About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/10/30

சுர்ஜித் .நாடகம்

நான் இரக்கமற்றவள் .
கல்நெஞ்சக்காரி .
இதயமே இல்லாதவள் .
இப்படி இன்னும்என்னை  என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் .
ஆனால்
இமோஷனல்  emotional ஆகவே செயல்படுகிறோம் .
இந்த குழந்தை விழுந்தது யார் தவறு.
குழி வெட்டிய தந்தை.
குழந்தையை கவனிக்காத தாய்.
ஏன் அவர்கள் இருவரையும் யாரும் குறை சொல்லவில்லை ?
தண்ணீர் வரவில்லை என்றால் குழியை மூடியிருக்க வேண்டாமா ?
குழந்தை எங்கு விளையாடிக் கொண்டிருக்கிறான் என குழந்தை மேல் தாய் ஒரு கண் வைத்துக் கொண்டிருக்க வேண்டாமா?
சரி.நடந்து விட்டது.
மீடியாக்கள் ஏதோ இந்தியா சைனா யுத்தம் போல் லைவ் ஆக காட்ட வேண்டிய அவசியம் என்ன?அப்புறம்,
தமிழக மக்கள் அனைவரும் சோகத்தில் உறைந்து விட்டனர் என்ற அலப்பறை வேறு.
தமிழக மக்களே மனதை தொட்டு சொல்லுங்கள்.
வருத்தம் இருந்தது.உண்மை.ஆனால்
உண்ணாமல்
உறங்காமல்
வருந்தினோமா?
எல்லோருக்கும் ஒரு திரில்லர் சினிமா பார்க்கும் பொழுது போக்கு.
நன்றாக பொழுது போனது.(உண்மை இதுதான்.)
ஆனால் உண்மையை சொன்னால் எல்லோருக்கும் கோபம் வரும்.
அடுத்த நாடகம்.
20 லட்சம்
10 லட்சம்.
எதற்கு அந்த குடும்பத்திற்கு கருணை தொகை தர வேண்டும்?
கார்கில் போரில் போய் உயிரிழந்தானா .
அல்லது நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யப் போய் உயிர்  துறந்தானா ?
அந்த குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக தெரிகிறது.அப்புறம் அவர்களுக்கு எதற்கு பணம் தர வேண்டும்?
...
அப்படி பார்த்தால் டெங்குவால் இறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கொடுங்கள்.
விபத்தில் இறப்பவர்களுக்கும் கொடுங்கள்.இன்னும் எத்தனையோ பேர் அரசு உதவி வேண்டி நிற்கிறார்கள்.
எந்த காரணத்தின் அடிப்படையில் இந்த கருணை தொகை?
நியாய படி பார்த்தால் இதற்கான செலவு நிச்சயம் 2 கோடியாவது  இருக்கும் என கணிக்கிறார்கள்.இதை கொடுக்க வேண்டியது அந்த குடும்பம்.
அந்த குடும்பம் தன் சொந்த செலவு செய்வதாக இருந்தால் இவ்வளவு செய்திருக்குமா?
நியாயம்.
அரசு மக்களை காப்பாற்ற வேண்டியதுதான்.
கடமைதான்.
ஆனால் எல்லா இடத்திலும் இந்த கடமை சரி வர செய்யப் படுகிறதா?
இந்த லைவ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெற்றோர் தன் மகள் தண்ணீர் தேடியதையும்  தொட்டியில் விழுந்து உயிர் போய்விட்டதையும் எப்படி நியாய படுத்துவார்கள்?
ஆனால் அரசு இவர்களுக்கும் 50 லட்சம் தரலாம்.
அதற்கடுத்து the so called தலைவர்கள்....1 கோடி தர வேண்டும்.
அரசு வேலை தர வேண்டும்.etc .etc
வாழ்க தமிழ்நாடு.


2019/10/16

நினைவு

எப்போதோ எழுதியது
Rememberance 
As i have mentioned in my earlier post,from Adam, mothers feel the same grief and agony when their dearest son is snatched away from her. Some have the power and means to express but all suffer the same extremity,without sharing it to others.
here are two such outlets which i read.
One:Dearest Vijay,
2 years have passed since that August Day on which our dear one was called away.The blow was sudden, the shock is still severe.As time goes on we miss you more, more of your loving smiles, your cheerful face.Nobody on earth can fill your place.Not a moment passes without remembering you.
The intensity of grief of living without you will not diminish.We love, love you so much.Time can never erase your memory from our thoughts.You are in our hearts for ever.Our dearest one, we love you in a special way.The departure is too sudden.We cannot say goodbye to you.not a single minute has passed without remembering you in silent tears and loud cries.The agony and sorrow of your seperation will end only when we join you in heaven soon.
YOU were the most wonderful Gift to us, a gem in our family.Alas, your loss an incurable wound in our heart,too deep for tears.
The second one:From Prakash Raj, the actor,who bemourns the loss of his son.He says"my son was like a beautiful poem.like a dream, like camphor he dissolved in the air.I cry whenever I think of him.What design of life is this?"
what makes my Karthik's loss all the more greater is that after my husband's loss he was the one who saved me from doom,and made me live on earth by his unconditional,unmeasurable torrential love.So compared to others my loss cannot be explained in words, and my agony unfathomable.
Karthik amma

2019/10/14

அசுரன்

அசுரன்
மதுரை: "அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.. கூட படிக்கிற ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி செய்யறாங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.. வேற இடத்துக்கு என்னை மாத்து" என்று தந்தையிடம் அடிக்கடி கேட்ட 9-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இன்று பிளேடு வைத்து கிழித்து அறுத்துள்ளனர்.போதுமா ?????????
விஷத்தை பரப்பி விட்டீர்களா?????
நான் சேலம் மாவட்டம் .
என் தாத்தா ஊர் தலைவர்.
ஜமீன்தார்,ஊர்கவுண்டர் ,நாட்டாமை ...என எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
அவருக்கு அடுத்து என் பெரியப்பா தலைவர்.
இப்போது என் தம்பி ஊர் தலைவர்.
இன்றும் ஒரு பிரச்சினை என்றால் அவரிடம்தான் பஞ்சாயத்துக்கு வருகிறார்கள்.
ஆனால் ,    ஆனால் ,....
என் விவரம் தெரிந்த காலத்தில் இருந்து 
இப்போதைய சினிமாக்களில் காட்டப் படுவது போன்ற காட்சிகள் நிகழ்வுகள் ஒன்று கூட நடந்ததில்லை.
எல்லோரும் செருப்பு அணிந்துதான் நடந்தனர்.
ஒன்றே ஒன்று .வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
அந்த தடையும் கூட என் அம்மா வீட்டில் இருந்ததில்லை.
ஒரு வேளை ..என் அப்பா ஆங்கிலேயரிடம் படித்ததாலோ என்னவோ.
சில சமயங்களில் சமையல் கூட செய்வார்கள்.
சிறு வயதில் எங்களுக்கு அந்த பேதம் எல்லாம் தெரியாது.
அவர்களை '' அண்ணா '' என்றுதான் கூப்பிடுவோம்.
சில சிறு சிறு தவறுகள் வேண்டுமானால் நடந்திருக்கலாம்.
ஆனால் அந்த ஊரில் இருந்த தலித்துகள் அனைவரும் படித்து நல்ல வேலை யில் இருக்கின்றனர்.
என் அப்பாதான் தலைமை ஆசிரியர்.
ஒருவர் விடாமல் படிக்க வைத்தார்.
ஹரிஜன் விடுதி உண்டு.எல்லோரும் கண்டிப்பாக அங்கு வந்து தங்கி படிக்க வேண்டும்.
நடு இரவில் ரகசியமாக சென்று மாணவர்களை கண்காணிப்பார்.
அப்படி அவர்களை எல்லோரையும் முன்னேற்றினார்.
அதுவும் அல்லாமல் மற்ற ஊர்களிலும் கூட இவ்வளவு கொடுமைகளை நான் பார்த்ததில்லை.
தென் மாவட்டங்களில் இருக்கிறதோ என்னவோ.
......சரி....அப்படியே இருந்தாலும் 1968 களில் நடந்ததை இப்போது காட்டி மக்களை உசுப்பேத்துவது ஏன் ????
தெரியாதவர்களுக்கு கூட தெரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன???????
சென்னை மாணவர்கள் எத்தனை பேருக்கு தன் பக்கத்து மாணவன் என்ன ஜாதி என்று தெரியும்?
WHO CARES என்பதுதான் அவர்கள் போக்கு.
அதை விட சாதிக்க எங்களுக்கு நிறைய இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு 4 படங்கள் வந்தபின்  எல்லோருக்கும் ஜாதி உணர்வு 100% அதிமாகி விட்டது.
இல்லையென்றால் ஒரு பள்ளி மாணவன் பிளேடால் கீறுவானா?? அதை விட அந்த ஜாதி தலைவர்கள்.கலப்பு திருமணம் செய் என்ற உபதேசத்தால் சீரழிந்த கூட்டம்.
இந்த படம் சொன்ன விஷயத்தை  1980 முதல் நான் என் மாணவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.அரசு தரும் சலுகைகளை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
படியுங்கள்.அதுதான் உங்களை உயரத்திற்கு கொண்டு போகும் என்று சொல்வேன்.
எல்லா சினிமாக்கார்களுக்கும் என் வேண்டுகோள் ஒன்றுதான்.
சிறு புகையை ஊதி எரிமலை ஆக்காதீர்கள்.
உங்கள் சுய நலத்திற்காக ,சுய லாபத்திற்காக மக்களை மாக்கள் (விலங்குகள் )ஆக்காதீர்கள்.