20 வருடங்கள் ஓ ஓ ஓடி விட்டன.மகனுடன் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் சென்னையில் இருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு பெங்களூருவில் போய் இறங்கினேன்.இனி என் உயிரான மகனுடன் இருக்க போகிறோம்.வேறென்ன வேண்டும்??????????
வேலையில் ட்ரான்ஸ்பர் கிடைக்கவில்லை.புது ஊர்.புது மொழி.செந்திலின் எதிர்காலம்??எதுவும் தெரியவில்லை.
போய்விட்டோம்.
கடவுள் என்ற ஒரு ராட்சசன் இருந்தால் அவனுக்கு பொறுக்கவில்லை.
இவளை அழுவதற்கு என்றுதானே படைத்தோம்.
இவள் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்?
அனுப்பு கார்த்தியை.U .S க்கு..
நானும் செந்திலும் திக்கு தெரியாத காட்டில். ஜூலையில் திரும்பி வந்த கார்த்தி.
ஆகஸ்ட்டில் விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் நிரந்தரமாக .
"அம்மா போய் வருகிறேன் "என்று சொல்லாமல் கூட பிரிந்து விட்டான்.
நிரந்தரமாக.
நிரந்தரமாக.
நிரந்தரமாக.
20 வருடமாக நானும் செந்திலும் துவண்டு போய் ஒரு வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மகனின் பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் மனம் தவியாய் தவிக்கிறது.
ஏக்கத்தில் துடிக்கிறது.
No comments:
Post a Comment