About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/12/26

IMPOTENT:
PLEASE TAKE A DICTIONARY AND LOOK FOR THE MEANING OF THIS WORD.:
It is :
powerless 
lacking all strength
helpless 
அப்பாடா
குருமூர்த்தி சொன்னாலும் சொன்னார்.
உடனே ஆரம்பித்து விட்டார்கள்.
எப்படி சொல்லலாம்.
நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா???????????????
கடவுளே.
O GOD .
எனக்கே இந்த அனுபவம் உண்டு.
DEPENDANT ......dependant
DEPENDENT ......dependent
இரு வார்த்தைகள் உண்டு.
ஒரு கடிதம் எழுதும் போது dependant  என்ற வார்த்தையை எழுதினேன். என் கிளார்க் சிரித்தார்.(கேலியாக)
ஒரு ஆங்கில ஆசிரியை எழுதுவதை பார் என்று.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
It is foolish to argue with fools.
மௌனம்தான் சிறந்த பதில்.
குருமூர்த்தி அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மற்றபடி அவர் சொல்லும் மீதி விஷயங்களில் எனக்கு விவாதம் உண்டு.
அதை பிறகு ஒரு நாள் பேசலாம்.
பி .கு.
ஒரு முறை சுப்பிரமணிய சுவாமி paraiya என்ற வார்த்தையை பயன் படுத்தி விட்டு பட்ட அவஸ்தை நினைவிற்கு வருகிறது.
கார்த்திக் அம்மா

2017/12/20

J.J @APPOLLO
I am not a great political analyst.
Not even a novice.
நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல.
அரைகுறைதான்.
என் வாழ்க்கையைப் போல் அறிவும் அரைகுறைதான்.
ஆனால் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்.
'' அம்மா '' வின் வீடியோ வெளியானது
தினகரனுக்கு உதவுமா என்று தெரியவில்லை.
 அம்மாவை பார்த்த மக்கள் உணர்ச்சி மிகுதியில் இரட்டை இலையில்   வோட்டு போடப் போகிறார்கள்.
புத்திசாலித் தனமாக செய்வதாக நினைத்துக் கொண்டு தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டார்களோ ?
24 அன்று தெரியும்.
கார்த்திக் அம்மா

2017/12/19

நான் திமிர் பிடித்தவள் :
எனக்கு மேட்டூரில் கொடுக்கப்பட்ட பல பட்ட பெயர்களில் இதுவும் ஒன்று.
பொய் பேச மாட்டேன்.
தவறு செய்ய மாட்டேன்.
பயங்கரமான கொள்கை வாதி.
PERFECTIONIST to the core .
my  punch dialogue :
ஊழல் செய்பவர்கள் செய்து கொள்ளுங்கள் .
உங்களை திருத்த நான் வரவில்லை .
நீங்கள் திருந்த மாட்டிர்கள் .
என்னை அந்த சாக்கடையில் இழுக்காதீர்கள்.
இப்படியெல்லாம் பேசினால்
'''''அவ யாருக்கும் அடங்க மாட்டா ''''''''
'''''அவ யார் பேச் சையும் கேட்க மாட்டா ''''''
நான் அவர்களிடம் கேட்பேன்
காந்தி பொய் சொல்லவில்லை என்றால் மஹாத்மா என்கிறீர்கள்
ஆனால் எனக்கு  ''''திமிர் பிடித்தவள் ''பட்டம் கட்டுகிறீர்கள் .ஏன் ???
போராட்டம்தான்.
எப்போது ......
....யார் .....
என்ற விவரங்கள் வேண்டாம்.
என் கணவர் Quality control engineer .
ஒரு கையெழுத்து போட்டால் போதும்.
அன்றைய அரசு ஒரு சூட்கேஸ் தருவதாக சொல்லியது.
சென்னைக்கு வரவழைக்கப் பட்டார்.கணவர்.
அவருடன் junior er .
நானும் உடன் வந்திருந்தேன்.
என் கணவருக்கு இந்த விஷயத்தை என்னிடம் சொல்ல தைரியம் இல்லை.
நான்தான் ராட்சசி ஆயிற்றே .
ருத்ர தாண்டவம் ஆடி விடுவேனே .
விஷயம் சொல்லப் பட்டது.
என் பதில் 
பணம் வாங்கினால் நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நான் என் மகன்களுடன் வாழ்ந்து கொள்கிறேன்.
இந்த விஷயம் தெரிந்தவுடன்
எத்தனை பேருக்கு என் மேல் எவ்வளவு கோபம்.
இவ பெரிய் ய் ய் ய் ய .........
  கார்த்திதான் சொல்வான் 
என் அம்மா சிங்கம் 
எப்போதும் அப்படியேதான் இருக்க வேண்டும் என்று ( இந்த சிங்கம் சிங்கிள் வசனம் வருவதற்கு முன் ).
கண்ணம்மா கார்த்தி 
உன் சொல்படி இந்த அம்மா சிங்கமாகத்தான் இருக்கிறது.
ஆனால் கிழட்டு சிங்கம்
சக்தியற்ற சிங்கம்.
உலகில் இருந்து விலகி தன்னை தானே ஒரு தனி அறை  சிறையில் அடைத்து கொண்ட சிங்கம்.
இப்போது சொல்லுங்கள்.
நான் திமிர் பிடித்தவள்தானே
கார்த்தி அம்மா

2017/12/11

இது செய்தி : :
மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராததால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்
இது உண்மை : :
நமக்கு தெரியாத யாரோ ஒருவருக்கு நடந்தால் அது செய்தி.
நமக்கே நடந்தால்??????????????
செந்திலின் (கார்த்திக்கின் தம்பி )
நண்பன்  ஒருவன் சென்னையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தான் (past tense ).
புதன் மாலை வேலையில் இருந்து திரும்பி வந்த அவன் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் எனக்கு களைப்பாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறான் .
ரெஸ்ட் எடு என்று சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள். 
சற்று நேரம் கழித்து எனக்கு முடியவில்லை என்று சொல்லியிருக்கிறான்.
நண்பர்கள் ஆம்புலன்ஸ் தேடிய போது அந்த ஆம்புலன்ஸ் வர மறுத்து விட்டதால் ஆட்டோ,cab  என்று தேடியதில் நேரம் வீணாகி அவன் நாடித்  துடிப்பு குறைந்து டாக்டர் வந்து பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. 
புதன் இரவிலிருந்து மேட்டூர் சென்று எல்லாம் முடித்து வெள்ளி இரவுதான்  வீடு திரும்பினான் செந்தில்.
l .k .g முதல் ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி வளர்ந்த நட்பு 
மனம் அதிர்ந்து ....அழுது ......
ஒரு உயிர் அது சம்பந்தப் பட்டவர்களுக்குத்தான் பெரிது.
ஆனால் ஆம்புலன்ஸ் சேவையில் தொய்வு என்பது தெரிகிறது.
எல்லா சேவைகளும்தான்.
கார்த்திக் அம்மா


2017/12/06

இரவு 11 மணி
நம்ப  நம்ப முடியவே இல்லை.
ஒரு அரசு அதிகாரி இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்.
11 மணிக்கு ஒரு மனுவை தள்ளுபடி செய்கிறார்.
என்ன ஒரு கடமை உணர்ச்சி.
புல்லரிக்கவில்லை.
புல் அரிக்கவில்லை.
மரமே அரிக்கிறது.
இந்த வருட விருது இவருக்குத்தான்.
புயலால் பாதிக்கப் பட்டு மீனவர் குடும்பங்களின் படும் துயர் கண்டு மனம் மிக மிக வேதனைப் படுகிறது.
பெண்களின் கதறல் பதற வைக்கிறது.
எந்த வழியில் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் தெரியவில்லை.
இவர்களின் என்றும் தொடரும் கஷ்டங்களுக்கு ஒரு விடிவு
ஒரு தீர்வு கண்டு பிடிக்க
சம்பந்தப் பட்டவர்கள் முயற்சி செய்யுங்களேன்.