About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/10/30

30 லட்சம்  ...அதிர்ச்சி
நிறைய விளம்பரங்கள்.
10 லட்சம் குறைக்கிறோம்.
10000 ரூபாய்க்கு கொடுத்த சதுர அடி மனை விலை இப்போது 6000 ,7000 மட்டுமே என்ற கூவல் அதிகமாகிறது.
மனது திடிரென ஒரு கணக்கு போட்டது. ஒரு சதுர அடிக்கு 3000 குறைக்கிறார்கள் என்றால் இது வரை விற்ற அந்த வீடுகளின் மேல் அந்த 3000 லாபம்தானே.
அப்படிஎன்றால் 1000 சதுர அடி வீட்டை வாங்கியவர் 30 லட்சம் அதிகமாக கொடுத்துள்ளனர்தானே.
எப்படியும் இப்போதும் எந்த பில்டரும் நஷ்டத்திற்கு விற்க போவதில்லை.
அப்படியானால் ஒரு வீட்டின் மேல் மிக மிக அதிகப்படியான லாபம்தானே இந்த 30 லட்சம்.
மக்களாகிய நாம் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம்?????????????
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/10/11

ஆச்சி மனோரமா :
வருத்தம் .மிக சிறந்த நடிகை. வாழ்வில் பல துயர் கண்ட போதும்  வெற்றி கண்ட பெண்மணி.
என் வணக்கங்கள் .
...... ......
நான் சென்னையில் இருந்தால் வந்திருப்பேன் . நான் பெங்களுருவில் இருக்கிறேன் என்ற ஒரு குரல் கேட்டது.
எனக்கு பல சந்தேகங்கள் வந்தன.
பெங்களுருவிற்கும் சென்னைக்கும் 4000 கி.மி தூரமா?
விசா வாங்க வேண்டுமா?
பாஸ்போர்ட் வேண்டுமா?
ஏதாவது ஸ்ட்ரைக்கா?
......
அப்பப்பா என்ன ஒரு மனிதாபிமானம்????????????

2015/10/09

எத்தனை இந்திராணி முகர்ஜிக்கள் 
.....////ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் சதீஷ் என்ற ஈஸ்வரன் (வயது 29).  தோல் தொழிற்சாலையில்  கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்
.
ஈஸ்வரனின் மனைவி ரஞ்சிதா (வயது 25)  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு நித்திஷ் (வயது 5), அன்பரசு (வயது 2) என இரு குழந்தைகள் இருந்தனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் ரஞ்சிதா தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், ரஞ்சிதா கடந்த (5-8-15) ஆகஸ்ட் மாதம் 5ஆம் தியதி  இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எழும்பவில்லை. இதனால், ரஞ்சிதா குழந்தைகளை தூக்கி கொண்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
.
பரிசோதித்த மருத்துவர், குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தைகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் தன் மனைவி ரஞ்சிதாவு தொடர்பு இருப்பதாக ஈஸ்வரன் காவல்துறையில் புகார் செய்தார்.  இந்நிலையில், தடய அறிவியல் துறையினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினர் ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தானும் தன் தாயும் சேர்ந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

காவல்துறையினர் செய்த கூடுதல் விசாரணையில், ரஞ்சிதாவிற்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாகவும் தெரிகிறது.  தாயே தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//...//

இது போல் வாரம் ஒரு செய்தியாவது படிக்க நேரிடுகிறது. அல்லது தொலைக்காட்சி  உண்மை நிகழ்ச்சிகளில் கேட்க நேரிடுகிறது.அப்படியிருக்க இந்த இந்திராணி விஷயம் மட்டும் அவ்வளவு பெரிது படுத்தப் பட்ட காரணம் என்ன?
கலாகார்த்திக் 

2015/10/07

புலியும் இளைஞர்களும் : :
01.10. அன்று பெங்களுருவிற்கு போகும்போது வழியில் (காலை 8 மணி ) பல சினிமா அரங்குகளை பார்க்க நேர்ந்தது.
புலி படம் ரிலீஸ் :
வருத்தமான விஷயம்.
அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த கூட்டம் முழுவதும் இளைஞர்களே.
எல்லோரும் 30 வயதிற்கு கீழ்தான்.
25 வயதுகாரர்களே அதிகம்.
எதற்கு????????????
யாரோ ஒருவன் வெற்றியை தன வெற்றியாக
தன் சாதனையாக காட்டி அணிந்து கொள்ளும் முகமூடி அது என தோன்றியது.
என்னால் எதுவும் சாதிக்க முடியவில்லை ,,இல்லை அதற்கு நான் முயற்சியே செய்ய மாட்டேன்.
இப்படி ஒரு போலி வெற்றியாக கொண்டாடி என் இயலாமையை நிலைப் படுத்துவேன் என்ற வரிகளை த்தான் அவர்கள் முகத்தில் நான் படித்தேன்.
பாவமாக இருந்தது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்