About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/05/21

.

மு. க
மூக்கால் அழுகிறார்.
தவறே செய்யாத தன மகள் ஜெயிலுக்கு போவது கண்டு துடிக்கிறார்.
சற்று பின்னோக்கி பாரும்.
பல வருடங்களுக்கு முன் ஜெயலலிதா என்ற பெண்ணை அரெஸ்ட் செய்து ஜெயிலுக்கு அனுப்பினீர்களே ??
அது சரியா???
அது சரிதான்.....ஏனென்றால் அவருக்காக கண்ணீர் விட அவரது தந்தை இல்லையே .
அப்போதும் அந்த 'பெண்மணி' தன பூஜைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி, அதன்படியே பூஜை முடித்து விட்டு, அமைதியாக வந்து வண்டியில் ஏறினார்களே !
ஆனால், நீங்கள் ஒரு ஆண் மகனாக இருந்து ''ஐயோ , ஐயோ ' 'என்று கதறிக் கொண்டு வண்டியில் ஏற மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தீர்களே !நடு ரோடில் அமர்ந்து ஊரை கூட்டிநீர்களே !
இந்த '' '' அருமை மகள் '' '' பிறந்த போது அது தன குழந்தையே இல்லை என்று கோர்ட் வரை சென்றவர்தானே நீங்கள் !
இந்த தமிழ் நாட்டில், எத்தனை பெண்கள் எத்தனை காரணங்களுக்காக எப்படியெல்லாம் அழுதிருப்பார்கள்? எப்படியெல்லாம் துடித்திருப்பார்கள்? அதை பற்றியும், அதற்கான காரணங்களையும் பற்றி நிறைய எழுதலாம். ஆனால், உங்கள் மனக் சாட்சியே அதைப் பற்றியெல்லாம் சொல்லும்.
என்ன சொல்வது ? உங்களைப் பற்றி?
கார்த்திக் +அம்மா

No comments: