About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/04/24

அக்ஷய  திரிதியை:

எத்தனையோ  நாட்களாக  தேடிக்  கொண்டிருந்த  கேள்விக்கு  இன்றுதான்  பதில்  கிடைத்தது.

நன்றி .ஹரிகேசவ  நல்லூர்  ஐய்யா ..ஜி  தொலைக்  காட்சியில்  அவர் அளித்த விளக்கம்.:
சூரியன்  +சந்திரன்  இரண்டும் உச்சம்  பெரும்  நாள்  இது. இது வானவியல்  அறிவியல்  படி கூட  மிக  முக்கியத்துவமான  நாள்தான். இந்த  இரண்டு  கிரகங்கள்  [  ஒன்று நட்சத்திரம்,  மற்றொன்று  துணைக் கோள். ].  ஆனால்  இவை இரண்டும்   பூமியின்  மேல் அதிக  தாக்கத்தை ஏற்படுத்தும்.  ஆக  இந்த  நாளில்  வேறு   ஏதோ  நிலவியல்  உண்மை  இருக்கக் கூடும்.  ஒரு வேளை ,  சமீபத்தில்  ஏற்பட்ட  நிலநடுக்கங்களுக்கும்       ஏதாவது  சம்பந்தம்  கூட இருக்கலாம்.இதன் தாக்கம்  அல்லது  உண்மை ,அதன்  சக்தி பூமி  மேல்  ஏதோ  ஒரு மாற்றத்தை  உண்டாக்கலாம்.

அது என்னவென்று  நம் முன்னோர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால்,  இடைப்பட்ட  காலத்தில்  நாம்தான்  எல்லாவற்றையும்  நமக்கு தகுந்த  மாதிரி  மாற்றிக் கொண்டு, எல்லாவற்றையும்  வியாபாரமாக்கி  விட்டோமே.
யாராவது , [ ஒரு வானவியலாளர்  அல்லது  ஒரு ஜோதிடர்  ] இதன்  உண்மைகளைப் பற்றி இன்னும்  அதிகம்  சொல்லலாம்.  அல்லது  ஆராய்ச்சி  செய்யலாமே.
Whatever  our ancestors did ,had a scientific reason.For so many years  ,i have been  searching for an answer to the importance given to this 'AKSAYA  THIRITHIYAI.'.
And  today  i got a reasonable explanation. Thanks to HARIKESAVA  NALLUR VEKATRAMAN JI.
in Z t.v he said that this day both sun and Moon  are in peak position.
Both the astronomical bodies surely have a strong effect on Earth.
What will be the impacts of this position on earth?
Definitely  there should be some changes.
May be the recent earthquakes are due to this conjunction.
I request  any scientist or an astronomer to make a study and give  a right explanation.
ONE THING   for sure,  is that our ANCESTORS had a very deep knowledge about everything. We should really feel proud of our ancestry.
karthik+amma

2012/04/15

நான் எழுத நினைத்ததை இவர் எழுதியுள்ளார்.
http://sivathy.blogspot.in/2012/04/blog-post_15.ஹ்த்ம்ல்
நன்றி.
கார்த்திக்+அம்மா

2012/04/11

புத்தாண்டு :
அது தை மாதமாக இருந்தால் என்ன , சித்திரை மாதமாக இருந்தால் என்ன? இந்த தலை முறை இதைப் பற்றி யோசிக்கக் கூடப் போவதில்லை . அவர்களுக்கு தமிழ் மாதங்கள் தெரியுமா , கண்டிப்பாக 25 % பேருக்கு கூட தெரியாது.
அவர்களுக்கு ஐ.பி.எல் போதும். கார்டூன் போதும்.
இந்த நாட்கள் எந்த பெர்ய வித்தியாசத்தையும் தருவதில்லை.
அரசு ஊழியர்களுக்குத்தான் கொண்டாட்டம். இன்னொரு விடுமுறை நாள். தொலைக் காட்சியில் அவர்களின் இஷ்ட தெய்வங்களான நடிகர்கள் பேட்டி தருவர். பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.
ஒரு முதல்வர் தை ஒன்றை கொண்டாடுவதா , சங்கமமா , நாங்கள் என்ன இளைத்தவர்களா , எங்கள் கொண்டாட்டத்தை பாருங்கள் என்ற சவால்தான். யாருடைய வரிப் பணம் ???
சும்மா புலம்புவதை தவிர வேறு என்ன கிழிக்க போகிறோம் ??????
கார்த்திக் +அம்மா

2012/04/07

பகவத் கீதை :
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று ஆத்திகர்கள் கோபப் படலாம்.
ஆனால் யாராவது இந்த கேள்விக்கு சரியான பதில் தாருங்கள்.
கேள்வி:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்கிறார் கிருஷ்ணன் .
அப்படியானால், சுனாமியில் லட்சக் கணக்கானவர் இறந்தனரே ,அது நன்றாக நடந்ததா ? பெற்றவள் பிள்ளைகளை இழந்து, குழந்தைகள் பெற்றோரை இழந்து, உடமைகளை இழந்து சோகத்தில் பரிதவித்து நின்றனரே ,அது நன்றாக நடந்ததா?
ஒரு விமானத்தில் பயணித்த அனைவரும், இன்னும் சற்று நேரத்தில் ,நம் குடும்பத்தை பார்க்கப் போகிறோம், நம் தாய் நாட்டு மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் இருந்த போது விமானம் வெடித்து கரிக்கட்டையாயினரே அது நன்றாக நடந்ததா?

ஓடும் பேருந்தில் தீ பிடித்து அடையாளம் காண முடியாத அளவுக்கு பயணிகள் கருகிப் போயினரே , அது நன்றாக நடந்ததா?
இதை எல்லாம் எப்படி நியாயப் படுத்துகிறது இந்த மதம், ''இந்து மதம் ? ''
மீறிக் கேட்டால். முற்பிறவி, கர்மா என்று கதை சொல்வார்கள்.
வந்தவர்கள் எல்லாம் போக வேண்டியவர்கள்தான் , பிறந்தவர்கள் எல்லாம் இறப்பவர்கள்தான் என்றெல்லாம் உபதேசம் செய்வார்கள்.எல்லோரும் இறக்கப் போபவர்கள்தான். ஆனால் யார் ,எப்போது என்ற கேள்வி இருக்கிறதே.
அதையும், தாண்டி , கடவுளுக்கு நல்லவர்களை நிறைய பிடிக்கும், அதனால் இவர்களை சீக்கிரம் அழைத்துக் கொண்டார் என்பார்கள்.
அப்படியானால், உயிருடன் இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்களா ?
என் கேள்விக்கென்ன பதில்?

கார்த்திக்+அம்மா