About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/08/30

வக்கிரம் ...வக்கிரம்...வக்கிரம்.
நானும் பார்க்கிறேன் .வர வர மனிதர்களுக்கு வக்கிர புத்தி அதிகமாகிக் கொண்டே வருகிறது.
கீழ் வரும் செய்தியை பாருங்கள்.
கறவை பசுவை நேற்றுமுன்தினம் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி போட்டிருந்தார். அப்போது அங்குள்ள புதரில் மது அருந்திய வாலிபர்கள், பசுவை அடித்து துன்புறுத்தினர். மேலும் அதன் பால் சுரப்பி காம்புகளை பிளேடால் அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டனர். இதனால் மடி காம்பிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், பசு மாடு வலி தாங்காமல் சத்தம் போட்டது. இதைக்கேட்டு அல்லிமுத்து சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு 5 வாலிபர்கள், மாட்டை கொடுமை படுத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி, அவர்களை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், “மாட்டின் காம்பை அறுத்தது போல உன்னையும் அறுத்து விடுவேன்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவலின்பேரில் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடம் வந்து மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். காம்பு அறுபட்டதால், தற்போது பால் கறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் அதிகமாக சுரந்த நிலையில், மடியில் நெறி கட்டியுள்ளது. இதனால் மாடு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. அத்துடன் அறுபட்ட காம்பில் இருந்து பால் தானாகவும் வெளியேறி வருகிறது. மாடு அவதிப்படுவதை பார்த்து அல்லிமுத்து மற்றும் அவரது குடும்பத்தார், கண்ணீர் விட்டு அழுகின்றனர்
என்ன ஒரு புத்தி.இவர்களை அப்படி செய்ய வேண்டும்.அரபு நாடுகளில் நடப்பது போல் நாடு ரோடில் வைத்து உறுப்பை அறுக்க வேண்டும்.
அந்த மாடு படும் வேதனையை இவர்களும் அனுபவிக்க வேண்டும்.
ஆத்திரத்துடன் 
கார்த்திக் அம்மா  

2017/08/26

இதுதான் உண்மை.
அதை விட்டு ஆளாளுக்கு ஒரு கதை சொல்வர்.

2017/08/25

விநாயகர் சிலைகளை கரைப்பது ஏன் 
www.dinamani.com/.../விநாயகர்-சிலைகளை-ஏ..
நம் முன்னோர்கள் எந்த ஒரு பண்டிகையையும் ஒரு அறிவியல் காரணம் கொண்டே கொண்டாடினர்.
அதே போல்தான் பிள்ளையார் சிலை கரைப்பும்.
''DESILTING '' என்று சொல்லி விட்டால் சுலபமாக புரியும்.
தினமணி இதை விரிவாக கொடுத்துள்ளது.
எனக்கு லிங்க் கொடுக்க தெரிந்த அளவில் கொடுத்துள்ளேன்.
வலை சித்தர் இதை வலையேற்றினால் நிறைய பேரை இந்த செய்தி சென்றடையும்.
கலாகார்த்திக் 

2017/08/21

அடேயப்பா .கண்ணை கட்டுதே.
ஒரு 200 பேர்கள்
வெள்ளை வேட்டி   வெள்ளை சட்டையில்
எதோ ரதங்களில் வருவது போல் வருவதையும் போவதையும் பார்த்தால்
பிரமிப்பிற்காக இருக்கிறது.
அவர்கள் நம் ஊர் மக்கள் போலவே தெரியவில்லை.ஏதோ  தேவலோக மக்கள் போல தெரிகிறார்கள்.
நாங்கள் ...ஆம் ஆத்மீகள் .....சாமான்யர்கள் ....அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒண்டு குடித்தனம் இருப்பது போலவும்
அவர்கள் தயவில் வாழ்வது போலவும்
ஒரு மன மயக்கம் வருகிறது.
தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்களை நினைத்த நேரத்தில் நீக்கவும்  அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஒரு  பயம் இருக்கும்.
5 வருடம் என்னை எந்த கொம்பனும் அசைக்க முடியாது என்ற திமிரா ?
நானே நிரந்தர முதல்வர்போன்றோருக்கு நடந்தது ஒரு பாடமாக வேண்டும்.
ஆடாதே மனிதா
ஆடாதே
என்ற பாடல் வரிகள்தான் நினைவு வருகிறது.
கார்த்திக் அம்மா

my mother

dear everybody,
in my blog now and then , my mom will peep into.she will write some 'PULAMPAL' and she dare call them
''POEMS''
bear her for my sake.

the first one is mine[which i wanted to refine, but found no time].

POSSIBILITY
i DON'T WANT LEISURELY DEADLINES
WORK EXPANDS TO FILL THE AVAILABLE TIME
I DON'T WANT IMPOSSIBLE DEADLINES
HOW CAN THERE BE A LIMIT TO ME?
IMPOSSIBILITY IS A HUMAN CONCEPT
I STOP WHEN I STOP

karthik amma starts;
what a poem!as if he defined and decided his end.
he often used to tell 'kal ka na ho'[there is no tomorrow].only sages could foresee.my son might have had the insight,or else why should he write like this? amazingly,he was always having Bharathiar's poem which starts as
thedich choru nitham thinru
[the meaning of the poem is]
i am not an ordinary person, who cares for the material wealth,
who runs after food,
who is interested in silly gossip,
who is often depressed with the silliest problems,
who is interested in pricking others,
who will become old with grey hair ,
and fall a prey to death,[like these funny persons]
oh!''SHIVASAKTHI''
tell me SHIVASAKTHI.
Don't u find that he has lived as he defined. he never became old.was as fresh and was in his favourite jeans and t shirt[he never had the habit wearing nighties or shorts,he hated that, for he thought it to be most indecent,felt half naked.his friends always made fun of him for sleeping in jeans]till the last second he was in jeans and no one saw him otherwise till he was taken to postmortem.
Hats off to you karthik.
very few people can only live as they like.most of us have to compromise a lot and have to forego all our principles and .you are the luckiest and blessed to have lived the way you liked.
Karthik,
there is a saying,
it is not how long you lived,
but
how well you lived
in that sense you lived a whole and complete life.
THE SHORTEST BUT THE SWEETEST LIFE.
இதுவும் மீள் பதிவு.
ஆகஸ்ட் மாதம்.என்றாலே கார்த்தியுடன் வாழ்ந்த கடைசி நாட்கள் என்பதால் மனம் பேயாய் கதறுகிறது.
26ம் தேதி கார்த்தியின் விபத்து நாள்.எங்காவது ஓடலாமா எதையாவது செய்து கொள்ளலாமா என்று மனம் ஆடுகிறது.
கார்த்தியை நினைத்தால் வாழ முடியவில்லை.
செந்திலை நினைத்தால் சாக முடியவில்லை.
யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது.தாங்க முடியாத வேதனையுடன் கார்த்திக் அம்மா

2017/08/20

மீள் பதிவு

KARTHIK ...AGAIN   ஜூலை 2006

Dear friends,
have u all forgotten me?
I HAVE COME BACK ALIVE.

Here after u can see me talking 2 u often. u know something?
ON 26 AUGUST at 8.50 a.m i started from home after having a nice and happy breakfast with my dearest and sweetest mom,[with my usual accessories,laptop,G.MINI,]. I WAS ENJOYING MY DRIVE while suddenly i had to apply brake.in a second i was flying in the air[enjoying it too?...as i used to take everything in that sense.]
i continue my blog
visit my blog frequently.
I AM WRITING MY BIOGRAPHY.
with luv and luv only,
karthik.k











GOD (..DOG ..)
தாங்கலை .முடியலை.
தொலைக்க காட்சியை பார்த்தால் ப +ப.
செய்தித்தாளை பார்த்தால் ...ப+ப.
வலை பக்கம் வந்தால் +ப+ப
பணம் +பதவி ????
பன்னிரு +பலனி
தூக்கத்திலும் இந்த இரைச்சல் நிற்க மாட்டேன் என்கிறது.
போதும். முடியட்டும்.

2017/08/13


 பாராட்டுக்கள் 
இது  இதுதான்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த இந்த விபத்தில், தனது சமயோசித செயல்பட்டால், மேலும் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் கான். அதனால் அவர் பெற்றோர்களுக்கு ஹீரோவாக மாறியுள்ளார். கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் கடும் ஆபத்தில் சிக்கினர். அவர்களுக்கு தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை, சொந்த செலவில் வெளியில் வாங்கிவந்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் கான். Dr Khan the hero who prevented more children from dying at Gorakhpur இது பற்றி பிஆர்டி மருத்துவமனையில் சம்பவத்தை நேரில் பார்த்த கெளரவ் திரிபாதி என்பவர் கூறுகையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். செய்வதறியாது அனைவரும் திகைத்த போது டாக்டர் கபீல் கான், சமயோசிதமாகச் செயல்பட்டார். உடனே தனது மருத்துவ நண்பர்களுக்கு போன் பண்ணினார். அவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டார். அதனையடுத்து தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தார். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே ஆக்சிஜன் பிஆர்டி மருத்துவமனையில் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, வெளியில் சென்று 3 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்தார். அதுவும் அரைமணி நேரம்தான் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே, மேலும் 10 சிலிண்டர்களை வெளியில் வாங்கி வந்து பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றினார். Dr Khan the hero who prevented more children from dying at Gorakhpur தனது சொந்த செலவில், இதை டாக்டர் கான் இதைச் செய்தார். அர்ப்பணிப்போடு அவர் செய்த உதவியால் மேலும் பல பச்சிளம் குழந்தைகள் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது. இதனால் அவர் ஏழை எளிய பெற்றோர்களுக்கு ஹீரோ போல தெரிகிறார். அவரை ஹீரோவாக நினைத்து பாராட்டுகிறார்கள்" என்று கூறினார். இந்த நிலையில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என்ற குற்றச்சாட்டை உ.பி.மாநில அரசு மறுத்துள்ளது. மூளைக் காய்ச்சல் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதைத்தான்  எல்லா அதிகாரிகளிடமிருந்தும்  நான் எதிர்பார்க்கிறேன் .ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.(posted on 12.11.2015)
அட என்ன செய்வார்கள்?????????
வேலையை விட்டு தூக்குவார்களா ???
ஒரு தள்ளு வண்டியில் காய் விற்பவர் பிழைக்கவில்லை ????
அட ஒரு மடத்தில் சேர்ந்து விடலாம்.
60 குழந்தைகளை காப்பாற்றினோம் என்ற நினைவு போதும்.
அந்த பெற்றோர் நன்றியுடன் கூட இருக்க வேண்டாம்.
அரசு விருது,  வேண்டாம்.
மனிதனாக பிறந்த நான் செய்ய வேண்டிய கடமை இது.
செய்தேன்.
அவ்வளவுதான்.
பாராட்டுக்கள்.அந்த மருத்துவருக்கு.
அன்புடன்
கார்த்திக் அம்மா 


2017/08/09

தன்யா ராஜேந்திரன் :
இவர் என்ன ட்விட் போட்டார் என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.
நானும் இப்படித்தான் ஏதோ ஒரு பதிவிற்கு கருத்து சொல்ல போய்
அய்யோடா .....
என்ன ஒரு கேவலமான ,
கீழ்த்தரமான  எதிர் வினைகள்.
என்ன
ஒரு பெண் என்றால் உடனே உடல் உறவு சம்பந்தப் படுத்தி தாக்க வேண்டுமா ?
உடனே ஒரு ஆணுடன் சம்பந்தப் படுத்த வேண்டுமா ?
நீ என்ன அவனுக்கு ****பாட்டியா  என்று கேட்க வேண்டுமா ?
பெண்ணின் உடம்பை குறித்து பேச வேண்டுமா ?
வலையில்
படித்தவர்கள் , படிக்காதவர்கள்
நல்ல வேலையில் இருப்பவர்கள் , இல்லாதவர்கள்
ஒரு குடும்ப தலைவனாய் இருப்பவர்கள்
என்று ஒரு கூட்டமே இருக்கிறது.
இவ்வளவு வக்கிரமா ???
பெண் என்றால் character assassination தானா ?
சீ  என்றாகி விட்டது.
இவர்களை திருத்த முடியாது.
இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று தோன்றியது.
கருத்துரை எழுதுவதையே நிறுத்தி விட்டேன்.
கார்த்திக் அம்மா

2017/08/08

மொட்டை அடித்தாயிற்று :
மொட்டை
முழு மொட்டை
ஹா  ஹா
முதலில் சந்தன மரம் கடத்தப்பட்டது.
அப்புறம் கிரானைட் கற்கள் ஏற்றுமதி என்ற பெயரில் காலி .
அப்புறம் சிலை கடத்தல்.
அப்புறம் மணல் .
அப்புறம் தாது மணல் (உலகிலேயே மிக அபூர்வமாக கிடைக்கும்)
அப்புறம் அப்புறம்
இன்னும் என்னடா பாக்கி என்று யோசித்தார்கள்.
அட
கோயில் தூண்கள் இருக்குதே
மறந்து போய்ட்டமே
இடி கோவிலை.
ஏற்று கப்பலில்
இன்னும் என்னடா பாக்கி இருக்குது தமிழ் நாட்டில்???????????????
எங்களுக்கு ...தமிழ் நாட்டு மக்களுக்கு............
 என்ன மிச்சம் இருக்கிறது????????????
இந்த பணம் போதுமா உங்களுக்கு ??????
எவ்வளவு பணம் .....நிரந்தர ....நானே என்றவர்கள் வாழ்வையெல்லாம் பார்த்த பின்னுமா ?????
பணம் பாதாளம் வரை பாயும்
பணத்தால் எதையும் சாதிக்கலாம்
என்றவர்கள் கதை தெரிந்த பின்னுமா ???????????????
வாழ்க்கை ஒரு நொடியில் முடியக் கூடியது .
புரிந்தால் சரி.
கார்த்திக் அம்மா