About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/07/21

ஷஷ்டியும் சர்ச்சையும் 2

நேற்று ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டேன்.பதிவின் நோக்கமே திசை திரும்பி விட்டது.
நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு.அது நம்மை ஆட்டுவிக்கிறது.அதற்கு கடவுள் என்று பெயர் சூட்டி அவரை வழிபட்டால் நம்மை காப்பார் என்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது.
ஆனால்....
ஒரு விஷயம் பாருங்கள் ...
எல்லா மதத்திலும் கடவுள் மனித உருவிலேயே காட்சி படுத்த பட்டுள்ளார்.
ஒரு டாக்டர் நம்மை காப்பாத்தினால் ''டாக்டர் நீங்கதான் என் தெய்வம் '' என்கிறோம்.
அப்படித்தான் நம் முன்னோர்களும்.நம்மை வாழ வைத்தவர்களை நன்றியுடன் நினைத்து (அப்போது  புகைப்படம் இல்லாததால் )சிலை வடித்து ,பிறகு பூஜையாக மாறி ,  இப்போதைய நிலைமைக்கு வந்துள்ளது.
எனக்கு பிடிக்காத விஷயம் என்ன என்றால் ...
இந்த மந்திரங்கள் , வேதங்கள், பாடல்கள் ,ஸ்தோத்திரங்கள்...
 எந்த கோவிலுக்கு போனாலும் அர்ச்சனை செய்வதில்லை.
அது என்ன ?
என் கடவுளிடம் நான் பேச கூடாதா?
என் மொழி அவருக்கு புரியாதா?
யாரோ ஒருவர் எனக்காக எனக்கு புரியாத மொழியில் சொல்லி எனக்கு வரம் வாங்கி தருவது?பசிக்கும் போது குழந்தை அழுகிறது.
''அது அம்மா எனக்கு பசிக்கிறது '' என்று செந்தமிழிலா சொல்கிறது?
அந்த தாய்க்கு அந்த அழுகை புரிகிறது.
அது போலத்தான் நானும் .கடவுளாகிய என் தாயிடம்
''முருகா '' என்ற ஒற்றை வார்த்தையை சொல்கிறேன்.
முருகனுக்கு என் வேண்டுதல்கள், குறைகள் ,கஷ்டங்கள் புரியும்.
இடை தரகர் தேவையில்லை.
இவ்வளவு சர்சசைகளும் தேவையில்லை.
இதுதான் என் கோவில்.
கார்த்திதான் என் தெய்வம் .
UNCONDITIONAL LOVE .
தூய்மையான அன்பு.
அதனால் என் தெய்வம் .
சிலை வடித்தேன் .
காலடியில் அமர்ந்து
''கார்த்திம்மா ''  என்றேன்.
ஜென்ம சாபல்யம் பெற்றேன் .

No comments: