About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/02/18

vaththi and so

இப்போதைய படங்கள் : ஒரு விமர்சனம் : 

ஜெய்பிம் 

வாத்தி 

கர்ணன் 

அசுரன்

அயலி 

இந்த படங்களில் சொல்லப் பட்ட கருத்துக்களும் காட்சிகளும் 2023 ல் நடக்கிறதா?

or ,அட் தி லீஸ்ட் 2000 த்திலாவது நடக்கிறதா?

என் அம்மா 1933 ல் பிறந்தவர் .

ஆங்கிலேய அரசு.

வீடு வீடாக சென்று பெண்பிள்ளைகளை இழுத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்.சில பெண்கள் விருப்பம் இல்லாமல்தான் பாதியில் படிப்பை நிறுத்தினர்.

என் அம்மாவின் தோழிகள் அத்துணை பேரும் அரசு பணியில் சேர்ந்தனர்.

என் உறவு பெண் ஒருவர் 14 வயதில் கணவனை இழந்தார் .

ஆனால் அவருடைய அப்பா அந்த பெண்ணை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அரசு பணியில் சேர்த்தார்.

இதெல்லாம் நடந்தது 1950 களில் .

என்னவோ ' பொட்டை பிள்ளையாம் .'படிக்க கூடாதாம்.வேறு ஊருக்கு போய் படிக்க கூடாதாம்.

19ம் நூற்றாண்டின் கதை இது.இதை இப்போது எடுத்து ?????????

இந்த காலத்து பெண்கள் (சிறுமிகள்) விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து ,தலித்துகள் உரிமைகள் மறுக்க படுகின்றன.கல்வி கற்க தடை.

எங்கோ ஒரு இரண்டு சம்பவங்கள் நடக்கலாம்.ஆனால் இன்றைய நிலை என்ன????

90% பட்டியலினத்தவர் நன்கு படித்து மிக மிக நல்ல வேலையில் இருக்கின்றனர்.அவர்களுடைய வாழ்க்கை தரம் மிக மிக உயர்ந்து உள்ளது.

ஜெய் பீம் படத்தில் வருவது போல் எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன???

சரி .RIGHT .அப்படி அவர்களின் பரிதாப நிலை இது .அவர்களின் கஷ்டங்களை தோலுரித்து காட்டுகிறேன் பார் என்று ஆர்ப்பரித்த டைரக்டரும், அதில் நடித்த அந்த நடிகர்களும் பாதிக்க பட்டவர்களுக்கு என்ன உதவி செய்தனர்?

ஒரு வீடு கட்டி கொடுத்தாரா?

ஒரு 4 பையன்களை தத்து எடுத்து படிக்க வைத்தனரா?

பலரின் நன்கொடையில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் உழைப்பில் வரும் நல்லவைகளை தானே செய்தது போல் தம்பட்டம் அடித்து கொள்ள மட்டும்தான் செய்கின்றனர்.

அதுவும் அல்லாமல் நாட்டு நடப்பு என்ன என்பதே கூட தெரியவில்லை இவர்களுக்கு.

ஒரு படத்தில் ,'' இலவச கல்வி வேண்டும்.இலவச மருத்துவம் வேண்டும் '' '' என்று ஒரு நாயகன் முழங்குகிறார்.

அட கொடுமையே...அரசு பள்ளிகளும், அரசு மருத்துவ மனைகளும் இருப்பதும் இவர்களுக்கு தெரியாதா????

நாளைக்கு சி .எம் ஆக வேண்டும் என்ற கனவில் மிதப்பவர்களுக்கு இது கூட தெரியவில்லை.இது போன்ற அபத்தங்கள் கொட்டி கிடக்கின்றன.

இதில் பரிதாபம் என்ன என்றால் இதை பார்க்கும் ஒரு இளைஞர் கூட்டம் ,கத்தி எடுத்து கொண்டு அலைவதும்,பஸ் கண்ணாடியை உடைப்பதும்,நாங்களும் காதலிக்கிறோம் என்ற கருமத்தை செய்து விட்டு ஆணவ கொலையில் உயிரை விடுகின்றன.

அல்லது ,காதலிக்கும் போது தெரியாத பொருளாதார நிலை ,கல்யாணம் செய்த பின் அந்த பெண்ணுக்கு தெரிய அவள் அவனை விட்டு வேறு ஒருவனுடன் ஓடுகிறாள்.

லவ் டே படத்திலும் செல் போன் தான் பிரசினை.ஆனால் '' ''நீ எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இரு.நானும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இருக்கிறேன் ''என்று சொல்லும் படம் கொண்டாட படுகிறது.

ஆனால் செல் போனால்  எத்தனை தீமைகள் என்று சொன்ன ஒரு படத்தை ஒரு ஆங்கில நாளிதழ் அது எப்படி அப்படி படம் எடுக்கலாம் .எங்கள் இளைய சமுதாயத்தின் சுதந்திரம் என்ன ஆகும் என்று கதறுகிறது. 

பி .கு :இந்த பதிவிற்கும் முகத்தை காட்டிக் கொள்ள தைரியமில்லாத ஒரு ஐந்து நான் ''old fashioned '' என்று கருத்திடும்.

உண்மை என்ன என்று யோசித்து பாருங்கள்.

இளைய சமுதாயத்தை உணர்சசி பூர்வமாக தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை கெடுத்து நீங்கள் 40 கோடி லாபம் சம்பாதிக்க வேண்டாம்.

No comments: