About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/06/27

Sushanth

Sushanth சிங் .
மன்னிக்கவே மாட்டேன் .ஆம்.சுஷாந்த் மேல் எனக்கு பாவம் ,பரிதாபம் வரவில்லை.
கோபம்தான் வந்தது.
உலகில் எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டங்களுடன் வாழ்கின்றனர்.ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ,ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு நோய்க்கும் தற்கொலைதான் முடிவு என்றால் ,
நானெல்லாம் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்???????
நான் என்ன கல் நெஞ்சுக்காரியா???????
உயிருக்கு உயிரான மகனை,கணவனை,அண்ணனை ,தாய் தந்தை என இழந்து,நடை பிணமாக ,ஒரு எலும்பு கூடாக ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்???????
ஒரு கடமை (இளைய மகன்) ........
தூங்கும் போது கூட என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோட ,அதனால் தூக்கம் போய் ,விழித்து ,அழுது ,
........எதற்கு இந்த கொடுமையான வாழ்க்கை????????
அன்பு,பாசம் என்ற வார்த்தைகளை விடுங்கள்.
கடமை .....
சுஷாந்த் ,...உனக்கு அந்த கடமைகள் இல்லையா??
3 வருடம் தவம் இருந்து பெற்ற மகன் என்று அந்த தந்தை,(உன் அப்பா )அழுகிறாரே .அதற்கு என்ன பதில்?
உன் தங்கையின் எதிர்கால வாழ்க்கையை நல்ல படி அமைத்து கொடுக்க வேண்டிய அண்ணனின் கடமையில் தவறினாயே .சரியா?
உன் புகழ் ,உன் காதல்,உன் சினிமா என்று சுயநலமாக இருந்து விட்டாயே.
இப்படி ஒரு சுயநலவாதியை என்னால் மன்னிக்கவே முடியாது.உன் மேல் கோபம் தான் வருகிறது.

No comments: