About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/08/28

Today School Edu. Dep has announced that both 10 & 12 exams will be held at the same time.
And the practical exams will be held after the written exams are over.
    In 2006,  I was in the book review committee and then I SUGGESTED that the practical exams should be conducted after the written exams.
When I joined duty as a teacher we had enough time to revise.The third term will be for revision. Only in March revision exams will be held. So  for  2 months we will revise thoroughly
என் கருத்து சபை ஏறவில்லை என்று அப்போது என்னை கேலி கூட செய்தனர்.
ஆனால் இன்று எனக்கு ஒரு திருப்தி.

சொல்வதெல்லாம் உண்மை:
இது வரை ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு பெண் கூட ஒரு கணவனுடன்  (ஒரே ஒரு கணவனுடன் ) வாழ்ந்த மாதிரியே தெரியவில்லை. என்ன கலாச்சார சீரழிவு.பெண்கள் தெளிவாக பொய் பேசுகிறார்கள். வாழ்க பெண் சுதந்திரம்.

பாராளுமன்றம்:
  குற்றம்  செய்து இருந்தாலும்   even though you are a  criminal you  can continue  as ministers and M .P s .
இந்த விஷயத்திற்கு மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக ,அவையில் கூச்சல் குழப்ப ம்  செய்யாமல், அவையிலிருந்து  வெளி நடப்பு செய்யாமல் ,
அட , அட
இவ்வளவு ஒற்றுமையாக ஒரே நாளில் மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள் .   நாடே  அவர்களுக்கு மட்டும்தான்......அவர்களுக்காகத்தான் .
அவர்கள் சம்பள உயர்வு விஷயத்திலும் அப்படித்தான்.ஒரே நாளில் மசோதா நிறைவேறியது.
வாழ்க ஜனநாயகம்.
 

2013/08/25

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.

2013/08/20

மீள் பதிவு:
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.
******    *****88
.//  //இன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்றும் பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க .சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2013/08/10

மேட்டூர் அணை :
கர்நாடகா முதல்வர் சொல்லி விட்டார் .இந்த வருடம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தாகிவிட்டது .
டிசம்பரில் கொடுக்க வேண்டும்
நான் பிடித்த  முயலுக்கு 3 கால் என்பவர்களிடம் என்ன பேசுவது.
அவ்வப்போது மழை பெய்ய வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்ள வேண்டும்.
...............     ...............  ................
என் கணவர் மேட்டூர் அணையின் பொறுப்பு பொறியாளராக இருந்தார். அப்போதெல்லாம் அந்த அணைக்கு நாங்கள்தான் முழு பொறுப்பு ,அது எங்கள சொத்து என்பது போலெல்லாம் எனக்கு எண்ணம்.
அணைக்கு L T T E  மிரட்டல் இருந்தது.எனக்கு அழுகை.
.விரதம்.பூஜை என்று எத்தனை வழிபாடுகள்.
அது ஒரு காலம்.
.................. ............   .......
என் செல்ல கண்மணி கலாம் சொல்கிறார்.
''2017 க்கு பிறகு லஞ்சமில்லா  இந்தியாவை  உருவாக்கலாம்.''
அப்படியானால்  அதுவரை லஞ்சம்  இருக்கலாமா ?
ஏஞ்சாமி , நமக்கு தெரிந்த nano tech ,missile  பற்றியெல்லாம்  பேசலாமே.
ஏற்கனவே  கனவு காணுங்கள் ( have an ambition ) என்று சொல்ல போய்   ஆளாளுக்கு துவைத்து கிழித்து  காயப் போட்டார்கள்.
நல்ல வேளை .இதை யாரும் கவனிக்கவில்லை போலும்.
கவனிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் இப்போது  ஜனாதிபதி இல்லையே.
சினிமாவின் கஷ்ட காலம் :
என்ன ஆயிற்று ,சினிமா உலகிற்கு ?
4,5 முக்கிய உயிர்கள் திடீர் திடீரென மறைந்தன .
ஜேம்ஸ் வசந்தன் பிரச்சினை
சேரன் பிரச்சினை.
தலைவா பிரச்சினை.
இன்னும் இது போல் பல.
அதை விட கனகா பிரச்சினை.
ஏதாவது பரிகாரம்,வாஸ்து என்று முயற்சி செய்யலாமே.