About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/03/18

அதிகாரிகளும்  தற்கொலைகளும்:
   தமிழ்நாட்டில் ஒருவர்
கர்நாடகாவில் ஒருவர்
என அதிகாரிகள் தற்கொலை பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.
இவர்கள் எல்லாம் இந்த சிறு விஷயத்திற்கு தற்கொலை என்றால் நான் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் பட்ட துன்பத்திற்காக மட்டும் அல்ல
 பணியிலும் நான் பட்ட கஷ்டங்கள் அளவிட முடியாதது.
நானும்  100% நேர்மையானவள்..
உண்மை,
வாய்மை,
சத்தியம்
என்றெல்லாம் பிதற்றி திரிபவள்..
அதனால் நான் பட்ட ,அனுபவித்த துயரங்கள், போராட்டங்கள் எத்தனை?
ஆசிரிய பணியில் என்ன போராட்டம் என்கிறீர்களா?
அரசு பள்ளியில் பணி  புரிந்த போது நான் உண்மை மட்டுமே பேசியதால் வந்த எதிர்ப்புகள் எத்தனை.
9 மார்க் என்பதை 19 என்றும் 90 என்றும் மாற்றுவார்கள்.தனி வகுப்பு(,ட்யூஷன் ) எடுக்க மாட்டேன்.அதில் பிரச்சினை.ஆனால் இப்படிப்பட்ட எனக்குதான் வாழ்க்கையிலும் சோதனைகள் வந்தன. எண்ணில்  அடங்கா ஊழல்கள் செய்த அந்த தலைமை ஆசிரியர் நன்றாகவே இருந்தார் 73 வயது வரை வாழ்ந்தார்...அமைதியான இறப்பு.....கடவுள் இருக்கிறார்.கெட்டவர்களை  தண்டிப்பார் என்ற 
கணெக்கெல்லாம்  பொய்யானது....
 நான் என் கணவரை இழந்த போதும்
உயிருக்கு உயிரான கார்த்தி மகனை இழந்த போதும் கைகொட்டி சிரித்தார். உங்கள் நேர்மை எல்லாம் உங்களுக்கு என்ன செய்தது என்று கேலி பேசினார்..வெளியில் தைரியசாலி போல் காட்டிக் கொண்டு தனிமையில் கதறினேன்.ஏன் எனக்கு சோதனை என்றால் முற்பிறவி என்றார்கள்.
சொல்லிக் கொண்டே போகலாம். நானும் என் கணவரை இழந்த போதும்  சரி,கார்த்தியை இழந்த போதும் தற்கொலை எண்ணத்தில்தான் இருந்தேன்.ஆனால் செய்யவில்லை.
அப்படியிருக்க இந்த அதிகாரிகள் செய்தது என்ன நியாயமோ?
கார்த்திக் அம்மா.
கலாகார்த்திக்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சத்தியம் நிலைக்கும்...