About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/10/30

விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?

பயங்கர பேருந்து விபத்து - 40 பேர் பரிதாபச் சாவு!40 பேர்.அதில் பாதிக்கும் மேல் வாலிப வயது. .
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
எத்தனை ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான  மனைவியை பார்க்கும் ஆவலுடன்,  அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக் கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும் நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன் .அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம் செய்தவர்களா? 40 தாய்களும்  பாவிகளா?சுற்றம்,  உறவு, என்று அத்தனை பேரும் சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும் ...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே  வெந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி  சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால்  போவது, யார் பின்னால் போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள் நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த  பெங்களூர்  பஸ் விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க முடியாது இந்த வேதனையை..

விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?

பயங்கர பேருந்து விபத்து - 40 பேர் பரிதாபச் சாவு!40 பேர்.அதில் பாதிக்கும் மேல் வாலிப வயது. .
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
எத்தனை ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான  மனைவியை பார்க்கும் ஆவலுடன்,  அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக் கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும் நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன் .அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம் செய்தவர்களா? 40 தாய்களும்  பாவிகளா?சுற்றம்,  உறவு, என்று அத்தனை பேரும் சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும் ...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே  வெந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி  சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால்  போவது, யார் பின்னால் போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள் நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த  பெங்களூர்  பஸ் விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க முடியாது இந்த வேதனையை..

2013/10/28

அமரர்   வாஜ்பாய்க்கு  ஆழ்ந்த .இரங்கல் :
கொடுமைடா  சாமி.ஒரு ex P .M உயிரோடு  இருக்கிறாரா இல்லையா என்று கூடவா தெரியாது?
மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் தன்னிலை மறந்து விட்டனரா?  File  காணோம் என்றால்  நான் என்ன watchman  வேலையா பார்க்க முடியும்  என்று கேட்கிறார் P .M .ஏன் காணாமல் போயிற்று யார் காரணம் என்று தெரிந்து அவர்களை dismiss செய்யலாமே.சிறையில் தள்ளலாமே. files கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கலாமே.
கேட்டால் சோனியாதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
வாஜ்பாய் அமரர் ஆனதற்கும் சோனியாதான் காரணமோ?
இவர் அடுத்த பட்ஜெட் போடப் போகிறார்.
இந்திய  மக்கள் எல்லாவற்றிற்கும் தயார்.
.....     ....   ....  .....
கதவை திறந்தால்  100 பேர் கம்பு ,கொம்புடன்  தயாராக இருக்க போகிறார்கள் (ஐயோ , ஐயோ  உன் பதிவை 1 அ 2 பேர் படித்தாலே அதிகம் .இப்படி  ஒரு build up தேவையா கலா கார்த்திக்?)
சரி,  சசரிரி .
வழக்கம் போல் 19 century படத்தை இப்போது பார்ப்பதுதானே என் வழக்கம்.அன்று
அவ்வை ஷண்முகி பார்த்தேன்.அந்த பெண் என்னமாய் நடித்திருக்கிறது.தெய்வ மகள் பெண்ணை பாராட்டியவர்கள் இந்த பெண்ணை பாராட்டினார்களா?
வசனம் அற்புதம்.மீனா அழகு. சாம்பார் சூப்பர். எல்லோருமே நிறைவாக செய்திருந்தனர்.குட்டி பெண் என் மனதை மிகவும் கவர்ந்தாள்.

2013/10/27

இஷ்டம் : திரை விமர்சனம் :
 எப்போது வந்த படமோ தெரியாது. இன்று Z டி .வி யில் ஒளிபரப்பானது.அகஸ்மாத்தாக  பார்க்க நேரிட்டது.
பொதுவாகவே I .T சம்பந்தப்பட்ட படம் என்றால் ஒரு ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.
ஏனென்றால் அவர்களில் 90 % பேர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
Office தொடரில் வருவது போல்தான்.நீ என்னை லவ் பண்ணுகிறாயா , நான் உன்னை லவ் செய்யட்டுமா என்ற கேள்வியிலேயே நாட்கள் ஓடும். சரி திருமணம்தான் செய்து கொள்ளலாமே  என்று முடிவு செய்கிறார்கள்.
இந்த படமும்  அதே போல்தான்.அவசர கல்யாணம். அவசர பிரிவு.
           எனக்கு மிகவும் பிடித்த வசனம் .பையனின் அம்மா  அந்த மாதர் சங்க தலைவியை காய்ச்சும் இடம்தான்.
பல பெண்கள் குடும்ப பந்தத்திலிருந்து வெளியேற காரணமே இவர்கள்தான். பெண்கள் அடிமை இல்லை. பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்த மாமேதைகள்  சொல்லும் அறிவுரையாலேயே  பல பெண்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.
ஆண்களில் ராமன்கள் உண்டு என்று படத்தை முடித்திருந்தார்.டைரகடர்.
 இந்த படம் ஓடியதா, வெற்றி படமா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.ஆனால் இது போல் படங்கள் இன்னும் வர வேண்டும். நிறைய மாயைகள் மறைய வேண்டும். படத்தின் டைரக்டருக்கும்  தயாரிப்பாளருக்கும் என் நன்றிகள்.
வெங்காய விலை ..மற்றவற்றின் விலை...வருமான உயர்வு 
எனக்கு வேதனைப்படுவதா , நகைப்பதா என்று தெரியவில்லை.
  எப்படி இப்படி ஒரு கூப்பாடு?
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகியுள்ளதா கவும்  மற்ற பொருள்கள் எல்லாம் 1 ரூபாய்க்கும் 2,3 ரூபாய்க்கும் கிடைப்பது போலவும் ....எந்த பொருளின் விலை கம்மியாக உள்ளது?
அரிசி,பருப்பு,எண்ணெய் ,பால் பொருட்கள் ,சோப்பு போன்ற பொருட்கள் விலை யும்தான் விண்ணை எட்டியுள்ளது.
ஒரு சோப்பு  50 ரூபாய்க்கு விற்றால் வாங்கும் மக்கள் ,10 நாட்களில் ''சிகப்பாகி விடுவீர்கள்''  என்ற கிரீம்களை  500 ரூ கொடுத்து வாங்கும் மக்கள் ,அந்த கடைகளில் போய் அவர்கள் சொல்லும் விலையில் ஒரு போலி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு பெருமையுடன் வரும் மக்கள்  அதைப் பற்றி ஏதாவது  குறை சொல்கிறார்களா ?
அட ,ஒரு துணிக்கடைக்கு  சென்றேன். ஏதாவது ஒரு நாள் ( வருடத்தில் ஒரு நாள் ,யாராவது  உறவினர்கள் வந்து அவர்களுக்காக  செல்ல வேண்டியிருக்கும் )
அப்படி சென்ற போது எனக்கு மயக்கம் வராத குறைதான்.ஒரு சாதாரண சுடிதார் கூட 2500 ரூ ,அதை விட சாதாரண புடவை 1500 -10000 வரை.
என்னுடன் வந்தவர்கள் உணவுக்கு தக்காளி,பால் செலவுக்கு அத்தனை கஞ்சத்தனம் செய்பவர்கள் , அந்த கடையில் ரூ 10000 த்திற்கு  துணி எடுத்தனர்.
   சரி.....இப்போது தீபாவளி  வருகிறது. பட்டாசு விலை 30%  அதிகமாகி உள்ளதாக செய்தி சொல்கிறது.
யாராவது 2000 ரூ விட கம்மியாக வாங்குகிறார்களா  என்று சொல்லுங்கள்?
அப்போது மட்டும் எந்த புலம்பலும் இல்லை. அது ஒரு பெருமை.!!!1
இதை விட முக்கியமான விஷயம் :எல்லோரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.எல்லோரின் வாங்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது
     வெங்காயமே இல்லாமல் சமைத்தாலும்  நன்றாக இருக்கும்.
விரத நாட்களில் உணவில் வெங்காயம்  சேர்க்க மாட்டார்கள்.அன்றுதான் உணவு இன்னும் அதிக சுவையுடன் இருப்பது போல் தோன்றும் .
சரி ,10 வெங்காயம் போடும் இடத்தில் 5 வெங்கயம் போட்டு  பயன்பாட்டை குறைத்து ,கம்மியாக வெங்காயம் வாங்குங்கள் .
வியாபாரிகள் எவ்வளவு நாள் பதுக்க முடியும்?
கண்டிப்பாக விலையை குறைத்துதானே விற்க வேண்டும்.
செயல் இழந்த மத்திய அரசு 
என்னதான் செய்கிறது அரசு? வியாபாரிகள் பதுக்குகிறார்கள் என்று சொல்லி விட்டால் சரியா? ஒரு ரெய்டு  போய் அதை வெளியே கொண்டு வர முடியாதா?ஏற்றுமதியை  நிறுத்த முடியாதா? காமெடி செய்கிறது மத்திய அரசு.

2013/10/18

கிராமத்து குர்பானி :
ஒட்டகங்களை  வெட்டக் கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார் என்ற செய்தி எனக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டது.
நாங்கள் ( நான்+என் சகோதரர்கள் ) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்.நான் P .S .G .என் அண்ணா கோவை அரசு மருத்துவ கல்லூரி.
கிராமத்தில் 'தவம்'  என்று கொண்டாடுவார்கள். பங்காளிகள் எனப்படும் அனைவரும் எங்கிருந்தாலும் வந்து குல தெய்வ வழிபாடு செய்வார்கள்.எனக்கு விவரம் தெரிந்து வந்த முதல் தவம்அது.
என் அண்ணா கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்.ஏதோ  பண்டிகை என்று நினைத்து தன நண்பர்களையும் அழைத்து வந்து விட்டார் வீட்டிற்கு.அடுத்த நாள் கிராமத்திற்கு சென்றோம்.என் பெரியப்பாதான் ஊர் தலைவர். சிற்றரசர் போல்.ஊருக்கு அவர்தான் ராஜா. ஊரே கையெடுத்து கும்பிடும்.  சினிமாவில் வருவது போல்தான்.
ஆனால் நான் ''பெரியப்பா' என்று அதட்டலாக( அப்படியே அழைத்து பழகிவிட்டது ) கூப்ப்பிட்டால் போதும். சிறியதாக ஒரு நடுக்கம் வந்து ''என்ன பொண்ணு'' என்பார்.
அவரை நன்றாக அலங்கரித்து,மாலை போட்டு ஒரு குதிரையில் ஏற்றி கோவிலுக்கு கூட்டி வந்தார்கள். எனக்கு அவரை பார்க்க (அழகாக இருந்தார்) வேடிக்கையாக இருந்தது.
ஆனால் உண்மையான வேடிக்கை அப்புறம்தான் ஆரம்பித்தது.எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்கள் வந்தார்களோ ?ஆளுக்கொரு ஆடு, கோழி .ஒருவர் வெட்டி வெட்டி என் பெரியப்பாவிடம் கொடுக்க, அவர் அந்த ஆட்டை வாயில் வைத்து அதன் ரத்தத்தை உறிஞ்சி துப்பினார்.அத்தனை மக்களும் அதை கையிலேந்தி (அதற்கு அவ்வளவு தள்ளு முள்ளு ,அடிதடி,) குடிக்க,.....
அதை குடித்தால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குமாம்.நோயுள்ளவர்களுக்கு நோய் பஞ்சாய் பறந்து விடுமாம்.ஊரே ரத்த மயமாக காட்சியளித்தது.ஒரூ  1000 ஆடு ,கோழிகள் இருக்கும்.
ஏற்கனவே பெரியப்பாவிற்கு கள்ளை ஊற்றி அரை மயக்கத்தில்தான் கொண்டுவந்தார்கள்.இல்லையென்றால் அந்த ரத்தத்தை குடிக்க முடியாதாம்.கள்  மயக்கம்+ரத்தமும் சேர்ந்து கொள்ள பெரியப்பா முழு மயக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்தார்.
.......   ..... பார்த்து கொண்டிருந்த நான்,+ என் அண்ணா,+ அவரது நண்பர்களும்தான்   மயக்க நிலை. .....விதிர் விதிர்த்து போய்  விட்டோம். ...சத்தியமாக இப்படி  ஒரு நிகழ்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
'' டேய் மம்முட்டி ( என் அண்ணாவை அப்படித்தான் அழைப்பார்கள்...நாங்கள் மம்மட்டியான் ஊர் என்பதால்.) டேய் மம்முட்டி, இன்னொரு முறை பண்டிகை, பொங்கல்  என்று ஊருக்கு கூப்பிட்டால் மவனே '' என்று தலை தெறிக்க பறந்தோடியவர்கள்தான் ......அப்புறம் என் திருமணத்திற்குதான்,(அதுவும் சேலத்தில் நடந்ததால்)வந்தார்கள். இன்று அவர்கள் பெரிய மருத்துவர்கள்.
......     .....   ......  
இப்போது நிகழ்காலத்திற்கு  வருவோம். ஒட்டகம் வெட்டக் கூடாது என்பவர்கள், இது போல் ஆடுகளையும் வெட்ட கூடாது என்று போராடலாமே . நகரில் உள்ள இறைச்சி கடைகளின் முன் போய்  தர்ணா செய்யலாமே.
அன்புடன்,
கலா கார்த்திக் (கார்த்திக் அம்மா )


2013/10/09

ராமேஸ்வரம் கோவிலில் பன்றி :

        பன்றி வந்தால் நல்லதுதானே
.விஷ்ணுவின் அவதாரம்தானே.
தங்கை ஆத்துக்காரரை பார்க்க மைத்துனன் வந்தால் வரவேற்க வேண்டியதுதானே.அவரே விஷ்ணு..அவரை சபையில் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்ய வேண்டியதுதானே சரி.
அதை விடுத்து கோவிலை சுத்தம் செய்தால் விஷ்ணு கோபித்து கொள்ள மாட்டாரா?
எந்த நேரம் பன்றி, எந்த நேரம் வராகம் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே.
நிறைய புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்து மகா மேதைகளே இதற்கும் ஒரு கதை சொல்லி எங்களை முட்டாளாக்குங்களேன்.

2013/10/07

பழி வாங்கிய மாணவன் :
நான் ஆசிரியையாக இருந்த காலம்.
மாணவர்களை திட்டுவதில் பல ரகம்.
தோலை உரித்து உப்புகண்டம் போட்டு விடுவேன்
2.கொடிக்கம்பத்தில் தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்
3.ஒரே அறையில் அத்தனை பல்லும் கொட்டி விடும்
இப்படி திட்டியதை மனதில் வைத்து கொண்டே இருந்திருக்கிறான் ஒரு மாணவன்.இதற்காகவே பல்மருத்துவமும் படித்திருக்கிறான்.(ர் ).
எனக்கு பல்வலி என்றேன் செந்திலிடம்.அவனும் என் மாணவன்தானே.இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று என் மாணவன் (செந்திலின் நண்பன் ) அழைத்து சென்றான்.
மாணவனுக்கு என்னை பார்த்ததும் பெரிய அதிர்ச்சி.கனகம்பீரமாக இருந்த நான் கடுங் கிழவியாக இருப்பேன் என்று எதிர்பார்க்காத அவன் திகைத்து ''என்ன Mm இப்படி ஆகி விட்டீர்கள்?''
சரி. விசாரிப்புகள் எல்லாம் முடிந்து treatment ஆரம்பம்.4 பல் எடுத்தாக வேண்டும் என்று சொல்லி 10 நிமிடத்தில் படக் படக் என்று 4 பல்லையும் பிடுங்கி விட்டார்.இப்படி பழி வாங்க வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தாரோ.
அவன் மனைவி, மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவரிடமும் என் English Mm என்று ஓடி ஓடி சென்று சொல்லி அவ்வளவு சந்தோஷப் பட்டதை பார்த்து நான் நெகிழ்ந்தே போய்  விட்டேன்.அவர் Dr .முரளிமணி .
வாசன் DENTAL  CARE .
மாணவர்களை 'மகன்களே ' என்றுதான் அழைப்பேன்.
கார்த்தி,செந்தில் இருவரையும் குட்டிஸ் என்று சொல்வது வழக்கம்.
அப்படி மகன்களே என்று உறவாடியதன் பலன் என் மகன் தன கடமையை செய்து விட்டான்.
வாழ்க.