About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/09/21

அதிர்ச்சியாக இருக்கிறது.
.....//.....துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமது (33) சனிக்கிழமை காலமானார்.
மாரடைப்பு காரணமாக, அவர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனமான "வாம்' தெரிவித்தது.
இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமதை விடுத்து, இளைய மகன் ஷேக் ஹம்தானுக்கு தான் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
உயிரிழந்த ஷேக் ரஷீது பின் முகமது, விளையாட்டு வீரராகவும், குதிரைப் பந்தய வீரராகவும் திகழ்ந்தார்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, துபாயில் 3 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.....//....//
இந்த செய்தியை படித்த போது  அதிர்ச்சியாக இருந்தது.
என்ன நடக்கிறது உலகில்?
கல்லையும் கரைக்கும் வயது என்பார்கள்.
33 வயதில் தலைவலி கூட வராது ..ஒரு காலத்தில்.
இப்போது தொலைகாட்சிகளில்  உடல்நலம் பற்றிய நேரலை நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் பலர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.
BP ,முதுகு வலி, இப்படி எத்தனை நோய்களை சொல்கின்றனர்.?
இவர்கள் 50 வயதில் என்ன செய்வார்கள்? கவலையாக இருக்கிறது.
என்னதான் மருத்துவம் வளர்ந்தாலும் ???
 கவலையுடன் 
கார்த்திக் அம்மா

2015/09/20

தற்கொலைக்கு முன் கடிதம் :
இந்த இளம்பெண் DSP  யின் முடிவில் பல சந்தேகங்கள் உள்ளன.
******
நான் சொல்ல வருவதே வேறு.
****** மொழி ....language
இந்த கடிதம் தங்க்ளிஷில் எழுதப் பட்டிருக்கிறது.
en arumai inthiyave
naan nanraka padikkiren
eppothu sinimaavukku pokalam
இன்றைய இளைஞர்களில் 70 % இப்படித்தான் எழுதுகின்றனர்.
உண்மை என்னவென்றால்
...இவர்களுக்கு தமிழும் சரியாக எழுத வராது.
And they cannot write in English.
இரண்டு மொழியுமே அரைகுறை.
நாம் ஏதாவது திருத்தினாலும்   பார்த்து ஒரு முறைப்பு.
நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?..என்ற ரீதியில் ஒரு அலட்சிய பார்வை.
இந்த நிலை மாறலாமே?
அன்புடன் கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/09/11

வடை+பஜ்ஜி
****
இந்தியா  120 கோடி மக்களுக்கு  சொந்தம் என்று நினைத்திருந்தேன்.
அப்புறம் இப்போதுதான் தெரிந்தது.
வங்காள கடலில் இருக்கும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தியாவை விலைக்கு வாங்கிவிட்ட ஒரு சிலர் அங்கு இந்தியாவை தங்கள் பெயரில் பதிவு செய்து பட்டா மாற்றமும் செய்து விட்டார்களாம்.???????????????
எனக்கு வடை பஜ்ஜி என்றால் கொள்ளை இஷ்டம் .
ஆனால் இந்தியாவை வாங்கி விட்டவர்களுக்கு வடை பஜ்ஜியே பிடிக்காதாம். அதனால் அந்த கடைகளை மூடச் சொல்லி விட்டார்களாம்.
......
யார் வீட்டிலும் வடை +பஜ்ஜி சுடக் கூடாது என்று உத்தரவும் வந்து விட்டதாம்.
......
இந்தியா சுதந்திர, ஜனநாயக நாடு என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்