About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/12/25

தலித் அனுமன்

தலித் அனுமன் :
WONDERFUL :
பிரமாதம்.
சாமிக்கும் ஜாதி,கட்சி கொண்டு வந்துட்டாங்க .
அனுமன் தலித்.
ராமன் சத்திரியன்.
சுடுகாட்டில் திரிவதாக சொல்லப் படும் சிவன் வெட்டியான்.
லட்சுமி செட்டியார்.
எங்களுக்கு மட்டுமே படிப்பும் அறிவும் என்று சொல்வதால் சரஸ்வதி பிராமின்.
இரு ஆண்களுக்கு GAY பிறந்ததால் அய்யப்பன் திருநங்கை.
கையில் கொடுவாளோடு இருப்பதால் முனியப்பன் வன்னியர்.படையில் கொடுவாளோடு செல்வதால் அப்படி சொன்னேன்.
.....இப்படி ஒரு காலம் வரும்.
அப்போது எந்த எந்த சாதியினர் எந்த எந்த கடவுளை கும்பிடலாம் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்.
......
நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன.
இதையெல்லாம் விட்டு விட்டார்கள்.
சாமிக்கு ஜாதி கண்டுபிடிக்கிறார்கள்.
காலம் கலிகாலம்.
ஆளுக்கொரு statement .யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.
ஒரே ஒரு கண்டிஷன் .ஒரு குறிப்பிட்ட தலைவர்களை பற்றி மட்டும் வாய் திறக்கக் கூடாது.
குண்டாஸ்தான்
பயமாய் இருக்கிறது.
கார்த்திக் அம்மா

2018/12/17

கார்த்தி சிலை

கலைஞரின் சிலை செய்த சிற்பி தீனதயாளன் அவர்தான் கார்த்தியின் இந்த சிலையும் செய்தார்.
பெருமை இல்லை.வேதனைதான்.
23 வயதில் சிலையாவது தவறு.
தாய்க்கு துன்பம் அளவிட முடியாதது.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா

2018/12/16

காதலி,கல்யாணம் செய்

காதலி,கட்டிப் புடி கல்யாணம் செய் :
அட ,நீ  தலித் , கவுண்டர், வன்னியர் ....எந்த ஜாதியாக வேண்டுமாக இரு.
ஆனால் நீ ஒரு ஆண் .
ஒரு ஆண் இன்னொரு ஆணை ஜெயிக்க ஒரு பெண் பகடை காயா ????
பெண் என்றால் அவ்வளவு கேவலமா ?
உன் ஜாதி ஆண்கள் கட்டுடல் இல்லை.என் ஜாதி ஆண்கள் திமிரும் காளைகள் போல் தினவெடுத்த உடல்.
என்ன ஒரு மகா மட்டமான ,கேவலமான அறை கூவல்.
ஆரம்ப காலத்தில் இருந்தே ,இந்த கேவலம் நடக்கிறது.
ஒரு டெஸ்டிமோனா ,etc ஒரு ஆண் பெண்ணை வெகு சுலபமாக வசிய படுத்துகிறான்.
உடல் சுகத்திற்காக போவதில்லை.பேதை மனம் .பேதலிக்கிறது.
சினிமாவில் இது இன்னும் அதிகம்.
சவால் விட்டு பெண்ணை காதலித்து தந்தையிடம் இருந்து பிரித்து அந்த தந்தையை ஜெயிக்கிறான்.
ஒரு தாலி கட்டி விடுவானாம்.
ஒரு முத்தம் கொடுத்து விடுவானாம்.
நெற்றியில் ஒரு பொட்டை வைத்து விடுவானாம்.
உடனே பெண் ஓ என்று அழுவாளாம்.
அந்த தாலியை கையில் பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் அழுது கொண்டே வசனம் பேசுவாள்.
ஆ ஆ ,எனக்கு தியேட்டரை விட்டு ஓடி விடலாம் போலிருக்கும்.
1971ல் பாகிஸ்தான் போரின் போது என் அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு 3 நாட்கள் சாப்பிடவில்லை.
எதற்கு???????????
நானும் போருக்கு போவேன் என்று.
சிரிக்காதீர்கள்.
என் வயது 11.
பாகிஸ்தான் போய் கடகடவென்று எல்லோரையும் சுட்டு வீர மங்கையாக வருவது போல் கற்பனை.
அடுத்த கேவலமான கற்பனை.அங்கு போய் டான்ஸ் ஆடி அவர்களை கிறங்கடித்து பின் சுடுவது போல்.
எங்கிருந்து வந்தது இந்த எண்ணம்?
காரணம் சினிமா .ஒரு பெண் என்றால் உடல்தான் பிரதான மூலதனம்.
இதை நினைத்து பல நாட்கள் வேதனை பட்டிருக்கிறேன்.
நோயால் அவதி படும் கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டிற்கு கொண்டு செல்.
என்ன வகையாக பெண்களை கொடுமை படுத்தி இருக்கிறார்கள்.
ஏன் ...ஒரு தேவ தாசி குலத்தில் பிறந்து 1933ல் 40000 சம்பளம் வாங்கிய இசைக் குயில் பற்றி பெண் பிள்ளைகளுக்கு சொல்லி தரவில்லை.
அதே தேவ தாசி குலத்தில் பிறந்து ,கணவனை இழந்து பின் மருத்துவம் பயின்று டாக்டராகிய முத்துலெட்சுமியை பற்றி சொல்லித் தரவில்லை.
1971ல் அணுகுண்டு சோதனை செய்யக் கூடாது என்ற உலக கட்டுப் பாடு இருந்த போது பூமிக்கு மேல்தானே வெடிக்கக் கூடாது.பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி பொக்ரானில் அணு சோதனை செய்து உலகையே அதிர வைத்த இந்திரா காந்தி பற்றி சொல்லித் தரவில்லை?
திருமண பந்தம் என்பது கணவனை மனைவிக்கோ,மனைவியை கணவனுக்கோ அடிமைப் படுத்தும் சாசனம் அல்ல.Life partners என்றுதான் சொல்கிறோம்.
பெண்களே இவ்வளவு பெண் உரிமை பேசும் நீங்கள் ஒரு ஆன் மகனின் பசப்பு வார்த்தையில் , அவன் நடத்தும் நாடகத்தில் மயங்கி காதல் என்ற கேவலமான செயலை செய்யாதீர்கள்.
அன்புடன்,
கார்த்திக் அம்மா

2018/12/11

விதவை கட்சி

at the outset let me declare that i am a vidow .ஆம் .நான் ஒரு விதவை.
ஆனால் நான் தனிப் பெண்ணாக போராடி வாழ்க்கையில் சாதித்திருக்கிறேன்.
விதவை என்றால் அறிவு இல்லாமல் போய்விடுமா?
ஒரு பிரதமர் எதிர் கட்சியை தாக்கிப் பேச, கிண்டல் செய்து பேச வேறு வார்த்தைகளே இல்லையா ?????????
அப்படி என்றால் இவருடைய அம்மா
இவருடைய மனைவி???????????
இத்தாலிப் பெண் என்று பழித்து பேசுகிறிர்களே
அவர் உடை அணியும் நேர்த்தி ,
வேறு யாருடனும் தவறாக ....என்று ஒரு வார்த்தை.....
இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்ட பாங்கு .....
மனம் மிக மிக வேதனைப் படுகிறது.
விதி விளையாடுகிறது.
விதவையானோம்.இதை கேலி செய்தால்
மனம் மிக மிக வலிக்கிறது.
கார்த்திக் அம்மா