About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/08/03

ஆடி 18

 காவிரி ஓடும் ஊர்களில் எல்லாம் பெரிய விழா இந்த ஆடி 18.

புது நீர் ஓடி வர ,பொங்கும் காவிரியில் நீந்தி,எதிர் நீச்சல் என்று பல கோலாகலம்.

சாமி ஆத்துக்கு போகுது (அகத்துக்கு என்பது ஆத்துக்கு ...என்றாகி விட்ட ஆத்துக்கு இல்லை....இது காவிரி  ஆறு.) .....என்று கிராம கோவில்களில் இருக்கும் உற்சவர்களை  ஆற்றுக்கு  கொண்டு சென்று புனித நீராட்டி எடுத்து வருவார்கள்.

இன்று என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. போன் செய்து பேசவில்லை.எப்படியும் திருட்டு  தனமாக சாமியை காவிரிக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

நான் திட்டுவேன் என்பதால் என்னிடம் பொய் சொல்லி விடுவார்கள்.

அவர்களுக்கு ஏன் தர்ம சங்கடம் என்பதால் பேசுவதை தவிர்த்து விட்டேன்.

என் தாய் வீடு தெருவில் பாதிக்கு மேல் இருக்கும்.அவ்வளவுக்கும்  கோலம் போட்டு ஆடி 18 என்று எழுதுவேன்.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் அந்த சுழி அழிக்கப் பட்டு அடி 18 என்றாகி இருக்கும்.

என் அண்ணாவின் வேலை.இப்படி ஏதாவது செய்து என்னை வம்புக்கு இழுத்து மகிழ்வதில் அவருக்கு பேரானந்தம்.(இப்போது இல்லை.)

இன்றுதான் நெல் விதைப்பார்கள்.

எல்லா பண்டிகைகளும் களை இழந்து வருகின்றன.

 

2021/08/01

1 August 2005

 1 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

(  வாழ்க்கையின் ஒரு நொடி கூட வீணடிக்க மாட்டான்.வாழப் போகும் நாட்கள் குறைவு என்றதாலோ என்னவோ not even a single minute will he waste .மகனாக, அண்ணனாக,DELL ல் SENIOR SOFTWARE ER ஆக ,வரலாறு .COM என்பதாகட்டும் எத்தனை பரிமாணங்கள் )

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.
எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2021.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா