About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/07/14

கார்த்தியின் கனவு:
கார்த்திக்கிற்கு ஒரு கனவு இருந்தது.அதைப் பற்றி அவன் பேச வருவான்.அப்போது நான் சொல்வேன்  "கல்யாணம் செய்த பின் உன் மனைவி சரியென்றால் ஆரம்பி"  என்று.
அதுதான் .....''பாகுபலி  ''
இது போன்ற ஒரு பிரமாண்டத்தை கார்த்தியும் கனவு கண்டான்.ஆனால் கார்த்தியின் நாயகன் 'ராஜ ராஜ சோழன் ''

வேலையை விட்டு விட்டு  தயாரிப்பில் இறங்கத் துடித்துக் கொண்டிருந்தான்
நான்தான் 144 போட்டிருந்தேன்.
ஸ்கிரிப்ட் கூட 15 பக்கங்கள் எழுதியிருந்தான்.
உன்னைப் போன்ற இளைஞர்களை நம்பி யார் முதலீடு செய்வார்கள்
என்பது என் கேள்வியாக இருந்தது.
அண்ணன் வழியில் செல்ல தம்பி செந்தில் தயாராகிக்கொண்டிருக்கிறான்.
பார்க்கலாம்.
ஆனால் கார்த்தியின் கனவு ஒரு வகையில் நனவாகி இருக்கிறது.
பாகுபலி படம் பார்க்கவில்லை.(எந்த படமும் அதிகம் பார்த்ததில்லை.)ஆனால் எல்லோரும் புகழும் விதத்தையும் ,விளம்பரத்தையும் பார்க்கும்போதே தெரிகிறது.ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கார்த்தியின் எண்ணம் நிஜமாகியுள்ளது.
வாழ்த்துகள் ராஜமௌலி .
அன்புடன்,
கார்த்திக் அம்மா

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

செந்தில் அவர்கள் மூலம் நிறைவேறும் அம்மா...