About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/02/16

பதிவிடுவது:
கார்த்திக் அம்மா
.......      ......
மரண அடி
புதுடெல்லி: டெல்லியில் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் காதலர்கள் இந்து அமைப்புகளை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காதலர்களை கண்டால் திருமணம் செய்துவைப்போம் என "ஹிந்து மஹாசபா" அறிவிப்பு செய்திருந்ததை ஒட்டி காதலர் தினமான நேற்று ஏராளமான இளம் காதலர்கள் ஹிந்து மஹாசபா அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளனர்.
திகைத்துப்போன இந்துமகாசபா நிர்வாகிகள் காவல்துறையினரிட்ன் உதவியை நாடியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
*******
 
கோவை : கோவையில் காதலர் தினத்தன்று தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை, பெண் கேட்டும் போராட்டம் பாஜக அலுவலகம் முன் நடைபெற்றது.
"இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே" எனக் கூறியுள்ள பாஜகவின் அறிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டுள்ள இந்து மணமகன்களுக்கு இந்து பெண்களை முறைப்படி மணமுடிக்க கேட்டு, தமிழ்ப்புலிகள் அமைப்பின் செயலாளர் நாகை. திருவள்ளுவன் தலைமையில் கோவை பாஜக அலுவலகம் முன்பு பெண் கேட்கும் போராட்டம் நடைபெற்றது.
தலித்களை தொடர்ந்து இந்துக்கள் என வரலாற்று பொய்களை கூறி வரும் சங்பரிவார் அமைப்புகள், தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை மண முடித்து வைத்து அனைவரும் இந்துக்கள் தான் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக தமிழ்ப்புலிகள் அமைப்பின் தமைமை நிலையச் செயலாளர் இளவேனில், "காதலர் தினக் கொண்டாட்டத்தை சங்பரிவார் அமைப்புகள் தவறு எனக்கூறுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். பூங்காக்கள், கடற்கரைகளில் காதலர் தினம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை நாமும் ஏற்றுக் கொள்ளவில்லை. முறைப்படி பெண் கேட்கிறோம். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் என்பது பாஜகவின் கொள்கை. எனவே, எங்கள் இளைஞர்களுக்கு பெண் தாருங்கள் என முறைப்படி கேட்டு பாஜக அலுவலகம் சென்றோம்" என்றார்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்கள். தலைநகர் டில்லியில், காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என இந்து அமைப்புகள் கூறியதைத் தொடர்ந்து, திருமணம் செய்து வைக்க கேட்டு, காதலர்கள் இந்து அமைப்புகளை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.
  

ஹ ,,ஹா .
நன்றே,
நன்றே.
கலா கார்த்திக்


2015/02/10

பதிவிடுவது கார்த்திக் அம்மா ://

டெல்லி தேர்தல் :
கேஜ்ரிவால் வெற்றி::
நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல.
மனதிற்கு தோன்றியதை  எழுதுகிறேன்....
என்னைப் பொருத்தவரை இது கெஜ்ரிவாலுக்கு கிடைத்த வெற்றி அல்ல.
கிருத்துவ தேவாலயங்கள் தாக்கப் பட்டதால் ..கிருத்துவர்களின் கோபம்.......
முஸ்லிம்களின் கோபம்.......
தாங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை......மோடி வந்து விடக் கூடாது என்ற காங்கிரசின் நிலைப்பாடு.
என எல்லோரும் சேர்ந்து வேறு வழியின்றி கேஜ்ரிவாலை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.
எப்படியோ.....
ஜெயித்தாகி விட்டது.
சென்ற முறை செய்த தவறை செய்யாமல்,
உணர்வு பூர்வமாக செயல்படாமல் அறிவு பூர்வமாக ஆட்சி நடத்தினால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்
KALA KARTHIK

2015/02/08

பதிவிடுவது
கார்த்திக் அம்மா ************
மாநகராட்சியும் திருநங்கைகளும் :
கொடுமையே  கொடுமையே:
வரி வசூலிப்பதற்கு 100 ஆயிரம் வழிகள் இருக்க நம் மாநகராட்சிக்கு வந்ததே ஒரு ஐடியா .வரி செலுத்தாத HILTON  ஹோட்டலின் முன்  திருநங்கைகளை  நடனமாட விட்டு வரி கேட்டுள்ளனர்.
திருநங்கைகள் பல படங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுவதாக அவர்கள் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.
மாநகராட்சியை எதிர்த்து யாரும் போராடாதது ஏனோ ?
கலாகார்த்திக்

2015/02/05

எனது தந்தையும்   என் தந்தை ஆனவனும்.
என் கார்த்தி அழகன்.
அவன் கண்கள் மின்னும்.
கன்னத்தில் விழும் குழி தனி அழகு.
முகத்தில் ஒரு குறுகுறுப்பு.
ஒரு துறு துறுப்பு
அள்ளி கொஞ்ச வேண்டும் என்று வெறியாக இருக்கிறது
கார்த்திக் அம்மா