About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/09/08

arrears

 B.E  மாணவர்கள் அரியர் தேர்வு விவகாரம் குறித்து சில கருத்துக்கள்.மாணவர்களின் பிரசினை .

12ம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் படித்து 100%  மதிப்பெண்களை பெற்று விடுகிறான் .( இதற்கு காரணம் ''blue print '' )

அப்படி மதிப்பெண் பெட்ற  மாணவன் தன்னை மிக புத்திசாலியாக நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு வருகிறான் ,அங்கு M 1, M 2, M 3 என்ற 3 பூதங்கள் அவனுக்கு எதிரே நிற்கின்றன .+2 வில்  கணிதத்திற்கும்  இந்த கணிதத்திற்கு துளியும் சம்பந்தமில்லை .+1 ல் கணிதமே நடத்த மாட்டார்கள் .

M 1ல் fail .SHOCK .+2வில்  200 க்கு 200. இப்போ FAIL .மச்சி ,,,,நண்பனும் FAIL .அவமானம் .ஆத்திரம் .தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரு குரூப் .சிகரெட் ,தண்ணி ஆரம்பிக்கிறது .தோல்வி தொடர்கிறது.

.     அதுதான் ///23...///அரியர்ஸ் க்கு முதல் காரணம் .

2  வது ..பாடம் நடத்துபவர்கள் ...பாதி பேர் தகுதி குறைந்தவர்கள் .நடத்த தெரியாதவர்கள் ..நானே பார்த்தேன் ..ஒரு ஆசிரியர் 25 பக்க குறிப்புகள் கொண்டு வந்தார் .படிக்கத்தான் தெரிந்தது .சொல்லித் தர தெரியவில்லை.மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .மாணவர்களை பார்த்தால் பாவமாக இருந்தது .

மாணவர்களுக்கு புரியும்படி நடத்த தெரியவில்லை என்று ஒத்துக் கொள்ளாமல் மாணவர்கள் முட்டாள்கள் என்று பழி அவர்கள் மேல் .

பழைய கதை ....ஒரு நாள் கணித பாடம் முடிந்து அடுத்த பாடவேளை என்னுடையது .ஆங்கிலம் ...மாணவர்கள் கணித ஆசிரியர் போர்டில் எழுதி சென்றதை அவசரமாக எழுதிக் கொண்டிருந்தனர்.

.....மாணவர்கள் கேட்டனர் ..மிஸ் இதை படித்து எங்களுக்கு என்ன பயன்?...நான் அப்போதுதான்...M .B .A படித்து கொண்டிருந்தேன்.உடனே அந்த கணிதம் அடிப்படையில்தான் 8 வது E M I எவ்வளவு ,என்பது எல்லாம் கணக்கிட முடியும் என்று ஒரு விளக்கம் கொடுத்தேன் .மாணவர்கள் ''மிஸ் இப்படி சொல்லிக் கொடுத்தால் எங்களுக்கு புரியுமே என்றனர் ''

அதுதான் விஷயம்.no application based .வெறும் தியரி .

NEXT :அடனோமாஸ் கல்லூரிகள் ..இங்கு அனைவரும் பாஸ் .80%.அவர்களுக்கு புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வசதி.அவர்கள் ஆசிரியர்களே விடைத்தாள் திருத்தி மதிப்பெண் வழங்குவர் .

இவர்களின் தரம் என்ன ???

NEXT ...இப்போது வழக்கு போட்டிருக்கும் அந்த பதவிக்கு வருவதற்கு எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தார் தெரியுமா ????????

அவர் பேசுகிறார் தரம் பற்றி ...சரி 2018 ல் எத்தனை மாணவர்களுக்கு '0 ' மதிப்பெண் போட்டு அவர்களை போனில் அழைத்து பேரம் பேசி பாஸ் செய்ய வைத்த போது அந்த V .C என்ன செய்தார் ????அன்று fail ஆன மாணவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை .இவர்கள் பண வெறிக்கு ஆளான மாணவர்கள் ARREARS மாணவர்கள் .அந்த விடைத் தாட்களை எரித்து விட்டார்களே .அப்போது யார் V .C .

கேள்விகள் இங்கே ....பதில் எங்கே ...

இப்படி தர்ம பாஸ் பெரும் மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்காது .கம்பெனி வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் . அங்கே திறமை உள்ளவனுக்குத்தான் வேலை கிடைக்கும்.

 

 

No comments: