About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/10/24

மிக மிக முக்கிய செய்தி:
டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தனது மகள் கனிமொழி தீபாவளிப் பண்டிகைக்குள் வீட்டில்இருக்க வேண்டும் என்று தனது துணைவி ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் கனிமொழியை சிறையில் சந்தித்தபோதும் கனிமொழிக்கு கருணாநிதியும், ராஜாத்தியம்மாளும் ஆறுதல் கூறி விட்டு வந்துள்ளனர்.

நேற்று டெல்லி சென்ற கருணாநிதி அங்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சோனியா காந்தியை, கருணாநிதி நேற்றுதான் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சோனியாவிடம் கருணாநிதி நலம் விசாரித்தார். மேலும் கனிமொழி குறித்தும் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், கடந்த ஐந்து மாத காலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி தீபாவளிக்குள் தங்களது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கருணாநிதி சோனியாவிடம் கூறினார்.

தனது மனைவியின் வலியுறுத்தலின் பேரிலேயே சோனியாவை கருணாநிதி சந்தித்ததாக கூறப்படுகிறது. தனது மகளும், பேரனும், தீபாவளிக்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார் ராஜாத்தியம்மாள் என்றும் கூறப்படுகிறது.
எவ்வளவு முக்கிய பிரச்சினை சம்பந்தமாக டெல்லியில் தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பினால் கூடங்குளம் பிரச்சினை தீர்ந்துவிடும்.
இலங்கை அகதிகளின் துயரம் தீர்ந்துவிடும்.
விலை உயர்வு குறைந்து விடும்.
மக்களின் எல்லா பிரச்சினைகளும் இல்லாமல் போய்விடும்.
அதிலும் கேவலமான விஷயம் தன துணைவியாரின் ''கட்டளை'' இது. அதனால்தான் டெல்லியில் தலைவர்களை சந்திக்கிறார்.
தமிழ்நாடு இன்னும் இவரை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
கார்த்திக்+அம்மா

1 comment:

Jeevan said...

குடும்பத்தையும் அரசியல்லையும் இணைச்சா இப்படித்தான்.