About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/11/27

மக்கள் டி .வி
நம்பிக்கை    டி .வி
இரண்டு சேனல்களிலும்  12ம் வகுப்பு பாடங்கள்   மற்றும் கேள்வி  தாள் பற்றி அருமையாக பாடம் நடத்துகிறார்கள்.
மாணவர்கள் பார்த்து பயன் அடையவும்.
திருப்பதி உண்டியல் s .a சந்திரசேகரும் :
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவள் நான் .Religious Tolerance உண்டு.
என் அம்மாவைப் போலவே பக்கத்து வீட்டு பெண்களையும் என் அம்மாவாகவே மதிக்கும் குணம் உண்டு.
ஆனால் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
என் தாயை மீண்டும் மீண்டும் கேலி செய்தால் பொங்கத்தான் வேண்டும்.
கோபம்தான் வரும்.
மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ?
ஒரு நடிகரின் தந்தை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ?
திருப்பதி கோவில் உண்டியலில் பணம் போட்டு லஞ்சம் கொடுக்கிறோமாம்.
படிக்காமலேயே பாஸ் செய்ய வைத்து விடுவாரா கடவுள் என்று கேட்கிறார் .
அப்புறம் ஏன் உன் மகன் jesus saves என்று letter head ல் அடிக்க வேண்டும்?
சர்ச்சில் ,  வருமானத்தில் 10ல் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லையா?
உங்கள் சர்ச்சை
(church  ) பற்றி பேசுங்கள்.
அதை பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்.
உங்கள் மதத்தின் குளறுபடிகளை பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்
கோவில் உண்டியலில் பணம் போடுவது தர்ம காரியங்களுக்கு பயன் படுத்தத்தான் .
மனதை ஒரு முகப் படுத்தி concentration கிடைக்கும் முறைதான் வழிபாடு.
உடலை ஆரோக்கியம் ஆக்கவே கற்பூரம் ,மலர்களின் வாசனை,ஹோமம் ,சாம்பிராணி எல்லாம்.
தெரிந்தால் பேசவும்.
அறிவியல் அடிப்படையில் உருவானது இந்து மதம்.
வழிபாடுகள் அனைத்திலும் அறிவியல் இருக்கும்.
புரிந்து கொள்ளவும்.
நிறுத்திக் கொள்ளவும்.

2017/11/23

BREAKING NEWS :
அப்பப்பா  கொடுமை தாங்க முடியவில்லை.
உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் BREAKING NEWS : என்று போடுவதுடன் ஒரு கொடுமையான பின்னணி இசை காதை பிளக்கிறது.
செய்தி வாசிக்கும் போதும் அப்படித்தான்.
ஒரே இரைச்சலான இசை.
எனக்கு இருக்கும் ஒரே social மீடியா இதுதான்.
எனது இந்த கருத்து t .v களுக்கு போகுமா என்று தெரியவில்லை.யாராவது இதை அனைத்து t .v களுக்கும் என் வேண்டுகோளாக தெரிய படுத்துங்கள்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2017/11/22

கந்து வட்டி கொடுமையா ????
எனக்கு ஒன்று புரியவில்லை.
எந்த பைனான்சியரும்  நம் வீடு தேடி வந்து ''நீ என்னிடம் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் ''   என்று நம்மை மிரட்டி பணம் கொடுக்கிறார்களா ?
இல்லையே.
நாம்தான் அவரிடம் நடையாய் நடந்து வாங்குகிறோம்.
வாங்கும்போதே இத்தனை வட்டி தருகிறோம் என்று சம்மதித்துதான் பணம் வாங்குகிறோம்.
அப்புறம் கடன் கொடுத்தவர்களை ஏன் கொடுமைக்காரர்கள் ...கொலைக்கு தூண்டினார்கள்      என்று  சொல்கிறார்கள்?
ஒரு முறை கடன் வாங்கி விட்டோம்.
கட்ட முடியவில்லை.
உஷாராகி விட வேண்டுமல்லவா ?
நானும் ஒரு நிலம் வாங்க கடன் வாங்கினேன்.
வட்டி கட்ட ஆரம்பித்த போது புரிந்து விட்டது.
இது மீள முடியாத புதை குழி என்று.
அன்றே நிறுத்தினேன்.
ஏதோ
 உயிர் காக்க மருத்துவ செலவு செய்ய கடன் வாங்கலாம்.
அது நியாயம்.
மற்றபடி
ஒரு படம் தோல்வியடைந்தவுடன் உஷாராகி விட வேண்டும் .
அதை விட்டு
தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டு பாவப்பட்ட பைனாசியர்தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு
தற்கொலை செய்வது கண்டிப்பாக ஏற்க முடியாது.
கார்த்திக் அம்மா

2017/11/14

என் மகனே
என் மகனே
தங்கமே
தெய்வமே
செல்லமே
உன் பிறந்த நாள் இன்று
....(14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.).....

14.11.1981         இந்த நாள் தான்

நான் உயிர் கொண்ட நாள்.

என் உயிரை நான் கண்ட நாள்.

என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.

என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.

வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik
அன்பே அன்பே
14.11.81
என் அன்பு மகன்
என் உயிர் மகன்
என் தங்க மகன்
கார்த்தியின் பிறந்த நாள்.
என்னுடைய   பிறந்த நாளும்தான்.
ஆனால் சூரியன் அருகில் நட்சத்திரம் போல்
கார்த்தியின் பிறந்த நாளே முதன்மை.
என் பிறந்த நாள் ????????
அருவமாய் இருப்பினும்
(மறு  பிறவி எடுத்து )
உருவமாய் இருப்பினும்
தெய்வமாய் இருப்பினும்
அன்பு மகனே
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்த்திக் அம்மா

கலாகார்த்திக் 

2017/11/13

Ryan Murder :
A good new culture is engulfing  this generation.
I was terribly TERRIBLY shocked when a mother of class 9 student argued with me like as follows.
this was what happened.":
In his son's class a boy drew the picture of CONDOM and started marking parts .:
He was so generous and he offered to help his classmates by clarifying DOUBTS of them regarding it.
Parents were summoned and the extreme shock to the school was that the parents started bombarding the staff  and teachers shouting ''
 '' WHAT'S WRONG ?
WHY DO YOU WORRY?
ITS THEIR FREEDOM
NOTHING WRONG IN KNOWING IT
and to top that
the teachers said that a boy and girl had sexual act in classroom .
the parents supported their children and made fun of the teachers for being ''so barbaric'' and following 19th century customs.
So now regarding this RYAN murder let us not be barbaric and be SO SO SO OO MODERN and take it lightly.
என்னடா கலரும் மொழியும் மாறி விட்டது என்ற அதிர்ச்சியா ?
இது போன்ற செய்திகளை நம் மொழியில் எழுத கூட விரும்பவில்லை.
நாம் பட்டிக் காடுகள்தான்.
நான் சொன்ன செய்தி ரேயான் பள்ளியில்தான் நடந்தது.
என்னிடம் பேசிய அம்மா என்னையும் முறைத்து நீயெல்லாம் ஒரு ஜென்மம் என்ற ரீதியில்தான் பார்த்தார்.
நாடு எங்கோ போகிறது.
அதனால் இது போன்ற கொலைகள் சர்வ சாதாரணமாகி விடும்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா

2017/11/09

சசி & கோ  ரெய்டு
இது மிகவும் தரமற்ற நடவடிக்கை என  தோன்றுகிறது .
இந்த குடும்பம் பற்றி  நல்ல சான்றிதழ் தருவது சிரமம் .
ஆனால்
இவர்கள் மட்டும்தான் ஊழல் பேர்வழிகள்
மற்றவர்கள் எல்லாம் தூய்மையின் சின்னம் என்பது போல் ...
யார் யார்
எவ்வளவு
என்பது தெரியாதா ?
எல்லோர் மீதும் நடவடிக்கை எடுத்தால் பாராட்டலாம்.
கார்த்திக் அம்மா