About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/05/26

No doubt.it's really pathetic.29 persons died [not killed ]in an accident when a wall collapsed.whose fault is it? who asked them to drink? is it for the country's sake that they drank? or did they sacrifice their lives to save our country? or were they died during attending duty?
if the case is so ,why should they be given a compensation? i don't approve the practice of giving compensation for such accidents. a van crosses the rail road and they were viewing cinema and whose fault is it? they could have been cautious...and they were given huge compensations....
and this present case...all the "LEADERS" announcing compensation..one leader says they should be given 10 lacs..whose money is it?why don't they give it from their own pockets if they are so kind and considerate.
i will be happier if they "exhibit" the same kindness to those soldiers who die at Kargil and other such places.
Hm..in the same note they could have sympathaised with the two computer engineers who died at the thinakaran office Madurai ,,,in an attempt to save the computers..of course their management has done it.but what about the Govt?
All humbug.where are we heading to ? towards the UTOPIA?
confused karthik
ஒரு பேட்டி.கனிமொழிக்கு எம் .பி பதவி கொடுப்பது பற்றி முதல்வர் அளித்த பதில்....இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி.ராஜ்ய சபா தேர்தலுக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?....தி.மு.க தலைமக் கழக உயர் மட்டக் குழு இருக்கிறது.அவர்கள் கூடி முடிவெடுப்பார்கள்......இந்த முறையாவது கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப் படுமா?.......கனிவா பேசுகின்ற மொழி எங்கேயிருந்தாலும் வாய்ப்பு கொடுக்கப்படும்....மொழி கனிவாயிருக்க வேண்டும் .காயாக இருக்கக் கூடாது.....இவ்வாறு கருணாநிதி கூறினார்.....தமிழ் கூறும் நல்லுலகத்தாரே,
எனக்கும் தமிழில் சிறிது புலமை உண்டு. ஆனால் இப்போது அதில் சில சந்தேகம் வந்து விட்டது.இப்போது இவர் என்ன சொல்கிறார்? வாய்ப்பூ கொடுக்கப் படும் என்கிறாரா அல்லது தமிழ் மொழி பற்றி பேசுகிறாரா.எனக்கு தமிழ் மறந்து விட்டதா?யாரேனும் விளக்குங்களேன்.
confused karthik

2007/05/12

weather
ha,ha,
the second innings is still more interesting..It's again the same.Both Bangaluru and Chennai register the same temperature.
Bangalore: 33
Chennai : 33
with only one difference:
Bangaluru :max : 33
Chennai : min : 33
should the maximum of Chennai be told? Guess.
karthik

2007/05/07

Don Brown--Digital fortress

"He argued his ideas to the director with all the restraint of an impassioned boxer..Not even the President of the United States dared challenge him "
hi,buddies, aren't u reminded of your dear Demi when u read these lines ?how i used to argue and my friends 'B' and 'M' used to scold me for that. so sweet the days were.
with luv and luv only,
karthikeyan
வாழ்க்கை மிகவும் தமாஷாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு முறை ஆட்டோவில் போய் இறங்கும போது அவரிடம் ரூபாய் நோட்டை தந்தேன..'"மீதியை அப்புறம தருகிறீர்களா?'' என்றார் ஆட்டோகாரர். மிகவும் மரியாதையாக [அட, அதாங்க, 'திரு திரு ' ] என விழித்தேன்.அப்புறம்தான தெரிந்தது.100 ரூபாய் என்று நினைத்துக் கொண்டு 50 ரூபாய் தாளை எடுத்து கொடுத்திருக்கிறேன்.
அடுத்த முறை 50 ரூபாய் தர வேண்டியிருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக 500 ரூபாய் தாளை எடுத்து கொடுத்து விட்டு நடக்க ஆரம்பித்தேன். "அம்மா மீதி சில்லரை வேண்டாமா?" என்று கேட்டார் ஆட்டோகாரர். என்ன மறுபடியும் மரியாதையாக திரு திரு வென விழித்து விட்டு டன் கணக்கில் அசடு வழிந்து விட்டு சமாளித்தேன்.
அடுத்த விஷயம் இன்னும் மோசம். குளிப்பதற்கு immersion heater போட்டு விட்டு தண்ணீர் சூடாகி விட்டது ,,குளிக்கலாம் என்று heater ஐ off பண்ணாமலே எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து "என்ன குளியலறை சூடாவது போல் தெரிக்றதே " என்ற குழப்பத்துடன் பார்த்தால், heater அழகான சிவப்பு நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.. எங்கு போய் முடியுமோ?
அட கார்த்திகேயா!! [புரியவில்லையா....எல்லோரும் அடக் கடவுளே என்பார்கள்..என் கடவுள் கார்த்திகேயன்தானே ...அதனால்தான்...அட கார்த்திகேயா.

கார்த்தி மகன்..கார்த்தியின் மகன்

கார்த்தி என்னை விட்டு சென்று 2 1/2 வருடங்கள் ஆகீவிட்டன.பைத்தியம் முற்றி விட்டது.காணும் இடமெல்லாம் அவன்..காணும் காட்சியெல்லாம் அவன்.ஜன்னலில் நின்று எட்டிப் பார்க்கிறான்.கதவை தட்டி,,திறந்து பார்க்கும்போது சிரீத்து மறைகிறான்.முழுப் பைத்தியமாக சுற்றிக் கொண்டிருக்கும் நான் ஒரு நாள் கடையில் ஒரு 2 வயது குழந்தையை பார்க்கிறேன்.எனக்கு தெரிந்து விட்டது.அது என் கார்த்தியின் மகன்.பொது இடம் என்பதையும் மறந்து, அந்த குழந்தையை இறுக அணைத்து "இது என் கார்த்தி மகன் " என கதறுகிறேன்.
அருகிலிருந்த அந்த பெண் , "ஆம்,இது உங்கள் கார்த்தியின் மகன்தான்" என்கிறாள
நம்ப முடியாமல் அவளைப் பார்க்கும் என்னிடம் அவள் கூறுகிறாள்:என்னை மன்னித்து விடுங்கள்.இது உங்கள் கார்த்தியின் மகன்தான்"என்று உறுதியுடன் கூறுகிறாள். "ஆனால், என் மகன் தப்பு செய்ய மாட்டானே.இது எப்படி??'"அவள் கூறுகிறாள்:"ஆம், அவருக்கே தெரியமால் போதை ஏற்றி , ஹார்மோன் ஊசி போட்டு அவரை இயங்க வைத்தேன். அவர் மீது நான் கொண்ட காதல் வெறித்தனமானது.ஆனால் அவரோ 'காதலாவது,,கத்தரிக்காயாவது,,என் அம்மாதான் எனக்கு உலகம்' என்றார்.
அவரை எனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்தில்....[திகைத்து நிற்கும் என் கையை பிடித்தபடி தொடர்கிறாள் ]
"என் சுய புத்தி இழந்து, ஒரு நாடகம் ஆடினேன். அவருக்கு ஒரு விபத்தை ஏற்படுத்தினேன்."---"வருடங்கள் ஓடினாலும் அம்மாவும் மாறவில்லை.மகனும் மாறவில்லை. அவருக்கும் அம்மா, அம்மா...24 மணி நேரமும் அம்மா.---உங்களுக்கும் மகன், , மகன்-24 மணி நேரமும் மகன்தான் மூச்சு.நான் தோற்று விட்டேன். அதனால்தான் உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன்"

எனக்கு குழப்பம்.மகன் என்கிறாளா அல்லது பேரனை அப்படி குறிப்பிடுகிறாளா?
அவள் சற்றே நகர --அங்கே...அங்கே ..நிற்பது யார்--யார்?..என் கார்த்தியா? ஆம் .என் கார்த்திதான்..உயிரோடுதான் இருக்கிறானா?..உடல், பொருள் , ஆவி, உலகம் எல்லாம் சேர்ந்து ஒரு கதறல்.."கார்த்தி, என் மகனே" என அவனை கட்டியணைத்து கதறுகிறேன்.
என் மருமகள் குறுக்கிட்டு, "ஆம், உங்கள் மகன் போல் உருவத்தை அங்கு வைத்து விட்டு அவரை மறைத்து விட்டேன். ஆனால், உங்கள் அன்புக்கு முன் தோற்று விட்டேன். உங்கள் மகன் உங்களுக்கு..என் மகன் எனக்கு..நான் விடை பெறுகிறேன்" என்று கிளம்ப யத்தனிக்கும் அவளை "நில்லம்மா, வெறித்தனமான தோ , மூர்க்கத்தனமானதோ --நீ கொண்ட காதலும் நான் கார்த்தியிடம் கொண்ட அன்பைப் போன்றே பூரணமானது. நீ இங்கேயே எங்களுடன் இரு "என்று கூறி அவளை அணைத்துக் கொள்கிறேன்................கற்பனை நிஜமாகுமா? ஏக்கத்துடன்..............கார்த்திக் அம்மா

2007/05/01

weather

now it's the second innings.slowly the scene changes.chennai and bangaluru were equals having the same temp as 35/35, three days back.now chennai registers 36 and 37 whereas bangaluru registers 35/35 yesterday and today.