About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/02/07

கந்த சஷ்டி கவசம் :
எனக்கு பிடிக்காத பாடல். ஏன் ?
இதை எழுதியவர் ஒரு முனிவர்,ஞானி .
அப்படிப்பட்டவர்
கட்டு கட்டு கதறிடக் கட்டு ,
கட்டியுருட்டு கைகால்  முறிய
என்று சொல்கிறார்.
எப்படிப் பட்ட எதிரியாக இருந்தாலும் அவரும் ( மனம் திருந்தி நல்லவராக மாறி )நன்றாக வாழ வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து ',
டுடு டகு  டகு
என்ற அர்த்தமற்ற  சப்தங்கள்.
ஆ ஆ ஆ னால்  தினமும் ஒரு முறை இதை சொல்லிவிடுகிறேன்.  பயம்தான்.  பக்தி அல்ல  .கார்த்தியும் நானும்  பகுத்தறிவுடன் கூடிய வாதம் செய்வோம்.
அதனால்தான் விபத்து நடந்தது என்று என்னை எள்ளி நகையாடினர் பலர்.
இது எப்படி என்றால் நம் மேல் அதிகாரியை நமக்கு பிடிக்காவிட்டாலும்  அவரை பார்த்தவுடன் ஒரு காலை வணக்கம்  சொல்வோமே அது போல்தான். சொல்லாவிட்டால் அன்று முழுதும்  அவர் முறைத்துக் கொண்டே திரிவார்.
அது போன்ற பயம்தான்.
எதற்கு வம்பு?
சொல்லிவிட்டால் பிரச்சினை முடிகிறது .அதனால்  எரிச்சலுடன் கவசம் சொல்கிறேன்.
வெறுமே இறைவா  (அப்படி ஒருவர் இருந்தால் ) என்று சொன்னால்  அவருக்கு கேட்காதா? நம் கஷ்டம் தெரியாதா? புரியாதா?
கஷ்டத்தை தீர்க்க மாட்டாரா?

No comments: