About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/04/21

 இது புது பதிவு அல்ல .ஏப்ரல் 2020 யில் எழுதியது .மறுபடியும் இதை பற்றியே எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை ,//

 மஹாராஷ்டிராவில படித்துக் கொண்டிருந்த ஒரு 22 வயது மாணவன் அங்கிருந்து நடந்தே வந்திருக்கிறான் .350 கிலோ மீட்டர் ...
சாத்தியமா ?
ஏன் நடக்க வேண்டும் ?
அந்தந்த மாநில முதல்வர்கள் சொல்லி இருக்கலாம் .எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருங்கள்.
உங்களுக்கு நாங்கள் எல்லா உதவிகளையும்  செய்கிறோம்.
உணவும்  இருக்கும் இடமும் இருந்தால் போதும் .
உணவு கொடுக்க வேண்டியது அரசு.
இதை உடனடியாக செய்து இருந்தால் இத்தனை பேர் புலம் ,இடம் விட்டு இடம் போயிருக்க மாட்டார்கள்.
காசு கொடுங்க என்று மட்டும்தான் கேட்க வேண்டுமா .
மக்களும் கொஞ்சம் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும்.
உணர்வு பூர்வமாகவே நடப்பதே நம் பழக்கம்.
..... 9 மணிக்கு செய்தி ....emergency declare ....என்ற பயத்தில் பலர் உறைந்து போயிருக்க ....

no comments ....

இப்போது மறுபடியும் அதே கதை.

எல்லோரும் சொந்த ஊர் திரும்புகிறார்கள் .மீண்டும் நடை.

தன் உரையில் கொரோனாவை ஜெயிப்போம் என்றுதான் சூளுரைக்கிறார் தலைவர்.

இப்போதும் உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்ற உத்தரவாதம் இல்லை.

நிறுவனங்கள் தன்னை நம்பி வந்த தொழிலாளர்களை காப்பாற்ற மனமில்லாமல்   கையை விரிக்க ....மீண்டும் ஊர்  நோக்கி நடக்கிறார்கள் .

குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ரயில் ஏற்பாடு செய்யலாம் .

என் மாணவன் ஒருவன் போன லாக் டௌனிலேயே அத்தனை தொழிலாளர்களையும் கம்பெனியிலேயே வைத்து  சோறு போட்டு நல்லது செய்திருக்கிறான்.

அவன் சொன்னான்.''உங்களிடம் படித்த நாங்கள் எப்படி இருப்போம் ...என்றாலும் இதில் ஒரு சுயநலமும் இருக்கிறது.சகஜ நிலை திரும்பும் போது இவர்கள் திரும்பி வராமல் போனால் புதியவர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்து ....என்ற பிரசினைகள் ...''

என்று சொன்ன போது  மனம் நிறைந்தது.

ஒரு நண்பியிடம் போன வருடம் பேசிய போது சொன்னாள் .''இவர்கள் எல்லாம் சாகட்டும் .இவர்களுக்கு சோறு போடுவதற்கு அரசிடம் காசு இல்லை.''

அரசின் ஒரு ஆண்டு வருமானம் என்ன .இது போன்ற பேரிடற்கு ஒதுக்கப் படும் தொகை பற்றி எல்லாம் அவளிடம் பேசவில்லை .செத்து ஒழி என்பவளிடம் என்ன பேச முடியும்?

அதுவும் இந்த பி * பி ஆட்களிடம் பேசவே முடியாது.

ITS FOOLISH TO ARGUE WITH FOOLS என்று சொல்வார்கள்.
 

No comments: