவாக இருந்தாலும் உடனடியாக சரி செய்ய முடியும்.SERVICE CENTERS இருக்கின்றன.

அப்படி இருக்கும்போது இந்த பூஜைகள் ஒரு சம்பிரதாயமாக ..சடங்காகவே செய்ய   படுகிறது.

நான் எப்போதும் சொல்வேன்.

'' '' I AM ''SCIENTIFICALLY RELIGIOUS ''..

எந்த ஒரு பண்டிகையும் மூட நம்பிக்கையில் உருவாக்க படவில்லை.WHATS THE SCIENCE BEHIND IT என்பதை இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள் 

No comments: