About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/05/17

வலையுலகில்  '' பட்டாப்பட்டி '' என்ற வலைபதிவர் சென்ற வாரம் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வலை உலகில் பலருக்கு வருத்தத்தை அளித்தது. நான் அவரின் பதிவுகளை அதிகம் படிக்கவில்லை. ஏன்  என்று தெரியவில்லை.
அவரின் மறைவு பற்றிய பதிவில் ஒரு பதிவர் ஒரு  விஷயம் பற்றி மிகவும் வருந்தியிருந்தார்.
அங்கு வந்திருந்த ஒருவர், ''இதனால்தான்  யாரும் தண்ணி அடிக்க கூடாதென்று சொல்வது '' என்று மிக மிக பெரிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
பட்டா பட்டியின் நண்பர் சொல்கிறார்,
பட்டாப்பட்டி மது அருந்துபவரும் அல்ல, சிகரெட் கூட பிடிக்கமாட்டார்.அப்படியிருக்க இவர் அப்படி சொன்னது அங்கிருந்த அனைவரின் மனதையும் பாதித்தது.
.....      ....
ஒருவரின் இழப்பின் போது அடுத்தவர்கள் எல்லாம் பெர்ய உத்தமர்கள் ஆகி கொடுக்கும் அறிவுரையும் ,ஆலோசனையும் இருக்கிறதே.
அப்பப்பா ,
எதோ விதி ,
இழப்பு நேர்ந்து விடுகிறது.அதுதான் நேரம் .இவர்களுக்கெல்லாம்.
மொடாக் குடியர்கள் எல்லாம் 100 வயது வாழ்வதை பார்க்கிறோம்.
இந்த பட்டாப்பட்டி ஒரு கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது ,கீழே விழுந்த பொருளை எடுக்க குனிந்த போது  மாரடைப்பு ஏற்பட்டு அந்த நிமிடமே உயிர் பிரிந்திருக்கிறது.
இதை விதி என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.
.....  .....
கார்த்தியின் விபத்தின் போதும் இப்படித்தான் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.
ஹெல்மெட் போடவில்லையா '' என்ற கேள்வி.
வேகமாக போனான் '' என்ற குற்றசாட்டு.
மொபைல் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான் '' என்றார்கள்.
நீங்கள் என்ன பொறுப்பில்லாத அம்மா ,அவனை ஹெல்மெட் இல்லாமல் எப்படி அவனை அனுப்பினீர்கள் '' என்றார்கள்.
அவன் விபத்திற்கு முதல்  நாள் வரை ''  கார்த்தி  போல் உண்டா என்று அவனை வானளாவாக புகழ்ந்தவர்கள், ஒரு நிமிடத்தில் அவனை பற்றி குறை கூறியது அவன் இழப்பை விட பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
அன்பர்களே,
நீங்கள் ஆறுதலாக  இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்.
உங்களுக்கு கோடி நமஸ்காரம்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா 

2013/05/15

செய்தி 
பு துச்சேரி இளங்கோ நகரில் தற்போது குடியிருக்கும் மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமியின்  மனைவி கலைச்செல்வி (53).
 இவர், விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு, உறவினர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முருகா திரையரங்கு சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது, பின்னால் வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த கலைச்செல்விக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆட்டோ ஓட்டுநர் மதிவாணனை போலீஸார் கைது செய்தனர். 

 அட இப்படியும் இருக்கின்றனரா?
ஒரு கவுன்சிலர் மனைவி கூட 10(.அ )15 லட்ச ரூபாய் காரில் போகும்போது ,...ஒரு மத்திய அமைச்சரின் மனைவி ...இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தாரா?
இது  உண்மையிலேயே வியப்பான செய்திதான்.
அவர் நலம் பெற வேண்டுகிறேன்.
கலாகார்த்திக்
Jeevan's comment to the post.
 You know, NarayanaSamy’s own brother family is renting in my grandmother’s house in Thiruvanmyuir. My granny used to say that no one would believe if they say he is a own brother of central minister. They are very simple citizens of Pondicherry.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.திரு  நாராயணசாமி அமைச்சரை நிறைய பேர் கிண்டல் செய்து பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே என் மதிப்பில் பல மடங்கு உயர்ந்து விட்டார்.
கலாகார்த்திக்  

2013/05/08

Karnataka  assembly polls 2013
Congress has won a good victory. Poor Rahul, what a lot of ironical comments did he face. Good.Patience wins.
When I was a Govt school teacher , I used to have tough arguments with the matriculation school teachers. They will be very proud of getting good results.I would challenge ''give your students to us, and take our students ( a kind of bartering ) , and see the results. You can give 100% result with your students but I can make them get 1100/1200 .Try and prove that you can make all our students get a pass.
எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கீழ் ,கீழ் தட்டு மாணவர்கள். படிப்பறிவில்லாத பெற்றோர்கள். ''நாளைக்கு exam fee கட்டு என்று சொன்னால் அடுத்த நாள் அந்த மாணவன் பள்ளிக்கு வர மாட்டான்.Absent .எங்கே அவன் என்று கேட்டால்'' Tidal Park போயிருக்கிறான் மிஸ் .''
எதற்கு என்றால் அங்கு போய் window cleaning ,painting  போன்ற வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வந்து fees  கட்டுவான்.
Matriculation  மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களையும் எங்கள் மாணவர்களையும் compare செய்வது எவ்வளவு சரியில்லையோ
அவ்வளவு சரியில்லை  குஜராத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிடுவது.அந்த மாநில முதல்வரை வடகிழக்கு (மணிப்பூர் etc ) மாநிலங்களுக்கு அனுப்புங்கள். அங்கேயும் இதே வளர்ச்சியை அவர் காட்டினால் உண்மையிலேயே மிக சிறந்த முதல்வர், அடுத்து பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்லலாம்.
எதற்கு இத்தனை கதை என்ற யோசனையா?
பின்னே என்ன,
*** மஸ்தான் வந்து விட்டார் பிரசாரத்திற்கு,ஆஹா ,ஓஹோ என்றார்கள் .இரண்டாம் முறையும் வர வேண்டும் என்று கெஞ்சியதாகவும்  செய்திகள் வந்தன.
அவர் வேறு ராகுல் கைக்குழந்தை என்றெல்லாம் கேலி பேசினார்
    இப்போது என்ன நடந்தது?
இது பற்றி :

// //தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆளுகிற பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. நாளைய மத்திய அரசு எங்களது தான் என்று மார்தட்டிய பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மோடிமஸ்தான் வேலைகள் கர்நாடகத்தில் எடுபடவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையப் போவதற்கு கட்டியம் கூறுகிற வகையில் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் மீதும், பாரத பிரதமர் மீதும் சேற்றை அள்ளி வீசி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு இதுதான். கர்நாடக மாநிலத்தின் இந்த தீர்ப்பு 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு அளித்த தீர்ப்பாகவே கருதுகிறோம்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டு, நாடாளுமன்றத்தை முடக்குவதும், போராட்டங்களை நடத்துவதும், காங்கிரஸ் அரசைகாயப்படுத்துவதையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை பாரதிய ஜனதாகட்சியும், மற்ற கட்சிகளும் இனியாவது உணர வேண்டும். கர்நாடக காங்கிரஸ் வெற்றி என்பது தமிழகத்திலும் 'நம்மால் முடியும்" என்கிற நம்பிக்கை விதையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நண்பர்கள் மனதில் விதைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடின உழைப்பும், ஒற்றுமையும் இருந்தால் வெற்றிக் கனியை பறிக்கமுடியும் என்பதற்கு கர்நாடக தேர்தல் நமக்கு ஒரு சான்றாக இருக்கட்டும். இந்த வெற்றிக்குவித்திட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தவெற்றிக்கு மிகக் கடுமையாக உழைத்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.// //

பிஜேபி பாராளுமன்றத்தை முடக்குவதே வெற்றி என நினைத்து கொள்கிறது.ஒரு நாளும் பாராளுமன்றத்தை நடத்த விட போவதில்லை என சூளுரை வேறு.இதுதான் வெற்றியா ?மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இனியாவது திருந்துங்கள்.

...........110 விதி ..........என்ற வார்த்தை தலைக்குள்  நடனமாடிக் கொண்டேயிருக்கிறது .
.......
ராமதாசை பின்னின்று இயக்கி   இத்தனை பிரசினைகளுக்கும் காரணமான 'மனி 'தரை அகற்ற வேண்டும் என்று அந்த கட்சிக்குள் ஒரு கூட்டம் புலம்புவதாக கேள்வி.
.........
மழை இல்லை, தண்ணீர் இல்லை. என் தென்னை மரங்களெல்லாம் காய்கின்றன.எந்தெந்த  இழப்புகளுக்காக வருந்துவது?  வாழ்க்கையில் சோகங்கள் மட்டுமே என்றால், மனம்  வெதும்பி வாடிப் போகிறது 
அன்புடன்,
கார்த்திக்+அம்மா 
.


 

2013/05/06

சென்னை :
அட சென்னையே சென்னைதான்.
நங்கநல்லூர் =  நங்கை நல்லூர் 
தாடண்டர் நகர் = Toad Hunter  nagar
பல்லாவரம்  = பல்லவ புரம்
LIST பெரிதாக இருக்கிறது.இது சின்ன sample தான்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அவ்வப்போது பார்ப்பதுண்டு. இ ன்று 06/05 பார்க்க நேர்ந்தது. வழக்கமான கதைதான். ஒரு பெண் ''காதலித்தேன், உறவு கொண்டேன் , அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் ''என்கிறாள்
அவள் காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து விட்டது.இப்போது அவனை பழி வாங்குவேன்  என்று சவால் விடுகிறாள்.
HIGH LIGHT  இதுதான்.அந்த பெண்ணின் தாய் சொல்லியதுதான்.   '' ''என் பெண்ணை ஏமாற்றிய உன்னை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் '' '' என்று வீராவேசமாக பேசினார். எனக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது .அதிசயமாகவும் இருந்தது. தன பெண் தவறு செய்ததாகவே அந்த அம்மாவுக்கு தோன்றவேயில்லை. தன பெண் கல்யாணத்திற்கு முன்பே ஒருவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது, அதுவும் முஸ்லிம் +இந்து   இது எதுவுமே தெரியாத மாதிரி பேசியது அந்த அம்மா. தன் மகளை கல்யாணத்திற்கு முன்பே இப்படி செய்து விட்டாயே என்பது போன்ற உணர்வுகள் எதுவுமே இல்லாமல் ...மிகவும் விவரம்தான்.பையனின் தந்தை எதோ பேசி எதோ அழுதார். நடிப்பா   உண்மையா ?ஒன்றுமே புரியவில்லை.
கார்த்திக்+அம்மா