About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/10/24

வட சென்னை

வட  சென்னை :
2004 ல் தேர்தல் பணிக்கு வட சென்னைக்குதான் சென்றேன். ஐயோ
அங்கேயா  என்கிறார்கள்.
சவால் என்பது எனக்கு வாடிக்கையான ஒன்று.
எப்படியாவது என்ன எதிலாவது மாட்டி வைக்க வேண்டும் என்பது பலரது வெறியாக இருந்தது.
போனேன்.தேர்தல் அதிகாரி..
ஓட்டுகள்  பதிவாகிக் கொண்டிருந்தன.
கள்ள வோட்டுக்கு அனுமதி இல்லை என்று கடசியினரிடம் உறுதியாக சொல்லி விட்டேன்.
நடபாக நல்ல விதமாக கேட்டார்கள்.
மீண்டும் மறுத்து விட்டேன்.
தேர்தல் பணி  செய்பவர்களுக்கு காபி ,பிரியாணி கொடுப்பார்கள்.எங்களுக்கு வரவில்லை.என்னுடன்  பணி  செய்தவர்களுக்கு நானே வாங்கிக் கொடுத்தேன்.
2 மணி அளவில் ஒரு 20 பேர் வந்தார்கள்.
யார் தொகுதி தெரியுமா என்றார்கள் ????
எல்லோரையும் தெரியும் என்றேன்.
சென்று விட்டார்கள்.
DSP  வந்தார்.sir பணி  முடிந்து செல்லும் போ து எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றேன்.மிகவும் மகிழ்ந்தார் அவர். கள்ள வோட்டு விழாத ஒரே பூத் என பாராட்டி சென்றார்.
...
எதற்கு பழைய கதை என்கிறீர்களா ???????
2 நாட்கள் அந்த ஏரியாவில்தான் இருந்தேன்.
சாம்பிளுக்கு கூட எந்த கெட்ட வார்த்தையும் காதில் விழவில்லை.
கட்சியினரும் என்னிடம் நல்ல விதமாகவே பேசினர்.
சிறிய மிரட்டல். மற்ற படி எந்த தவறோ ,அத்து மீறலோ இல்லை.என்னை வட சென்னை ,ரௌடி ஏரியா என்று ஏன் பயமுறுத்தினார்கள் என்றே தோன்றியது.
அப்படி நான் பார்த்த வட சென்னையை மிகவும் கெட்ட வார்த்தைகளே பேசிக் கொண்டு கத்தி அரிவாளுடன் அலையும் கூட்டமாக ஏன்  திரைப் படம் எடுத்தார்கள்.
ஒரு வட சென்னை வாலிபன் பெங்களூரில் MNC  யில் வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அவனுக்கு இனிமேல் கம்பெனியில் என்ன மதிப்பு இருக்கும்?
அங்கே படித்தவர்களே இல்லையா?
அதே வட சென்னையில்தான் ஆசிரியர் கருத்தரங்கம் நடந்தது.அப்போதும் எந்த தவறான வார்த்தைகளையோ நிகழ்வுகளையோ நான் பார்க்கவில்லை.
என் நண்பிகள் இருவர் அங்குதான் வேலை செய்தனர்.
கஷ்டம் என்று ஒரு நாளும் சொன்னதில்லை.சந்தோஷமாகத்தான் வேலை செய்தனர்.
ஒரு பேச்சுக்கு அங்கு அப்படியான வார்த்தைகள்தான் பயன் படுத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அதை இப்போது வெளிச்சம் போட்டு எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன?
பீப் பாடல் வந்த போது அந்த வார்த்தை எனக்கு பதிந்து போனது.மிக மிக பயமாக இருந்தது.என்றாவது என்னை அறியாமல் இந்த வார்த்தையை சொல்லி  விடுவேனோ என்று திகில்  அடித்தது.
இப்போது அது போல் 100 வார்த்தைகள் என்கிறார் திரு.ராஜன்.
சமுதாயத்தை நல்வழிப் படுத்த வில்லை என்றாலும் கெடுக்காதீர்கள்.
இன்று குங்கும பூவும்  கொஞ்சு புறாவும் என்ற படம் பார்த்தேன்.எதற்கு?
இப்படிப் பட்ட படங்களை எடுத்து இளைஞர்களை கெடுக்காதீர்கள்.
கார்த்திக் அம்மா


2018/10/19

ஐயப்பனும் முஸ்லீம் ரெஹானாவும்

மத நல்லிணக்கம் வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளவள் நான்.
ஆனால் என் தாய்க்கு ஒரு அவமானம் என்றால் நான் பொறுத்துக்க கொள்ள மாட்டேன்.
ஏனப்பா .நீதிமன்றம் என்ன சொல்லியது ????
பெண் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றுதான் சொல்லியது.எதற்கு பத்திரிக்கையாளர்கள்????
அதிலும் பெண் பத்திரிக்கையாளர்கள்???????????
அதிலும் ...அதிலும்  ஒரு முஸ்லீம் ???????????????
அதிலும் ..அதிலும் ஒரு முஸ்லீம் பெண்???????????
அதிலும் இளம் பெண்கள்???????????
சரி...
உடையாவது  கோவிலுக்கு வரும் உடையா????????
ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து கருப்பு அல்லது நீல நிற உடை அணிகிறார்கள்.
அன்று ஒரு பெண் செல்கிறார்.அவர் சாதாரண உடையில் செல்கிறார்.அதிலும் ஒரு டிசைன் பிளவுஸ் .தேவையா ???
இந்த முஸ்லீம் பெண் அவர் மதத்தின் மசூதி உள்ளே செல்வாரா ?
அவர் மதத்திற்கு ஒரு நியாயம்.
இந்து மதத்திற்கு ஒரு நியாயம்.
இதன் பின்னணியில் யார் இருந்தாலும் செய்வது தவறு.
தவறு செய்யாதீர்கள்.
பெண்களே
பெண்ணுரிமை என்பது இதுதானா ?????????
சாதிக்க எத்தனையோ துறைகள் உள்ளன.
அங்கெல்லாம் சாதியுங்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன.இப்போது எதற்கு இந்த புது பிரச்சினை?
இதை யார் கிளப்பியிருந்தாலும் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்து இருந்தாலும்
வேண்டாம்.தவறு செய்யாதீர்கள்.
கார்த்திக் அம்மா

2018/10/16

மி டூ ME TOO .


போடு அடி .கர்நாடக பெண் ஒரு வங்கி மேலதிகாரியை போட்டு தாக்கும் காட்சி இது ..இது ..இதுதாங்க உண்மையான ME TOO .தைரியம் இருந்தா இப்படி போட்டு தாக்க வேண்டும்..இல்லை என்றால்  பேசவே கூடாது..18ம் நூற்றாண்டில் நடந்தது.அப்ப சோத்துக்கே வழி இல்லை.இப்ப பணக்காரி ஆயிட்டேன்.பிரபலம் ஆகிவிட்டேன்.இப்ப சொல்கிறேன்...??????????..இது ..இதுதாங்க உண்மையான ME TOO .தைரியம் இருந்தா இப்படி போட்டு தாக்க வேண்டும்..இல்லை என்றால்  பேசவே கூடாது..18ம் நூற்றாண்டில் நடந்தது.அப்ப சோத்துக்கே வழி இல்லை.இப்ப பணக்காரி ஆயிட்டேன்.பிரபலம் ஆகிவிட்டேன்.இப்ப சொல்கிறேன்.  



நானும் பல ஆண்களுடன் வேலை செய்தவள்தான்.பல பிரயாணங்களில் ஆண்கள் உரசிய அனுபவம் உண்டு.எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அபத்தம்.முடிந்தால் திருப்பி தாக்கு.அப்போதே.உடனே .அந்த இடத்திலேயே ...நான் கர்ஜிக்க ஆரம்பித்தால் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடி விடுவார்கள்.எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சண்டை போட முடியாது.அது போன்ற இடங்களில் அவனை சட்டை செய்ய கூடாது.WHO CARES ....போடா வெண்ணை.உன்னால் நான் ஒரு துளியும் பாதிக்கப் படவில்லை என்ற தொனியில் திரும்பி பார்க்காமல் போய் கொண்டிருந்தால்  அதுவே அவனுக்கு பெரிய தண்டனை.....அத விட்டு இதனால் என் carrier என் முன்னேற்றம் போய் விடும் என்று நினைத்தால் அது பற்றி எப்போதும் பேசக் கூடாது.பாராட்டுக்கள் கர்நாடக பெண்ணே.  

2018/10/12

சங்கர் அகாடமி

சங்கர் அகாடமி யின்  சங்கர்.:
கோபம்.
கோபம்.
சங்கர் மீது எனக்கு அளவற்ற  கோபம்தான் வருகிறது.
இவ்வளவு பேரை உருவாக்கிய  ஒரு மாபெரும் மனிதர் அற்பமாக  குடும்ப பிரச்சினைக்காக  தற்கொலை செய்யலாமா?
என்னதான் பிரச்சினை இருக்கட்டுமே?
கணவனை  இழந்து இந்த மகனை உருவாக்க  அந்த தாய் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டும்.
இவரது பாட்டிதான் இவரை வளர்த்ததாக தெரிகிறது.
அந்த மூதாட்டியை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இந்த இரு பெண்டிரும்  இவரை நம்பியே இருந்திருப்பர்.
இரு மகள்கள்.
அவர்களை நினைத்து பார்க்கவில்லையா இவர்?
இத்தனை மாணவர்களை ஊக்கப் படுத்தி சாதிக்க வைத்தவர் தன்  பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லையா?
இந்த குடும்ப பிரச்சினையை ஓரம் கட்டி விட்டு இன்னும் எத்தனையோ I .A .S மாணவர்களை  உருவாக்குவதில்  கவனம் செலுத்தியிருக்கலாம்.
என் கார்த்தி விபத்தில் மறைந்ததையே தாங்க முடியவில்லை.
இவர் தன தாய்க்கும் பாட்டிக்கும் மிக பெரிய துரோகம் செய்து விட்டார்.
தன் மாணவர்களுக்கும் துரோகம் செய்து விட்டார்.
சங்கர்,
கோபமான வருத்தத்துடன்
கார்த்திக் அம்மா