About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2009/01/28

இதற்கு முதல் பதிவில்தான் தெரியாத்தனமாக அவரை புகழ்ந்து விட்டேன்.
அதற்காக இப்படியா கவிழ்ப்பார்?
எல்லாம் இந்த இலங்கை விவகாரம்தான்.
ராஜபக்ஷே [இலங்கை அதிபர்] தி..மு.க தலைவரையும் , அ.தி.மு.க தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.
அவரின் உள்நோக்கம் என்னவாக வேண்டுமாக இருந்தாலும் இருக்கட்டும்.
இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா? உடனடியாக போய் பேசித்தான் பார்ப்போமே .
அதை விட்டு ''நான் அவர்களுக்கு எதிரி. கலைஞர்தான் புலிகளுக்கு நண்பர் ''
என்றெல்லாம் பேசி தன் பொறுப்பை எப்படி தட்டிக் கழிக்கிறார்?
நாம் என்ன பிரபாகரனை இலங்கை அதிபராக்க சொன்னோமா?
அல்லது பிரபாகரனுடன் பேசி சண்டையை நிறுத்த சொன்னோமா?
நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்களுக்கு சட்ட சபையில் உரிய
பிரதிநித்துவமும், அமைச்சரவையிலும் இடம் அளிக்க வேண்டும். போன்ற உரிமைகளை பேசி பெறலாமே.
அதை விட்டு 'யார் எக்கேடு கேட்டால் என்ன? என் கொட நாடு உண்டு. தோழி உண்டு. படகு சவாரி உண்டு.ரோஜா தோட்டம் உண்டு.' என்பது சரியல்ல.
இவருடைய துணிவும், இவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் எனக்கு இவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படித்தியிருந்தது. ஆனால், இப்படி பேசுவது , பழி வாங்குவது, மூச்சுக்கு முன்னூறு முறை 'மைனாரிடி அரசு' என்று சொல்வதும் ,
அவருடைய மதிப்பை குறைக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக தன் முடிவை மாற்றிக் கொண்டு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு நீங்களும் மக்கள் நலம் நாடும் ஒரு தலைவிதான் என்று நிரூபியுங்கள்.
கார்த்திக் +அம்மா

2009/01/25

ஆனாலும் டி.வி பார்க்க ஆரம்பித்தது தப்பாக போய்விட்டது.
என் காலத்து படங்களை கூட இப்போதுதான் பார்க்கிறேன்.
ஆஹா,
உண்மையிலேயே ஜெயலலிதா நன்றாகத்தான் செய்திருக்கிறார்.
எந்த உடையும் அவருக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்துகிறது.
எந்த பாஷையும் விளையாடுகிறது.
எந்த நடனமானாலும், துள்ளிக் குதிக்கிறார்.
கொஞ்சலிலும் கலக்கல்தான்.
அதிலும் அவருக்கும் எம்.ஜி.ஆர் உக்கும் கெமிஸ்ட்ரி மிக அற்புதம்.
[ அது என்ன கெமிஸ்ட்ரி? ஏன் இகனாமிக்ஸ் , காமர்ஸ், பயாலஜி , கம்ப்யுட்டர் எல்லாம் இல்லையா?]
தமன்னா, திரிஷா பற்றியெல்லாம் எழுதாமல், இது தேவையா ? என்று கேட்காதீர்கள். மனதில் தோன்றியதை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

அன்பிலும் அன்பான
கார்த்திக் +அம்மா

2009/01/22

Puzzle-Riddle

7400 crores.
On his [ Ramalinga Raju's ] mother's and his brother's name...
I find it a ''PUZZLE''

A ''Riddle''

extremely ''ridiculous''

why should he save so much money and spend sleepless nights in the jail on a hard floor, sharing a room with 30 others and being treated as a '' c '' class prisoner.

It is the fact , that he will come out on bail as all other sophisticated criminals do, and enjoy a normal life , [ and the pitiest fact is that such criminals get qualified to contest as MP and MLA and become ministers.], keeping this fact apart, though they come out of jail,
WILL NOT THAT ONE DAY IN JAIL enough for a life time?
I am a simpleton , a traditionalist, a conservative and this is all beyond my comprehension.

with luv and luv only,
karthik+amma

2009/01/15

போகி பண்டிகையின் தத்துவம் :
முதல்வர் ஆணையால் பொங்கல் புது பொலிவு பெற்று ஜொலிக்கிறது.
ஆனால்,
ஆளாளுக்கொரு விளக்கம். ஒரொரு டி .வியிலும் , பத்திரிக்கைகளிலும் ஒரொரு விளக்கம்.
நான் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்லும் விளக்கம் இது.
நான் சிறுமியாக இருந்த பொது என் தாத்தா வீடுகளில் ''குதிர், சேர் '' என்ற ஒரு வீடு போன்ற தானிய கிடங்கு இருக்கும். சுமார் ௨0 அடி ஆழமும் ௨0 அடி அகலமும் உள்ள அந்த கிடங்கு நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்..
இந்த தை மாதத்தில் [ மார்கழி மாதம் முழுவதும் அறுவடை வேலை தலை நிமிர முடியாத அளவுக்கு இருக்கும். அதனால்தான் அந்த மாதம் கல்யாணம் போன்ற + பண்டிகைகளோ இருக்காது. ] அனைத்து வகையான தானியங்களும் (நெல், கேழ்வரகு, கம்பு, அவரை, துவரை ) வீடு வந்து சேரும். வீடே கலகலத்து விடும்.
இந்த வருடத்து தானியங்கள் வந்தவுடன் அதற்கு முந்தைய வருட மிச்ச மீதி பழைய தானியங்களை அந்த குதிரிலிருந்து வெளியே எடுத்து விட்டு, அந்த [ஸ்டோர் ஹௌஸ் )_கிடங்கின் தரையில், பூச்சி,வண்டுகள் தாக்காதிருக்க சுவருக்கு வெள்ளையடித்து, பூலாப்பு , ஆவாரம்பூ ,வேப்பிலை போன்றவற்றை அடியில் பரப்பி அதன் மேல் தானியங்களை கொட்டி ஒரு ஜன்னல் போன்ற திட்டிக் கதவை மூடி விடுவர். மாதம் ஒரு முறை வீட்டிற்கு தேவையான தானியத்தை எடுத்துக் கொள்வர்.
இப்படி scientific ஆன ஒரு விஷயத்தை காலப் போக்கில் பழையன கழித்தல் என்ற மாதிரி மாற்றி பழைய டயர் , துணி போன்றவற்றை எரிக்கும் வழக்கமாக
மாற்றி விட்டனர்.
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். அப்போது பானை, மண் சட்டியில்தான் சமையல். இந்த மண் பாத்திரங்கள் ஒரு வருடத்துக்குதான் உபயோகப் படுத்த வேண்டும். அதே போல் பாய்களும். அதனால், தை மாதம், இவற்றையும் மாற்றுவர்.
இதுவே பழையன '' போக்கி '' . போக்கியே நாளடைவில் ''போகி '' ஆகிவிட்டது.
பொங்கல்:
பொங்கல் வைப்பதிலும் சில காரணங்கள் ...முதலில், பானையில் பாலை ஊற்றி பால் பொங்கி எந்த திசையில் வழிகிறது என்பதை கவனித்து, அதைக் கொண்டு நீரோட்டத்தையும், மண்ணின் பலத்தையும் கணக்கிட்டு, அடுத்த ஆண்டுக்கான விவசாயத்தை திட்டமிடுவார். என் தாத்தா இப்படி செய்வதை நானே பார்த்திருக்கிறேன்.
ஆனால், இப்போது யாருக்காவது இந்த திசையும் கணக்கும் தெரியுமா என்று தெரியவில்லை.
எப்படியோ , பொங்கல் பொங்கினால் சரிதான்.
if someone, ( whose blog is widely read ) can post this in their blog, so that it could reach more readers i will be happy.
அன்பிலும் அன்பான
கார்த்திக் +ammaa

2009/01/11

தமிழ் பெண்மணி :
தமிழ் நாட்டின் தலையாய குடும்பத்தை சார்ந்த பெண்மணி " தமிழ் மக்கள் எல்லோரும் தமிழில்தான் பேச வேண்டும் என்று " தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான ' சுடிதாரில் ' வந்து மேடையில் வேண்டுகோள் விடுக்கிறார்.

கொடுமைடா சாமி....

தமிழ் நாட்டின் தமிழ் எங்கே போகிறது என்றே புரியவில்லை...சமைத்து பாருங்கள் நிகழ்ச்சி பாருங்கள்..தமிழ் வார்த்தைகள் மிகவும் குறைவு. 'மேத்தி , கோங்குரா, தனியா, மிர்ச்சி ,யோகர்ட் ' என்று ஒரே கலப்படம். நம் புளிச்சகீரை , வெந்தயக்கீரை, மிளகாய் எல்லாம் மறந்தே போய்விடும் போல் இருக்கிறது.
[ இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ''ஆனியன்'' [கொடுமை என்னவென்றால் அதன் சரியான ஆங்கில உச்சரிப்பு அனியன் என்பதே.]
எதற்கு இந்த அரைகுறை ஆங்கில மோகம் ? எனக்கு ரத்த அழுத்தம், டென்சன் எல்லாம் எகிறி விடும்.
கடையிலும் கோங்குரா என்றால்தான் தெரிகிற அளவுக்குத்தான் நிலைமை.
என்னை ஒருவர் கேட்டார் " நீங்கள் இலங்கை தமிழரா ? ''... திகைத்து போன நான் கேட்டேன் " எதனால் அப்படி கேட்கிறீர்கள் ? '' என்றேன் வியப்புடன்.
"இல்லை, இவ்வளவு சுத்தமாக தமிழ் பேசுகிறீர்களே '' என்றார். மயக்கம் வராத குறைதான்..
ஆனால், தமிழில் பேசினால் ஒரு கேவலமான பார்வைதான். இரண்டு வார்த்தையாவது ஆங்கிலத்தில் பேசினால்தான் ஒரு மனுஷியாக கருதி திரும்பி பார்ப்பார்கள். காலத்தின் கோலம்!!!

அன்பிலும் அன்பான
கார்த்தியுடன் +அம்மா

2009/01/08

அபி அப்பாவும் நானும்

அபியும் நானும் பற்றி விஜய் டி.வி யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில், அவர் தன் மகளை பள்ளியில் முதல் முறையாக விடும் பொழுது அழுவதாக கூறினார்.

உடனே என் flash back:
கார்த்திக் 2 1/2 வயது குழந்தையாக இருக்கும்போதே அவனை LKG யில் சேர்த்துவிட்டோம். [ நாங்கள் குடியிருந்தது மின்வாரிய குடியிருப்பு. அங்கிருந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரம் கார்த்தியின் ரகளை தாங்காது. ' நானும் ஸ்கூலுக்கு போவேன் ' என்று ஒரே அடம். அப்போது அவனுக்கு வயது இரண்டுதான். ஆனால். alphabet, colours, animals, birds.days, months, numbers என்று அத்தனையும் அத்துபடி. என்ன செய்வது?
தப்புதான் என்றாலும் , அவனுக்கு பொய்யான Date of Birth Certificate தயார் செய்து மூன்று வயது என்று சொல்லி பள்ளியில் அட்மிஷன் வாங்கிவிட்டோம்.அப்போது செந்தில் 6 மாத கைக் குழந்தை.
பள்ளியில் முதல் நாள் :

பையில் feeding bottle , பால் etc யுடன் [ அச்சோ, feeding bottle செந்திலுக்கு என்று நினைத்தீர்களா ,உச், அது கார்த்திக்கிற்கு...செந்தில் ஆறு மாத குழந்தையாக இரு்ந்தாலும் டம்ளரில்தான் பால் குடிப்பான். இந்த எல்.கே.ஜி. குழந்தைக்குதான் பாட்டிலில் பால் ] எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு போனால், ஒரு 100 குழந்தைகள். ஆஹா, என் மகன் என்னை விடுவானா? நானும் வகுப்பறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டேன். [அவனுக்காகத்தானே நான Asst.Professor வேலையையே விட்டேன்.].அப்படியிருக்க அவனை பள்ளியில் தனியாக விட்டு செல்வேனா?.... நானும் அவனுடன் ...செந்திலின் உபயம்தான். "பாவம் ,கார்த்திக் அம்மா, கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறார்கள் " என்று ஒரு குரல் கேட்க "பளிச் " என்று ஒரு ஐடியா. "
ஆமாம். வீடும் தூரம் " என்று காரணம் சொல்லிவிட்டு கார்த்தியின் வகுப்பிற்குள் ஐக்கியமாகி விட்டேன். அங்கே ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. நான் அதில் உட்கார்ந்து கொள்ள , என் மடியில் ஜம்மென்று கார்த்திக். [ ஆஹா, மறுபடியும் செந்தில் என்று நினைத்தீர்களா] அந்த வகுப்பறை எப்படியென்றால், இந்த எல்.கே.ஜி. முதல் 3 மாதத்திற்கு 100 குழந்தைகளும் ஒரே ஹாலில். அப்புரம்தான் தனி தனி க்ளாஸ்ரூம். இது செந்திலுக்கு வசதியாக போய்விட்டது. அவர் பாட்டிற்கு எல்லோரிடமும் விளையாடிக் கொண்டிரு்ப்பார்.]
இந்த அம்மா கோண்டு கார்த்திக் மட்டும் அம்மா மடியில் ..மற்ற எல்லா குழந்தைகளும் அழுவதை இவர் கூலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். Principal [Sister] மிகவும் கண்டிப்பானவர்தான். ஆனால் என்ன நினைத்தாரோ, மற்ற எல்லா அம்மாக்களையும் வெளியேற்றும் அவர், நான் வகுப்பறைக்குள் இருப்பதை ' கவனிக்காதது ' போல் இருந்து விட்டார்.
இப்படியாகத்தானே , 3 மாதம், நானும் மகனுமாக படித்து, என் செல்லமகன் கார்த்தி மற்ற மாணவர்களுடன் பழகி அவர்களுடன் விளையாட ஆரம்பித்து , அந்த சூழநிலைக்கு முற்றிலும் பழகியபிறகே அவனை தனியே விட்டு வந்தேன்.
HOW is it?

அன்பான கார்த்தியின் அன்பான அம்மா


From some comments I understand that some find it difficult to read Tamil. So I think i shall give the English version of it too.
Here IT IS.
I happened to view a program on the Movie 'Abiyum Naanum' by Pirakash Raj. During the discussion , he was narrating a scene where he has to leave his daughter in school and how he cried on the first day. [ I have not seen the movie ]. This kindled my flash back.
When karthik was just 2 1/2 years old , we were living in EB quarters , apartment system.where many school going kids lived. When they will be leaving for school, Karthik would start crying ' I want to go to school.' By that age itself, he had learnt alphabet,numbers, dates, days, animals. birds,,,,almost the whole thing that would be taught in LKG.
Unable to appease him we decided to admit him in LKG, though he was underage. Though it was wrong, we managed to get a False Date of Birth Certificate, saying that he was 3 years old, and admitted him in LKG.
Senthil was jyust SIX months old baby then.
First day in school:
I had 'feeding bottle' [ you are wrong if you guessed that it was for senthil.. though Senthil was 6 months old , he used to drink milk in tumbler only..] This feeding bottle, was for my dearest son karthik ,the LKG child.
I reached school to find 100 children crying, hugging to their moms and etc. Slowly I creeped into karthik's classroom, found a stool, sat on it with my child on my lap[ again you are wrong, if you had guessed that it would be Senthil.] Senthil started playing with other children, and it was karthik who sat very comfortably on my lap, watching cooly, while the children were crying horribly.
Its all Senthil's help. Someone observed,'oh, this karthik amma, managing two kids' .FLASH. An idea clicked. Using this trump card , I have strongly settled in karthik's classroom.The Principal,[[ sister] , usually very strict, played a trick of 'not noticing me' (I still wonder what made her be so kind to me ), and so I sat with karthik all through the first three months.By then he became friends with his classmates and got accustomed to the situation.
HOW IS IT ?
I

2009/01/03

karthik's shorts

When Karthik and Senthil were around 6 or 7 years old, there was a practice of exchanging the used ' trousers '....[ drawers ] to the plastic vendor and buy some plastic buckets.

Then I used to wonder what will they do with these 9 or 10 cm lengthy drawers. I guessed that they would sell it in the seconds market.
But now I understand that they donate it to the dancers both in the small and BIG screen.

Don't come out with the question " why it took such a long time to know this ? "

I had TV at home till 1995 and when Karthik entered +1 , I disposed all electronic entertainment gadgets, so that their concentration should be in studies only.

And now I have TV and lots and lots of time with nothing to do but ' ' 'see ' ' ' [ viewing, watching are different from seeing,, and I see only ].
And now when I look at the dances I understand that six , seven years old boys' shorts are really very useful to them.
Simply superb dress sense.

karthik +amma